search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shop worker arrested"

    • கடை ஊழியர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
    • விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினி கணேசனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது51). இவர் சுவாமி சன்னதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து கடையில் முருகன்(45) என்பவர் வேலை பார்த்து வருகிறார். 2 பேருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று பிரச்சினை ஏற்பட ஆத்திரமடைந்த முருகன், மாரியப்பனை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

    கான்பாளையம் முதல் தெருவை சேர்ந்தவர் வேங்கையன்(52). இவர் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிக்கு மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் ரஜினி கணேசன்(30), சுகுமார் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேங்கையன் சமரசம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரமடைந்த ரஜினி கணேசன் அவரை சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினி கணேசனை கைது செய்தனர்.

    • போக்குவரத்து தலைமை காவலரை தாக்கிய கடை ஊழியரை கைது செய்தனர்.
    • ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் சாந்தரூபன்(வயது32). இவர் ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சங்கரன்கோவில் முக்குரோட்டில் வாகன ேசாதனையில் சாந்தரூபன் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தார். ேபாலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்ைல என விசாரித்தனர். அவரிடம் சாந்தரூபன் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர் போக்குவரத்து போலீசாரை அவதூறாக பேசி சாந்தரூபனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் வாலிபரை பிடித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்த பிரித்விராஜ்(26) என்பதும் எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×