என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala"

    • இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு திட்டங்களை திருவிதாங்கூர் தேவசம்போடு அமல்படுத்தி வருகிறது. அதன்படி சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கக்கூடிய விபத்தில் சிக்கினால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் பலியானாலும், ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் விபத்துகளில மரணமடைபவர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் நிபந்தனை விதித்திருந்தது.

    இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் எந்த பகுதியில் சாலை விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் மரணமடைந்தாலும், அவர்களது குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.

    சபரிமலை வரும் வழியில் மாரடைப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி சேகரிக்க திட்டம் இருக்கிறது. மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
    • பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக நேற்று திறக்கப்பட்டது. கோவிலின் தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவிலில் விளக்கேற்றினார்.

    ஐயப்பன் கோவிலில் முதன்முறையாக பக்தர்கள் 18-ம் படி ஏறியதும் கொடிக்கம்பம் வழியாக நேரடியாக சென்று தரிசனம் செய்யும் புதிய நடைமுறை நேற்று அமல்படுத்தப்பட்டது. அதன்படி 18-வது படியில் ஏறிய பக்தர்கள், கொடிக் கம்பம் மற்றும் பாலிக்கல் மண்டபம் மற்றும் மேம்பாலம் வழியாக செல்லாமல், நேரடியாக கோவிலின் முன்புறம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதன்மூலம் பக்தர்கள் 30 முதல் 50 விநாடிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்தனர். மேலும் இந்த முறை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் உதவியது. 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். அதன்பிறகு பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

    2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 11-ந்தேதி ஆராட்டு விழா நடைபெற உள்ளது.

    • சபரிமலை தரிசனத்துக்கான பக்தர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை.
    • தரிசனத்திற்கு வரும் அனைத்து ஐய்யப்ப பக்தர்களும் தங்கள் அசல் ஆதார் அட்டையை சரிபார்ப்புக்காக எடுத்துச்செல்ல வேண்டும்.

    நாகர்கோவில்:

    திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை மண்டல மகரவிளக்கு யாத்திரை நவம்பர் 16-ந்தேதி மாலை தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 17-ந்தேதி முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. டிசம்பர் 27-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை நடை திறக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். மகரவிளக்கு ஜனவரி 14-ந்தேதி நடக்கிறது.

    சபரிமலை ஐய்யப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் கேரள மாநில அரசு, தேவசம் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணைந்து ஆன்லைன் முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 13 மையங்களில் உடனடி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் ஸ்ரீகண்டேஸ்வரம் சிவன் கோவில், கொல்லத்தில் கொட்டாரக்கரா மகாகணபதி கோவில், பத்தனம்திட்டாவில் நிலக்கல் அடிப்படை முகாம், பந்தளம் தர்ம சாஸ்தா கோவில், ஆலப்புழாவில் செங்கனூர் ரெயில் நிலையம், கோட்டயத்தில் எருமேலி கோவில், எட்டூமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், எர்ணாகுளத்தில் பெரும்பாவூர், கீழில்லம், இடுக்கியில் குமுளி, மூழிக்கல், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் தரிசனம் செய்வதற்கு பதிவு செய்யலாம்.

    சபரிமலை தரிசனத்துக்கான பக்தர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை. தரிசனத்திற்கு வரும் அனைத்து ஐய்யப்ப பக்தர்களும் தங்கள் அசல் ஆதார் அட்டையை சரிபார்ப்புக்காக எடுத்துச்செல்ல வேண்டும். ஐய்யப்ப பக்தர்களுக்கு எந்தவிதமான கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை.

    சபரிமலை செல்லும் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் பயோடாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் மருத்துவம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்துள்ளது. சன்னிதானத்தில் ஐய்யப்ப பக்தர்கள் ஓய்வெடுக்கவும், இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்து உள்ளோம்.

    அப்பம், அரவணை, அபிஷேகம், நெய் போன்ற பிரசாதங்கள் வழங்க சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மண்டல மகரவிளக்கு விழாவையொட்டி சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் சிறப்பு தேவசம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பம்பை நதி மற்றும் சபரிமலை செல்லும் வனப்பாதையில் உள்ள நீராடல் படிகளில் தேவையான மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை ஆற்றின் ஆழம் குறித்த அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

    இந்த மண்டல மகரவிளக்கு யாத்திரையில் கொரோனா சூழலுக்கு பிறகு முதன்முறையாக வனப்பாதை புல்மேடு மற்றும் எருமேலி, அழுதா, கரிமலை பாதை பக்தர்களுக்காக திறக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த வழியில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு வசதிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்யும். இந்த காட்டு வழி பகுதிகளில் ஷெட் மற்றும் இளைப்பாறும் வசதியையும் தேவசம் போர்டு ஏற்பாடு செய்யும். பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தெற்கு ரெயில்வே மூலம் தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.

    நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து சேவை இயங்கும். இதற்காக 200 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் கேரளா போக்குவரத்து கழகம் சார்பில் 300 பஸ்களை பயன்படுத்தி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பம்பைக்கு இயக்கப்படுகிறது. உடல் ஊனமுற்ற பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும். பல்வேறு பகுதிகளில் உள்ள ஐய்யப்ப பக்தர்கள் குழுவிற்கு விருப்பமுள்ளவர்களுக்கு சிறப்பு சேவையை கேரளா அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. முன்பதிவு முறையை பக்தர்கள் பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மண்டல பூஜைக்காக கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்படும்.
    • மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ந் தேதி நடைபெறும்.

    சபரிமலை :

    திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை திறக்கப்படும். அன்று மாலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த பூஜைக்காக டிசம்பர் மாதம் 27-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். அதன் பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ந் தேதி நடைபெறும். ஜனவரி 20-ந் தேதி வரை நடை திறந்திருக்கும்.

    சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு அவசியம். ஆன்லைன் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்காக உடனடி முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நிலக்கல் மையத்தில் மட்டும் 10 உடனடி முன்பதிவு கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஸ்ரீகண்டேஸ்வரம் சிவன் கோவில், கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரை மகா கணபதி கோவில், பத்தனம் திட்டா மாவட்டம் பந்தளம் தர்ம சாஸ்தா கோவில், ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் ரெயில் நிலையம், கோட்டயம் மாவட்டம் எருமேலி கோவில், எட்டமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர், கீழ்இல்லம், இடுக்கி மாவட்டத்தில் குமுளி, மூழிக்கல், வண்டிபெரியார் என 12 இடங்களில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆன்லைன் முன்பதிவு செய்ய ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கையில் வைத்திருந்தால் போதும்.

    கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பெருவழி பாதையான எருமேலியில் இருந்து கரிமலை வழியாக செல்லும் கானக பாதையும், புல்மேடு வழி ஆகியவையும் திறக்கப்பட உள்ளது.

    அனைத்து மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு பஸ் வசதிக்கான ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கேரளா மாநிலத்தில் இருந்து மட்டும் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சபரிமலையில் ரெயில் பாதைக்காகவும், எருமேலியில் விமான நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
    • ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி டின் அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம் :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.

    இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பத்தனம்திட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பம், அரவணை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி டின் அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரவணை நிரப்பப்படும் டின்கள் வெளியிடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த டின்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேரளாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பான தொழிற்சாலை தொடங்குவது குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு முன்னதாக 15 லட்சம் டின் அரவணை தயார் நிலையில் இருப்பு வைக்கப்படும். அதேபோல் அப்பம் தயாரிக்கும் பணி வருகிற 11-ந் தேதி தொடங்க இருக்கிறது.

    இதற்காக அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. சன்னிதானத்தில் 3 லட்சம் கிலோ சர்க்கரை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நிலக்கல் உள்பட 13 இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் தொடங்கப்படும். இதுதவிர பாலக்காடு, கண்ணூரிலும் முன்பதிவு மையங்கள் சீசனுக்கு முன்னதாக தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.
    • இம்முறை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.

    இம்முறை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் .

    இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் இம்முறை கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர்.

    பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்களை பணியில் அமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதோடு டிரோன் காமிராக்கள் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதற்கிடையே சபரிமலை வரும் பக்தர்களுக்கு நியாயமான விலையில் உணவு பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்காக இப்போதே ஒவ்வொரு உணவு பொருளின் விலையையும் அவர்கள் அறிவித்து உள்ளனர். அதன்படி முக்கிய உணவு பண்டங்களின் விலை விபரம் வருமாறு:-

    டீ-ரூ.13,

    காப்பி-ரூ.13,

    பருப்பு வடை-ரூ.15,

    உளுந்த வடை-ரூ.15,

    போண்டா-ரூ.15,

    தோசை- ரூ.13,

    இட்லி-ரூ.13,

    சப்பாத்தி-ரூ.14,

    புரோட்டா-ரூ.15,

    இடியாப்பம்-ரூ.14.

    சாதம்-ரூ.75,

    வெஜிடபிள் பிரியாணி-ரூ.75.

    • சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் ஆகும்.

    போரூர்:

    சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம்.

    அவர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு வருகிற 17-ந்தேதி முதல் விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் ஆகும். இந்த அதிநவீன மிதவை சொகுசு பஸ் சேவை ஜனவரி 18-ந்தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

    • மண்டல பூஜை டிசம்பர் 27-ந்தேதி நடக்கிறது.
    • ஜனவரி மாதம் 14-ந்தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் விரதத்தை தொடங்கி இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து உப தேவதைகளின் கோவில்களில் விளக்கு ஏற்றப்படும்.

    பின்னர் 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும். தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிகுமார் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி மேள தாளம் முழங்க 18-ம் படி வழியாக அழைத்து செல்லப்படுவார்கள்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகளுக்கு, தந்திரி கண்டரரு ராஜீவரு மூல மந்திரம் சொல்லி கொடுப்பதோடு அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவில் சாவி புதிய மேல்சாந்தியிடம் ஒப்படைக்கப்படும்.

    மறுநாள் 17-ந் தேதி அதிகாலை முதல் புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். அன்று முதல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பிறகு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகை அதிகமானால் தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரத்தில் மாறுதல் செய்யப்படும். விழாவின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை அடுத்த மாதம் 27-ந் தேதியும், ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

    சீசனை முன்னிட்டு இன்று முதல் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 6 கட்டங்களாக 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

    சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் உடனடி தரிசன முன்பதிவிற்கு நிலக்கல் உள்பட 13 இடங்களில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த சேவை முழுமையாக ஐயப்ப பக்தர்களுக்கு இலவசமாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அளிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கான உடனடி தரிசன ஆன்லைன் முன்பதிவை நேற்று திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரம் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தொடங்கி வைத்தார்.

    • டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது.
    • 2023 ஜனவரி 14-ந்தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும்.

    மண்டல-மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுகிறார்.

    அதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், புதிய மேல்சாந்திகள் பதவியேற்று கொள்கிறார்கள். நாளை (வியாழக்கிழமை) அதிகாலை முதல்வழக்கமான பூஜைகள் நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில்மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிகுமார் நம்பூதிரி ஆகியோர் பதவி ஏற்பு நிகழ்ச்சி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் சன்னிதானத்தில்நடைபெறும். அதைத்தொடர்ந்து 18-ம்படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் சாமி தரிசனத்திற்கு பின்னர்இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    நாளை (வியாழக்கிழமை) அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். அன்று முதல் அதிகாலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும்.

    இந்த நிலையில், பத்தனம் திட்டை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள ஐயப்ப பக்தர்களுக்கான 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு வார்டை கேரளசுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று திறந்து வைத்தார்.

    • டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது.
    • 2023 ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல - மகர விளக்கு சீசன் முதல் 2023-ம் ஆண்டு மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம் வருமாறு:-

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (புதன்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது.

    அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது.

    மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். 20-ந் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

    பின்னர் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ந் தேதி நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைக்கு பின்னர் 17-ந் தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14-ந்தேதி நடை திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும்.

    அதைத்தொடர்ந்து பங்குனி ஆராட்டு விழாவை முன்னிட்டு மார்ச் 26-ந் தேதி நடை திறக்கப்படும். 27-ந் தேதி காலை 9 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். ஏப்ரல் 5-ந் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும்.

    சித்திரை மாத பூஜைக்காக ஏப்ரல் 11-ந் தேதி நடை திறக்கப்படும். 15-ந் தேதி விஷு பண்டிகை சிறப்பு பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து 19-ந் தேதி நடை அடைக்கப்படும்.

    வைகாசி மாத பூஜைக்காக மே மாதம் 14-ந்தேதி நடை திறக்கப்பட்டு, 19-ந்தேதி அடைக்கப்படும்.

    பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு மே 29-ந் தேதி நடை திறக்கப்படும். 30-ந்தேதி பிரதிஷ்டை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15-ந் தேதி நடை திறக்கப்பட்டு 20-ந் தேதி அடைக்கப்படும்.

    ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு 21-ந்தேதி அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி அடைக்கப்படும்.

    ஒணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக ஆகஸ்டு 27-ந் தேதி நடை திறக்கப்பட்டு 31-ந் தேதி அடைக்கப்படும்.

    புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு 22-ந்தேதி அடைக்கப்படும்.

    ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு 22 -ந் தேதி அடைக்கப்படும்.

    சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி, நவம்பர் 10 -ந்தேதி நடை திறக்கப்படும். 11-ந்தேதி சிறப்பு பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும். பின்னர் 2023-ம் ஆண்டுக்கான மண்டல சீசன் நவம்பர் 16-ந்தேதி தொடங்கிநடைபெறும்.

    • மாத பூஜை நாட்களில் மட்டுமே படி பூஜை நடத்தப்படுகிறது.
    • 2037-ம் ஆண்டு வரை படிபூஜைக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதை அடுத்து சபரிமலைக் செல்வதற்காக தமிழகத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகின்றனர். முன்னதாக மண்டல-மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

    கோவில் தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து ஐயப்பனுக்கு பூஜை செய்தார். இந்த நிலையில், சபரிமலை கோயில் நிர்வாகத்தை கவனித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் நேற்று சன்னிதானத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர மாத பூஜை நாட்களில் படி பூஜை நடத்தப் படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.75 ஆயிரம் ஆகும். இந்த பூஜைக்கு 2037-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த பூஜைக்கு 2024-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அதே போல் சகஸ்ர கலச பூஜைக்கும் ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.

    நடப்பு சீசனையொட்டி, தேவைக்கு ஏற்ப அப்பம், அரவணை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. 250 மில்லி அளவுள்ள ஒரு டின் அரவணை விலை ரூ.80 ஆகும். அப்பம் ஒரு பாக்கெட் ரூ.35 விலையில் விற்பனையாகிறது. சபரிமலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் தளராமல் சாமி தரிசனம் செய்தனர். மழையில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கூடுதல் வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் நாளான இன்றே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • புதிய மேல்சாந்தி நடை திறந்து வழிபாடுகள் நடத்தினார்

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை விழா தொடங்கியது.

    இதற்காக நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்பு சுத்தி பூஜைகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பதவி ஏற்று கொண்டார்.

    அதன்பின்பு பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் அனுமதிக்கப்பட்டார்கள்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து வழிபாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து இருமுடி கட்டி வந்த பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர்.

    முதல் நாளான இன்றே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான கன்னிசாமிகளும் முதல் நாளில் தரிசனத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் சரண கோஷம் முழங்க 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நெய் அபிஷேகம் செய்யவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக கோவிலில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    பாதுகாப்பு பணியில் சுமார் 1250 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ×