search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109605"

    ஆவூர், கீரனூர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்து, அவர்களிடமிருந்து 33 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆவூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே உள்ள சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 45). இவர் கடந்த வாரம் அப்பகுதியில் கீரனூர்-விராலிமலை சாலையோரத்தில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பழனியம்மாளை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க விரட்டிச்சென்றபோது அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். அப்போது அவர்கள் பேராம்பூர் வழியாக சென்றபோது அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து லேசான காயமடைந்தனர்.

    இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் பெண்ணிடம் நகை பறித்து சென்றவர்கள் என்று தெரியாமல் அவர்களை தூக்கி விட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் பின்னர் தான் தெரிந்தது தாங்கள் அனுப்பி வைத்தது பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர்கள் என்று தெரிந்தது. இதையடுத்து பழனியம்மாள் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் தீவிர விசாரனையிவ் இலுப்பூரை அடுத்த மலைக்குடிப்பட்டி சீத்தப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் பாண்டியன் (30), அவரது தம்பி கார்த்தி (22) மற்றும் இவர்களது நண்பரான பாசிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜய் என்கிற கருப்பையா (20) ஆகியோர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தங்களது வீட்டில் பதுங்கியிருந்தபோது அவர்களை போலீசார் பிடித்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பழனியம்மாளிடம் வழிப்பறி செய்தது மட்டுமின்றி, சித்தாம்பூரை அடுத்த ஆலங்குடியில் ஒரு பெண்ணின் வீட்டுக்கதவை உடைத்து பீரோவில் இருந்த 2½ பவுன், கீரனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒடுக்கூரில் ஒரு பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி, கீரனூரில் ஒரு ஆசிரியரை மிரட்டி 15 பவுன் சங்கிலி, மோதிரத்தை பறித்தது, உடையாளிப்பட்டி போலீஸ் நிலைய பகுதியில் ஒரு நபரை மிரட்டி 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தது, ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து மொத்தம் 33 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து மண்டையூர், கீரனூர், உடையாளிப்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ள புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பாண்டியன், கார்த்தி, விஜய் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 
    கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 53). இவர் நேற்று இரவு சைக்கிளில் மடத்து தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது சைக்கிள் பழுதாகி விட்டது. அதனை அவர் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வந்த ராமையா மகன் மண்டை செல்வம் மற்றும் சங்கர் என்பவரது மகன் தினேஷ் ஆகியோர் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினர்.

    கோவிந்தராஜ் பணம் கொடுக்க மறுத்ததால் அவரைத் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர்.

    இதனை பார்த்த ஜாபர் சாதிக் என்பவர் தட்டிக்கேட்டு தடுக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரையும் கத்தியால் தாக்கி அவரது செல்போனையும் பறித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டை செல்வம் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 2 பேர் மீதும் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    வழிப்பறி உள்ளிட்ட குற்றவழக்குகளில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய, அடையாள அணிவகுப்பை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHighcourt
    சென்னை:

    சென்னையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த 2 பேரை வழிமறித்து, அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம், கைக் கடிகாரம், மோட்டார் சைக்கிளை ஒரு கும்பல் கடந்த ஜனவரி 1-ந்தேதி வழிப்பறி செய்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த ஜனவரி 5-ந்தேதி வழிப்பறி கும்பலை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வழிப்பறி செய்த வாட்ச், மோட்டார் சைக்கிள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அரசு குற்றவியல் வக்கீல் கூறினார்.

    ஆனால், மனுதாரர்கள் அப்பாவிகள், போலீசார் வேண்டுமென்றே இவர்களை கைது செய்துவிட்டனர். தேவையில்லாமல் 30 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர் என்று மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

    பொதுவாக இதுபோன்ற வழக்குகளில், குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அல்லது புகார்தாரர்களுக்கு தெரிவதே இல்லை. ஆனாலும், குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விடுகின்றனர்.



    அதேநேரம் உண்மை குற்றவாளிகளை கண்டறிய அடையாள அணிவகுப்பை போலீசார் நடத்துவது இல்லை. அடையாள அணிவகுப்பு நடத்தி, பாதிக்கப்பட்டர்கள் மூலம் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படவேண்டும். எனவே, இதுபோன்ற வழக்குகளில் அடையாள அணிவகுப்பை போலீசார் நடத்த வேண்டும். இந்த வழக்கில், புலன் விசாரணை முடியும் தருவாயில் உள்ளதால், மனுதாரர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ChennaiHighcourt
    வழிப்புறி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
    கோவில்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்தவர் காவேரிமணியன் (வயது 33). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றினார். இந்நிலையில் கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர் செல்வி ஆகியோர் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது வாகன சோதனை என்று அவர்களை வழிமறித்து, 2 பவுன் செயின் மற்றும் 4 கிராம் மோதிரம் ஆகியவற்றை போலீஸ்காரர் காவேரி மணியன் தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து பறித்துள்ளார். இதில் செந்தில்குமாரும், செல்வியும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து காவேரி மணியனை சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர்.

    இதேபோல் கழுகுமலையில் இருந்து இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற இரண்டு பெண்களிடம் 11.5 பவுன் நகை பறித்தது மற்றும் கோவில்பட்டி தனியார் நகைக்கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த கயத்தாறை சேர்ந்த முருகானந்தத்தை அரிவாளை காண்பித்து மிரட்டி ஒரு பவுன் மோதிரத்தை பறித்தது ஆகிய புகார்கள் தொடர்பாக காவிரி மணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

    மேலும் அவரது கூட்டாளிகளான வெங்கடேஷ், கணேசன், சுடலை மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்குகள் கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் காவலர் காவேரி மணியன் பணிநீக்கமும் செய்யப்பட்டார். இந்த 3 வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் செந்தில் குமார், செல்வியிடம் நகை பறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரர் காவேரி மணியனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாபுலால் தீர்ப்பளித்தார். மற்ற இரு வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டார். இதேபோல் அவரது கூட்டாளிகள் மூவரும் அனைத்து வழக்குகளிலும் விடுதலை செய்யப்பட்டனர்.இதையடுத்து காவிரி மணியனை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். #tamilnews
    வேனை வழிமறித்து டிரைவரிடம் செல்போன்கள் மற்றும் பணத்தை மர்ம கும்பல் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ராமநாதபுரம்:

    ராமேசுவரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 37). இவர் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவரிடம் அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் திருச்சியில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் எனக்கூறினர்.

    இதனைத்தொடர்ந்து 4 பெண்கள், 2 ஆண்களை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு வேன் புறப்பட்டது. ராமச்சந்திரனே வேனை ஓட்டிச் சென்றார்.

    ராமநாதபுரம் நதிப்பாலம் அருகே வேன் சென்றபோது 6 பேர் வந்தனர். அவர்கள் திடீரென வேனை நோக்கி கற்களை வீசினர்.

    இதில் வேனின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் வேனை உடனே நிறுத்தினார். வேனில் இருந்தவர்களும் பயத்தில் அலறினர்.

    வேன் நின்றதும் 6 பேர் கும்பல் சுற்றி வளைத்தது. அவர்கள் டிரைவர் ராமச்சந்திரனை தாக்கினர். அவரிடம் இருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ. 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    இந்த துணிகர வழிப்பறி சம்பவம் குறித்து உச்சிப்புளி போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியதில், குமராண்டி வலசையைச் சேர்ந்த கண்ணன் (எ) கருப்பட்டி, கவியரசன், உடைச்சியார் வலசை மோடி என்ற முகேஷ் பாண்டி, ஏந்தலைச் சேர்ந்த அகிலன் என்ற தர்மா (20) சாத்தான்குளம் அருண் பிரசாத் (22), கோபிநாத் (20) ஆகியோர் தான் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டனர் என தெரியவந்தது.

    அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதில் அகிலன் என்ற தர்மா, அருண்பிரசாத், கோபிநாத் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நதிப்பாலம் பகுதியில் இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனால் அந்தப்பகுதி வழியாக செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.

    குடிபோதையில் வரும் வழிப்பறி திருடர்கள், தாக்குதலில் பலரும் காயமடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையை தவிர்க்க அந்தப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். வழிப்பறி திருடர்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    புதுக்கோட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள முனிப்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் மாத்தூர் நோக்கி சென்றார். மண்டையூர் சாலை அருகே சென்றபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை மறித்து, ரவியின் கழுத்தில் அரிவாள் மற்றும் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.1,600-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் 2 வாலிபர்களையும் விரட்டி சென்றார். அப்போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட மண்டையூர் போலீசார், 2 வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிளை மறித்தனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதால், போலீசார் விரட்டிச்சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து அந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த செல்வக்குமார்(34), திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி(35) என்பதும், அவர்கள் மாத்தூர் சிதம்பரம் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த வினோத்குமாருடன்(35) சேர்ந்து கடந்த 7 மாதங்களாக கொள்ளை உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார், அவர்களை சிதம்பரம் நகர் வீட்டிற்கு அழைத்து சென்று, அங்கிருந்த வினோத்குமாரை பிடித்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து, கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள், புதுக்கோட்டை , திருச்சி, பெரம்பலூரில் திருட்டு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் சுந்தரபாண்டி மீது 7 கொலை வழக்குகளும், 3 கொள்ளை வழக்குகளும், செல்வக்குமார் மீது 4 கொள்ளை முயற்சி வழக்குகளும், 6 வழிப்பறி வழக்குகளும், 7 கொலை வழக்குகளும், வினோத்குமார் மீது 2 கார் திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. மேலும் 3 பேருக்கும் மாத்தூர் பகுதியை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. இளை ஞரணி துணைஅமைப்பாளர் பாலச்சந்தர், வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தது உள்பட பல்வேறு உதவிகளை செய்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செல்வக்குமார், சுந்தரபாண்டி, வினோத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகள் மற்றும் ரூ.44 ஆயிரம், 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பாலச்சந்தர் மீது மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் போலீஸ்காரர் உள்பட 6 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஓமலூர் பகுதியில் கடந்த 6-ந்தேதி இரவு சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் செல்லக்கண்ணு உள்பட 6 பேரிடம் மர்ம கும்பல் வழிப்பறி செய்தது.

    மேலும் சிலரை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, பணம், மோட்டார் சைக்கிள், செல்போன் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றது. இந்த கும்பலை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் சங்கர் 2 தனிப்படைகள் அமைத்தார்.

    இந்த தனிப்படை போலீசாரின் பிடியில் தற்போது சந்தேகத்தின் பேரில் ஓமலூர் பகுதியை சேர்ந்த 4 பேரும், சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரும் சிக்கி இருக்கிறார்கள். இவர்களுக்கும், சம்பவத்தன்று கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா?, இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சிக்கிய 5 பேரில் சிலர் வாலிபர்கள் ஆவார்கள். ரகசிய இடத்தில் வைத்து நடைபெறும் இந்த விசாரணையில் மர்ம கும்பலை பற்றிய பல்வேறு விபரங்கள் வெளியாகலாம் என தெரிகிறது. #tamilnews
    டெல்லியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் துப்பாக்கியை காட்டி ரூ. 2.7 லட்சம் வழிப்பறி செய்த 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். #DelhiRobbery
    புதுடெல்லி :

    தலைநகர் டெல்லியில் ஜகத்புரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பன்சால் என்பவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.2.7 லட்சம் பணத்தை துப்பாக்கியை காட்டி இருவர் கொள்ளையடித்தனர். பணத்தை இழந்த பன்சால் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர்.

    இருப்பினும் துப்புதுலங்காததால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பன்சாலிடம் பகுதி நேர ஓட்டுனராக பணியாற்றிய இண்டால்(29) என்பவரின் உதவியுடன் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றதை போலீசார் கண்டறிந்தனர். இண்டாலை கைது விசாரித்த போது பன்சால் பணம் எடுத்துச்செல்வதை அவரது  நண்பரக்ள் ரவிந்தர்(28) மற்றும் கசனா(29) என்பவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

    அதன்படி ஏற்கெனவே தீட்டிய திட்டத்தின் படி அவர் செல்லும் வழியில் வழிமறித்து பணத்தை ரவிந்தர் மற்றும் கசனா துப்பாக்கியை காட்டி கொள்ளை அடித்துள்ளனர். அப்போது மிரட்டுவதற்காக வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    இறுதியில் இண்டால், ரவிந்தர் மற்றும் கசனா ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைநகரில் துப்பாக்கியை காட்டி பணம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DelhiRobbery
    கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 21 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி திடீரென கைது செய்யப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரம் திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவரை நேற்று ரோட்டில் சென்ற போது ஒரு வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் பறித்து விட்டு தப்பி சென்றார். 

    இது குறித்து லாரன்ஸ் பொன்மலை போலீசில் புகார் செய்தார். விசாரணையில் பணத்தை பறித்து விட்டு தப்பித்தவர் பிரபல ரவுடி நார்த் டி பாஸ்கர் எனத் தெரியவந்தது. 

    பாஸ்கரை பொன்மலை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். பாஸ்கர் மீது தஞ்சை, நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    திருச்சியில் நேற்று முன்தினம் ரவுடி சந்துரு கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் தேடி பிடித்து வருகிறார்கள். ஜாமீனில் விடுதலையாகியுள்ள ரவுடிகளையும் கண்காணித்து வருகிறார்கள். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் தினசரி நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணித்து கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 
    சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களை மத்திய சிறையில் அடைத்தனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம், அம்மாப்பேட்டை, மாரி உடையன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவர் நேற்று பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். புதிய பஸ் நிலையம் நுழைவு வாயிலில் பஸ் வந்தபோது, சீனிவாசன் சட்டைப்பையில் இருந்த பணத்தை 2 பேர் நைசாக திருடியதாக தெரிகிறது. பயணிகள், இவர்கள் இருவரையும் பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அவர்கள் உத்தரபிரதேச மாநிலம் சாம்பளி மாவட்டம் தனகுடோரா பகுதியை சேர்ந்த அர்ஜூன் அமர் குமார் வர்மா (30), பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் (30) ஆகியோர் என்பதும், இவர்கள் மீது திருட்டு, வழிப்பறி என 11 வழக்குகள் உள்ளன என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி ஈ.பி. ரோடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (50). இவர் திருச்சி காந்திமார்க்கெட் அருகே  நடந்து சென்றார். அப்போது அந்தவழியாக வந்த வாலிபர் பாலசுப்பிரமணியனை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து  சென்றார்.

    இது குறித்து அவர் காந்திமார்க்கெட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வடக்கு தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சிவக்குமாரை (22) கைது செய்தனர். 

    இதேபோல் ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை  சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மாரி (வயது 17). இவர் மீன் தொட்டி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் மாரியை வழி மறித்து அவரிடம் இருந்து பணத்தை பறித்ததுடன், மீன் தொட்டியையும் உடைத்தனர்.

    இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ராம்குமார் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவனையும் கைது செய்தனர்.
    தஞ்சையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையிலும் தஞ்சை பழைய பஸ் நிலையம், தெற்கு வீதி, ரெயில் நிலையம், எம்.கே.மூப்பனார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் அந்த வழியாக வரும் பொதுமக்களை சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மிரட்டி, தாக்கி அவர்களிடம் இருந்த பணம், செல்போனை பறித்து சென்று வந்தனர்.

    இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனே செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜகோ பால், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன் மற்றும் தனிப்படையை சேர்ந்த போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது வழிப்பறி போன்ற அட்டூழிய செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் உலா வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதில் தஞ்சை மேலவீதியை சேர்ந்த எலி என்ற முருகானந்தம், மேல அலங்கத்தை சேர்ந்த ராமு என்ற லெப்ட்ராமு, கோடி என்ற குமரேசன், கோபி, வடக்கு வாசலை சேர்ந்த சீனிவாசன், அதே பகுதி ருக்மணி அம்மன் மடம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் தான் பொதுமக்களை மிரட்டி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×