search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109605"

    மதுரை அருகே நிதி நிறுவன ஊழியரை தாக்கி ரூ.1.87 லட்சத்தை பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அசோக்குமார் (வயது24). இவர் மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    அசோக்குமார் நேற்று மோட்டார் சைக்கிளில் பட்டணம், ஜோதியபட்டி, பஞ்சாங்கிபட்டி, கட்ட முத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசூல் செய்துவிட்டு ஒத்தக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அவர் கண்டமுத்துபட்டி- சின்னமங்கலம் சந்திப்பு பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர்.

    அப்போது அந்த நபர்கள் அவசரமாக பேச வேண்டும் உன் செல்போனை கொடு என்று மிரட்டினர். ஆனால் அசோக்குமார் செல்போனை கொடுக்க மறுத்தார்.

    அப்போது 2 பேரும் அசோக்குமாரை தாக்கி பணப்பை மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். அந்த பையில் வசூல் பணம் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 100 இருந்தது.

    பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றதால் அசோக்குமார் பரிதவித்தார். பின்னர் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த பிரவீன் (20), முருகானந்தம் (19) ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இவர்களுக்கு வேறு எந்த கொள்ளை சம்பவங்களிலும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
    சேலத்தில் போலீசாரை பார்த்ததும் தப்பியோடிய கொள்ளையன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் கால் முறிந்தது.
    சேலம்:

    சேலம் ஊத்துக்காடு வெடிக்கல்பாறை பகுதியை சேர்ந்தவர் கபாலி என்ற சுப்பிரமணி (வயது 24). பிரபல கொள்ளையனான இவர்  சேலத்தில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர் மீது அம்மாபேட்டை, சூரமங்கலம், கன்னங்குறிச்சி, மல்லூர் உள்பட பல போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும், ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் செயின் பறித்ததாக கூறப்படுகிறது. 

    இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு ஊத்துக்காடு வெடிக்கல் பாறை பகுதியில் கபாலி பதுங்கியிருப்பதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த கபாலி ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். இதனால் பயந்து போன கபாலி நிலை தடுமாறி கபாலி கீழே விழுந்தார். இதில் அவரது  இடது காலில் முறிவு ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்றிரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து நடந்துவரும் கொள்ளையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் சமீபகாலமாக ரோட்டில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் வீடு முன்பு கோலம் போடும் பெண்கள் இவர்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

    இதுதவிர பூட்டிக்கிடக்கும் வீட்டை உடைத்து பணத்தை திருடுவது பூட்டிக்கிடக்கும் கடைகள் மேல் கூரைகளை உடைத்து பணம் பொருட்களை திருடுவது என சமீப காலமாக ஈரோடு பகுதியில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.

    மக்கள் அதிகம் நடமாடும் உள்ள பகுதியில் மிகவும் துணிச்சலாக வந்து தங்கள் தங்களது கைவரிசையை காட்டி கொண்டு செல்கின்றனர் இதில் பெரும்பாலான கொள்ளைகளில் இன்னும் துப்புத் துலங்கவில்லை நேற்று கூட சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள அடுத்தடுத்த இரண்டு கடைகளின் மேற்கூரையை பிரித்து ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்

    மேலும் அருகிலுள்ள மற்றொரு கடையிலும் கொள்ளையர்கள்புகுந்து கொள்ள அடிக்க முயன்றுள்ளனர் ஆனால் முடியவில்லை கொலை நடந்த இரண்டு கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதத்திலும் இதே சூரம்பட்டி நால்ரோடு அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு தொடர்ந்து நடந்துவரும் கொள்ளையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    போலீசார் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது கொள்ளை சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குறிப்பாக அடுக்கு மாடி குடியிருப்புகள் வணிக வளாகங்கள் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு செய்வதில்லை பெரிய பெரிய திருட்டு கொலை வழக்குகளில் சிசிடி கேமரா ஆதாரங்களை வைத்து பல்வேறு சமயங்களில் குற்றவாளியை பிடித்துள்ளோம் பொதுமக்களின் பயத்தைப் போக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வருகிறோம் பொதுமக்களும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் இளம்பெண்ணிடம் செல்போனை பறித்து ஓடிய வாலிபர் பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    மதுரை:

    மதுரையில் இதய பகுதியான பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எல்லீஸ்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    அதுபோல வழிப்பறி சம்பவங்களும் இங்கு அதிகம் நடந்து வருகிறது. போலீசார் அடிக்கடி ரோந்து வந்தாலும் மர்ம நபர்களின் வழிப்பறி அட்டகாசம் குறைந்தபாடில்லை.

    இன்று காலை திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மோகனா என்ற இளம்பெண் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கையில் வைத்திருந்த செல்போனை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    அந்த இளம்பெண் கூச்சல் போட்டதால் பொதுமக்கள் வழிப்பறி ஆசாமியை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். திண்டுக்கல் ரோடு வரை விரட்டிச் சென்று அந்த ஆசாமியை பிடித்த பொதுமக்கள் திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    சுமார் 23 வயது மதிக்கத்தக்க அந்த வழிப்பறி ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இளம்பெண்ணிடம் பறித்த செல்போனையும் மீட்டனர்.

    மர்மநபரை கைது செய்த போலீசார் இவருக்கு வேறு வழிப்பறி சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் நடந்த இந்த செல்போன் பறிப்பு சம்பவத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நடைபயிற்சி சென்ற வங்கி ஊழியரிடம் கத்தி முனையில் 2½ பவுன் தங்கச்சங்கிலி, செல்போன் வழிப்பறி செய்த கொள்ளையர்களை ரோந்து போலீசார் விரட்டி சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் மூட்டா காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45), அரசு வங்கி ஊழியராக உள்ளார். ராஜேஷ் இன்று அதிகாலை மதுரை மெயின் ரோட்டில் நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி 2½ பவுன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    இதையடுத்து ராஜேஷ் கூச்சல் போடவே, தற்செயலாக அங்கு வந்த ரோந்து போலீசார் விசாரித்தனர். அப்போது ராஜேஷ் நடந்த விவரங்களை கூறினார். அதைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தில் மர்ம நபர்களை விரட்டி சென்றனர்.

    இதற்கிடையே பசுமலை சோதனை சாவடிக்கு தகவல் பறந்தது. அவர்கள் சாலையில் தடுப்புகளை அமைத்து, குற்றவாளிகளை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த திருட்டு தங்கச்சங்கிலி, செல்போன் ஆகியவை மீட்கப்பட்டன.

    திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிக்கந்தர் சாவடியை சேர்ந்த கதிரவன் (வயது 20), ஆனையூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மனோகுமார் (22) என்பது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×