என் மலர்
நீங்கள் தேடியது "Sexual assault"
- பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் சகஜம்
- குற்றவாளியின் கொடூர செயலால் அவரது ஒரு மகள் கர்ப்பமடைந்தார்
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கிரிமினல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. அதிலும் பாலியல் குற்றங்களுக்கு பிரம்படியுடன் கூடிய பல வருட சிறை தண்டனை அங்கு வழக்கமான ஒன்று.
மலேசியாவின் ஜொஹோர் மாவட்டத்தில் உள்ளது முவார்.
இங்குள்ள 53 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு 12 மற்றும் 15 வயது நிரம்பிய இரு மகள்கள் இருக்கின்றனர். இவர் 2018-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு ஜூலை வரை, தனது சொந்த மகள்களை முவார் பகுதியிலுள்ள பக்ரி மற்றும் ஜலன் ஜெரம் டெபி எனும் இரு பகுதியிலுள்ள வீடுகளில் கொண்டு சென்று பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இவரது இந்த கொடூர செயலால் 2 மகள்களில் ஒரு மகள் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனையடுத்து இந்த பணியாளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது.
காவல்துறை சார்பாக ஆஜரான துணை அரசு வழக்கறிஞர் இவருக்கு மிக கடுமையான தண்டனை வழங்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் குற்றவாளியான அவரது தந்தை, தனக்கென வக்கீல் வைத்து கொள்ளாமல், குற்றத்தை ஒப்பு கொண்டு, தான் மனம் வருந்துவதாகவும் அதனால் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி அபு பக்கர் மனத், குற்றவாளி தனது கொடுமையான குற்றத்திற்காக உண்மையிலேயே வருந்தும் வகையில் அவருக்கு 702 வருட சிறைத்தண்டனையும், இத்துடன் 234 பிரம்படியும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
சமீபத்தில் இதே போல், தனது 15 வயது மகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக ஜொஹோரில் ஒருவருக்கு 218 வருட சிறைத்தண்டனையும், 75 பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட்டது.
மலேசியாவில் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது போல் இந்தியாவிலும் கொண்டு வரப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
- ராகுல் சர்மா எனும் பண்டிட் இச்சிறுமியை காப்பாற்றி உதவி செய்தார்
- வெற்று கோஷங்களில் அலறல்களை அடக்கி விடுகின்றனர் என்றார் ராகுல்
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன், ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் பரிதாபமாக உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை தட்டியும், அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.
அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார். காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அது மறுக்கப்படுவதும் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது கருத்துக்களை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு எதிரான கொடூரமான குற்றம், அன்னை இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், சிறு பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகளும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. இந்த குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல; மாநில பா.ஜ.க. அரசாங்கமும் குற்றவாளிதான். நாட்டின் மகள்களை பாதுகாக்க இயலாத அரசாங்கம் நடைபெறுகிறது. மாநிலத்தில் நீதி இல்லை, சட்டம் ஒழுங்கு இல்லை, உரிமைகள் இல்லை. இன்று மத்திய பிரதேசத்தின் மகள்களின் நிலை குறித்து முழு நாடும் வெட்கப்படுகிறது. ஆனால், மாநில தலைவருக்கும் நாட்டின் பிரதமருக்கும் இவை அவமானமாகவே தெரியவில்லை. அவர்கள் தேர்தல் உரைகள், வெற்று வாக்குறுதிகள் மற்றும் தவறான கோஷங்களுக்கிடையே நாட்டின் மகள்களின் அலறல்களை பா.ஜ.க.வினர் அடக்கிவிடுவார்கள்.
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
- சிறுமி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
- குற்றவாளி சார்பில் வாதாட வேண்டாம் என பார் கவுன்சில் வேண்டுகோள் வைத்துள்ளது
சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை பரிதாபமாக தட்டியும் அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.
அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அந்நகர மக்கள் அவளுக்கு உதவ மறுப்பதும் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறுதியாக, அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார்.
காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
"நூற்றுக்கணக்கான பேரை விசாரணை செய்து, 700க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து பரத் சோனி எனும் ஆட்டோ ஓட்டுனர் இந்த குற்றத்தை செய்திருப்பதை கண்டு பிடித்தோம். சுமார் 35 அதிகாரிகள் இந்த சைபர் விசாரணையில் ஈடுபட்டனர். 3 நாட்களாக தூக்கம் இல்லாமல் தேடுதல் வேட்டை நடைபெற்றது. குற்றவாளியை நெருங்கும் போது அவன் தப்பி ஓட முயன்றான். காவல்துறையினர் அவனை துரத்தி பிடித்தனர். அச்சிறுமிக்கு உதவ மறுத்தவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தனது மகனின் இந்த குற்றச்செயல் குறித்து, "என் மகன் தண்டிக்கப்பட வேண்டியவன். அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இது ஒரு வெட்கக்கேடான செயல். அவனை காணவோ, அவனை காப்பாற்றவோ நான் காவல் நிலையத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல போவதில்லை" என பரத் சோனியின் தந்தை ராஜு சோனி கூறினார்.
"கோவில் நகரமான உஜ்ஜைன் நகரின் பெயரையே இச்சம்பவம் நாசப்படுத்தி விட்டது. நீதிமன்ற பார் கவுன்சிலை சேர்ந்த எந்த வழக்கறிஞரும் குற்றவாளி சார்பாக வாதாட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்," என உஜ்ஜைன் பார் கவுன்சில் தலைவர் அசோக் யாதவ் தெரிவித்துள்ளார்.
- சாலை விதிமீறல் அமெரிக்காவில் குற்றமாக கருதப்படுகிறது
- சிகப்பு விளக்கு எரிவதை கண்டும் சாலையை அப்பெண் கடந்தார்
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பினெல்லஸ் கவுன்டி (Pinellas County) பகுதியில் உள்ளது க்ளியர்வாட்டர் (Clearwater) நகரம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இங்குள்ள கடற்கரை பகுதியில் உள்ள ஒரு டிராபிக் சிக்னல் அருகே 32 வயதான ஒரு பெண் சுற்றுலா பயணி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதசாரிகள் சாலையை கடக்க முயல்வதை தடுக்கும் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அப்பெண் அதை பொருட்படுத்தாமல் சாலையை கடக்க முயற்சித்தார்.
சாலை விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை தீவிரமாக வலியுறுத்தும் அமெரிக்காவில் இந்த விதிமீறல் குற்றமாக கருதப்படுவதால், அங்குள்ள டிராபிக் காவல் அதிகாரி நிகோலஸ் பலோமா (29) அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார்.
அப்பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிகோலஸ், அப்பெண்ணை தனது காரில் ஏற சொன்னார். தயங்கிய அப்பெண்ணிடம், சாலை விதிமீறலுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க தனது பாலியல் ஆசைகளுக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அவரிடம் சிக்கி கொண்ட அப்பெண்ணை தனது காரில் 30 நிமிடங்களுக்கும் மேலாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று தகாத முறையில் நடந்து கொண்டார். பிறகு அப்பெண் தங்கியிருந்த ஓட்டலில் அவரை இறக்கி விட்டு சென்று விட்டார். குற்றம் செய்தவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதால் அப்பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கவில்லை.
இந்நிலையில் அப்பெண்ணுக்கும் அவரது நண்பருக்கும் இடையே நடந்த ஒரு மோதலை தீர்க்க காவல்துறையினர் சென்றிருந்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையில் அப்பெண் தனக்கு நேர்ந்ததை தெரிவித்தார்.
தங்கள் துறையை சேர்ந்த ஒருவரே பெருங்குற்றம் புரிந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் நிகோலஸை வலைவீசி தேடி வந்தனர்.
இறுதியாக நேற்று அவரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
- அப்பெண்ணிற்கு தரகர் ஒருவரும் அவர் நண்பரும் அறிமுகமானார்கள்
- காலியாக இருந்த ஃப்ளாட்டிற்கு அப்பெண்ணை அழைத்து சென்றனர்
புது டெல்லியின் வடக்கே உள்ளது புராரி பகுதி.
இப்பகுதியில் சுமார் 30 வயதுடைய பெண் ஒருவர் குடியிருக்க வீடு தேடி அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாடகைக்கு உள்ளதா என விசாரித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வீடுகளை வாங்கவும் விற்கவும் உதவும் ஜிதேந்திர சவுத்ரி எனும் தரகரும் அவரது நண்பர் ஒருவரும் அறிமுகமானார்கள். அப்பெண்ணிற்கு உதவ அவர்கள் இருவரும் முன்வந்தனர்.
அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் ஃப்ளாட் ஒன்று வாடகைக்கு இருப்பதாக அவர்கள் இருவரும் கூறினர். இதனையடுத்து அவர்களுடன் அப்பெண் அந்த வீட்டை பார்க்க சென்றார்.
காலியாக இருந்த அவர்கள் கூறிய அந்த ஃப்ளாட்டிற்கு அவர்கள் இருவரும் அப்பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு அப்பெண்ணுக்கு குடிக்க நீர் வழங்கினர். அதை குடித்ததும் அப்பெண் மயக்கமடைந்தார். அதன் பின், அவர்கள் இருவரும் அவரை பாலியல் ரீதியாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
நினைவு திரும்பியதும் தனக்கு நேர்ந்த விபரீதம் குறித்து அறிந்த அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அருகிலிருந்த புராரி காவல்நிலையத்திற்கு சென்று, குடிநீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து தன் மீது கூட்டு பாலியல் தாக்குதல் நடத்தியதாக அந்த இருவர் மீதும் புகாரளித்தார்.
கூட்டு பாலியல் வன்முறை வழக்கை பதிவு செய்த புராரி காவல்துறையினர், இது குறித்து மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- அதே ஓட்டலில் 1.5 வருடமாக அப்பெண் பணி புரிகிறார்
- உதவி கேட்டு அப்பெண் அலறும் வீடியோ, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
இந்தியாவில் பாலியல் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் நகரங்களில் தலைநகர் புது டெல்லி ஒன்று.
புது டெல்லியை அடுத்த ஆக்ராவில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் ஒரு பெண் வேலை செய்து வந்தார். அவர் அங்கு சுமார் 1.5 வருட காலமாக பணி புரிகிறார்.
அப்பெண்ணை அங்குள்ள அறையில் தங்கியிருந்த 4 ஆண்கள், தகாத உறவிற்காக தங்களுடன் வருமாறு அழைத்தனர். அவர் மறுக்கவே அவரை பலவந்தமாக உள்ளே இழுத்தனர். இதை எதிர்பார்க்காத அந்த பெண் உரக்க கூக்குரலிட்டு உதவி கேட்டு அலறினர்.
ஆனால், அவரது அலறலை பொருட்படுத்தாத அந்த 4 பேரும் அவரை உள்ளே இழுத்து வலுக்கட்டாயமாக அவர் வாயில் மதுவை ஊற்றினர். பிறகு அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவம் அந்த ஓட்டல் அறை கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
அந்த வீடியோவில் அந்த பெண் "தயவு செய்து காப்பாற்றுங்கள்" (Please help me!) என அலறுவதும், அவரை ஒரு ஆண் உள்ளே இழுப்பதும், அவர் தரையில் கிடப்பதும், காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, ஆக்ரா பகுதிக்கு உட்பட்ட டாஜ்கஞ்ச் காவல்நிலைய அதிகாரி சதர் அர்ச்சனா சிங் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை அந்த 4 ஆண்களுடன் ஒரு பெண்ணையும் காவல்துறை கைது செய்துள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- 2019 சட்ட மாற்றத்தின்படி முன்னர் நடந்த தாக்குதலுக்கு புகார் அளிக்க இயலாது
- 2022ல் பெண் கவர்னர் கேத்லீன் ஹோசல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்
பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் உலக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான நியூயார்க்கில், கடந்த 2022 நவம்பர் மாதம் பாலியல் தாக்குதல் குறித்த புகாரளிப்பு சட்டங்களில் பெண் கவர்னர் கேத்லீன் ஹோசல் (Kathleen Hochul) சில மாற்றங்களை கொண்டு வந்தார்.
பாலியல் தாக்குதலுக்கு ஆளானவர்கள், அது குறித்த புகாரையும், வழக்கையும், 3 வருட காலத்திற்குள் பதிவு செய்து விட வேண்டும் என அங்கு சட்டம் இருந்தது.
2019ல் இந்த காலக்கெடு முறை நீக்கப்பட்டாலும், அது சட்டம் நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து நடைபெறும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தி வந்தது.
எனவே, 2022ல் "அடல்ட் சர்வைவர்ஸ் ஆக்ட்" (Adult Survivors Act) எனும் பெயரில் கவர்னர் ஹோசல் கொண்டு வந்த இந்த சட்ட மாற்றத்தின்படி ஒரு ஆண்/பெண், தங்கள் வாழ்வின் முந்தைய காலகட்டத்தில் எப்பொழுதோ பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தால் கூட தற்போது அது குறித்து புகார் அளிக்கலாம் என வழிவகை செய்யப்பட்டது.
ஆனால், இந்த சட்ட மாற்றம் ஒரு வருட காலம் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் கொண்டு வரப்பட்டதால், அது இம்மாதத்துடன் காலாவதியாகிறது.
இதனையடுத்து, இந்த ஒரு வருட கால தொடக்கத்தில் பெரிய அளவு புகார்கள் வரவில்லை. ஆனால், விரைவில் சட்ட திருத்தம் காலாவதியாக போவதால் சமீப சில நாட்களாக பலர் தாமாக முன்வந்து புகார் அளித்து வழக்கு பதிவு செய்கின்றனர். இதுவரை 2500 பேர் புகார் அளித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, பல பிரபலங்களுக்கு எதிராக புகார்கள் வந்துள்ளது அமெரிக்க மக்களை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அமெரிக்க பாடகர் டிட்டி (ஷான் கோம்ப்ஸ்), முன்னாள் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ, பாடகரும் நடிகருமான ஜேமி ஃபாக்ஸ், பாடகர் ஆக்ஸ்ல் ரோஸ் உட்பட பல பிரபலங்கள் இக்குற்றச்சாட்டிற்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கார் ரேஸ்களை மையமாக கொண்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் வின் டீசல்
- தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் என்னை பணிநீககம் செய்தனர் என்றார் அஸ்டா
கார் பந்தயங்களை மையக்கருவாக வைத்து 2001ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம், தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ் (The Fast and the Furious). இத்திரைப்படம் உலகெங்கும் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் பல பாகங்கள் தொடர்ந்து வெளிவந்தன.
இத்திரைப்படத்தில் இணை கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றவர், வின் டீசல் (Vin Diesel). இவர் ஒன் ரேஸ் புரொடக்ஷன்ஸ் (One Race Productions) எனும் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
வின்னின் அலுவலகத்தில் பணி புரிந்தவர் அஸ்டா ஜொனாஸ்ஸன் (Asta Jonasson) எனும் பெண்.
வின் டீசல் மீது அஸ்டா பாலியல் குற்றம் சாட்டி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது புகாரில் அஸ்டா தெரிவித்திருப்பதாவது:
ஒன் ரேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் போது, அட்லான்டா மாநிலத்தில் ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் வின் டீசல் என்னிடம் முறையற்று நடக்க முயன்றார். நான் மறுத்து சம்மதம் தெரிவிக்காத போதிலும் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அங்குள்ள ஒரு குளியலறையை நோக்கி நான் பயந்து, அலறி கொண்டே ஓடினேன். ஆனால் வின் டீசல் என்னை விடாமல் பலவந்தமாக பாலியல் ரீதியாக தாக்கினார். அது மட்டுமில்லாமல் என் முன்னிலையில் ஆபாசமாக நடந்து கொண்டார். தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் என்னை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
9 நாட்களே வேலையில் இருந்த ஒரு பணியாளர் 13 வருடங்களுக்கு முன் நடந்ததாக கூறும் இந்த புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என வின் டீசல் தெரிவிப்பதாக அவரது வழக்கறிஞர் ப்ரையன் ஃப்ரீட்மேன் தெரிவித்துள்ளார்.
- 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின், இங்கிலாந்தை வீழ்த்தியது
- "நான் எதிர்பாராத நேரத்தில் அவர் முத்தமிட்டார்" என ஹெர்மோசோ நீதிமன்றத்தில் கூறினார்
கடந்த 2023 ஆகஸ்ட் 20 அன்று, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உலக கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் இப்போட்டியில் மோதின.
பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில், ஸ்பெயின் 1-0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் பரிசு பெறும் நிகழ்ச்சியில் ஸ்பெயின் வீராங்கனைகள் பங்கேற்ற போது, அந்நாட்டின் கால்பந்து விளையாட்டு சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலஸ் (Luis Rubiales) ஜென்னி ஹெர்மோசோ (Jenni Hermoso) எனும் வீராங்கனையை கட்டியணைத்து முத்தமிட்டார்.
தகாத முறையில் நடந்து கொண்ட ரூபியாலஸின் நடவடிக்கை பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து, "நான் நடந்து கொண்ட விதம் தவறுதான். அதை ஒப்பு கொள்கிறேன். ஆனால் அதிகபட்ச மகிழ்ச்சியில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவ்வாறு நடந்து கொண்டேன்" என ரூபியாலஸ் தெரிவித்தார். தொடர்ந்து, அவருக்கு எதிராக எழுந்த கண்டனங்களால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
"எனக்கு ரூபியாலஸ் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை" என ஹெர்மோசோ அப்போது கருத்து தெரிவித்தார்.
பெரும் சர்ச்சையை உண்டாக்கிய இந்நிகழ்வு குறித்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் (Madrid) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் ஹெர்மோசோ, தனது கருத்துக்களை பதிவு செய்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
"என் சம்மதத்துடன் அந்த நிகழ்வு நடைபெறவில்லை. நான் எதிர்பாராத நேரத்தில் ரூபியாலஸ் அவ்வாறு நடந்து கொண்டார்" என ஹெர்மோசோ விசாரணையில் தெரிவித்தார்.
பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா வீடியோக்களை நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.
ஸ்பெயின் சட்டப்படி ஒருவரின் சம்மதமில்லாமல் அவருக்கு முத்தமிடுவது பாலியல் குற்றமாக கருதப்படும். எனவே, இப்போது நடைபெறும் விசாரணை முடிவில்தான் இவ்வழக்கில் ரூபியாலிஸ் பாலியல் குற்றம் புரிந்தவராக விசாரிக்கப்படுவாரா என தெரிய வரும்.
- அத்துமீறிய வழக்கில் எப்திகர் அகமதுவை போலீசார் கைது செய்தனர்.
- 3-வது முறையாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம்:
கேரள மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் எப்திகர் அகமது (வயது51). இவர் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய குற்றச்சாட்டில் கடந்த 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மூன்று மாதங்களுக்கு பிறகு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அதே மாதத்தில் 29-ந்தேதி மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது கண்ணூர் அருகே கேளிக்கை பூங்காவில் ஒரு பெண்ணிடம் அத்துமீறிய வழக்கில் எப்திகர் அகமதுவை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மேலும் அந்த வழக்கில் சிறையிலும் அடைக்கப்பட்டார். இதனால் உதவி பேராசிரியர் எப்திகர் அகமதுவை மீண்டும் சஸ்பெண்டு செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அவர் தற்போது 3-வது முறையாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
- குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.
கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது.
காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச் செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.
தி.மு.க. ஆட்சியில் சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. தற்போது, நெஞ்சை பதைபதைக்கும் இத்தகு குற்றச் செயல்களைக் கூட சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செய்யத் துணிந்துவிட்டனர் சமூக விரோதிகள்.
அன்று தன்னை பெண்களின் பாதுகாவலராக அறிவித்து முழங்கிய ஸ்டாலின், தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் இந்த தி.மு.க. ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க. அரசை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ஒரு தந்தை என்கிற அக்கறையுடனே கண்டிக்கிறேன்.
உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கைதில் இருந்து தப்பிக்க பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.
- விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும் பாஜக கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சி எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் சுமார் 2000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் முன்வந்து புகார் அளிக்கத் தொடங்கினர். இதனால் கைதில் இருந்து தப்பிக்க பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.பாதிக்கப்பட்ட பெண்களுள் ஒருவரை கடத்திய குற்றத்திற்காக ஜேடிஎஸ் கட்சித் தலைவரும் பிரஜ்வாலின் தந்தையுமாகிய ஹச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார்.
இந்த விவகாரத்தில் துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. இதற்கிடையில் பிரஜ்வாலை நாடு திரும்புமாறு அவரது தாத்தா தேவகௌடா எச்சரித்தார்.
இந்நிலையில் நாளை மறுநாள் (மே 31) நாடு திரும்புவதாக பிரஜ்வால் ரேவண்ணா வீடியோ வெளியிட்டு தெரிவித்தார். அதன்படி நாளை (மே 30) ஜெர்மனி தலைநகர் 'முனிக்'கிலுருந்து பெங்களூருவுக்கு விமானம் முன்பதிவு செய்துள்ள ரேவண்ணா, நாளை மறுநாள் பெங்களூரு கேம்பகௌடா விமான நிலையத்தில் தரையிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.
