search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 142115"

    பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஊர்வலம் சென்று மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் மனுவை அளித்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அதிகாரிகள் அனைவருக்கும், ஒரே அரசாணை மூலம் மாவட்ட மாறுதலை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். தங்களது அலுவலகங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கணினி வழிச்சான்றிதழ்கள், இணையதள பணிகளுக்கான செலவின தொகை மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும். அடங்கல் சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரி டிஜிட்டல் கையொப்பமிட்டு வழங்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த மாதம் ( நவம்பர்) 28-ந் தேதி முதல் ஆன்லைன் சான்றிதழ் பதிவு செய்யும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா, காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நேற்று கோரிக்கை விளக்க ஊர்வலம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் புறநகர் பஸ் நிலையம், பாலக்கரை வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. அதன் பிறகு மனுவை மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் அளித்தனர்.
    ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, சென்னையில் வருகிற 5-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் நினைவு ஊர்வலம் நடத்துகிறார்கள். #Jayalalithaa #DeathAnniversary
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழக மக்களின் இதயங்களில் நிரந்தரமாக வீற்றிருக்கும் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய தினம் 5.12.2016.



    ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு, சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகே இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சி இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர், மகளிர் மற்றும் மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி,

    அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உள்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Jayalalithaa #DeathAnniversary

    சபரிமலை தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி நத்தத்தில் அய்யப்ப பக்தர்கள் ஊர்வலம் நடத்தினர். #Sabarimala

    நத்தம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழகத்திலும், கேரளாவிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்களே தீர்ப்பை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இந்துமுன்னணி மற்றும் அய்யப்ப சேவா சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. தாலுகா அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையம், மூன்றுலாந்தர், மாரியம்மன் கோவில், அவுட்டர் சாலை, கோவில்பட்டி வரை சென்றது.

    அப்போது அய்யப்பன் பஜனை பாடல்களை பாடியவாறு பக்தர்கள் சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். அவர்கள் தெரிவிக்கையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதை பெரும்பாலும் விரும்ப வில்லை.

    கோர்ட்டு உத்தர விட்டாலும் ஆகமவிதிகளின்படி வழிபாடுகள் நடக்கும் சபரிமலைக்கு 10 முதல் 50 வயதுடைய பெண்கள் செல்வது ஏற்புடையதாகாது. எனவே பக்தர்களின் மன உணர்வுகளை புரிந்து இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றனர். #Sabarimala

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுவை மாணவர் காங்கிரஸ் சார்பில் இன்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது. #Congress #PetrolPriceHike

    புதுச்சேரி:

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுவை மாணவர் காங்கிரஸ் சார்பில் இன்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

    அண்ணாசிலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் விக்கிரமாதித்தன், ரவீந்திரன், இந்திரஜித், பொதுச்செயலாளர்கள் புருஷோத், ஹரீஸ், செயலாளர்கள் கவுதம், கார்த்திக், மாவட்ட தலைவர் ஆனந்தவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     


    ஊர்வலத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி சைக்கிளில் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு வந்தனர். ஊர்வலம் நெல்லித்தோப்பு, இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, காமராஜர் சாலை, ராஜா தியேட்டர் சந்திப்பு, நேரு வீதி, மி‌ஷன் வீதி வழியாக தலைமை தபால்நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.   #Congress #PetrolPriceHike

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை யொருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர்.

    இதில் 2 பேர் படுகாயம் அடைந்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் தென்கரை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    மாமல்லபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி முதன் முதலாக சினிமா படப்பிடிப்பில் பயன் படுத்தும் 120 அடி நீள டிராலியை வைத்து சிலைகளை கரைக்க உபயோகப்படுத்தினர். #VinayagarChathurthi

    மாமல்லபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டடு நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 156 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதலே பக்தர்கள் விநாயகர் சிலைகளை கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    பின்னர் அந்த சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டது. இந்த ஆண்டு முதன் முதலாக சினிமா படப்பிடிப்பில் பயன் படுத்தும் 120 அடி நீள டிராலியை சிலைகளை கரைக்க உபயோகப்படுத்தினர். கடற்கரைக்கு கொண்டு வரும் விநாயகர் சிலைகளை டிராலியில் வைத்து தள்ளி கடலுக்குள் கொண்டு சென்று கரைத்தனர். கடந்த ஆண்டுகளில் விநாயகர் சிலைகளை கொண்டு வருபவர்கள் அதனை கரைக்க கடற்கரையில் இருந்து 200 அடி தூரத்துக்கு தூக்கிச் செல்லும் நிலை இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமப்படுவதுடன் கடலுக்குள் தவறி விழுந்து காயங்கள் ஏற்படும் நிலையும் காலதாமதமும் ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜி உத்தரவின் பேரில் சிலைகளை கடற்கரை வரை பக்தர்கள் எளிதாக கொண்டு செல்ல சினிமா ஆர்ட் டைரக்டர் ராஜா, பிரபு ஆகியோரின் மேற் பார்வையில் 14 ஊழியர்கள் பணிபுரியும் 120 அடி நீள முள்ள சினிமா படப்பிடிப்பு டிராலி முதல் முறையாக மாமல்லபுரம் கடற்கரையில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு படை நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி ஊட்டி, கோத்தகிரியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
    ஊட்டி:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் மொத்தம் 500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. ஊட்டி மற்றும் கேத்தியில் இருந்து விசுவ இந்து பரிசத் சார்பில் 54 சிலைகள் இன்றும்(சனிக்கிழமை), இந்து முன்னணி சார்பில் 45 சிலைகள் நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்படுகிறது. இதையொட்டி ஊட்டி சேரிங்கிராசில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அருகில் இருந்து போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, தம்பிதுரை, ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி உள்பட 300 போலீசார் கலந்து கொண்டனர். கொடி அணிவகுப்பு ஊர்வலமானது கமர்சியல் சாலை வழியாக காபிஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டை கடந்து பஸ் நிலையம் சென்றது. பின்னர் காந்தல் முக்கோண பகுதியில் இருந்து ரோகிணி தியேட்டர் வரை கொடி அணிவகுப்பு நடந்தது.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கூறும்போது, ஊட்டியில் இருந்து விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய காமராஜர் சாகர் அணைப்பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அசம்பாவித சம்பவம் நடைபெறுமோ? என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை. உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இதை உறுதி செய்யும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அணையில் நீர் மட்டம் உயர்ந்து இருப்பதால், மாலை 6 மணிக்குள் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்து விட வேண்டும் என்று இந்து அமைப்புகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 99 இடங்களிலும், அனுமன் சேனா சார்பில் 75 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அந்த சிலைகளை நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) உயிலட்டி நீர்வீழ்ச்சியில் விசர்ஜனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி நேற்று மதியம் 12 மணிக்கு குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கோத்தகிரி டானிங்டன் சந்திப்பில் தொடங் கிய அணிவகுப்பு ஊர்வலம் காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல், பஸ் நிலையம், ராம்சந்த் சதுக்கம் வழியாக போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். 
    புதுச்சேரியில் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து காங்கிரசார் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #congress
    புதுச்சேரி:

    மத்திய பாரதிய ஜனதா அரசு பிரெஞ்சு அரசுடன் செய்துள்ள ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடும் ஊழலும் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    ரபேல் விமான ஒப்பந்தம் ஊழலை கண்டித்தும், அதன் மீது விசாரணை நடத்தக்கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    அதுபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக புதுவையின் கிராமப்புற தொகுதிகளில் இருந்து பஸ், வேன்களில் காங்கிரஸ் தொண்டர்கள் சுதேசி மில் முன்பு ஒன்று திரண்டனர்.

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இந்த பிரமாண்ட ஊர்வலத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், புதுவை பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, சாரம், ராஜீவ்காந்தி சிலை வழியாக வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் நமச்சிவாயம், முதல் அமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஷ்னிக் ஆகியோர் பேசினார்கள்.

    ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, தனவேல்,

    முன்னாள் அமைச்சர் வல்சராஜ், பெத்தபெருமாள், மாநில துணை தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுசெயலாளர்கள் ஆறுமுகம், கருணாநிதி, தனுசு, செயலாளர்கள் சாம் ராஜ், காமராஜ்,

    சேவாதள தலைவர் சி.பி., குலசேகரன், இளைஞர் அணி தலைவர் ரமேஷ், பொதுசெயலாளர் விக்னேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாண சுந்தரம், பொதுசெயலாளர் விக்கிரமாதித்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ஊர்வலத்தில் ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ரவிசந்திரன் தலைமையில் ஐ.என்.டி.யூ.சி.யில் இணைக்கப்பட்ட சங்கத்தினர் 500 பேர் பங்கேற்றனர். #congress
    சீர்காழியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 31 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு உப்பனாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. #VinayagarChathurthi

    சீர்காழி:

    சீர்காழியில் ஆபத்துகாத்த விநாயகர், செல்விநாயகர், இரட்டைவிநாயகர்,வீரசக்கிவிநாயகர்,ருத்ரவிநாயகர், குமரகோவில் விநாயகர், மங்களவிநாயகர் உள்ளிட்ட 37இடங்களில் விநாயகர் சிலைகள் கடந்த 12-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள்,பூஜைகள் செய்யப்பட்டன. இதில் 6 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. மீதமுள்ள சிலைகள் விசர்ஜனம் செய்யும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு ஒவ்வொன்றாக பல வண்ண மலர்கள், மின் அலங்காரத்துடன் புறப்பட்டன.

    முக்கிய வீதிகளின் வழியாக 31 விநாயகர் சிலைகளும் சென்றன. வழிநெடுங்கிலும் பக்தர்கள் விநாயகருக்கு அர்ச்சனைகள் செய்து வழிப்பட்டனர். நிறைவாக சீர்காழி பழைய பேருந்துநிலையம் பகுதியில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றினைந்தன. 31விநாயகர் சிலைகளுக்கு ஒரு சேர தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் வாண வேடிக்கையுடன் ஒவ்வொரு விநாயகர் சிலைகளும் மேல மடவிளாகம், கச்சேரிசாலை, தென்பாதி வழியாக சென்று உப்பனாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் பாஜக கோட்டபொறுப்பாளர் தங்க.வரதராஜன், நிர்வாகிகள் செல்வம், குருமூர்த்தி,அருணாச்சலம், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், விஸ்வ இந்து பரிசத் பொறுப்பாளர் செந்தில் குமார், இந்து முன்னணி நிர்வாகி சி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட இந்து அமைப்பு பொறுப்பாளர்கள், விழா குழுவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சிவகாசி அருகே திருத்தங்கலில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். #RajendraBalaji #ADMK
    சிவகாசி:

    நாடு முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கலில் தேவர் உறவின் முறை சார்பாக 6-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாதார தனைகள் நடைபெற்றது. பின்னர் ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிவழியாக ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, ஜெயலலிதாபேரவை நகர செயலாளார் ரமணா, கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜவர்மன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன்.

    சிவகாசி இளைஞர் பாசறை சங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருத்தங்கல் தேவர் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விநாயகர் பக்தர் பேரவை சார்பாக 24-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு பொறுப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார். தொழிலதிபர் சீனிவாசன், துணைத்தலைவர்கள் கலைவாணன், ஆட்டோகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மாரியப்பன் ஆகியோர் வரவேற்றார்.

    ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜூவா, கேசவ ராமசந்திரன் நிர்வாகிகள் அழகேச பாண்டியன், சுரேஷ், முருகவேல், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையத்தில் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.

    மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமை தாங்கினார்.

    காவல் நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் அலங்கார யானை முன்னே செல்ல ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், டிராக்டர் ஓட்டும் விநாயகர் என பல்வேறு உருவங்கள் கொண்ட விநாயகர் சிலைகள் எடுத்து செல்லப்பட்டன. ஊர்வலம் முடிந்ததும். ஐ.என்.டி.யூ.சி.நகர் அருகே உள்ள குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. #RajendraBalaji #ADMK
    இலவசமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில முன்னாள் முப்படையினர் நலச்சங்கத்தினர் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    காலியாக உள்ள முப்படை நலத்துறை இயக்குனர் பதவியை நிரப்ப வேண்டும், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு சென்டாக் மூலம் மருத்துவக் கல்லூரியில் கல்விக்கு வழங்கப்படும் ஒரு சதவீதத்தை 3 சதவீதமாக உயர்த்த வேண்டும், இலவசமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில முன்னாள் முப்படையினர் நலச்சங்கத்தினர் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கடலூர் சாலை மறைமலையடி சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு சங்கத் தலைவர் இளஞ்சேரலாதன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் சாந்துராஜன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் முன்னாள் ராணுவவீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தனர். #tamilnews
    கருணாநிதி சமாதியில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். #DMK #Kanimozhi #Karunanidhi #memorial
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையோரம் அண்ணா நினைவிடம் அருகே உள்ள கருணாநிதி சமாதியில் ஏராளமானோர் தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகில் இருந்து தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில், கிழக்கு மாவட்ட மகளிரணியினர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று மாலை ஊர்வலமாக புறப்பட்டனர். கருணாநிதியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஊர்வலத்துக்கு முன்னதாக சென்றது. அதைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி. தலைமையில், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ., மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கருணாநிதி சமாதிக்கு வந்தனர்.

    முன்னதாக, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கேயே கண்ணீர்விட்டு அழுதபடி இருந்தார். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி வந்த கனிமொழி, தன்னுடைய தாய் ராஜாத்தியம்மாளுடன் சேர்ந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, சமாதியை சுற்றி வந்தார்.

    அதேபோல், தி.மு.க. பார்வையற்றோர் நற்பணி மன்றத்தினர் ஊர்வலமாக வந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

    கவிஞர் வைரமுத்து மலேசியா தமிழர்களுடன் இணைந்து கருணாநிதி சமாதியில் நேற்று காலையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கருணாநிதியின் பிறந்தநாளை உலகத்தமிழர்கள் ‘கலைஞர் செம்மொழி திருநாள்’ என்று கொண்டாட வேண்டும் என்பது எங்கள் விண்ணப்பம். ‘பாரத ரத்னா’ விருதுக்கு தகுதியானவர் கருணாநிதி என்று மத்திய அரசே உணரும் என்பதே என் எண்ணம். மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக இருந்து வழிநடத்துவார் என்றார்.  
    ×