என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sengottaiyan"

    • டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை.
    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பரபரப்பு அடங்குவதற்குள், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பி இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் சூட்டை கிளப்பி இருப்பதுடன் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே அமித்ஷா-செங்கோட்டையன் சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்று அமித்ஷா, செங்கோட்டையனிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

    இது பற்றி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை. அப்படி இருக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி விட்டு செங்கோட்டையனை அவருக்கு எதிராக எப்படி திருப்பி விட முடியும் என்பதும் பாரதிய ஜனதா கட்சியினரின் கேள்வியாக உள்ளது.

    • த.வெ.க கூட்டணி செய்திகள் வெளியான நேரத்தில் தான் செங்கோட்டையன், இ.பி.எஸ். மோதல் உண்டானது.
    • கூட்டணிக்காக செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறதா பா.ஜ.க.?

    டெல்லி:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த வாரம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்ததாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.

    டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு முன்னதாகவே சந்தித்து பேச செங்கோட்டையன் நேரம் கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பு இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுசில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு செங்கோட்டையன் குறி வைக்கிறாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கு இ.பி.எஸ். பதவி வழங்கவில்லை என புகார் எழுந்தது. இ.பி.எஸ். புறக்கணிப்பதால் பா.ஜ.க. உதவியுடன் தனது இருப்பை தக்க வைக்க செங்கோட்டையன் முயல்கிறாரா?

    த.வெ.க கூட்டணி செய்திகள் வெளியான நேரத்தில் தான் செங்கோட்டையன், இ.பி.எஸ். மோதல் உண்டானது. செங்கோட்டையனுடனான மோதலுக்கு பின்னரே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இ.பி.எஸ். சந்தித்து பேசினார்.

    இபிஎஸ்-ஐ காலி செய்துவிட்டு அந்த இடத்திற்கு முயற்சிக்கிறாரா செங்கோட்டையன்? தர்மயுத்தம் நடத்தினால் ஆதரவு கிடைக்காது என்பதால் பா.ஜ.க. உதவியை நாடி உள்ளாரா?

    கூட்டணிக்காக செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறதா பா.ஜ.க.? அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவாகாவிட்டால் ஷிண்டேவாக மாறுகிறாரா செங்கோட்டையன் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு இணங்காவிட்டால், செங்கோட்டையனை முன்னிறுத்தி கூட்டணி அமைத்து 2026-ம் ஆண்டு தேர்தலில் களம் காண பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

    • கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
    • முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.

    டெல்லி:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த புதன்கிழமை அன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பானது சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

    இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.



    இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு முன்னதாகவே சந்தித்து பேச செங்கோட்டையன் நேரம் கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனிடையே செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கூற மறுத்துவிட்டார். 

    • பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் தொடர்பாக சட்டசபையில் நடந்த காரசார விவாதத்தின்போது செங்கோட்டையன் பேச அனுமதி கேட்டார்.
    • சபாநாயகர் செங்கோட்டையனை கண்டு கொள்ளாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

    தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் தொடர்பாக சட்டசபையில் நடந்த காரசார விவாதத்தின்போது செங்கோட்டையன் பேச அனுமதி கேட்டார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதற்கு பதிலடி கொடுப்பதற்கு ஆயத்தமான செங்கோட்டையனுக்கு கடைசி வரை வாய்ப்பு தரப்படவில்லை.

    3, 4 முறை கையை உயர்த்தியும் சபாநாயகர் செங்கோட்டையனை கண்டு கொள்ளாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

    செங்கோட்டையனை பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
    • இன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி உள்ளது.

    முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் சமீபகாலமாக அ.தி.மு.க. கூட்டங்களை புறக்கணித்து வருகிறார்.

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல், வேளாண் பட்ஜெட் தாக்கல் அன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதேபோல் இன்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையில் கலந்து கொள்ளவில்லை.

    நான்கு நாட்கள் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன், சட்டசபையின் 4-வது நாள் அமர்வில் பங்கேற்றுள்ளார்.

    நேற்றைய தினம் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சட்டசபை வளாகத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் செங்கோட்டையனை சமாதானப்படுத்தியதாக கூறப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி உள்ளது. மேலும், செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான கருத்து வேறுபாடு தொடர்வதாகவே பார்க்கப்படுகிறது.

    • கேள்வி நேரத்தில் தொகுதிக்கான கேள்வியை கேட்ட பின்னர் இருக்கையில் இருந்து செங்கோட்டையன் எழுந்து சென்றார்.
    • சட்டசபைக்கு செங்கோட்டையனும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒன்றாகவே வந்துள்ளனர்.

    சட்டசபையில் கடந்த 4 ஆண்டுகளாக ராதாபுரம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு சபாநாயகராக பதவி வகித்து வருகிறார்.

    சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார்.

    தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில் சட்டசபை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, குணசீலன் மற்றும் மருத்துவர் செரியன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றது.

    கேள்வி - பதில் நிகழ்வில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.

    கேள்வி நேரத்தில் தொகுதிக்கான கேள்வியை கேட்ட பின்னர் இருக்கையில் இருந்து செங்கோட்டையன் எழுந்து சென்றார்.

    அவையில் இருந்து செங்கோட்டையன் எழுந்து சென்றதையடுத்து, அ.தி.மு.க. கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது அவைக்கு செங்கோட்டையன் மீண்டும் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்த 16 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் செங்கோட்டையனும் ஒருவர்.

    செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

    முன்னதாக செங்கோட்டையன் வீட்டிற்கே சென்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சட்டசபைக்கு செங்கோட்டையனும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒன்றாகவே வந்துள்ளனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் செங்கோட்டையனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
    • செங்கோட்டையனின் செயல்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பொதுச்செயலாளர் இது தனிப்பட்ட விஷயம் என்று தெரிவித்து விட்டார்.

    சென்னை:

    அ.தி.முக.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்ட பிறகு கட்சியின் தலைமை பதவியை கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 28-ந்தேதி பொறுப்பேற்ற இவர் தொடர்ந்து கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருவதுடன் மாவட்ட செயலாளர்கள் முதல் பல்வேறு அணிகளிலும் நிர்வாகிகளை நியமித்துள்ளார். அ.தி.மு.க.வை வலுப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை மாவட்டந்தோறும் அனுப்பி வைத்து கள ஆய்வையும் மேற்கொள்ள வைத்தார்.

    இப்படி முன்னணி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வந்தபோதிலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கட்சியில் ஓரம் கட்டப்பட்டு வந்தார்.

    மாவட்டம் வாரியாக கள ஆய்வு பணிக்காக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலிலும் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில் கடந்த மாதம் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறாததாலேயே நான் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தேன் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார்.

    இருப்பினும் எடப்பாடி பழனிசாமியுடனான கருத்து மோதல் காரணமாகவே செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று பரபரப்பான தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை மறுத்த செங்கோட்டையன் எப்போதும் போல கட்சி பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன் தலைமையில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் ஒரு பிரிவினர் அவருக்கு எதிராக செயல்பட்டு மோதலில் ஈடுபட்டனர்.

    கட்சியில் இருந்து ஏற்கனவே ஓரம் கட்டப்பட்டிருந்த செங்கோட்டையன் இந்த மோதல் சம்பவத்தால் கட்சி தலைமை மீது மேலும் அதிருப்தியில் இருந்தார். இதுதான் கடந்த 2 நாட்களாக எதிரொலித்துக் கொண்டு உள்ளது.

    தமிழக சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இதில் பங்கேற்க வந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேராக சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்தார். சட்டசபையில் பட்ஜெட் தாக்கலானபோது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து கோஷமிட்டனர். ஆனால் செங்கோட்டையன் அமர்ந்தபடியே இருந்தார். அதே நேரத்தில் சபாநாயகர் அப்பாவுவை அவர் தனியாக சந்தித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் ஆவேசத்துடன் பதில் அளித்தார்.

    "செங்ட்டைகோட்டையன் நடந்து கொள்வது பற்றி அவரிடமே கேளுங்கள்" என்னிடம் இதுபற்றியெல் லாம் கேட்க வேண்டாம் என்று காட்டமாக கூறினார்.

    இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு அ.தி.மு.க.வில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக செங்கோட்டையன் விவகாரம் அ.தி.மு.க.வில் புகைச்சலை ஏற்படுத்தி இருந்த நிலையில் முதல் முறையாக அ.தி.மு.க. நிர்வாகிகள் செங்கோட்டையனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான வைகைச் செல்வன் காஞ்சிபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    செங்கோட்டையனின் செயல்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பொதுச்செயலாளர் இது தனிப்பட்ட விஷயம் என்று தெரிவித்து விட்டார். சட்டமன்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக நடத்தப்பட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அவருக்கு என்ன பிரச்சனை என்று அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

    அ.தி.மு.க. தொண்டர்களால் இயக்கப்படுகிற இயக்கம் ஆகும். தொண்டர் தொடங்கிய இயக்கத்தில் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இணைத்துக் கொண்டதுதான் வரலாறு. அப்படி தோன்றிய இயக்கத்தை 50 ஆண்டுகள் அழைத்துச் சென்றவர் புரட்சி தலைவி.

    எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள், 3 மாதம் ஆட்சி பீடத்தில் இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவராக இருந்து கட்சியை வழி நடத்திக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஒன்றிரண்டு பூசல்கள் இருக்கும். கசப்புகள் இருக்கும். கருத்து வேறுபாடுகள் இருக்கும். இந்த வேறுபாடுகள் மற்றும் மன வருத்தத்தால் கட்சியில் இருந்து போனவர்கள் காணாமலேயே போய்விட்டார்கள்.

    சொந்த அண்ணன்-தம்பிக்குள் பிரச்சனை என்றால் பேசி தீர்க்க வேண்டும். செங்கோட்டையனுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் பொதுச்செயலாளரைத் தான் சந்தித்து பேசி இருக்க வேண்டும்

    அதை விட்டு விட்டு பொது வெளியில் அவர் இப்படி நடந்து கொள்வது அநாகரீகமான செயலாகும்.

    இவ்வாறு வைகை செல்வன் கூறினார்.

    செங்கோட்டையன் விவகாரத்தில் அ.தி.மு.க.வில் மீண்டும் மோதல் வெடித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது தொடர்பாக மனு அளித்திருக்கிறேன்.
    • ஈபிஎஸ்-ஐ சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு கொள்கை உயர்ந்தது, பாதை தெளிவானது என செங்கோட்டையன்.

    தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

    தொகுதி சுற்றுச்சூழல் பிரச்சினை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுப்பதற்காக சபாநாயகரை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அவர்," அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது தொடர்பாக மனு அளித்திருக்கிறேன்.

    ஈபிஎஸ்-ஐ சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு கொள்கை உயர்ந்தது, பாதை தெளிவானது என செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

    மேலும் அவர், கொடிவேரி அணையிலிருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து தொழிற்சாலை அமைக்கும் தனியார் நிறுவனம் முயற்சியை தடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள்.
    • அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படும் கட்சி.

    சென்னை:

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பொது பட்ஜெட்டும், இன்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபை நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக நேற்றும், இன்றும், அவையில் என்னென்ன விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற இரண்டு நாட்களிலும் முன்னாள் அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில், கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள். செங்கோட்டையனுக்கு ஏதாவது வேலை இருந்திருக்கும். நான் யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை. அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படும் கட்சி என்றார்.

    முன்னதாக, சட்டசபைக்கு வந்த செங்கோட்டையன் சபாநாயகர் அறைக்கு சென்று அவரை சந்தித்து பின்னர் அவை நிகழ்வில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து விட்டு செங்கோட்டையன் தனித்து செயல்படுவதால் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

    • அ.தி.மு.க.வால் தனித்து நிற்கவும் முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
    • நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை.

    அட... செங்கோட்டையனா இது? இவரது அற்புதமான பேச்சை கேட்டு எவ்வளவு காலம் ஆச்சு... என்று அவரது பேச்சை கேட்டு ஈரோட்டு அரங்கில் விசில் பறந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம்தான் அது. அந்த கூட்டத்தில் பேசும்போது, "நமது மண் திராவிட மண், ஒடுக்கப்பட்ட மக்களை தட்டி எழுப்பியவர் தந்தை பெரியார். பெரியாருக்கு பிறகு அண்ணா தனது எழுத்து ஆற்றலால் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பி ஒடுக்கப்பட்டவர்களும் கோட்டைக்கு வரலாம் எனக் காட்டினார். அவர்கள் வழியில் வந்த எம்ஜிஆர் மாபெரும் புரட்சியை உருவாக்கினார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று அதற்கடுத்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரை முதல்வராக அமர வைக்கும் வரை தொண்டர்கள் உழைக்க வேண்டும்.

    அ.தி.மு.க. கூட்டத்தைக் கூட்டினால் எந்தக் கட்சியும் நம்முடன் போட்டியிட முடியாது. தமிழகத்தில் தனித்து நிற்கிறோம் என எந்தக் கட்சியையாவது சொல்லச் சொல்லுங்கள். ஆனால் அ.தி.மு.க.வால் தனித்து நிற்கவும் முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை. சில வெட்டுக்கிளிகளும், வேடந்தாங்கல் பறவைகளும், சில பட்டுப்பூச்சிகளும், பருவகாலச் சிட்டுகளும் அதிமுகவை விட்டுச் சென்றாலும் யாராலும் வீழ்த்த முடியாது, காற்றை சுவர் எழுப்பித் தடுக்க முடியாது, கடலை அணை போட்டுத் தடுக்க முடியாது' என மூச்சுவிடாமல் பேசினார் செங்கோட்டையன்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணன் இப்படி கம்பெடுத்து சுற்றுகிறாரே? என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அப்போதுதான் கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள் எடப்பாடிக்கு வந்த நெருக்கடியை பயன்படுத்தி பல பதவிகள் வாங்கி கொண்டார்கள். உங்கள் கையை பிடித்து அரசியலுக்கு வந்தவர்களை எங்கேயோ போய்விட்டார்கள் பாருங்கள். நீங்கள் இப்படியே இருந்தால்... என்று உசுப்பேற்றி இருக்கிறார்கள்.

    அதை கேட்டு யோசித்த பிறகுதான் தானும் தன் இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செங்கோட்டையன் விசுவரூபம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    • ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள பணிக்குழு அமைப்பு.
    • அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் அடங்குவர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவில் 106 நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கீழ்க்கண்டவர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.

    அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண் முகம், செம்மலை,

    தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, விஜயபாஸ்கர், கடம்பூர் சி.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, பென்ஜமின், கருப்பசாமி பாண்டியன், கழக அமைப்பு செயலாளர் நா.பாலகங்கா, கழக இலக்கிய அணிச் செயலாளர் வைகைச் செல்வன், எஸ்.ஆர்.விஜய குமார், சி.த.செல்லப்பாண்டி யன், செ.தாமோதரன், இசக்கி சுப்பையா, ஆதிராஜாராம், வாலாஜாபாத் பா.கணேசன், எம்.சி.சம்பத், கே.சி.கருப்பணன், எம்.ஆர். விஜய பாஸ்கர், எஸ்.பி. சண்முக நாதன், மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, எஸ்.ஆர். ராஜேஷ், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, தி.நகர். சத்தியா, எம்.கே.அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், சிறுணியம் பலராமன், வி.அலெக்சாண்டர், தஞ்சை கணேச ராஜா, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், ஜாண்தங்கம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் இடம் பெற்று உள்ளன.

    • திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும்.
    • திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம். எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வழியில் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டு காலம் தமிழகம் வியக்கத்தக்க வகையில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பல மாற்றங்களை துறைதோறும் உருவாக்கி சிறந்த முறையில் ஆட்சி நடத்தினார்.

    பழகுவதற்கு எளிமையானவர். பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை பொதுமக்கள், கழகத்தினர் போற்றும் அயராத உழைப்பினால் எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

    அவரது தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களத்தில் முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றோம். கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. யாராலும் தகர்க்க முடியாது. அவரது தலைமையில் இன்று பணியை ஆற்றுகின்றோம்.

    அனைத்து பகுதிகளிலும் தேர்தல் களம் கண்டவர்கள் வந்துள்ளனர். பல தேர்தலை சந்தித்தவர்கள் பணியாற்றுகின்றார்கள். தேர்தல் களத்தில் அமைதியோடு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம்.

    இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.

    ஆகவே களத்தில் பணிகளை சிறப்போடு, அமைதியோடு செய்து வருகின்றோம். சரியான முறையில் கழகத்தின் சார்பாக எடப்பாடி தலைமையில் சரியான முறையில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் களத்தில் அந்த பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம்.

    இரட்டை இலை சின்னம் வழக்கை பொறுத்தவரை நீதித்துறையில் என்னென்ன தேவையோ அதை பூர்த்தி செய்து செயல்பட்டு வருகிறோம். அச்சமின்றி தேர்தல் பணி செய்கிறோம். தெளிவாக 98.5 சதவீத பேர் ஒரு மனதாக பொதுச்செயலாளரை தேர்வு செய்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் செயலாற்றுகிறோம். முழு மனதோடு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம்.

    4 அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறாது. தேர்தல் களத்தில் மனு தாக்கல் தொடங்கி முடிய கால அவகாசம் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதையும் ஆய்வு செய்து வருகின்றோம். முழுமையாக ஆய்வு செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார். குருச்சேத்திர யுத்தத்தை போல் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணி, தனித்து போட்டி குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதம் குறித்த கேள்விக்கு விரைவில் அறிவிக்கப்படுவார் என்று பதில் அளித்தார்.

    ×