என் மலர்
நீங்கள் தேடியது "கார் பந்தயம்"
- துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
- சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், சினிமாவை தொடர்ந்து கார் பந்தயத்திலும் கலக்கி வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.
இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
- இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
- இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது 'பார்முலா 1' பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
'பார்முலா 1' கார் பந்தயத்தின் முதல் சுற்றான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது.
இதில் மெக்லரன் அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 42.06 நிமிடங்களில் கடந்தார்.
நெதர்லாந்தை சேர்ந்த வெர்ஸ்டாப்பர்ன் (ரெட்புல்) 2-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்சல் (மெர்சிடஸ்) 3-வது இடத் தையும் பிடித்தார்.
பார்முலா 1' கார் பந்தயத்தின் 2-வது சுற்று சீனா கிராண்ட் பிரீ வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
- அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது
- மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ஒருநாள் மழைக்கேசென்னை தத்தளிக்கும் சூழலை பார்த்தோம். மழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். முறையாக வடிகால் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
* கார் பந்தயத்திற்காக 42 கோடி ரூபாய் அரசு செலவு செய்வது கண்டித்தக்கது. சென்னை தீவுத்திடலை சுற்றி கார் பந்தயம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் கார் பந்தயம் நடத்த இடம் இருக்கும் போது சென்னையில் நடத்துவதா?
* மழை பாதிப்புகளுக்கு இடையே சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ஏன்? சென்னையில் கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு லாபம்?
* கார் பந்தயம் நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது.
* அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது
* மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.
* கவர்னர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது.
* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன மெச்சூரிட்டி உள்ளது?
* சபாநாயகர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சபை தலைவர் பொதுவாக பேசாமல் கட்சி தலைவர் போல் பேசுகிறார்.
* பாராளுமன்ற தேர்தலுக்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதால் பெரும் விபத்து.
- சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.
இலங்கையின் பதுளை மாவட்டத்தில் கார் பந்தய திடலில் இன்று கார் பந்தயப் போட்டி நடைபெற்றது.
ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயம் அடைந்தவர்கள் தியத்தலாவ, பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார் பந்தயத்தின்போது, கார் செல்வதற்கான பாதையைவிட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியுள்ளது. விபத்துக்குள்ளான காரை சூழ்ந்த மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இதனால், உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- வளர்ந்து வரும் மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது.
இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த கார் பந்தய திருவிழா இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எஃப் 4 ஐசி) ஆகிய இரண்டு சாம்பியன்ஷிப்களை உள்ளடக்கியதாகும்.
இந்த போட்டியில் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் எனும் அணி அறிமுகமாகிறது. இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி வாங்கி உள்ளார். கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியுடன் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கோவா, கொச்சி, அகமதாபாத் என மொத்தம் 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.
இந்திய பந்தய விழா, ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கியது. இந்தியாவின் வளர்ந்து வரும் மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.
- சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
பொன்னேரி:
மீஞ்சூர்-வண்டலூர் இடையே 62 கி.மீட்டர் தூரத்திற்கு 400 அடி வெளிவட்ட சாலை உள்ளது. இந்த சாலையில் விடுமுறை நாட்களில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும்.
இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரேஸ், அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தும் வாகன ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் கும்மனூர் அருகே கார் பந்தயம் நடந்த வீடியோ காட்சி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் கட்சி கொடிகளுடன் 5-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சீறிப்பாய்கின்றன.

காரின் மேல் பகுதியை திறந்து காருக்குள் நின்றபடி வாலிபர்கள் தங்களது செல் போன்களில் கார் பந்தயத்தை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.
இந்த வீடியோகாட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டு 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.
- கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
- கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, முத்திரைக் கட்டண உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வாகனக் கட்டண உயர்வு, கட்டிட அனுமதிக் கட்டண உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகியுள்ள நிலையில், சென்னையில் கார் பந்தயத்தை நடத்தப் போவதாக தி.மு.க. அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."
"தமிழ்நாட்டினுடைய கடன் 8 லட்சத்து 33 ஆயிரத்து 362 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை 1 லட்சத்து 8 ஆயிரத்து 690 கோடி ரூபாயாகவும், வருவாய்ப் பற்றாக்குறை 49,279 கோடி ரூபாயாகவும் இருக்கின்ற நிலையில், இந்தக் கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியம் தானா என்பதை தி.மு.க. அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்."
"சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, இந்தக் கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறி உள்ளார்.
- F4 கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.
- சனிக்கிழமை காலையில் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.
சென்னை:
சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நடக்கவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த போட்டியை தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
F4 கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.
சனிக்கிழமை காலையில் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.
சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்படும், இரவு 10.30 மணிவரை கார் பந்தய போட்டிகள் நடைபெறும்.
போக்குவரத்துக்கு எந்தவிட இடையூறும் ஏற்படாத வகையில் கார் பந்தயம் நடத்தப்படும் என்று கூறினார்.
- தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது.
- விதிமீறல் தெரிந்தால் பார்வையாளர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் பார்முலா கார் பந்தயம் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை பார்வையிட வருவோர் பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தப் பொருளும் அரங்குக்குள் எடுத்து வரக்கூடாது. அப்படி எடுத்து வந்தால் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும். அவை திரும்பத் தரப்பட மாட்டாது. கூர்மையான பொருட்களான பிளேடுகள், கத்திகள், கத்திரிக்கோல் ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள் மற்றும் பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள், ஆயுதங்கள்-துப்பாக்கிகள், சுவிஸ் ராணுவ கத்திகள் போன்றவற்றை கொண்டு வரக்கூடாது. மேலும் லேசர்ஸ்-லேசர் லைட்டுகள், விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள், ஒலி அமைப்புகள் - ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள், மெகா போன்கள், இசைக்கருவிகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் ஆகியவற்றை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தீப்பற்றக்கூடிய பொருட்களான தீப்பெட்டிகள், பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய திரவங்கள், மதுபானம், போதைப் பொருள் எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது.
ஏதேனும் விதிமீறல் தெரிந்தால் பார்வையாளர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்.
புகையிலை பொருட்கள், அங்கீகரிக்கப்படாத விளம்பர பொருட்கள், பிளையர்கள், ஸ்டிக்கர்கள், கடற்கரை பந்துகள், பரிசுகள் போன்றவை, ஸ்லீப்பிங் பேக்ஸ், குடைகள் அல்லது நிழல் கட்டமைப்புகள், வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படாது.
குறிப்பாக தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், திறந்த தண்ணீர் பாட்டில்கள், டின்கள், கேன்கள், டிரோன்கள் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பறக்கும் சாதனம், புகைபிடிக்கும் சாதனங்கள் ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது.
தனியார் வாகனங்கள் - ஸ்கேட்பார்டுகள், ரோலர் பிளேடுகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள், வண்டிகள் அல்லது தனிப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் போன்றவை அனுமதி இல்லை.
உபகரணங்கள் - கைப்பைகள், குடைகள், லேப்-டாப், லேப்-டாப் பைகள், சூட்கேஸ், பெரிய மின்விசிறிகள், மோட்டார் சைக்கிள் தலைக்கவசம், தலைக்கவசங்கள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.
சாதி, மதம், பாலினம், மதம் மற்றும் இனத்திற்கு எதிரான புண்படுத்தும் பதாகைகள் அல்லது தவறான, பாரபட்சமான மொழி, தொப்பிகள், பதாகைகள், கொடிகள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவானந்த சாலை மற்றும் கொடி மரச்சாலை முற்றிலும் மூடப்படும்.
- காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் (ஆன் ஸ்ட்ரீட் நைட் பார்முலா-4) சென்னையில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலைகளில் இன்று (வெள்ளிக்கிழமை) போட்டிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே இந்த சாலைகளில் இன்று முதல் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்டிரல் ரெயில் நிலையம், ஈ.வெ.ரா.சாலை வழியாக சென்றடையலாம்.
* அண்ணா சாலையில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி திருப்பி விடப்படும்.
* சிவானந்த சாலை மற்றும் கொடி மரச்சாலை முற்றிலும் மூடப்படும்.
* காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.
* சென்டிரலில் இருந்து அண்ணாசிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
* முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக பல்லவன் சாலை, ஈ.வெ.ரா.சாலை, சென்டிரல் ரெயில் நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் சாலை வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்
* கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வெ.ரா.சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி பாயிண்ட், பாரிமுனை ஆகிய சாலைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்வதற்கு தற்காலிக தடை அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சென்னையில் சனி, ஞாயிறு தினங்களில் நடக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் (ஆன் ஸ்ட்ரீட் நைட் பார்முலா-4) சென்னையில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.
சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் 'லைப் என்ற ரேஸ்ல ஸ்பீடா போகனும் லப்புல' என தொடங்கும் இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜ் எழுதி உள்ளார். மேலும் ஃபார்முலா 4 கார் பந்தயம் மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுயுள்ளது.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
- வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
பார்முலா 4 கார் பந்தயத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயம் மழையின் காரணமாக எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட் அளித்திருந்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், தற்போது வரை எஃப்ஐஏ சான்றிதழ் வழங்காததால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
சான்றிதழ் பெற்ற பின்னரே கார் பந்தயம் நடத்த முடியும் என்பதால் முறையீடு செய்யப்பட்டுள்ளது.