search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125752"

    ஆந்திர கடலோரத்தில் மீன்பிடித்த 200 தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களை விடுவிக்கக்கோரி அரசு சார்பில் அமைச்சர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். #TNfishermen
    திருவொற்றியூர்:

    ஆந்திர கடற்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், அதிக குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளை பயன்படுத்துவதாகவும், ஆந்திர மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி விடுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநில கடல் பகுதிக்கு கடந்த 16-ந் தேதி மீன்பிடிக்க சென்ற 27 விசைப்படகுகளையும், அதில் இருந்த 200 மீனவர்களையும் ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்தனர்.

    சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணாபுரம், துப்பிலிபாலம், மைப்பாடு உள்ளிட்ட 20 மீனவ கிராமங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    சிறைபிடிக்கப்பட்ட சென்னை மீனவர்களை விடுவிப்பதற்காக மீனவ சங்க நிர்வாகிகள் ஆந்திரா சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தமிழக மீனவர்களை விடுவிக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆந்திர மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனையும் அவர்கள் ஏற்கவில்லை.

    மேலும் தமிழக மீனவர்கள், ஆந்திர கடற்கரையோரம் மீன்பிடி தொழிலை மேற்கொள்ளக்கூடாது. அதிக குதிரை திறன்கொண்ட என்ஜின், இரட்டை மடி வலைகளை பயன்படுத்தக்கூடாது. 300 அடி தூரத்தில், ஆழ்கடலில் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்கும் வரை, மீனவர்களை விடு விக்க மாட்டோம் என்று ஆந்திர மீனவர்கள் கூறிவிட்டனர்.

    இந்த நிலையில், சென்னை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்பரிதி, உதவி இயக்குனர் வேலன் தலைமையில் தமிழக அதிகாரிகள், ஆந்திர மாநில மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் ஆந்திர மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாகவும், சென்னை மீனவர்கள் விதிகளை மீறி மீன் பிடித்தொழில் மேற்கொண்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமரசம் பேசினர். அதன்பின்னரும் தமிழக மீனவர்களை விடுவிக்காமல் ஆந்திர மீனவர்கள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. #TNfishermen

    செங்குன்றம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
    செங்குன்றம்:

    செங்குன்றம் அருகே பழைய அலமாதி பகுதியில் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து மதில் சுவர் மற்றும் ஓட்டு வீடு கட்டி இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க உத்தரவிட்டது.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் புகழேந்தி, சோழவரம் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் இன்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் மதில் சுவர், வீட்டை அகற்றி ரூ.10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர்.

    அரசு நிலத்தை மீட்கும் பணியின்போது சோழவரம் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். #tamilnews
    முறையான அனுமதி பெறாமல் சாலையை சீரமைத்ததாக கூறி, சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட 50-க்கும் அதிகமான பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    சென்னையில் இருந்து வானகரம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடி சிக்னல் அருகே குண்டும் குழியுமாக சேதம் அடைந்து இருக்கிறது. இதனால் விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை.

    எனவே மதுரவாயல் குடியிருப்போர் கூட்டமைப்பு, திருவேற்காடு குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இந்த சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். பொதுமக்கள் இதற்கு உதவ முன் வந்தனர்.

    இன்று காலை இந்த சாலையை சீரமைப்பதற்காக குண்டும் குழியுமாக இருந்த இடத்தில் ஜல்லிகற்கள், மணல் கொட்டப்பட்டன. அதைக்கொண்டு சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி சாலையை சீரமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    இதை அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். முறையான அனுமதி பெறாமல் சாலையை சீரமைத்ததாக கூறி, சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட 50-க்கும் அதிகமான பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

    இது 4 வழி தேசிய நெடுஞ்சாலை. 2012-ம் ஆண்டு இதை 6 வழி சாலையாக மாற்ற அரசு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்த பணி நடைபெறவில்லை. ஆனால் இந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் 6 வழி சாலைக்குரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த சுங்கச்சாவடியை அமைத்துள்ள ஒப்பந்ததாரர் தான் இந்த சாலையை சீரமைக்க வேண்டும். இங்கு தினமும் ரூ.5 லட்சம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி வருமானம் வந்தும் சாலை பணி நடக்கவில்லை. மத்திய சாலை போக்குவரத்து இணை மந்திரி, தமிழக முதலமைச்சர், உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயன் இல்லை. எனவேதான் நாங்களே சாலையை சீரமைக்க முடிவு செய்தோம். அதையும் தடுத்து எங்களை கைது செய்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ஓமலூரில் நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் பட பேனர்களை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Viswasam
    ஓமலூர்:

    ஓமலூரில் நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படம் இன்று வெளியானது இதற்கு வரவேற்பு தெரிவித்தும், படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கபட்டுள்ளது.

    இந்த நிலையில் ஓமலூர் பேரூராட்சி பகுதிகளில் பேனர்கள் வைக்க அஜித்குமார் ரசிகர்கள் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஓமலூர் பேரூராட்சி வணிக வளாகத்தின் மேலே உள்ள விளம்பர தட்டிகள் மீதும் வைக்கப்பட்டது. இதனிடையே ஓமலூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அஜித் பேனர் வைக்கப்பட்டது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓமலூர் பேரூராட்சி அதிகாரிகள் பேனர் வைக்கப்பட்ட வணிக வளாகத்திற்கு சென்று ஆய்வுகள் செய்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற முயன்றனர்.

    அப்போது அங்கே வந்த திமுக சமூக ஊடாக பிரிவு நிர்வாகிகள் பிரகாஷ், சீனிவாசன் ஆகியோரும், அஜித் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். பேனரை அகற்றகூடாது என்றும் அகற்றினால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அப்போது பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி வணிக வளாக பகுதிகளில் அனுமதின்றி பேனர் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தொடர்ந்தே இங்கே வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

    இதனை திமுக நிர்வாகிகள் மற்றும் அஜித் ரசிகர்கள் ஏற்க மறுத்த தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை விரட்டி அடித்தனர். தொடர்ந்து வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டு, அதற்காக அமைக்கபட்டிருந்த இரும்பு தூண்களும் அகற்றப்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #Viswasam
    ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் மூலம் இனி பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியாது. எனவே பழைய கார்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். #ATMCardChip
    சென்னை:

    வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ள ஏ.டி.எம். கார்டு மூலம் எளிதாக மோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்தனர். எனவே மோசடியை தடுக்க பழைய முறையிலான ஏ.டி.எம். கார்டுகளுக்கு பதிலாக ‘சிப்’ வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனைத்து வங்கிகளுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக இது நடைமுறைக்கு வந்தது. ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் செயல்படாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனவே பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பழைய ஏ.டி.எம். கார்டுகளை கொடுத்து ‘சிப்’ உள்ள புதிய ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி விட்டனர்.

    ஆனால் சிலர் இன்னமும் புதிய ஏ.டி.எம். கார்டு வாங்காமல் உள்ளனர். இதனை கண்டுகொள்ளாமல் இருந்த வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள் நேற்று முதல் செயல்படவில்லை.

    குறிப்பாக சென்னையில் பல வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது:-

    ‘சிப்’ இல்லாத டெபிட், கிரெடிட் ஏ.டி.எம். கார்டுகள் ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் வேலை செய்யாது என்பதால் அந்த கார்டுகளை வைத்து ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் ‘ஸ்வைப்’ செய்து பொருட்கள் வாங்கவோ முடியாது.

    எனவே பழைய கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவற்றை வங்கியில் கொடுத்து ‘சிப்’ வைத்த புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர் பெயர் இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் ஒரே நாளிலும், பெயருடன் கூடிய கார்டுகள் 7 நாட்கள் அவகாசத்திலும் வழங்கப்படுகிறது. சாதாரண வகை கார்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பி வருகிறது. மஞ்சள் நிற மாஸ்டர் கார்டுகளை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த உத்தரவு அனைத்து சர்வதேச, உள்நாட்டு வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ATMCardChip
    பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் வழங்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #AnbumaniRamadoss #HIVBlood
    கோவை:

    கோவையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்க வந்த அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அத்திக்கடவு -அவினாசி திட்டம் 3500 கோடியில் திட்டமிட்டு தற்போது 1500 கோடியாக குறைத்து மாற்று வழியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது சாத்தியமில்லை.

    உயர் மின்னழுத்த கோபுரங்களுக்காக 13 மாவட்ட விவசாயிகள் போராடி வருகிறார்கள். கேரளாவை போல் நிலத்தடியில் கொண்டு செல்லலாம். விவசாயிகளை அழித்து இத்திட்டம் எங்களுக்கு தேவையில்லை.

    விவசாயிகளை அரசு ஏளனமாக பார்க்கிறது. குறைந்த பட்சம் அவர்களிடம் பேச்சுவார்த்தையாவது நடத்த வேண்டும்.

    மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தால் முல்லை பெரியார், பரம்பிகுளம் ஆகியவை கேரள மாநிலத்திற்கு செல்லும். இதனால் தமிழகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பு தரும். அதனை அனைத்து கட்சிகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.

    மேகதாது விவகாரம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அப்போது மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். சட்டமன்றம் ஜனவரி முதல் வாரம் கூட இருக்கிறது.

    காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதி என சட்டம் இயற்றி ஜனாதிபதியிடம் கையெழுத்து பெற வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர்களுக்கு நஷ்ட ஈடு வரவில்லை. 500 கோடி கொடுத்துள்ளது போதவில்லை.

    அவர்களின் வாழ்வாதாரத்தை சீரமைக்க மறு சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும்.

    என்.எல்.சியில் 12,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது தேவையில்லை. அந்த நிறுவனமே தேவையில்லை. நிலத்தடி நீர் அந்த மாவட்டத்தில் 800 அடியாக குறைந்து விட்டது.

    மக்களுக்கு வேலையில்லாமல் அவர்களுக்கு மட்டும் 3000 கோடி லாபம் வருகிறது. எனவே என்.எல். சி. விரிவாக்கத்தை தடை செய்ய வேண்டும். அந்த பகுதி பாலைவனமாகி விடக்கூடாது.


    ஒரு மருத்துவராக நான் கூற விரும்புவது எச்.ஐ..வி ரத்தம் வழங்கியது மிகப்பெரிய தவறு. அதனை ஏற்க முடியாது. அதற்கு துறை அமைச்சரும் அதிகாரிகளும் தான் பொறுப்பு.

    தமிழக சுகாதார துறை சரியான முறையில் செயல்படவில்லை. இதற்கு பொறுப்பேற்று அமைச்சர்களும் அதிகாரிகளும் பதவி விலக வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலை சட்டத்தை மதிக்காமல் செயல்படுகின்றது. தமிழக அரசு அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. எனவே மூத்த வழக்கறிஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதாட வேண்டும்.

    டாஸ்மாக் பிரச்சனைக்கு மூத்த வழக்கறிஞர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அப்படி வாதிடவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு அல்லது குஜராத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AnbumaniRamadoss #HIVBlood

    இளையான்குடி அருகே மணல் அள்ளியதை கண்டித்த அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி ஒன்றியம் வடக்கு கீரனூர் கிராமத்தில் மணல் அள்ளுவதாக இளையான்குடி தாசில்தார் தமிழரசனுக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அவர், வருவாய் ஆய்வாளர் காசியம்மாள், கிராம உதவியாளர் பாலமுருகன் ஆகியோருடன் சென்று சோதனை நடத்தினார். அப்போது 3 லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் சென்று அதிகாரிகள் விசாரித்த போது, சவடு மண் அள்ள அனுமதி பெற்று, மணல் அள்ளியது தெரியவந்தது. இதை தடுக்க முயன்ற அதிகாரிகளை லாரி டிரைவர்கள் சிவகங்கையை சேர்ந்த சரவணன் (வயது 44), காளையார் கோவிலை சேர்ந்த ஆறுமுகம் (35) ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

    இதையடுத்து அதிகாரிகள் இளையான்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் டிரைவர்களை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெரும்பச்சேரியை சேர்ந்த ஒப்பந்தகாரர் முருகன், லாரி உரிமையாளர்கள் சிவகங்கையை சேர்ந்த புவியரசன், காளையார்கோவில் காளீஸ்வரன், மானாமதுரை சிங்காரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு லாரி டிரைவரை தேடி வருகின்றனர். #tamilnews
    சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு கருதி, வாசலில் சுவர் எழுப்பி சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ChhattisgarhElections #EVMProtection
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதியும், மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு 20-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் வாக்கு எந்திரங்களை பாதுகாப்பது சவாலானதாக இருக்கும். எனவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    தலைநகர்  ராய்ப்பூரில் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பாக ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.



    இந்நிலையில், பீமதாரா மாவட்ட தலைமையகத்தில் 3 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளள. வாக்கு எந்திரங்கள் உள்ள அறையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதிலும் திருப்தி ஏற்படாததால், அந்த அறையின் வாசலில் செங்கற்களால் சுவர் எழுப்பி முற்றிலும் அடைத்துவிட்டனர். வன்முறைக் கும்பல்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை சூறையாடிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. #ChhattisgarhElections #EVMProtection

    கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் நடவடிக்கை பணிகளை செய்வதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். #GajaCyclone
    தஞ்சாவூர்:

    கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் நடவடிக்கை பணிகளை செய்வதில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளை நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர், மின்சார வசதி செய்து தர வேண்டும், மீட்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாபேட்டையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியினர் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.

    இந்த மறியல் போராட்டததில் பெண்கள், குழந்தைகள், கட்சி நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் முழுவதும் உள்ள 33 வார்டுகளிலும் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.

    ஏராளமான டிரான்ஸ் பார்மர்கள் பழுதாகின. இதன் காரமணாக மின்சாரம் முழுமையாக தடைபட்டு குடீநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. வெளிமாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

    இதற்கிடையே நகரத்தில் படிப்படியாக மின் விநியோகம் கொடுக்கப்பட்டது. லாரிகள் மூலம் குடிநீரும் விநியோகிக்கப்பட்டது. இருந்தாலும் பல்வேறு வார்டுகளில் மீட்பு பணிகளை அதிகாரிகள் தொடங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



    அந்த வகையில் மன்னார்குடி நகரம் 23-வது வார்டு தெற்கு வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புயல் அடித்து 7 நாட்களை கடந்தும் பாதிப்புகளை பார்வையிட எந்த ஒரு அதிகாரிகளும் வராததை கண்டித்தும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியமான தேவைகளை உடனடியாக வழங்க கோரியும் திரையரங்கம் எதிரில் பொதுமக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் போராட்டம் நடந்த இடம் அருகே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தங்கியிருந்த தனியார் விடுதி இருந்தது. உடனே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அமைச்சர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு தங்களை அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்கவில்லை என்று வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பாதுகாப்பிற்கு நின்ற டி.எஸ்.பி. அசோகன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு நகராட்சி ஆணையர் விசுவநாதன், மின்வாரிய அதிகாரி கண்ணன் ஆகியோர் வந்து மீட்பு பணிகளை உடனடியாக தொடங்குவதாக உறுதியளித்தனர்.

    இதைத் தொடர்ந்து ஏராளமான பணியாளர்கள் அந்த பகுதியில் மீட்பு பணிகளை உடனே தொடங்கினர். அதன் பின் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி பகுதியில் புயல் தாக்கிய நாளில் இருந்து இன்று வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 7 நாட்கள் ஆகியும் மின்சார விநியோகம் தொடங்கப்படாததால் விரக்தியடைந்த பட்டினச்சேரி மீனவர்கள், நாகூர் வாஞ்சூர் சோதனைச்சாவடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காரைக்கால், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.

    தகவலறிந்த தாசில்தார் இளங்கோவன், நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உடனே அந்த பகுதியில் மின்சாரம் வழங்கப்படுவதாக உறுதியளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதே போன்று முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மெயின்ரோட்டில் பொதுமக்கள் திரண்டு வந்து இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் முத்துப்பேட்டை அடுத்துள்ள ஆலங்காடு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    குண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை என்று ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    புதுச்சேரியை சேர்ந்த செந்தில் என்கிற ரமேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு காலாப்பேட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்துசெய்யக்கோரி அவரது மனைவி பத்மாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, ஆர்.ராமதிலகம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சமூகவிரோதிகளை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த சட்டத்தை பிரயோகிக்கும்போது அதிகாரிகள் சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை.

    குண்டர் தடுப்புச்சட்டத்தில் இருந்து தனது கணவரை விடுவிக்கக்கோரி மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை அரசு அதிகாரிகள் முறையாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்காமல், அறிவுரைக்குழுமத்திடம் தான் முறையிட வேண்டும் எனக்கூறி தங்களது கடமையை தட்டிக்கழித்துள்ளனர்.

    அறிவுரைக்குழுமத்திடம் விசாரணை நிலுவையில் இருந்தாலும், அரசிடம் அளிக்கப்படும் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே சில வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால், அதிகாரிகள் இதை முறையாக பின்பற்றவில்லை.

    எனவே, மனுதாரரின் கணவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டம் ரத்துசெய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும்போது சமூகவிரோதிகள் எளிதில் தப்பிக்காமல் இருக்க சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ChennaiHighCourt
    சுகாதாரமின்றி, முறையாக பதப்படுத்தப்படாத ஜெய்ப்பூரில் இருந்து மூட்டையில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ ஆட்டுக்கறியை சைதாப்பேட்டையில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    ஜெய்ப்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு இன்று காலை ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. 6-வது பிளாட்பாரத்திற்கு வந்ததும் ரெயிலில் இருந்து மூட்டை மூட்டையாக ஆட்டுக்கறி பார்சல்கள் இறக்கி வைக்கப்பட்டன.

    சுகாதாரமின்றி, முறையாக பதப்படுத்தப்படாமல் இந்த ஆட்டுக்கறி கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகளும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் ரெயில் நிலையத்துக்கு சென்று ஆட்டுக்கறி பார்சல்களை பிரித்து சோதனை செய்து பார்த்தனர்.

    அப்போது தரமற்ற முறையில் ஆட்டுக்கறி இருந்ததை கண்டுபிடித்தனர். இதனால் 2 ஆயிரம் கிலோ ஆட்டுக்கறியையும் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

    பார்சல் மூலம் புக்கிங் செய்யப்பட்டு இவை கொண்டு வரப்பட்டவை என்பதால் இதை பெற்றுச் செல்ல உள்ள உரிமையாளரை தொடர்பு கொண்டும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    சைதாப்பேட்டை பகுதியில் வீட்டில் வைத்து தரமற்ற மாட்டிறைச்சி வெட்டப்பட்டு பல்வேறு கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

    இதையடுத்து சைதாப்பேட்டை நெருப்புமேடு பகுதியில் இளங்காளி என்பவரது வீட்டில் இன்று காலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சதா சிவம், முத்துகிருஷ்ணன், மணிமாறன், ஜெபராஜ் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய அனுமதி இல்லாமல் மாடு மற்றும் கன்று வெட்டப்பட்டு வருவது தெரியவந்தது.

    அங்கிருந்த தரமற்ற சுமார் 500 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பதப்படுத்த பயன்படும் ஐஸ் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. #tamilnews
    வாசுதேவநல்லூர் டவுண் பஞ்சாயத்து பகுதிகளில் அனுமதியின்றி தண்ணீர் பிடிக்க பயன்படுத்திய 38 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் டவுண் பஞ்சாயத்து பகுதிகளில் வீட்டு தண்ணீர் இணைப்புகளில் மின்மோட்டார் மூலம் குடிநீரினை உறிஞ்சுவதாகவும் இதனால் மின்மோட்டார் இணைப்பு இல்லாதவர்களுக்கு தண்ணீர் சப்ளை சரியாக கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் மாநில, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பினர்.

    இதையடுத்து பேரூராட்சிளின் இயக்குநர் பழனிச்சாமி, கலெக்டர் ஷில்பா, பேரூராட்சிகளின் இணை இயக்குநர் மாஹின் அபூபக்கர் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் வாசுதேவநல்லூர் பகுதிகளில் மின்மோட்டார் மூலம் குடிநீரினை உறிஞ்சும் குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து மின் மோட்டாரை பறிமுதல் செய்ய ஆய்வுப்பணி நடந்தது.

    பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் லெனின், கண்மணி, வெங்கடகோபு, கலாராணி, முரளி, ஆதம், அப்துல்கலாம் ஆசாத் மற்றும் தலா 5 பேர்கள் வீதம் குடிநீர் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் உள்ள 2,3,11,14,15 ஆகிய வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    இதில் 38 வீடுகளில் தண்ணீரை உறிஞ்சும் மோட்டார்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வருங்காலங்களில் மின்மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்ணீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும் என எச்சரித்தனர். #tamilnews
    ×