என் மலர்
நீங்கள் தேடியது "தக்காளி விலை"
- 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.
- ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் நரசிம்ஹுலு ரங்காரெட்டி மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது அறுவடை செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதிக அளவில் தக்காளி வரத்து ஏற்பட்டதால் அதன் விலை வெகுவாக குறைந்துள்ளது.
மஹபூப்நகர் உழவர் சந்தைக்கு பெட்டிகளில் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.
இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளி பழங்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர். இதனை கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன.
இதே போல ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் நிலத்திலேயே அப்படியே விட்டுள்ளனர்.
ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை எட்டியது. இதனால் ஏராளமான விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறினர்.
தற்போது அனைத்து விவசாயிகளும் தக்காளிகளை பயிரிட்டுள்ளனர். இதனால் தக்காளி அதிக அளவில் வரத்து ஏற்பட்டு விலை குறைந்துள்ளது. விவசாயிகள் பலர் நஷ்டம் அடைந்துள்ளனர்.
- தினந்தோறும் 400 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது.
- தக்காளி பதப்படுத்தும் கிடங்கை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட்டிற்கு தினந்தோறும் 400 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது .இச்சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், சேலம் , ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பாலக்கோடு தக்காளி மார்கெட்டிற்கு பாலக்கோடு சுற்று வட்டார விவசாயிகள் பெல்ரம்பட்டி, பொப்பிடி , சோமனஹள்ளி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பேளார ஹள்ளி, எலங்காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் பருவமழை பொழிவினால் தக்காளி விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு 2 மாதத்திற்கு பிறகு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிந்த தக்காளி 10 ரூபாய்க்கு கீழ் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்ற வாரங்களில் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனையான தக்காளி தற்போது கொள்முதல் விலை 8 ரூபாய் ஆகவும் சில்லரை விற்பனை விலை 20 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தக்காளி பதப்படுத்தும் கிடங்கை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 800 ரூபாய்க்கு விற்ற 15 கிலோ பெட்டி, தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 800 ரூபாய்க்கு விற்ற 15 கிலோ பெட்டி, தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், வெங்காயம் கிலோ 10 ரூபாய்க்கும், உருளை கிழங்கு 15 ரூபாய்க்கும், கேரட் 30 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது.
- ஒரு கிலோ தக்காளி ரூ.45 முதல் 50 வரை விற்பனையாகி வருகிறது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல் பட்டு வருகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தாளவாடி, சத்தியமங்கலம் ,ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கர்நாடகா, பெங்களூர் போன்ற பகுதியில் இருந்து காய்கறி கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஈரோடு வ. உ. சி. மார்க்கெ ட்டுக்கு தினமும் 7000 தக்காளி பெட்டிகள் வரத்தாகி வந்தன. தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டு குறைந்த அளவே வருகிறது.
இன்று வ.உ.சி. மார்க்கெ ட்டிற்கு 2,500 தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. இன்று ஆந்திரா மாநிலம் குப்பம் , கர்நாடக மாநிலம் கொள்ளே கால் ஆகிய பகுதியில் இருந்து மட்டுமே தக்காளி வரத்தாகி உள்ளது.
இதனால் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனையானது.
அதனைத்தொடர்ந்து சிறிது சிறிதாக விலை உயர்ந்து கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.35 -க்கு விற்பனையானது. இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.45 முதல் 50 வரை விற்பனையாகி வருகிறது.
தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் விளைச்சல் பாதிப்பாலும், வரத்து குறைந்ததாலும் கருப்பு அவரை, பச்சை மிளகாய், பீன்ஸ் ஆகிய காய்கறிகளின் விலை ரூ. 100 - ஐ தாண்டி உள்ளது.
ஈரோடு வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறி களின் விலை கிலோவில் வருமாறு:
கத்திரிக்கா - 60, வெண்டை க்காய்-40, பீர்க்கங்காய்- 60, பாவக்காய் - 60, முள்ளங்கி-50, முட்டைகோஸ் - 25, புடலங்காய்-45, கருப்பு அவரை - 110, பெல்ட் அவரை - 100,
உருளைக்கிழங்கு - 30, குடைமிளகாய் - 60, பச்சை மிளகாய் - 120, சுரக்காய் - 15, இஞ்சி - 220, பீட்ரூட் - 55, கேரட் - 85, காலிபிளவர் - 35, கோவைக்காய் - 55,
வெள்ளரிக்காய் - 50, சேனைக்கிழங்கு - 50, கருணைக்கி ழங்கு - 60, சவ்சவ் - 25, சின்ன வெங்காயம்- 60 முதல் 70, பெரிய வெங்காயம் - 25.
- சில நாட்களுக்கு முன்பு ரூ.25 வரை விற்கப்பட்டது
- 100 கிராம், 200 கிராம், ¼ கிலோ என்ற அளவில் வாங்கி செல்கின்றனர்
வேலூர்:
சமையலில் முக்கிய இடம்பிடிப்பது தக்காளி ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 வரை விற்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தக்காளியின் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் பெய்த பலத்த மழை கார ணமான தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்பட்டது. ஆனால் இன்னும் அதன் விலை குறையாமல் ஏறுமுகமாகவே உள்ளது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்கப்படுகிறது.
இதனால் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கிய இல்லத்தரசிகள் தற்போது 100 கிராம், 200 கிராம், ¼ கிலோ என்ற அளவில் வாங்கி சிக்கனமாக பயன்படுத்தி வருகிறார்கள். சமையலில் தக்காளியின் பயன்பாட்டையும் பெருமளவு குறைத்து விட்டனர்.
எகிறி வரும் தக்காளியின் விலையால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
- குறைந்த அளவில் பயிரிடப்பட்டுள்ள இடங்களில் தற்போது பகலில் வெயில், மாலை, இரவில் மழையால் தக்காளி பழங்கள் அழுகி வருகிறது.
- அதே நேரம் ஆந்திராவில் இருந்து தமிழக மார்க்கெட்டுகளுக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்தும் சரிந்துள்ளது.
சேலம்:
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை.
குறைந்த அளவில் பயிரிடப்பட்டுள்ள இடங்களில் தற்போது பகலில் வெயில், மாலை, இரவில் மழையால் தக்காளி பழங்கள் அழுகி வருகிறது.
அதே நேரம் ஆந்திராவில் இருந்து தமிழக மார்க்கெட்டுகளுக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்தும் சரிந்துள்ளது. இதனால் மாவட்டத்திற்கு தக்காளி வரத்து பாதியாக சரிந்துள்ளது. இதனால் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சேலம் உழவர் சந்தைகளில் 50 முதல் 55 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் நாட்டு தக்காளி முதல் ரகம் 60 ரூபாய்க்கு விற்றது. தற்போது ஒரே நாளில் ரூ.30 உயர்ந்து 90 ரூபாயாக அதிகரித்துள்ளது.
55 ரூபாய்க்கு விற்ற 2-ம் ரகம், 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. குறிப்பாக நேற்று 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 700 ரூபாய் வரை அதிகரித்து, 2,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிலோவிற்க்கு 30 ரூபாய் வரை விலை உயர்ந்து ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் தக்காளியின் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
சேலம் உழவர் சந்தையில் மற்ற காய்கறிகள் விலை விவரம்(ஒரு கிலோவுக்கு) வருமாறு:-
உருளைக்கிழங்கு முதல் தரம் ரூ.60, 2-ம் தரம் ரூ.30, சின்னவெங்காயம் முதல் தரம் ரூ.60, 2-ம் தரம் ரூ.55, பெரியவெங்காயம் முதல் தரம் ரூ.25, 2-ம் தரம் ரூ.22, பச்சை மிளகாய் முதல் தரம் ரூ.78, 2-ம் தரம் ரூ.76, கத்தரிக்காய் முதல் தரம் ரூ.44, 2-ம் தரம் ரூ.40, வெண்டைக்காய் முதல் தரம் ரூ.36, 2-ம் தரம் ரூ.34, முருங்கைக்காய் முதல் தரம் ரூ.40, 2-ம் தரம் ரூ.20, பீர்க்கங்காய் முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.46, சுரைக்காய் முதல் தரம் ரூ.25, 2-ம் தரம் ரூ.22, முள்ளங்கி முதல் தரம் ரூ.35, 2-ம் தரம் ரூ.32, சேனை கிழங்கு முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.30, கருணைக்கிழங்கு முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.45.
- விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
சென்னை:
சமையலில் முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக தக்காளியின் விலை அதிகரிக்கத் தொடங்கி கிலோ 100 ரூபாயை நெருங்கி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமான தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.64 முதல் ரூ.68 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நுகர்வோருக்கு பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் 65 பசுமை பண்ணை காய்கறி அங்காடி, நடமாடும் காய்கறி அங்காடி மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
- விலை உயர்வு காரணமாக வீடுகளில் தக்காளி ரசத்தை கடந்த சில நாட்களாக இல்லத்தரசிகள் கைவிட்டு விட்டார்கள்.
- மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள்
சென்னை:
சென்னையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கிறது. வரத்து குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வு காரணமாக வீடுகளில் தக்காளி ரசத்தை கடந்த சில நாட்களாக இல்லத்தரசிகள் கைவிட்டு விட்டார்கள்.
ஓட்டல்களிலும் வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி இடம் பிடித்திருக்கும். ஆனால் இப்போது விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக ஓட்டல் மெனுவிலும் தக்காளி சட்னி இல்லை. விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது. என்றே வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள்.
குறைந்தது இன்னும் 2 வாரங்களாவது தக்காளி சட்னிக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள். வரத்து அதிகரித்து விலை குறைந்த பிறகுதான் தக்காளி சட்னி இடம்பெறும் என்றனர்.
மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள். ஓட்டல்களுக்கு சாப்பிட செல்லும் வாடிக்கையாளர்கள் தக்காளி ரசத்தை கையில் வாங்கி குடிப்பதும் உண்டு. ஆனால் இப்போது ஏமாந்து போகிறார்கள்.
- தக்காளி விலை திடீரென 100 ரூபாயை தொட்டது
- தற்போது படிப்படியாக விலை குறைந்து வருகிறது
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. சென்னை, மும்பை, டெல்லி என முக்கிய இடங்களில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு தக்காளி வரத்து குறைவு ஏற்பட்டது. விலை உயர்வுக்கு இது முக்கிய காரணியாக இருந்தது.
தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நுகர்வோருக்கு பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இது தற்காலிக விலை ஏற்றம்தான். இன்னும 10 முதல் 15 நாட்களில் தக்காளி விலை குறையத் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று சற்று விலை குறைந்தது. இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் (மொத்த விற்பனை) கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
நேற்று 400 டன் தக்காளி சந்தை விற்பனைக்கு வந்த நிலையில், இன்று அது 700 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைவு ஏற்பட்டுள்ளது. சில்லறை விலையில் 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வர விற்கப்படுகிறது. வரும் நாட்களில் 1200 டன் வரை தக்காளி வரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் இன்னும் விலை குறைவு ஏற்படும்.
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 43 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தன.
- இன்னும் தக்காளி வரத்து முழுமை ஆகாததால் தக்காளி விலை உச்சம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று தெரிகிறது.
போரூர்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கிலோ ரூ.100 வரை விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்தனர். ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.100-க்கு விற்ற நிலையில் அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்த தக்காளியின் விலை இன்று சற்று குறைந்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 43 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தன. வழக்கமாக 60 லாரிகள் வரை தக்காளி வரும் என்று தெரிகிறது. இன்னும் தக்காளி வரத்து முழுமை ஆகாததால் தக்காளி விலை உச்சம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை திடீரென அதிகரித்தது. இதையடுத்து சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100வரை விற்பனை ஆனது. இன்று 43 லாரிகளில் தக்காளிகள் வந்திருந்தன. இதனால் மொத்த விற்பனை கடைகளில் ரூ.65-க்கு தக்காளி விற்பனை ஆனது. வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என்றனர்.
- நேற்றுமுன்தினம் சற்று குறைந்த நிலையில் தற்போது அதிகரிப்பு
- சில்லறை விலையில் 100-ஐ தாண்டி விற்பனை
சென்னை கோயம்பேடு, மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்கப்பட்டது. மேலும் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளியின் விலை நேற்று முன்தினம் சற்று குறைந்தது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ100-க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெளி மார்க்கெட்டுகளில் 1 கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்துள்ளது. சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக தினசரி 65 லாரிகளில் 450 டன் வரை குவிந்து வரும் தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாகவே குறைந்துவிட்டது.
இன்று 40 லாரிகளில் 300 டன் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. 150 டன் தக்காளி குறைவாக வந்துள்ளது. உற்பத்தி நடைபெற்று வரும் பகுதிகளில் பெய்த மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை அதிகரித்து உள்ளது. இனி வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கன மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளியின் விலை ஓரிரு நாட்கள் குறைந்திருந்தது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதன்பின்னர் தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததையடுத்து நேற்று முதல் மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ100-க்கும் விற்கப்பட்டது. இன்று அதைவிட உயர்ந்து உச்சத்தை தொட்டது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டது.
சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
சமையலில் தவிர்க்க முடியாத தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வழக்கமாக வாங்குவதைவிட குறைந்த அளவே தக்காளியை வாங்கிச் செல்கின்றனர்.
தக்காளி விலை உயர்வால் பெரும்பாலான மக்கள் தக்காளியை சமையலில் குறைக்கத் தொடங்கி உள்ளனர். தக்காளி இல்லாமல் செய்யக்கூடிய உணவு வகைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேசமயம், தக்காளிக்கு மாற்றாக புளி மற்றும் எலுமிச்சையை சமையலில் பயன்படுத்தவும் தொடங்கி உள்ளனர். குறிப்பாக சாம்பாரில் தக்காளிக்குப் பதில், புளிப்பு சுவைக்காக புளி அல்லது மாங்காய் சேர்க்கின்றனர். மாங்காய் சேர்ப்பதால் சுவை தனித்துவமாக இருப்பதால் பலரும் இதை விரும்புகின்றனர்.