என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 114229"

    • வரப்புகளில் பயிர்களை பயிர் செய்தும் பயிர்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்.
    • ட்ரைகோகிராமா கைலோனிஸ் வைத்து உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துதல்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே வைத்தியநாதன் பேட்டை கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா பயிற்சி முகாம் நடந்தது.வைத்தியநாதன் பேட்டை ஊராட்சி தலைவர் சம்மந்தம் தலைமையில் நடந்த இம்முகாமில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியநாதன் பேட்டை மற்றும் கடுவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிர்களில் பூச்சி நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் பங்கு, உயிரியல் முறையில் எவ்வாறு நோய்களை கட்டுப்படுத்துவது, முட்டை ஒட்டுண்ணிகளை பயன்படுத்தியும், வரப்புகளில் பயிர்களை பயிர் செய்தும் பயிர்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள், முட்டை ஒட்டுண்ணிகளான ட்ரைகோகிராமா கைலோனிஸ் வைத்து உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து உயிரியல் முறையில் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று தஞ்சாவூர் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் புனிதா எடுத்துக் கூறினார்.

    மேலும் உயிரியல் முறையில் நாம் நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நம்மால் இயன்றவரை ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து இயற்கை முறையில் பயிர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் சினேகா மற்றும் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயபிரபா கலந்துகொண்டு தொழில்நுட்பம் குறித்த உரை ஆற்றினர்.

    இப்கோ நிறுவனத்தின் கள அலுவலர் சரவணன் கலந்துகொண்டு நானோ யூரியாவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் மங்களேஸ்வரி, சாந்தகுமாரி மற்றும் மணிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வளரும் குழந்தைகள் தினசரி ஒரு முட்டை சாப்பிட டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள்.
    • முட்டை சாப்பிடுவதின் அவசியத்தை நாம் உணர்வோம்.

    குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்துகொண்ட உணவு முட்டை மட்டும்தான். வளரும் குழந்தைகள் தினசரி ஒரு முட்டை சாப்பிட டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள். ஊட்டச்சத்துகள் மட்டுமின்றி, உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும், தேவையான கனிம சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மூளை மற்றும் தசை வளர்ச்சி, நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, பார்வை திறன் மேம்படுதல் போன்றவற்றுக்கு முட்டை உலகளவில் சிறந்த உணவு என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் உலக முட்டை தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

    முட்டையின் நன்மைகள் குறித்தும், அதில் உள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம். இந்த ஆண்டு உலக முட்டை தின கருப்பொருளாக, 'சிறந்த வாழ்க்கையை சாத்தியமாக்கும் முட்டை' என்பது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாளில் ஊட்டச்சத்துமிக்க முட்டையை தினமும் உணவில் சேர்த்து உடலை வலுப்படுத்துவோம் என அனைவருமே உறுதிமொழி ஏற்போம்.

    கடந்த ஆண்டு உலக முட்டை தினத்தையொட்டி, 100-க்கும் மேற்பட்ட நாடுகள் சமூக வலைதளங்களில் முட்டை தினத்தை கொண்டாடும் வகையில் பல போட்டிகளை வைத்து முட்டை உண்பதில் அவசியத்தை எடுத்துரைத்தது. இந்த ஆண்டும் முட்டை சாப்பிடுவதின் அவசியத்தை நாம் உணர்வோம். வளரும் தலைமுறையினரை வலுவாக்குவோம்.

    • பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
    • வேகவைக்காத முட்டையில் 10 சதவீதம் புரதமும், 90 சதவீதம் நீரும் உள்ளது.

    காலை உணவுடன் முட்டை சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. நிறைய பேர் முட்டையை அப்படியே உடைத்து குடிக்கும் பழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வேகவைக்காத முட்டையில் 10 சதவீதம் புரதமும், 90 சதவீதம் நீரும் உள்ளது. அதனுடன் பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின், சோடியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. முட்டையின் உள்பகுதியான மஞ்சள் கருவில் இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் உள்ளன.

    முட்டையில் இருக்கும் வைட்டமின்கள் இதயம், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும். முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்தான் பலன் கிடைக்கும். பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. முட்டையை அப்படியே உடைத்து சாப்பிட்டால் அதிலிருக்கும் வெள்ளைக்கரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். சருமம் சிவத்தல், அரிப்பு, வீக்கம், வயிற்று போக்கு, கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். வெள்ளை நிற திரவத்தை சாப்பிடுவது சிலருக்கு பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தும். பயோட்டின் குறைபாடு வைட்டமின் பி 7, வைட்டமின் எச் என்றும் அழைக்கப்படுகிறது.

    முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள அல்புமினை உட்கொள்ளும்போது உடல் பயோட்டினை உறிஞ்சுவதற்கு காரணமாகிறது. இதன் காரணமாக தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக்கூடும். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம் அதிகமாக இருக்கும். இது சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். கோழிகளின் குடல் பகுதியில் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா காணப்படும். அது முட்டை ஓட்டின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் பரவி இருக்கும். சால்மோனெல்லாவை நீக்க அதிக வெப்பநிலையில் முட்டையை வேக வைக்கவேண்டும். அதை விடுத்து முட்டையை அப்படியே குடித்தால் பாக்டீரியாக்களால் பாதிப்பு நேரும்.

    • தினசரி சுமார் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • ஒரு மாதத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    அகில இந்திய அளவில் முட்டைக்கோழி வளர்ப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1,000 கோழிப்பண்ணைகளில், 5 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் தமிழக சத்துணவு திட்டத்துக்கும், தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குறைந்த அளவிலான முட்டை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    என் முட்டை, என் விலை என்ற அடிப்படையில், முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) வாரத்தில் 2 நாட்கள் நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நிர்ணயிக்கப்படும் விலையை அனுசரித்தே, தமிழகத்திலும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

    கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக என்இசிசி நிர்ணயம் செய்து அறிவித்தது. தொடர்ந்து 9-ம் தேதி ரூ.5.20, 11-ம் தேதி ரூ.4.90, 14-ம் தேதி ரூ. 4.60, 16-ம் தேதி ரூ. 4.40, 25-ம் தேதி ரூ. 4.20, நேற்று (1-ம் தேதி) ரூ.4 என முட்டை விலையில் தொடர் சரிவு ஏற்பட்டு ஒரே மாதத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.50 குறைந்துள்ளது.

    மேலும் நெஸ்பேக் என்ற முட்டை மற்றும் பண்ணையாளர்கள் கூட்டமைப்பு, முட்டை கொள்முதல் செய்யும் மொத்த வியாரிகளுக்கு ஒரு முட்டைக்கு 40 பைசா குறைத்து வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.60 மட்டுமே கிடைக்கும். சில நேரங்களில் மேலும் விலை குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் என்இசிசி அறிவிக்கும் விலைக்கும், பண்ணையாளர்களுக்கு கிடைக்கும் விலைக்கும் பெரிய இடைவெளி உருவாகிறது.

    ஆனால் வியாபாரிகள் விலையைக் குறைத்து வாங்கி சில்லரையில் விற்பனை செய்யும் போது, என்இசிசி விலைக்கும் கூடுதலாக லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் முட்டை வாங்கும் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.

    இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள், முட்டை கொள்முதல் விலை தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோழிப்பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்–பட்டுள்ளனர். கோழிப்பண்ணைத் தொழிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது.
    • கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ. 4-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணை யாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    மற்ற மண்டலங்களில் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாலும், ஆடிப் பண்டிகை காலமாக இருப்பதால் மக்களிடையே முட்டை நுகா்வு வெகுவாக குறைந்துள்ளதாலும், தேக்கத்தை கட்டுப்படுத்தவும் முட்டை விலையைக் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ. 4-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

    கறிக்கோழி

    பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 81-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 90-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

    • எம்மா மொரானோ எனும் இத்தாலியை சேர்ந்த பாட்டி 1899 இல் பிறந்து 2017 வரை வாழ்ந்தார்.
    • 117 ஆண்டுகள் வாழ்ந்த அவரிடம் உங்களது இந்த நீண்ட கால வாழ்க்கைக்கு உதவியது எது என்று கேட்டதற்கு தயங்காமல் அவர் கூறிய பதில், “முட்டைகளை சளைக்காமல் உண்டது தான் எனது நீட்சிக்குக் காரணம்” என்றார்.

    நாம் உண்ணும் உணவுத்தட்டில் முக்கியமான தேவையாக இருக்கும் ஊட்டச்சத்து "புரதச்சத்து" எனும் ப்ரோட்டீன்கள்.

    பவர் தரும், எனர்ஜி தரும், வளர்ச்சி தரும் இத்தகைய ப்ரோட்டீனை உணவில் எப்படி எளிதாக அடைவது?

    ப்ரோட்டீன் தேவையை அடைய உதவும் முக்கியமான எளிதான ஒரு உணவு உண்டெனில் அது முட்டை தான். முழுமையான புரதச்சத்து நிரம்பிய உணவு தான் முட்டை.

    முட்டையில் இவையன்றி வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் பி2 , பி6,பி12. துத்தநாகம் செம்பு என்று மனிதனுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் தாதுஉப்புகளும் இருக்கின்றன.

    முட்டையை வெறும் வெள்ளைக்கருவை மட்டும் உண்ணும் வழக்கம் இப்போது அதிகமாகி வருகிறது. ஆனால் அது தவறான போக்காகும். நம் உடலுக்குத் தேவையான புரதம் முழு முட்டையில் தான் முழுமையாக வந்து சேரும். கொழுப்புக்கு பயந்து அஞ்சி வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டியதில்லை.

    தினமும் நான்கு முதல் பத்து முட்டைகள் வரை உண்டு ஆரோக்கியமாக வாழும் பலரை நான் அறிவேன். எம்மா மொரானோ எனும் இத்தாலியை சேர்ந்த பாட்டி 1899 இல் பிறந்து 2017 வரை வாழ்ந்தார். 117 ஆண்டுகள் வாழ்ந்த அவரிடம் உங்களது இந்த நீண்ட கால வாழ்க்கைக்கு உதவியது எது என்று கேட்டதற்கு தயங்காமல் அவர் கூறிய பதில், "முட்டைகளை சளைக்காமல் உண்டது தான் எனது நீட்சிக்குக் காரணம்" என்றார்.

    நாளொன்றுக்கு ஒருவர் மூன்று முட்டைகளை எடுக்கலாம். ஆனால் ஒரு கண்டிசன், கட்டாயம் அந்த முட்டைகளை தனியாக செய்து தான் சாப்பிட வேண்டும். முட்டை தோசை, முட்டை பரோட்டா என்று சாப்பிடக்கூடாது. ஆனால் நமக்கு பிடித்த மாதிரி அவித்த முட்டை, ஆம்லெட், பொடிமாஸ் என்று சாப்பிடலாம். முட்டைகளை பச்சையாக உண்ணாமல் சமைத்து உண்பதேசிறந்தது.

    குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிந்ததில் இருந்து ஒரு முட்டையைக் கொடுத்து பழக்கலாம். முதலில் மஞ்சள் கருவில் ஆரம்பித்து பிறகு ஒரு வயதுக்குப் பிறகு வெள்ளைக்கருவும் சேர்த்துக் கொடுக்கலாம்.

    ஒரு வயதுக்கு மேல் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் வரை அவர்கள் சாப்பிட்டாலும் தடுக்க வேண்டியதில்லை. ஈவினிங் ஸ்நாக்காக ஒரு ஆம்லெட் போட்டுக்கொடுக்கலாம். இது சாக்லேட், பப்ஸ், பர்கரை விடவும் சிறந்தது.

    முட்டைகளை உண்டால் பலருக்கு வாயுக்குத்து வருகிறது. அபான வாயு அடிக்கடி வெளியேறுகிறது என்று கம்ப்ளய்ண்ட் செய்வார்கள். அதற்குத்தான் முன்பே கூறினேன், கட்டாயம் முட்டைகளை தனி உணவாகவே உண்ண வேண்டும். முட்டையை சோறுடனோ, முட்டை தோசை என்றோ, முட்டை பரோட்டா என்றோ உண்ணக்கூடாது.

    என்னை சந்திக்கும் நீரிழிவு நோயர்களுக்கு ஒரு வேளை உணவாக முட்டைகளை பரிந்துரை செய்து வருகிறேன். நான்கு முட்டைகளை முழுதாக உண்டாலும் ரத்த சர்க்கரை 200-ஐத் தாண்டாது. காரணம் முட்டைகளில் கார்போஹைட்ரேட் கிடையாது.

    கார்போஹைட்ரேட் இல்லாத உணவுப்பொருள் மிக மிக குறைவாகவே இன்சுலின் சுரப்பை தூண்டும். மிக மிக குறைவாகவே ரத்த க்ளூகோஸ் அளவுகளை ஏற்றும்.

    நீரிழிவு நோயர்களுக்கு இதனால் மூன்று நன்மைகள். முதல் நன்மை ரத்த சர்க்கரை ஏறாமல் இருப்பது. இரண்டாவது நன்மை நிறைவான புரதச்சத்து கிடைப்பது. மூன்றாவது நன்மை நரம்பு மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் பி12 கிடைப்பது.என்னை சந்திக்கும் பொருளாதாரத்தில் எளியோர்க்கும் சரி, வலியவர்களுக்கும் சரி.. நான் பரிந்துரைக்கும் புரதம் சார்ந்த உணவு "முட்டை" தான். தினமும் மூன்று முட்டைகள் எடுத்தால் போதும். அவர்களுக்கு வேறு ஹெல்த் ட்ரிங்குகளின் அவசியம் ஏற்படுவதில்லை.

    - டாக்டர் ஃபரூக் அப்துல்லா

    • முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
    • ஆடி மாதப் பிறப்பால் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்துள்ளதாலும், பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அதிகரித்து வருவதாலும் விலையில் மாற்றம் செய்யலாம்.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது.

    இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், ஆடி மாதப் பிறப்பால் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்துள்ளதாலும், பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அதிகரித்து வருவதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

    அதனடிப்படையில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.20-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

    அேதபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 71-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 95-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

    • நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை குறைந்துள்ளது.
    • இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    வட மாநிலங்களில் பண்டிகைக் காலமாக இருப்பதால் முட்டை விற்பனை சரிந்துள்ளது, இதனால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடைந்து வருகின்றன. ஆடி மாதம் பிறக்க உள்ளதால், மக்களிடையே முட்டை நுகா்வு குறைந்துள்ளது. இதனால் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏற்கனவே கடந்த வாரம் 60 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 30 காசுகள் குறைத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60-ஆக நிா்ணயிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 93-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 100-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது

    • விழுப்புரம் அருகே முட்டை ஏற்றி வந்த மினி லாரி மீது டிப்பர் லாரி மோதியது.
    • மினி லாரி கவிழ்ந்ததில் அருகில் இருந்த பெட்டிக்கடையின் மீது மோதியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சென்னை - கும்பகோணம் சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பண்ருட்டியில் இருந்து விக்கிரவாண்டிக்கு முட்டை ஏற்றடி கொண்டு மினிலாரி ஒன்று வந்தது. இந்த லாரியை பண்ருட்டி சேர்ந்த வாலிபர் ஓட்டி வந்தார். இது கோலியனூர் அருகே கள்ளப்பட்டு பகுதிகள் மினி லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு டிரைவர் இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

    அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று மினி லாரியின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் முட்டை ஏற்றி வந்த மினிலாரி அப்பளம் போல் நொறுங்கி கவிழ்ந்தது. இதில் வெண்ணிலா அருகில் இருந்த 10000 மதிப்புள்ள முட்டைகள் அனைத்தும் சேதமானது. மேலும் மினி லாரி கவிழ்ந்ததில் அருகில் இருந்த பெட்டிக்கடையின் மீது மோதியது. இதில் பெட்டி கடை முழுவதும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்து கிடந்த மினி லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்தால் எடை குறையும்.
    • உடல் எடையைக் குறைப்பதில் புரோட்டின் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    போதிய உடற்பயிற்சி இல்லாததும், கலோரிகள் நிறைந்த உணவை அதிகமாக சாப்பிடுவதும் தான் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணங்கள். உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்தால் எடை குறையும். கொழுப்பைக் குறைக்க, ஒவ்வொரு வரும் ஒவ்வொருவிதமான முயற்சியில் ஈடுபடுவார்கள்.

    உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க முடியும். அந்தவகையில், உடல் எடையைக் குறைப்பதில் புரோட்டின் எனப்படும் புரதம் உள்ள உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடல் வளர்ச்சிக்கு புரதம் முக்கிய மானது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, பக்கவாதம் வராமல் தடுக்கிறது. புரதம் நிறைந்த எளிய உணவு கோழி முட்டை. முட்டையின் மூலம் உடல் எடையைக் குறைப்பது குறித்து இங்கே பார்ப்போம். இதைத் தொடங்கும் முன்பு மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது கட்டாயமாகும்.

    சாப்பிடும் முறை:

    தினமும் காலை உணவாக வேக வைத்த முட்டைகள் 2, ஸ்டார்ச் குறைவான வேக வைத்த காய்கறிகள் 1 கப், கார்போஹைட்ரேட் குறைவான பழங்கள் 1 கப் சாப்பிட வேண்டும். மதியம் மற்றும் இரவு உணவாக கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள வேக வைத்த காய்கறிகள் 1 கப், வேக வைத்த முட்டை 1 சாப்பிட வேண்டும்.

    இந்த உணவு முறையைப் பின்பற்றும்போது எளிய உடற்பயிற்சிகள் அல்லது நடைப்பயிற்சி செய்வது கூடுதல் பலன் தரும். 2 வாரங்களுக்கு மட்டுமே இதனைப் பின்பற்ற வேண்டும். அடுத்த இரண்டு வாரங்களுக்கு வழக்கமான உணவுகளை சாப்பிடலாம். அளவாக உண்ண வேண்டியது அவசியம். பிறகு மீண்டும் அடுத்த 2 வாரங்களுக்கு 'முட்டை டயட்' பின்பற்றலாம். புரதம் நிறைந்த உணவுகள் செரிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும்.

    பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுவதால், அடிக்கடி பசி எடுக்காது. இந்த உணவு முறையை மேற்கொள்ளும்போது அளவாகச் சாப்பிடுதல், நொறுக்குத் தீனி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல், இனிப்புகளை அதிகம் உண்ணாமல் இருத்தல், பட்டினி கிடப்பதைத் தவிர்த்தல், சரியான நேரத்துக்கு உண்ணுதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். முட்டை, இறைச்சி, பீன்ஸ், நட்ஸ், யோகர்ட், பருப்பு வகைகள், பட்டாணி, தானியங்கள், மீன், சோயா பீன்ஸ், பால் பொருட்கள், பழங்கள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அனைவரும் சாப்பிடலாம்.

    • முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • பண்ணையில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்ததால் சில்லரை விற்பனையிலும் முட்டை விலை எகிறியுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு அவற்றிலிருந்து தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    முட்டை நுகர்வை பொருத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் கடந்த 12 நாட்களில் பண்ணையில் முட்டை கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட 2 வார காலத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறை என்ற விகிதத்தில் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1-ந்தேதி (பைசாவில்) 480காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6-ம் தேதி 485 காசாகவும், 9-ந் தேதி 490 காசு, 11-ந்தேதி 495 காசு, 13-ந்தேதி 505 காசு, 16-ந் தேதி 510 காசு, 23-ந் தேதி 520 காசு, 25-ந் தேதி 535 காசு, 26-ந்தேதி 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    பண்ணையில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்ததால் சில்லரை விற்பனையிலும் முட்டை விலை எகிறியுள்ளது. அந்த வகையில் சில்லரை கடைகளில் முட்டை ஒன்றின் விலை ரூ.6 முதல் 6.50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள், இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த 4 மாதங்களில் மட்டும் தீவன மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 5 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக 5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்து 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்காரணமாகவே முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • பண்ணை கொள்முதல் விலையாக ஒரு முட்டை 535 காசுகள் என இருந்த நிலையில் நேற்று மேலும் 15 காசுகள் உயர்ந்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
    • இதனால் சில்லரை விற்பனை கடைகளில் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் தினமும் 5 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    முட்டை நுகர்வை பொருத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. இதன்படி நாமக்கல் மண்டலத்தில் (சென்னை தவிர தமிழகம் முழுவதும்) பண்ணை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

    பண்ணை கொள்முதல் விலையாக ஒரு முட்டை 535 காசுகள் என இருந்த நிலையில் நேற்று மேலும் 15 காசுகள் உயர்ந்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் சில்லரை விற்பனை கடைகளில் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயம் நாமக்கல் முட்டை விலை வரலாற்றில் உச்சபட்ச விலை என்பதால் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே வேளையில் சில்லறை விற்பனை விலையில் ஒரு முட்டை ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் ரூ. 6-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இது முட்டை விலை உயர்வு நுகர்வோரை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    இதனிடையே கோழி தீவனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவோ முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

    கடந்த ஓராண்டாக கோழிப்பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு 400 காசுகளில் இருந்து 450 காசுகளாக அதிகரித்துள்ளது. தற்போது 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டாலும் 515 காசு மட்டுமே கையில் கிடைக்கிறது.

    எனவே கோழிப்பண்ணைகளில் கோழிக்குஞ்சு விடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. இதன் மூலம் நாள் தோறும் 5 கோடி முட்டை உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது 4.20 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

    ஆண்டுதோறும் முட்டை உற்பத்தி 10 சதவீதம் உயரும் நிலையில் தற்போது 20 சதவீதம் குறைந்துள்ளது. உற்பத்தி குறைவு காரணமாக முட்டை கொள்முதல் விலை 600 காசுகள் வரை உயர வாய்ப்பு உள்ளது என்றார். பண்ணை கொள்முதல் விலை 600 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டால் சில்லறை விற்பனை கடைகளில் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முட்டை கொள்முதல் விலை கடந்த 1-ந்தேதி (பைசாவில்) 480காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6-ம் தேதி 485 காசாகவும், 9-ந் தேதி 490 காசு, 11-ந்தேதி 495 காசு, 13-ந்தேதி 505 காசு, 16-ந் தேதி 510 காசு, 23-ந் தேதி 520 காசு, 25-ந் தேதி 535 காசு என ஏற்றம் கண்டு வந்த முட்டை விலை நேற்று மேலும் ஏற்றம் கண்டு 15 காசு அதிகரித்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×