என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Running"

    • குடிபோதையில் படுத்திருந்தவரை தாக்கியதால் பழிக்குப்பழி வாங்கினார்
    • தனிப்படை போலீசார் கேரளாவில் தீவிர தேடுதல் வேட்டை

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை, காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கோவையில் தங்கியிருந்து ஆடிஸ் வீதியில் டீக்கடை நடத்தி வந்தார். பகுதிநேரமாக சமையல் காண்டிராக்ட் வேலையையும் எடுத்து செய்து வந்தார்.

    நேற்று காலை ராஜேஷ் ஆடிஸ்வீதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலை ரேஸ்கோர்ஸ் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி னர். விசாரணையில் ராஜேசை அவரது நண்பரே கொலை செய்துள்ள விவரம் தெரியவந்தது. ராஜேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூருக்கு சமையல் வேலைக்கு சென்று வந்தார். பின்னர் வேலையாட்களுக்கு சம்பள பணத்தை பிரித்து கொடுத்தார். அதன்பிறகு அவர்கள் ஒன்றாக மதுபானம் அருந்தி உள்ளனர். தொடர்ந்து ராஜேஷ் மட்டும் ஆடிஸ் வீதிக்கு புறப்பட்டு வந்தார்.

    அப்போது அங்கு உள்ள பிளாட்பார பெஞ்சில் பென்னி என்பவர் படுத்திருந்தார். அப்போது ராஜேஷ், இது எங்களின் இடம். நீ ஏன் இங்கு வந்து படுத்து இருக்கிறாய் என்று கேட்டு உள்ளார். தொடர்ந்து 2 பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் சரமாரியாக தாக்கி உள்ளார்.

    இதில் பென்னிக்கு காயம் ஏற்பட்டது. எனவே அவர், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று எச்சரித்து விட்டு டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கு மது குடித்து உள்ளார்.

    அப்போது அவர் தன்னை தாக்கிய ராஜேஷை கொலை செய்வது என்று முடிவெடுத்தார். இதற்காக ஒரு உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு மீண்டும் ஆடிஸ் வீதிக்கு புறப்பட்டு வந்தார்.

    அங்கு உள்ள பிளாட்பார பெஞ்சில் ராஜேஷ் குடிபோதையில் படுத்திருந்தார். அவரை பென்னி உருட்டு க்கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்தில் பலியானார். ராஜேசும்,

    அதன்பிறகு பென்னி உருட்டுக்கட்டையை தூர வீசி எறிந்துவிட்டு கோவை ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு தப்பி சென்று உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது.கோவை ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா மூலம் பென்னி கேரளாவுக்கு தப்பி செல்வதை போலீசார் உறுதி செய்து உள்ளனர்.

    தொடர்ந்து பென்னியின் பின்புலம் குறித்து ஆடிஸ் வீதி பகுதியில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம், நெல்லிப்பாடா பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    கோவையில் சமையல் தொழிலாளி ராஜேஷ் என்பவரை படுகொலை செய்துவிட்டு, கேரளாவில் பதுங்கி உள்ள பென்னியை கைது செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதன்ஒருபகுதியாக தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று அங்கு முகாமிட்டு கொலையாளிக்கு வலைவிரித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 10-ந் தேதி வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டது.
    • மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள செட்டிபுதூரை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 10-ந் தேதி வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பெரியோர் முன்னிலையில் நிச்சயம் செய்து வைத்தனர். ஆனால் இளம்பெண்ணுக்கு அந்த வாலிபரை பிடிக்கவில்லை.

    சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் படித்த கல்லூரிக்கு சென்று சான்றிதழ்களை வாங்கி வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். நீண்ட நேரம் ஆகியும் மகள் திரும்பி வராததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து அவர்கள் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் நிச்சயம் ஆன நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    வடக்கிப்பாளையம் அருகே உள்ள புதுகாலனியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிளஸ்-1 மாணவியை தேடி வருகின்றனர்

    • வேகமாக நடந்தாலே சிலருக்கு மூச்சு வாங்கத்தொடங்கிவிடும்.
    • நடைபயிற்சி செய்வதால் தசைகள், தசை நார்கள், எலும்புகளை வலுப்படுத்த முடியும்.

    பஸ், ரெயிலை பிடிப்பதற்கு வேகமாக நடந்தாலே சிலருக்கு மூச்சு வாங்கத்தொடங்கிவிடும். ஓடிப்போய் பஸ், ரெயில் ஏறும் சூழல் இருந்தால் மூச்சுத்திணறலுக்கு ஆளாக நேரிடும். தினமும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தசைகள், தசை நார்கள், எலும்புகளை வலுப்படுத்த முடியும்.

    வேகமாக நடக்க, ஓட உடலை தயார்படுத்திக்கொள்ளவும் முடியும். ஓட்டப்பந்தய பயிற்சி பெறுபவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் ஓடும் திறனை மேம்படுத்திக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம். ஆரம்பத்தில் மெதுவாக ஓடத்தொடங்கி வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். அப்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

    * தினமும் தவறாமல் ஓட்டப்பயிற்சி பெற வேண்டும். ஒரு நாள் மெதுவாகவும், மறுநாள் வேகமாகவும் ஓடக்கூடாது. சீரான வேகத்தை பின்பற்ற வேண்டும். அந்த வாரம் முழுவதும் அதே வேகத்தில் ஓடியே பயிற்சி பெற வேண்டும். மறுவாரம் வேகத்தை சற்று அதிகரிக்கலாம். ஆனால் அதிகரித்த வேகத்திலேயே அந்த வாரம் முழுவதும் பயிற்சி பெற வேண்டும். வாரந்தோறும் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை ஓடும் வேகத்தை அதிகப்படுத்தலாம்.

    * ஓடும் வேகத்திற்கு ஏற்ப உடலுக்கு போதுமான சக்தி கிடைக்க வேண்டும். அதற்கு உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், ஓட்ஸ், எனர்ஜியை அதிகரிக்கச் செய்யும் இயற்கை பானங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

    * ஓட்டப்பயிற்சி பெறுபவர்களின் உடல் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதனால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் போதுமான அளவு தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். இளநீர், மூலிகை தேநீர் போன்ற பானங்களையும் பருகலாம்.

    * ஓட்டப்பயிற்சியை தொடங்கு வதற்கு முன்பு 'வார்ம்-அப்' பயிற்சிகளை செய்வதற்கு மறக்கக்கூடாது. அதுபோல் ஓடி முடித்ததும் 'கூல் டவுன்' பயிற்சிகளை செய்யவும் மறக்கக்கூடாது. இந்த பயிற்சிகள் தசைகளில் ஏற்படும் வீக்கம், வலியை குறைக்க உதவும்.

    * ஓரளவுக்கு வேகமாக ஓடுவதற்கு பயிற்சி பெற்றாலும் கூட நிலையான ஓட்டத்திறனை பின்பற்ற வேண்டும். திடீரென வேகமாகவோ, சட்டென்று வேகத்தை குறைத்தோ ஓடக்கூடாது. சீராக ஓடி பயிற்சி பெறுவதுதான் நீண்ட தூரம் சோர்வில்லாமல் ஓடுவதற்கான உடல் வலிமையை கொடுக்கும். நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்கும் போது கூட ஆரம்பத்தில் வேகமாக ஓடக்கூடாது. சீராக வேகத்தை பின்பற்றினால்தான் நீண்ட தூர இலக்கை நோக்கி சோர்வில்லாமல் பயணத்தை தொடர முடியும்.

    * ஓட்டப்பயிற்சி பெறுவதற்கு தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். மறுநாள் அதே நேரத்தை பின் தொடர வேண்டும். அப்படி செய்வது உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்க வழிவகுக்கும். தூக்கமும் அவசியமானது.

    • இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இளம்பெண் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தீபாவளி பண்டிகைக்காக குழந்தை மற்றும் கணவருடன் அவரது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு அனைவரும் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கினர்.

    அப்போது அதிகாலை 4 மணி அளவில் இளம்பெண் தனது 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    இது குறித்து இளம் பெண்ணின் தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த தனது மகளை மீட்டு தரும்படி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் இளம் பெண்ணை தேடி வருகின்றனர். 

    • உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.
    • இளம் வயதினர் ஜாக்கிங் போன்ற ஓட்டப்பயிற்சியை நாடுகிறார்கள்.

    காலை எழுந்ததும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். முதுமை பருவத்தை எட்டுபவர்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இளம் வயதினர் ஜாக்கிங் போன்ற ஓட்டப்பயிற்சியை நாடுகிறார்கள். இதில் எந்த பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. இரண்டு பயிற்சிகளுமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமானவை. குறிப்பாக இதயத்திற்கு சிறந்தவை.

    அதனால்தான் இதய நோய் நிபுணர்கள் நடைப்பயிற்சி அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சியை செய்வதற்கு பரிந்துரைக்கிறார்கள். இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும்போது இதயம் ரத்தத்தை வேகமாக பம்ப் செய்யும். அப்போது தமனியின் செயல்பாடுகளை தடுக்கும் நச்சுகள் அப்புறப்படுத்தப்படும். பக்கவாதம், இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும்.

    ஓடுவதை விட நடப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. ஓடும்போது இதய தசைகளில் அழுத்தம் ஏற்படும். அதே சமயம் நடப்பது இதயத்தில் மிக குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்தும். அகால மரணம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.

    2013-ம் ஆண்டு 33,060 ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் 15,045 நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இரு செயல்பாடுகளையும் கண்காணித்தபோது ஓடுவதை விட, விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வது இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் என்பது தெரியவந்தது.

    உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்து ஓடுவதன் மூலம் 4.2 சதவீதமும், நடப்பதன் மூலம் 7.2 சதவீதமும் குறைவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இது தவிர முழங்கால், கணுக்கால் மற்றும் முதுகுவலி பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் நடைப்பயிற்சி நிவாரணம் அளிக்கக்கூடியது. உடல் பருமனானவர்களுக்கும் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி உதவும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    • எளிதாக கையாளக்கூடிய பயிற்சிகளை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.
    • ஸ்கிப்பிங் செய்வது உடலில் கொழுப்பை கணிசமாக குறைக்கும்.

    உடற்பயிற்சிகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. புதிதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்கள் எளிதாக கையாளக்கூடிய பயிற்சிகளை தேர்ந்தெடுப்பது முக்கியமானது. எந்த உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் அது ஒட்டுமொத்த உடற் தகுதியையும் மேம்படுத்தும் விதமாகவும், இதய தசைகளை வலுப்படுத்தும் வகையிலும், உடல் எடையையும், எலும்பு அடர்த்தியையும் சீராக பராமரிக்கும் விதமாகவும், நீண்ட ஆயுளுக்கு வித்திடுவதாகவும் அமைய வேண்டும்.

    அதற்கு ஏற்ற பயிற்சிகளாக ஓடுவதும், துள்ளிக்குதிப்பதும் அமைந்திருக்கின்றன. இவைகளில் எது சிறந்தது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. எந்த பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வருவது நல்லது என்று பார்ப்போம்.

    இதயத்தின் சுவர்களை வலுப்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். ஒட்டுமொத்த உடல் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். இதய செயல்பாடுகளை மேம்படுத்தும்.

    எண்டோர்பின் மற்றும் செரோடோனின் போன்ற ரசாயனங்களை வெளியிட உதவும். இவை மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க செய்யும்.

    சுவாசத்தில் கலக்கும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை அகற்றி, நுரையீரலை பலப்படுத்தும். சளி, இருமல் பிரச்சினைகளை விரட்டியடிக்கும்.

    எதை தேர்வு செய்வது?

    இரண்டு வகையான உடற்பயிற்சிகளும் உடல் எடை குறைப்புக்கும், ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை சேர்ப்பதாக இருந்தாலும் பயிற்சிக்காக செலவிடும் நேரத்தை கணக்கில் கொள்ளும்போது, ஓடுவதை விட துள்ளிக்குதிப்பது அதிக பலன் அளிக்கும். இருப்பினும், உடற்பயிற்சியின் போது இயற்கைக்காட்சிகளை ரசிக்க விரும்புவோருக்கு ஓடுவதுதான் சிறந்த வழி.

    அதிக கலோரிகளை எரிக்க வேண்டுமா?

    `ஸ்கிப்பிங்' எனப்படும் துள்ளிக் குதிப்பது, ஓடுவது ஆகிய இரண்டுமே பயிற்சி செய்ய தொடங்கிய பத்து நிமிடங்களுக்குள் கணிசமான எண்ணிக்கையிலான கலோரிகளை எரிக்க உதவிபுரியும். இருப்பினும், ஓடுவதுடன் ஒப்பிடுகையில், கயிற்றை கொண்டு துள்ளிக்குதிப்பது சற்று கூடுதல் நன்மையை வழங்கும். 10 நிமிடங்கள் வேகவேகமாக ஓடுவதுடன் ஒப்பிடும்போது நின்ற இடத்திலேயே துள்ளி குதித்தபடி 146 கலோரிகளை எரித்துவிட முடியும்.

    ஸ்கிப்பிங் செய்வது உடலில் உள்ள கொழுப்பை கணிசமாகக் குறைக்கும், இதய நோய்களுடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளை விரட்டியடிக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஓட்டம் மற்றும் ஸ்கிப்பிங் ஆகிய இரண்டுமே இதய நலனை பாதுகாக்கக்கூடியவை.

    ஓடுவது, துள்ளிக்குதிப்பது இரண்டுமே தரையுடன் நேரடி தொடர்பு கொண்டவை. இடுப்பு, முழங்கால்கள், கணுக்கால்களில் காயம் அடைந்தவர்களுக்கு இந்த பயிற்சிகள் கடினமானவை. மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    • இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
    • உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்.

    இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர். குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக டயட், ரன்னிங், நடைப்பயிற்சி, ஜிம், விளையாட்டு, யோகா என ஏராளமான வழிமுறைகளை மாதக்கணக்கில் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறார்கள்.

    அத்துடன் எடை குறைப்பிற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார்கள். ஆனாலும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை.

    இந்தநிலையில், ``உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள். உங்களால் மன நிறைவாக சாப்பிட முடியும். அதேநேரத்தில் உங்களின் எடையும் குறையும்...'' என்று அடித்துச் சொல்கிறது இங்கிலாந்தில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு. இந்த ஆய்வை மேற்கொண்ட `அய்ன் ட்ரீ' மருத்துவமனை, 500 பேரிடம் உணவு குறித்த சர்வேயை எடுத்திருக்கிறது. இந்த ஆய்வை ராபர்ட் என்ற மருத்துவர் தலைமையேற்று, நடத்தி முடித்திருக்கிறார்.

    ``உணவை எப்படி வேறு விதமாக பார்ப்பது?'' என்ற கேள்விக்கு ராபர்ட் பதில் அளிக்கிறார்.

    ``உணவுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நவீன வாழ்க்கையின் பரபரப்பில் அவசர அவசரமாக ஒரு கடமையை நிறைவேற்றுவதை போல சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் கூட மனதை எங்கேயோ அலையவிட்டு பதற்றத்துடன் இருக்கிறோம். அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே உணவை உள்ளே தள்ளுகிறோம். நமக்கு பசிக்கவில்லை அல்லது உணவு பிடிக்கவில்லை என்றாலும் கூட நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே ஆகிவிட்டது.

    முக்கியமாக சுவையானதை தேடித்தேடி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று கூட பார்ப்பதில்லை. முதலில் இந்த பழக்கத்தை மாற்றுங்கள். தியானத்தில் ஈடுபடுவதை போல முழு மனதையும் செலுத்தி உணவை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவை தேடிப்பிடித்து சாப்பிடுங்கள். முக்கியமாக, பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் எடை குறைவது மட்டுமல்லாமல் உணவைப் பார்க்கும் விதமே மாறி இருக்கும்'' என்றார்.

    • எந்த உடற்பயிற்சி அதிக கலோரிகளை எரிக்கும்?
    • தசைகளின் செயல்பாடுகள்தான் முக்கியமானது.

    உடற்பயிற்சி செய்பவர்கள் மத்தியில், 'எந்த உடற்பயிற்சி அதிக கலோரிகளை எரிக்கும்?' என்ற கேள்வி அடிக்கடி எட்டிப்பார்க்கும். சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் அதிக கலோரிகளை எரிக்க உதவும் என்பதை அறிந்திருக்கவும் செய்வார்கள். அதேவேளையில் சில பயிற்சிகள் ஏன் மற்ற பயிற்சிகளை விட அதிக கலோரிகளை எரிக்கின்றன என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

    இந்த விஷயத்தில் தசைகளின் செயல்பாடுகள்தான் முக்கியமானது. அவை எந்த அளவுக்கு கடினமாக உழைக்கிறதோ அதற்கேற்பவே பலன் கிடைக்கும். அத்துடன் வயது, பாலினம், உடல் எடை, உடல் அமைப்பு, மருத்துவ ரீதியான காரணங்கள் உள்ளிட்ட விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியமானது.

    அதிக கலோரிகளை எரிப்பதையே நோக்கமாக கொண்டவர்கள் ஆரம்பக்கட்டத்தில் ஓட்டப்பயிற்சியை தேர்ந்தெடுப்பது சரியானது. ஓடுவது இதயத்துடிப்பை திறம்பட உயர்த்த உதவும். தசை குழுக்களின் செயல்பாட்டையும் தூண்டிவிடும். அதனால் கலோரிகளை எரிக்கும் விஷயத்தில் ஓட்டம் சிறந்த தேர்வாக அமையும். சராசரியாக, ஒரு ஓட்டப்பந்தய வீரர் நிமிடத்திற்கு 12 கலோரிகளை எரிக்கிறார். நீங்கள் ஓடும் வேகம், தூரம், நிலப்பரப்பு ஆகியவற்றின் தன்மைக்கு ஏற்ப கலோரிகளை இன்னும் கூடுதலாக எரிக்க முடியும்.

    ஓட்டப்பயிற்சியை விரும்பாதவர்கள் அதை விட எளிய பயிற்சியான நடைப்பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம். அதற்கு அடுத்தக்கட்டமாக நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கை, கால்களை அசைத்து செய்யும் பயிற்சிகள், யோகா உள்பட பல்வேறு உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டும் கலோரிகளை எரிக்கலாம்.

    எந்தெந்த பயிற்சிகளை மேற்கொள்வது எவ்வளவு கலோரிகளை எரிக்க உதவும் என்று பார்ப்போம்.

    மிதமான உடல் செயல்பாடு (ஒரு மணி நேரத்திற்கு)

    ஸ்ட்ரெட்சிங்: 180 கலோரிகள்

    நிதானமாக பளு தூக்குதல்: 220 கலோரிகள்

    நிதானமாக சைக்கிள் ஓட்டுதல்: 290 கலோரிகள்

    நடனம்: 330 கலோரிகள்

    கோல்ப்: 370 கலோரிகள்

    தீவிரமான உடல் செயல்பாடு (ஒரு மணி நேரத்திற்கு) கூடைப்பந்து விளையாடுதல்: 440 கலோரிகள்

    பளு தூக்குதல் : 440 கலோரிகள்

    வேகமான நடைப்பயிற்சி: 460 கலோரிகள்

    நீச்சல்: 510 கலோரிகள்

    10 மைல் அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் சைக்கிள் ஓட்டுதல்: 590 கலோரிகள்

    ஓடுதல்: 590 கலோரிகள்

    • இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இன்று நடந்த பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக் 400 மீட்டர் டி20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • இந்தியா இதுவரை 16 பதக்கங்களை வென்றுள்ளது.
    • திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியது.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக் 400 மீட்டர் டி20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் "பாராலிம்பிக்ஸ் 2024 ல் பெண்கள் 400 மீட்டர் டி20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். அவர் எண்ணற்ற மக்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார். அவருடைய திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியவை என பதிவிட்டுள்ளார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில் "பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் 400 மீ - டி20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். பல துன்பங்களை எதிர்கொண்டாலும் அவர் உறுதியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இன்னும் உயர்ந்த சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
    • இதை பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதை பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    மாரத்தான் ஓட்டம் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி பள்ளி சாலை ,திருவள்ளூர் சாலை ,பழைய தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை அடைந்தது. இதில் பரமத்திவேலூர் உட்கோட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களை சேர்ந்த காவலர்கள், பரமத்தி வேலூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், செந்தில்வேல் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • டி.என்.பாளையம் அடுத்த வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

    வழக்கமாக அப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினர் இது போன்று துப்பாக்கி கிடப்பதை எப்படி கவனிக்க தவறினர் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×