என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா"

    • இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
    • ஹனி டிராப் வலையில் வீழ்த்த முயற்சி செய்யப்பட்டதாக கூறினார்.

    அழகான பெண்களை பேச வைத்து படுக்கையில் நெருக்கமாக இருக்க வைத்து பின்னர் அதனை வீடியோ, புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிப்பது ஹனி டிராப் என அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் தனக்கு எதிராக ஹனி டிராப் வலை வீசப்பட்டு தோல்வி அடைந்தாக அம்மாநில அமைச்சர் கே.என். ராஜண்ணா தெரிவித்துள்ளார்.

    இதேபோல் கர்நாடக மாநிலத்தில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஹனி டிராப் மோசடிக்கு இலக்காகி இருப்பதாக அம்மாநில கூட்டுறவத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அமைச்சர் குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    கர்நாட மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னல், கூட்டுறவுத் துறை அமைச்சரை ஹனி டிராப் வலையில் வீழ்த்த முயற்சி செய்யப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இது குறித்து பேசிய அமைச்சர் ராஜண்ணா, "பலர் கர்நாடகா சிடி மற்றும் பென் டிரைவ் ஆலையாக மாறிவிட்டதாக கூறுகின்றனர். இது மிகமுக்கிய பிரச்சனை. தும்குருவை சேர்ந்த அமைச்சர் ஹனி டிராப்பில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தும்குருவை சேர்ந்தவர்கள் நானும், பரமேஷ்வராவும் தான். இது தொடர்பாக நான் குற்றச்சாட்டு சமர்பிக்க இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்," என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், ஹனி டிராப் விவகாரத்தில் கிட்டத்தட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 48 பேர் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமின்றி தேசிய அளவில் நீள்கிறது. நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இதில் சிக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தான் இங்கு விளக்கம் அளிக்க முடியாது என்றும் உள்துறை அமைச்சருக்கு இது தொடர்பாக தான் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் யார் யார் என்பது வெளிவரட்டும். பொதுமக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    • தற்போது முதல்வர் ரூ. 75 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். 1.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட இருக்கிறது.
    • பென்சன் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது.

    கர்நாடகாவில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி-க்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் சம்பளத்தை 100 சதவீதம் உயர்த்த சித்தராமையா தலைமையிலான அரசு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பான சட்டத்திருத்த மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    சம்பள உயர்வை கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஜி. பரமேஷ்வரா நியாயப்படுத்தியுள்ளார். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்களின் செலவினம் அதிகரித்து கொண்டே செல்கிறது. சாதாரண மனிதர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ.-க்களும் கஷ்டப்படுகிறார்கள். எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் மற்றவர்களிடம் இருந்து பரிந்துரை வந்தது. அதனால் முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளார். எல்லோரும் உயிர்வாழ வேண்டும்" என்றார்.

    தற்போது முதல்வர் ரூ. 75 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். இனிமேல் 1.5 லட்சம் ரூபாய் பெறுவார். அமைச்சர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது. எம்.எல்.ஏ.-க்கள், எம்.எல்.சி.-க்கள் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். இனிமேல் 80 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள்.

    பென்சன் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது.

    விமானம் அல்லது ரெயில் டிக்கெட் அலவன்ஸ் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது. இதுபோக சொந்த தொகுதிகளில் பயணம் மேற்கொள்ள 60 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவ அலவன்ஸ், டெலிபோன் கட்டணம், தபால் கட்டணம் அலவன்ஸ் 85 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.10 லட்சமாக உயர்த்தப்பட இருக்கிறது. சபாநாயகர் மற்றும் சட்ட மேலவைத் தலைவர் சம்பளம் 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

    • நடுரோட்டில் கொலையை பார்த்த உள்ளூர் மக்கள் பீதியடைந்தனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கர்நாடகாவில் நடுரோட்டில் ஒருவரை கொலை செய்வது போல ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கலபுர்கி மாவட்டத்தில் நடுரோட்டில் ரத்தம் போன்ற திரவத்தை கொட்டி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்வது போல இருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதனை பார்த்த உள்ளூர் மக்கள் பீதியடைந்தனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தகளில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்.
    • இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என பாஜக தெரிவித்துள்ளது.

    கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதற்கு எதிராக அனைத்து விதமான வகையில் போராடுவோம். இந்த முடிவை திரும்பப்பெறும் வகையில் நீதிமன்றத்தில் கூட முறையீடு செய்வோம் என பாஜக தெரிவித்துள்ளது.

    4 சதவீத ஒதுக்கீட்டிற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தத்திலும், ஒரு கோடி ரூபாய் வரையில் goods/services ஒப்பந்தங்களிலும் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் வழங்க சட்டதிருத்தம் கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இது அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கை. சித்தராமையா அரசு உடனடியாக இதை திரும்பப் பெற வேண்டும். இது அரசியமைப்புக்கு எதிரான துரதிருஷ்டவசமானது என பாஜக எம்.பி. தேஜஷ்வி சூர்யா பாஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், நாட்டிலேயே முதல் முறையாக, மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகக் கூறும் ஒரு அரசாங்கம், மாநிலத்தில் மத மாற்றத்தை ஊக்குவிக்கிறது என்றார்.

    • கர்நாடகாவில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது.
    • இதில் பெண்ணின் ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த பெண் ஒருவர் தனது ஹால் டிக்கெட்டை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் இடம்பெற்றுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.


    ஹால் டிக்கெட்

    இதனை அறிந்த அக்கல்லூரி முதல்வர் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார். மேலும், இது குறித்து தேர்வு குழுவினர் விசாரித்த போது அந்த பெண் சிக்கமகளூருவை சேர்ந்தவர் என்றும், ஷிமோகாவில் தேர்வு மையம் இருந்ததால் தனது கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததில் அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில், தவறுதலாக சன்னி லியோன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஹால் டிக்கெட் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • தண்ணீர் தொட்டி மாட்டு மூத்திரத்தால் சுத்தம் செய்யப்பட்டதாக தகவல்.
    • தலித் பெண்ணை அடையாளம் காண உள்ளூர் நிர்வாகம் முயற்சி.

    சாமராஜநகர்:

    கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த தலித் பெண் ஒருவர், உயர் சாதியினர் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குழாயை பயன்படுத்தி தண்ணீர் குடித்தார். இதை கண்ட அங்கிருந்த சிலர் அந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விட்டு மாட்டு மூத்திரத்தால் சுத்திகரித்ததாக கூறப்படுகிறது.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உள்ளூர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தண்ணீர் தொட்டி மாட்டு மூத்திரத்தால் சுத்தம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அந்த பகுதி வட்டாட்சியர் பஸ்வராஜ் கூறியுள்ளார்.

    தண்ணீர் தொட்டியில் அந்த பெண் தண்ணீர் குடிப்பதை யாரும் பார்க்கவில்லை, இதுவரை அவர் யார் என்பது தெரியவில்லை, நாங்கள் அவளை அடையாளம் காண முயற்சிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பெண் கண்டு பிடிக்கப்பட்டவுடன் தீண்டாமை குறித்த வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதனிடையே அந்த கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளில் அனைவரும் தண்ணீர் குடிக்கலாம் என்று கிராம  ஊழியர்கள் எழுதி வைத்தனர்.  மேலும் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிராம மக்களை அங்குள்ள அனைத்து தொட்டிகளுக்கும் அழைத்துச் சென்ற உள்ளூர் அதிகாரிகள் சிலர் தண்ணீர் குடிக்க வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    • இந்த வழக்கில் பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
    • தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக கூறி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்ஷப்பா, கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு மூலப்பொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை தனி நபர் ஒருவர் கோரி உள்ளார். ஒப்பந்தம் வழங்க கமிஷன் வழங்க வேண்டும் என்று அந்த தனி நபரிடம் எம்எல்ஏவின் மகன் பிரசாந்த் மதல் பேரம் பேசியுள்ளார். அதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டதையடுத்து, ரூ.81 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளது.

    அதில், ரூ.40 லட்சத்தை முன்பணமாக கொடுப்பதாக பிரசாந்த் மதலிடம் அந்த தனி நபர் தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் பணத்தைக் கொடுக்கும்போது மறைந்திருந்த லோக்ஆயுக்தா லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பிரசாந்த் மதலை கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும், அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்திய லோக்ஆயுக்தா போலீசார், அங்கு கணக்கில் வராத ரூ.8 கோடி பணத்தை கைப்பற்றி உள்ளனர். மேலும், பிரசாந்த் மதலை கைது செய்ததுடன், எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக எம்எல்ஏவின் மகன் லஞ்ச வழக்கில் சிக்கிய விவவாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏவை போலீசார் தேடுவதை அறிந்ததும், அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதற்கிடையே தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது குடும்பத்தினருக்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தன் மீது குற்றச்சாட்டு இருப்பதால், தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக கூறி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    • சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா இன்று சென்றார்.
    • சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் எடியூரப்பாவின் காரை சூழ்ந்துகொண்டு கெரோ செய்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தில் பாஜக-வில் உள்கட்சி மோதல் வலுத்து வருகிறது. கர்நாடகாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் மகனை தனது பாரம்பரிய சிக்காரிபுரா தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்தார். ஆனால் கட்சி தலைமை ஒப்புதல் வழங்காத நிலையில் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா இன்று சென்றார்.  விஜய் சங்கல்ப யாத்திரைக்கு தலைமை தாங்க சென்ற அவரது காரை சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு கெரோ செய்தனர். இதனால் அப்செட் ஆன எடியூரப்பா தனது பிரசார பயணத்தை ரத்து செய்து, திரும்பிச் சென்றார். இதன்மூலம் பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், விஜய் சங்கல்ப் யாத்திரையில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா அந்த இடத்தை விட்டு வெளியேறியதையும், அந்த இடத்தில் இருந்த சி.டி.ரவி தனது ஆதரவாளர்களுடன் வேறு திசையில் நடந்து செல்வதையும் காண முடிகிறது.

    • சொகுசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது.
    • இதில்14 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    சத்தியமங்கலம்:

    ஊட்டியில் இருந்து நேற்று இரவு கர்நாடக மாநில தனியார் சொகுசு பஸ் பெங்களூருக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் 13 பேர் பயணம் செய்தனர். பஸ்சை பெங்களூருவை சேர்ந்த ரவி (42) என்பவர் ஓட்டி சென்றார்.

    அந்த பஸ் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்துள்ள பெரிய கள்ளிப்பட்டி வழியாக சென்று கொண்டு இருந்தது.

    தொடர்ந்து அந்த பஸ் சத்தியமங்கலம்- ஊட்டி மெயின் ரோடு பெரிய கள்ளிபட்டி சோதனை சாவடி அருகே நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது,.

    அப்போது அந்த சொகுசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த பயணிகள் என்ன என்று தெரியாமல் அலறினர்.

    இதில் பஸ்சில் பயணம் செய்த டிரைவர் உள்பட 14 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதை பற்றி தகவல் அறிந்ததும் பவானி சாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    இதை தொடர்ந்து காயம் அடைந்த வர்களை ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை போலீசார் சரி செய்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாஜக எம்எல்ஏ-வின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
    • ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மடல் விருபக்ஷப்பா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் மடல் விருபக்ஷப்பா பெற்றிருந்த முன்ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி மடல் விருபக்ஷப்பாவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த நிலையில், ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மடல் விருபக்ஷப்பா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    ஒப்பந்தம் வழங்க மடல் விருபக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மடல் ரூ. 40 லட்சத்தை லஞ்சமாக வாங்கும் போது கையும் களவுமாக சிக்கினார். கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜெண்ட் லிமிடெட் (கே.எஸ்.டி.எல்.) தலைவராகவும் இருந்த வந்த மடல் விருபக்ஷப்பா மகன் லஞ்சம் வாங்கி சிக்கியதை அடுத்து, தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

    கே.எஸ்.டி.எல். நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க பாஜக சட்டமன்ற உறுப்பினர் தனது மகன் மூலம் லஞ்சம் பெற முயற்சித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 8 கோடியே 23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதி கே நடராஜன் சன்னகிரி சட்டமன்ற உறுப்பினர் விருபக்ஷப்பாவின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒப்பந்தம் வழங்க மொத்தத்தில் ரூ. 81 லட்சம் வரை லஞ்சமாக கேட்டுள்ளார். இதற்காக ரூ. 40 லட்சம் முன்பணமாக கேட்டிருக்கிறார். இதனை தனது அலுவலகத்தில் வைத்து பெறும் போதே சிக்கினார். 

    • காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
    • காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது.

    சென்னை:

    காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இது 484 டி.எம்.சி கூடுதல். நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

    சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது.

    காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடகா தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற முடியாது என திருமாவளவன் கூறினார்.
    • பல பிரிவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    மதுரை

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் டெல்லி யிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆந்திரா, தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பா.ஜனதா ஒருபோதும் வெற்றி பெறாது.

    புதுச்சேரி ஜிப்மர் மருத்து வமனை தனியாருக்கு தாரைவார்க்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல பிரிவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படு கிறது. இதை கண்டித்து நான் கருத்து தெரிவித்தால் புதுச்சேரி கவர்னர், வேறு மாநிலத்திற்குள் உள்ள பிரச்சினைக்கு எப்படி கருத்து சொல்லலாம்? என்று கேட்கிறார்.

    புதுச்சேரி மருத்துவமனை யில் புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி சிதம்பரம் தொகுதி மக்களும் சிகிச்சை பெறுகிறார்கள்.

    பிரதமர் மோடி ஒரு சினிமா ரசிகரை போல் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை ஆதரித்து கருத்து சொல்வது அதிர்ச்சி யாக உள்ளது. இந்த திரைப் படம் வெறுப்பு அரசியலை உருவாக்கும். இதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×