என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school teacher"

    • மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் ஒரு மாணவிக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி தகவல் பரவியதால் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பெருமாள் அந்த பள்ளியில் விசாரணை மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து உறுதி செய்ய தொடர் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

    • 41 வயதான அனீஸ் ஜார்ஜ் பையன்னூர் அரசு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • ஓய்வின்றி இரவு பகலாக படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டார்.

    கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பையன்னூர் அருகே ஏவுனுக்கு கண்டி பகுதியை சேர்ந்த 41 வயதான அனீஸ் ஜார்ஜ் பையன்னூர் அரசு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் தொடங்கிய நிலையில் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலராக அனீஸ் ராஜ் நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே நேற்று முன்தினத்துக்குள் அனைத்து வாக்காளர்களிடமும் கணக்கீட்டு படிவங்களை வழங்க வேண்டும் என்று அனீஸ் ஜார்ஜூக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் ஓய்வின்றி இரவு பகலாக படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டார். இருப்பினும் கொடுத்த கால அவகாசத்துக்குள் அவரால் 200 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனீஸ் ஜார்ஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவலறிந்து போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    தனது மகன் நள்ளிரவு 2 மணி வரை வாக்காளர்களிடம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டதாகவும், அதீத பணி அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாகவும் ஜார்ஜ்ஜின் தந்தை தெரிவித்தார். இந்த ச,சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மாநில தேர்தல் ஆணையர் விளக்கம் கேட்டுள்ளார். 

    • அந்த நபரின் தற்போதைய மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண் மற்றும் ஒரு பூசாரியும் அந்தப் படத்தில் உள்ளனர்.
    • குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள நந்திகாமாவில், 40 வயது பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தத் திருமணம் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்துதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த நபரின் தற்போதைய மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண் மற்றும் ஒரு பூசாரியும் அந்தப் படத்தில் உள்ளனர்.

    இது தொடர்பான புகாரில் ஆசிரியர் மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

    இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. 

    • நான் எப்போதும் ஒரு ஆணாக இருக்கவே விரும்பினேன்.
    • அவர் அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன்.

    ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்தவர் மீரா. பள்ளியில் உடற்கல்வி வகுப்புகளின்போது மீரா மாணவி கல்பனாவை சந்தித்துள்ளார். அப்போது அவர் கல்பனா மீது காதல் வயப்பட்டுள்ளார். 

    பள்ளி காதல் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், கல்பனாவை திருமணம் செய்துக்கொள்ள தான் ஆணாக மாற மீரா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ளார்.

    "காதலில் எல்லாம் நியாயமானது. அதனால்தான் நான் என் பாலினத்தை மாற்றிக் கொண்டேன்" என்று ஆணாக மாறி ஆரவ் என்று பெயர் மாற்றிக்கொண்ட மீரா தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆரவ் கூறுகையில், "நான் பெண்ணாக பிறந்தேன். ஆனால் நான் எப்போதும் ஒரு ஆணாக இருக்கவே விரும்பினேன். இதற்காக பாலினத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டேன். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் எனது முதல் அறுவை சிகிச்சையை செய்தேன்" என்றார்.

    இதுகுறித்து கல்பனா கூறுகையில், " நான் அவரை ஆரம்பத்திலிருந்தே விரும்பினேன். அவர் இந்த அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன். அறுவை சிகிச்சைக்கு அவருடன் சென்றேன்," என்றார்.

    கல்பானா மாநில அளவில் கபடி விளையாடிய நிலையில், வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச கபடி போட்டிக்காக துபாய் செல்லவுள்ளார்.

    • நடத்தை விதிகளை மீறி அரசியல் பேரணியில் கலந்து கொண்டதாக கூறி பாஜக அரசு நடவடிக்கை.
    • அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக காங்கிரஸ் புகார்

    பர்வானி:

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    கனஸ்யாவில் உள்ள பழங்குடியினருக்கான தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ராஜேஷ் கண்ணோஜ், முக்கியமான வேலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் அவர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையர் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.

    அரசு ஊழியர்களுக்கான சேவை நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரகுவன்ஷி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ் சஸ்பெண்ட் உத்தரவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தற்போது இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் மாநில காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் மிஸ்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிவராஜ் சிங் சவுகான் அரசு, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்க அனுமதித்துள்ளது, ஆனால் பழங்குடியினரான ராஜேஷ் கண்ணோஜ், அரசியல் சாராத அணிவகுப்பில் பங்கேற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

    • நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் பிரேமா தளவாய்புரம் டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
    • இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆன்ட்ரூஸ் கனகராஜ் தனது குடும்பத்தினருடன் கடந்த 25-ந் தேதி நாசரேத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் கனகராஜ் (வயது 56).

    ஆசிரியை

    இவர் நெல்லை அரசு போக்குவரத்து பணி மனையில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா தளவாய்புரம் டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி ஆசிரி யையாக பணியாற்றுகிறார்.

    இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆன்ட்ரூஸ் கனகராஜ் தனது குடும்பத்தினருடன் கடந்த 25-ந் தேதி நாசரேத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    கொள்ளை

    பின்னர் நேற்று இரவு தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.அப்போது வீட்டின் கதவை திறந்து பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து ஆண்ட்ரூஸ் கனகராஜ் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமை யிலான தனிப்படையினர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், சிதம்பரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அதில் அருகில் உள்ள வீட்டின் கண்காணிப்பு காமிராவில் மர்ம நபர்கள் வெள்ளை அடித்து விட்டு, மாடி வழியாக வீட்டின் உள்ளே புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்

    • போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). என்ஜினீயர்.

    இவரது மனைவி லக்ஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்று உள்ளார். இவர்களுக்கு யக்சிதா (10) என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்களுடன் ராஜேஷின் தாய் பிரேமா (74) என்ப வரும் வசித்து வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு தான் இவர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறினார்.

    கடந்த 3 நாட்களுக்கும் மேலாக ராஜேசின் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், லக்ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்த நிலையிலும் இறந்து கிடந்தனர்.

    போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அறையில் என்ஜினீயர் ராஜேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    என்ஜினீயர் ராஜேஷின் மனைவி லக்ஷயாவுக்கு, சின்மயா நகரை சேர்ந்த ஆசிரியரின் நட்பு கிடைத்தது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் அந்த ஆசிரியரிடம் தனது தேவைக்காக லக்ஷயா பணம் கேட்டுள்ளார். அவர் அடிக்கடி அவருக்கு பணம் கொடுத்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பணம் மட்டுமின்றி தனது நண்பர் ஒருவரிடம் இருந்தும் பணத்தை வாங்கி லக்ஷயாவுக்கு கொடுத்தார். இதுவரை ரூ.31 லட்சம் கொடுத்துள்ளார்.

    இதற்கிடையே ஆசிரியருக்கு பணம் கொடுத்த அவரது நண்பர் பணம் கேட்கவே, 2 பேரும் லக்ஷயாவிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அவர் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் லக்ஷயாவின் கணவர் ராஜேசை சந்தித்து, உனது மனைவிக்கு நாங்கள் பணம் கொடுத்துள்ளோம். அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த்தணையை காண்பித்தனர்.

    இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பணம் கொடுத்தவர்கள், அதனை கேட்டு தொந்தரவு கொடுக்கவே, ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியரின் நண்பரையும் விசாரிப்பதற்காக அவரையும் தேடி வருகின்றனர்.

    • இல்லம்தேடி கல்வி தன்னார்வலரான ஆசிரியையை முன்விரோதம் காரணமாக ஒருமையில் பேசி தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்தார்.
    • கல்வி அதிகாரிகள் நேரடியாக விமர்சித்த ஆசிரியரை கண்டித்து இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது என எச்சரித்தனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகில் உள்ள பூத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அதே ஊரை சேர்ந்த இல்லம்தேடி கல்வி தன்னார்வலரான ஆர்த்தி என்பவரை பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கோபி நாதன் என்பவர் முன்விரோ தம் காரணமாக ஒருமையில் பேசி தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்தார். இதுகுறித்து ஆர்த்தி பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார்.

    இதனைதொடர்ந்து ஆர்த்தியின் உறவினர்களும் கோபிநாதனுக்கு எதிராக போர்கொடி தூக்கினர். இதனைதொடர்ந்து கல்வி அதிகாரிகள் நேரடியாக கோபிநாதனை கண்டித்து இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது என எச்சரித்தனர்.

    • அலிஸா மெக்காமன் 2 குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது
    • பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார்

    அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலம் டென்னிசி. இதன் தலைநகரம் நாஷ்வில்.

    டென்னிசி மாநில டிப்டன் கவுன்டி பகுதியை சேர்ந்த கோவிங்டன் நகரத்தில் உள்ளது சார்ஜர் அகாடமி எனும் தொடக்கப்பள்ளி. இங்கு 4-வது வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியையாக பணியாற்றியவர் 38 வயதான அலிஸா மெக்காமன் (Alissa McCommon). இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    2021-ல் இவர் தன்னிடம் படித்த ஒரு 12-வயது முன்னாள் மாணவரிடம் தனது வீட்டில் பாலியல் அத்துமீறல் புரிந்தார். இது மட்டுமின்றி பல மாணவர்களிடம் தகாத பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார்.

    இது தெரிய வந்ததும் அந்த மாணவரின் பெற்றோர் பள்ளியில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து இவர் பள்ளியில் இருந்து ஊதியமின்றி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    சில நாட்களுக்கு பிறகு இக்குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த காவல்துறையினர் குற்றச்சாட்டு உண்மை என கண்டறிந்து வழக்கு பதிவு செய்து அலிஸாவை அவரது வீட்டில் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் பல மாணவர்களுடன் தகாத பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை அவர் ஒப்பு கொண்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    அந்த ஆசிரியை இவ்வாறு முறைகேடான உரையாடல்களில் ஈடுபட்டதாகவும், பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதாகவும், முறையற்ற உறவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தற்போது பல குழந்தைகள் புகாரளித்துள்ளனர்.

    இதனையடுத்து சுமார் ரூ.20 லட்சம் ($25,000) பிணையில் வெளிவரும் வகையில் காவலில் அடைக்கப்பட்டார். ஆனால் அலிஸா இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுடன் காவல்துறை பேசி விவரங்களை சேகரித்து வருகிறது.

    அலிஸா பணியிலிருந்து நீக்கப்பட்ட அன்றே பள்ளி நிர்வாகம் அவர் மீது காவல்துறையில் புகாரளித்து அப்போதே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என சில பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    அக்டோபர் 13 அன்று அலிஸா அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

    • லட்சுமணன் வலங்கைமான் நீதிமன்றத்தில் பணி புரிந்து வருகிறார்.
    • வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே உள்ள மணக்கோடு நல்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.

    இவர் வலங்கைமான் நீதிமன்றத்தில் பணி புரிந்து வருகிறார்.

    இவரது மனைவி பாபநாசத்தில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இருவரும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலை 7 மணி அளவில் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகை மற்றும் 48,000 பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது, தெரிய வந்துள்ளது.

    இது குறித்து வலங்கை மான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்தை வலங்கைமான் போலீசார் பார்வையிட்டனர்.

    பின்னர் திருவாரூர் மாவட்ட கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரே கைகள் பதிவு செய்யப்பட்டது.

    இது குறித்து வலங்கை மான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரையன்னாவிற்கு ஊதியமாக ரூ.35 லட்சம் ($42,000) வரை கிடைத்து வந்தது
    • ஆசிரியைகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றார் பிரையன்னா

    அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநிலத்தில் உள்ளது செயின்ட் க்ளேர் உயர்நிலை பள்ளி (St. Clair High School). இங்கு ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியையாக பணிபுரிந்தவர் பிரையன்னா கோப்பேஜ் (Brianna Coppage).

    முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியையான பிரையன்னா, ஊதியமாக ரூ.35 லட்சம் ($42,000) வரை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு இருந்த கல்வி கடன் மற்றும் சில பொருளாதார சிக்கல்களால் அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது.

    நிலைமையை சமாளிக்க அவர் கணவருடன் சேர்ந்து ஆபாச படங்களில் நடித்து, அவற்றை லண்டனை சேர்ந்த ஒரு பிரபல வலைதளத்தில் வெளியிட ஆரம்பித்தார். இதன் மூலம் பல ரசிகர்கள் அவரை இணையத்தில் பின்தொடர்ந்தனர். இதில் அவரது வருவாய் அதிகரித்தது.

    பிரையன்னாவிற்கு மாதாமாதம் சுமார் ரூ.6 லட்சம் ($8000) அதிகப்படியாக கிடைத்து வந்தது.

    இந்நிலையில், ஒரு பள்ளி ஆசிரியையான அவரை வீடியோவில் அடையாளம் கண்டு கொண்ட ஒருவர், அம்மாவட்ட பள்ளி கல்வித்துறையிடம் இது குறித்து புகாரளித்தார். இதனையடுத்து, அவரை அத்துறையும், அவர் பணிபுரிந்த பள்ளி நிர்வாகமும் விசாரணை செய்தது.

    இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும் ஆலோசித்து வந்தது.

    ஆனால், பிரையன்னா தற்போது தனது ஆசிரியை பணியை ராஜினாமா செய்துள்ளார். தனது முடிவை குறித்து அவர் எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் உணர்ச்சிமயமாக விவாதிக்கப்படுகிறது.

    பிரையன்னா அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

    நான் கல்வி கற்று கொடுத்த மாணவர்கள் இச்செய்திகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். என்னால் பள்ளிக்கு கெட்ட பெயர் வருவதை நான் விரும்பவில்லை. மீண்டும் ஆசிரியை பணிக்கு நான் திரும்பினால் அனைத்தும் முன்பு போல் இருக்காது என நான் அறிவேன். ஒரு மதிப்பு வாய்ந்த முன்னுதாரணமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. நான் மாணவர்களுக்கு பாட திட்டத்தில் உள்ளதை மட்டுமே பயிற்றுவித்தேன். என்னுடைய சித்தாந்தங்கள் எதையும் அவர்களிடம் புகுத்தவில்லை. என்னை குறித்த மக்களின் எண்ணங்களை நான் கட்டுப்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சில தினங்களுக்கு முன், மின்னசோட்டா (Minnesota) மாநிலத்தில் ஒரு பெண் காவல் அதிகாரி அதிக வருமானத்திற்காக இதே போன்று வலைதளத்தில் மாடலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் அவரை பணி நீக்கம் செய்ய மக்கள் கோருவதும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
    • மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என வகுப்பு ஆசிரியர் மிரட்டியுள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று பள்ளி யின் 7-ம் வகுப்பு ஆசிரியர் அன்புமணி 6-ம் வகுப்பிற்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவரின் சட்டையை கழற்ற வைத்து முதுகில் சரமாரியாக அடித்துள்ளார். மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவரின் முதுகு வீங்கி இருந்ததை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது சிறுவன் நடந்தவற்றை கூறியுள்ளான். இதையடுத்து அவனை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர் ஆசிரியர் அன்புமணி மீது ஓமலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் அன்புமணி மீது தாக்குதல் நடத்துவது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    ×