என் மலர்
நீங்கள் தேடியது "பாரதீய ஜனதா"
- ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
- பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்திரசேகர ராவ் விமர்சனம்
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி, ஐதராபாதத்தை சேர்ந்த நந்தகுமார், திருப்பதியை சேர்ந்த சின்மலயா ஜி ஆகியோர் சந்தித்ததாகவும், அப்போது டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி பேரம் பேசியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சைபராபாத் போலீசார் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிக்கொண்டு இருந்த ராமச்சந்திர பாலாஜி, சின்மையாஜி நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் பண்ணை வீட்டில் எம்.எல்.ஏக்களுடன் நடந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்னதாக எம்.எல்.ஏ பைலட் ரோகித் ரெட்டி, ராமச்சந்திர பாரதி ஆகியோரை இடைத்தரகர் நந்தகுமார் கான்பரன்ஸ் மூலம் போனில் இணைத்து உரையாடிய ஆடியோ வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு இடையே சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரும் சைபராபாத் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பணம் கைமாறியதற்கான ஆதாரம் இல்லாததால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து போலீசார் ஐதராபாத் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுத்தனர். அப்போது நீதிபதி 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். அதை உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜ.க சார்பில் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரம் சிக்கி உள்ளது. அந்த வீடியோவை பார்த்தால் இந்த நாடு எப்படி உள்ளது.எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக புரியும்.
இவர்கள் ஆட்சியில் அநியாயம் நடக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களால் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறேன்.
ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ராஜஸ்தான் முதலமைச்சர்களை மாற்ற பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. இந்த நாட்டை பாஜக சர்வ நாசம் செய்ய முயற்சி செய்து வருகிறது.இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரூபாய் நோட்டின் மதிப்பு குறைந்து விட்டது. இந்த வீடியோ ஆதாரம் குறித்து பெரிய அளவில் விசாரணை நடத்த வேண்டும்.
குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த 3 மணி நேர வீடியோவை சிறிய அளவில் எடிட் செய்து விரைவில் அனைத்து மாநில ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடி நாட்டுக்கு மிக நல்லத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜனதாவில் இணைந்தார். அனுபமா என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரூபாலி கங்குலி. திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது டி.வி. சீரியல்களில் பிரபலமாக உள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் ரூபாலி கங்குலி அக்கட்சியில் இணைந்தார்.
பிரதமர் மோடி நாட்டுக்கு மிக நல்லத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள தொலைநோக்குத் திட்டங் கள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றன. அவரது கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். பிரத மர் மோடியின் பாதையை பின்பற்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நான் பா.ஜனதாவில் இணைந்து உள்ளேன். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் பா.ஜனதாவை ஆதரித்துள்ளனர்.
- உத்தரவாத திட்டங்களால் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் கண்ட கனவு நனவாகிவிட்டது.
பெங்களூரு:
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து விஜயேந்திரா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜ.க. கூட்டணி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கிடைத்துள்ளது. பா.ஜ.க., ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி தேர்தலை எதிர்கொண்டன. 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிய காங்கிரசாருக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. உத்தரவாத திட்டங்களால் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் கண்ட கனவு நனவாகிவிட்டது. கர்நாடகத்தில் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.
கர்நாடகத்தில் எங்களின் வெற்றிக்கு காரணமான பா.ஜ.க., ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் பா.ஜ.க.வை ஆதரித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி 2 லட்சத்து 84 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி குறித்து குமாரசாமி மண்டியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கையில் இருந்து மண்டியா தொகுதி கை தவறிவிட்டது. இந்த தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் இரும்பு கோட்டையாகும். தற்போது அந்த இரும்பு கோட்டையை ஜனதா தளம் (எஸ்) கட்சி தக்க வைத்துக் கொண்டது. என்னை வெற்றிபெற செய்த மண்டியா தொகுதி மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் வெற்றி சர்க்கரை நாட்டில் வசித்து வரும் ஒவ்வொரு தந்தை-தாய்க்கும், அக்காள்-தங்கைக்கும், அண்ணன்-தம்பிக்கும் கிடைத்த வெற்றி. ஜனதா தளம்(எஸ்)-பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்று சேர்ந்து வேலை பார்த்துள்ளனர். என்னை இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மோடி 3-வது முறையாக பிரதமராவார். அவர் நல்லாட்சி வழங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2026-வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை. அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு.
- சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புகிறார்கள்.
விழுப்புரம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விழுப்புரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டதில் மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
மது, போதை பொருள்களை ஒழிக்க காலங்காலமாக போராடி வருகிறோம். பவுத்தத்தை தழுவியர்கள் 22 கொள்கைகளில் மதுவை தொட கூடாது என்பது ஒன்று. மது ஒழிப்பு போராட்டம் என்பது தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
மதுவை ஒழிக்க மகளிரின் குரல் ஒலிக்க வேண்டுமென்பதால் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம். கட்சி அரசியல் என்பது வேறு சமூகம் மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேறு. மதுவை ஒழிக்க அனைவரும் எங்களுடன் போராட வேண்டும். மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியுள்ளது. தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துள்ள போது படிப்படியாக ஏன் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரஇயலாது. இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவைகளில் தமிழகம் முதன்மையானவையாக இருக்கும் போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானவையாக இருக்க கூடாது.
மது ஒழிப்பிற்கு அறை கூவல் விடுப்பது மதுவை ஒழிக்க மட்டுமே. இது 2026-வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை. அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு. சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புகிறார்கள்.
கூட்டணியில் இருந்தாலும் நல்ல பிரச்சனைகள் இருந்தால் எதிர்த்து போராடுவோம். அதன்படி அ.தி.மு.க. மது ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து மேடையில் பேசலாம்.
பா.ஜ.க, பா.ம.க.விற்கு தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் மதவாத, சாதியவாத கட்சி என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம். தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம். மதுக்கடைகளை வைத்து கொண்டு அதன் மூலம் வருமானத்தை கொண்டு அரசு ஆட்சி நடத்துவது என்பது ஏற்புடையதல்ல. மக்களுடைய கோரிக்கையை தான் முன் வைக்கிறோம். அது ஒரு கட்சியின் கோரிக்கையாக பார்க்க வேண்டாம். எல்லோரும் கை கோர்த்தால் தான் முடிவு எட்டப்படும். கள்ளச்சாராயம் புழக்கம் இன்னும் இருக்கிறது. பள்ளி வரை போதை பொருள் பழக்கம் உள்ளது.
பெண்களுக்கெதிரான குற்றங்கள் அனைத்தும் போதை பொருட்களில் அடிமையானவர்களால் நடைபெற்றுள்ளது. போதை என்பது அமைதியாக நடைபெறுகிற பேரழிவு. தமிழகம் கல்வி கொள்கையில் சிறந்து விளங்குவதாக மத்திய மந்திரியே தெரிவிப்பதால் கல்வி சிறப்பாக இருப்பது தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணிப்பூர் புதிய முதல்-மந்திரி பதவிக்கு 4 பேர் பெயர் அடிபடுகிறது.
- மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு.
இம்பால்:
மணிப்பூா் பா.ஜனதா முதல்-மந்திரி பிரேன் சிங் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைவதற்கான சாத்தியம் இல்லாவிட்டால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் புதிய முதல்-மந்திரியை தோ்வு செய்வது தொர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் மணிப்பூா் பா.ஜ.க. பொறுப்பாளா் சம்பித் பித்ரா ஆலோசனை நடத்தினாா்.
இந்த கூட்டத்தில் பிரேன் சிங்குக்கு நெருக்கமானவா்களாக கருதப்படும் மணிப்பூா் சபாநாகர் தோக் சோம் சத்யபத்ரா, மந்திரிகள் ஒய். கேம்சந்த், பசந்த் குமாா் சிங், கோவிந்தா கோந்தோ ஜம் . பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராதே ஷியாம் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் குகி இன பா.ஜ.க. எம்.எல்.ஏ.க் கள் 7 பேர் பங்கேற்கவில்லை. மேலும் மேலிட பொறுப்பாளர் சம்பித் பித்ரா நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ.க்களுடனும் தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மணிப்பூர் புதிய முதல்-மந்திரி பதவிக்கு 4 பேர் பெயர் அடிபடுகிறது. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சபாநாயகர் மற்றும் 3 மந்திரிகள், முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
இதற்கிடையே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
- வெள்ளைக்காரர்களை விரட்டியடித்த காங்கிரஸ் இனி பாரதிய ஜனதாவை விட்டுவைக்காது என எம்.எல்.ஏ. பேசினார்.
- ஆறுமுகநேரி முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் மற்றும் திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. வட்டார தலைவர் சற்குரு தலைமை தாங்கினார். நகர தலைவர் ராஜாமணி வரவேற்று பேசினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய பாரதிய ஜனதா தனது ஆட்சியின் அவலங்களை மறைக்க ராகுல்காந்தி மீது பொய்யான வழக்கை போட்டு மாபெரும் தவறை செய்து கொண்டிருக்கிறது. இதன் எதிர் விளைவை அவர்கள் உணரக் கூடிய நிலை சீக்கிரம் வரும்.
வெள்ளைக்காரர்களை விரட்டியடித்த காங்கிரஸ் இனி பாரதிய ஜனதாவை விட்டுவைக்காது. நாடு பிளவுபடாமல் தடுக்க அனைத்து மக்களும் ஒன்றுபட்டு காங்கிரசை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ஆறுமுகநேரி முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.இதனை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முதியோர் இல்ல நிர்வாகிகள் பிரேம்குமார், ஷேக்னா லெப்பை, இ.சி.ஐ. சேர்மன் அந்தோணி, சேகர தலைவர்கள் ஆறுமுகநேரி சுதாகர், மடத்துவிளை சிமியோன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகரன், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் வேல் ராமகிருஷ்ணன், ஓ.பி.சி. பிரிவு தலைவர் ராஜகுமார், மாவட்ட மனித உரிமை தலைவர் ராஜகுமாரன்,
மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், நகர காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சிவகணேசன், சுந்தரகுருசாமி, நகர செயலாளர் மாடசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆல்வின் சேகர், மகளிர் காங்கிரஸ் தலைவர் பெனிட் ராணி, காங்கிரஸ் தியாகிகள் வாரிசு மாநில துணைத்தலைவர் தவசிமுத்து,
வட்டார செயலாளர்கள் சாலமோன் ஜெபராஜ், மோகன், முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், வார்டு செயலாளர்கள் சுடலைமணி, முருகேசன், சிவபெருமாள், பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் கட்டமாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது.
மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கூட்டணிகளே அதிக வாக்குகள் பெற்றன. பாரதீய ஜனதாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி முதல் முறையாக கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதனால் கேரளாவில் காங்கிரஸ் செல்வாக்கு அதிகரித்தது. காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் வெளியானது.
இதனை உண்மையாக்கும் வகையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். இத்தொகுதியில் பாரதீய ஜனதா 3-வது இடத்தில் இருந்தது.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது கண்ணூர், காசர்கோடு, சாலக்குடி தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. அதன் பிறகு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தபோது நிலைமை தலைகீழானது. அனைத்து தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டனர். 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை வகித்தது.
கேரளாவில் பாரதீய ஜனதா கட்சியின் மேல்சபை எம்.பி.யாக இருந்த நடிகர் சுரேஷ்கோபி திருச்சூர் தொகுதி பாரதீயஜனதா வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இதனால் அத்தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது இத்தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதாபன் 2,500-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இவருக்கு அடுத்தப்படியாக கம்யூனிஸ்டு வேட்பாளர் மேத்யூ தாமசும், 3-வது இடத்தில் சுரேஷ்கோபியும் இருந்தனர்.
சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம் திட்டா தொகுதியிலும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கும் பாரதீய ஜனதா வேட்பாளர் சுரேந்திரன் 3-வது இடத்தில் இருந்தார்.
திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டபோது பாரதீய ஜனதா வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் அதிக வாக்குகள் பெற்றார். சில மணி நேரத்தில் அவரை காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னுக்கு தள்ளினார். முதல் சுற்று முடிவில் சசிதரூர் 4,695 ஓட்டுக்கள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
அருணாசல பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அந்த சட்டசபையின் ஆயுள் ஜூன் 1-ந் தேதி முடிகிறது. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் 60 இடங்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதேபோன்று ஆயுள்காலம் முடிகிற சிக்கிம், ஒடிசா, ஆந்திரா மாநில சட்டசபைகளுக்கும், பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது.
60 இடங்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில், ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 11-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி முடிந்தது. நேற்று வேட்பு மனு பரிசீலனை முடிந்தது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இந்த நிலையில், அங்கு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள், ஆலோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சர் கெண்டோ ஜினியும், யாசூலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் எர் தபா தெதிரும் ஆவார்கள்.
அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
வேட்பு மனு தாக்கல் முடிவு அடைந்து விட்டபடியால் அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
இதையொட்டி பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம்மாதவ் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் 2 பதிவுகள் வெளியிட்டார்.
ஒரு பதிவில், “அருணாசல பிரதேசத்தில் இருந்து பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி அணிவகுப்பு தொடங்கி விட்டது. ஆலோ கிழக்கு தொகுதியில் சர் கெண்டோ ஜினி போட்டியின்றி வெற்றி பெற்றிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “அருணாசலபிரதேசத்தில் இருந்து மற்றொரு வெற்றியும் வந்திருக்கிறது. யாசூலி சட்டசபை தொகுதியில் எர் தபா தெதிர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
2009 சட்டசபை தேர்தலில், முதல்-மந்திரி தோர்ஜீ காண்டுவும் (காங்கிரஸ்), 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் போட்டியின்றி தேர்வு பெற்றது நினைவுகூரத்தக்கது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை செயலாளர் ராசபாண்டி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்காக உழைக்கும் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். இந்த தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிடுவார். அவர் பெண்களின் குறைகளை நன்கு அறிந்து புரிந்தவர். எனவே பெண்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். காரணம் இது சந்தர்பவாத கூட்டணி. இந்த கூட்டணியில் பா.ம.க.வும் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் இருப்பதாக கவர்னரிடம் பா.ம.க. தலைவர் ராமதாஸ் மனு கொடுத்ததை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை. இந்த பகுதியில் சடையனேரி மற்றும் கன்னடியன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தான் வந்தது.
இப்போது கன்னடியன் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதைப்போல் சடையனேரி கால்வாய் வலுவாக இருக்க வேண்டும். நிரந்தர கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நிச்சயமாக ஸ்டாலின் தமிழக முதல்வராக வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வருவார். எனவே தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் கிடைத்திட மத்தியிலிருந்து அதிக நிதி பெற்றிட தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்.
இந்த பகுதிக்கு மயான இட வசதி வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக நானே நேரில் வந்து இடம் வசதி செய்து தருவேன். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி நிற்பது உறுதி. கனிமொழியை குறைந்தபட்சம் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #anitharadhakrishnanmla #kanimozhi #parliamentelection
பிரியங்கா நேரடி அரசியலில் குதித்தார். அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாரதீய ஜனதா கட்சி கருத்து தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணி என்ற திட்டத்தை பல்வேறு கட்சிகளும் நிராகரித்து விட்டன. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குடும்ப கூட்டணி அமைத்துள்ளார்” என குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
தெலுங்கானாவில் மிகப்பெரும் சக்தியாக உருவாக வேண்டும் என்ற கனவும் நனவாகிப்போனது. அங்கு முன்பு 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜனதா இந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மிசோரமிலும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அங்கு மிசோரம் தேசிய முன்னணியிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்த 3 மாநிலங்களில் உள்ள 65 நாடாளுமன்ற தொகுதிகளில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா 62 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்தி பேசும் இந்த 3 பெரிய மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி பா.ஜனதாவுக்கு வருகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதன் எதிரொலியாக பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சுமார் 7 மணி நேரம் ஆலோசனை நடந்தது. இதனைத் தொடர்ந்து பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் வாரந்தோறும் கட்சி எம்.பி.க்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது வழக்கம். இதில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றியே ஆலோசிக்கப்படும்.
ஆனால் இன்றைய எம்.பி.க்கள் கூட்டத்தில் 5 மாநில தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராவது குறித்து மோடி எம்.பி. க்களுக்கு ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து இன்று மதியம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, கட்சியின் தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டத்தை நடத்த இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே திட்டமிடப்பட்ட கூட்டம் தான் என்றும், கட்சிரீதியான பிரச்சினைகள் குறித்து தலைவர்களின் கருத்துகளை அமித்ஷா கேட்க இருப்பதாகவும் நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் டுவிட்டரில், “வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி தான். இந்த முடிவுகளால் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதிலும், மக்களுக்கு சேவையாற்றுவதிலும், இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதிலும் பா.ஜனதா மேலும் கடுமையாக பாடுபடும். இந்த தேர்தல் முடிவை கட்சி பணிவுடன் ஏற்றுக்கொள்கிறது” என்று தெரிவித்து இருந்தார். #AssemblyPollResults #Modi #BJPMPs