search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான்"

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தன்னை ஒருபோதும் பாகிஸ்தான் செல்லும்படி கூறவில்லை என பஞ்சாப் மந்திரி சித்து தெரிவித்துள்ளார். #Pakistan #NavjotSidhu #RahulGandhi
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் தேரா பாபா நானக் நகரையும் இணைக்கும் விதமாக சாலை அமைக்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை இதற்கான அடிக்கல் நாட்டு விழா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடந்தது. இதில் இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவும் பங்கேற்றார்.



    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய சித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் உத்தரவின் பேரில்தான் பாகிஸ்தான் சென்றதாக தெரிவித்தார். ஆனால் நேற்று இந்த விவகாரத்தில் அவர் திடீர் பல்டி அடித்தார்.

    ராகுல்காந்தி என்னை ஒருபோதும் பாகிஸ்தான் செல்லும்படி கூறவில்லை. இம்ரான்கான் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதால் பாகிஸ்தான் சென்று விழாவில் கலந்து கொண்டேன். இதை உலகமே அறியும் என்றார். மேலும், பஞ்சாப் முதல்-மந்திரியும் முன்னாள் ராணுவ கேப்டனுமான அமரீந்தர் சிங்கை மறைமுகமாக தாக்கும் விதமாக ராகுல்காந்தியை மட்டுமே கேப்டனாக கருதுகிறேன் என்றும் குறிப்பிட்டார்.

    இதுபற்றி கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநிலத்தின் மற்றொரு மந்திரியான ரஜீந்தர் சிங் கூறும்போது, அமரீந்தர் சிங்கை கேப்டனாக சித்து கருதவில்லை என்றால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலகவேண்டும் என்றார்.  #Pakistan #NavjotSidhu #RahulGandhi 
    பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை வேடம் போட்டு வருவதால் பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய சுமார் ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது. #America #Pakistan
    வாஷிங்டன்:

    பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் தாயகமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. ஹக்கானி குழுக்கள், தலீபான், லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தங்கள் புகலிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக கோடிக்கணக்கில் ராணுவ நிதியுதவியும் அந்த நாடு வழங்கி வருகிறது.

    ஆனால் இந்த நிதியை பெற்றுக்கொள்ளும் பாகிஸ்தான், பயங்கரவாத ஒழிப்பில் பாராமுகம் காட்டி வருகிறது. அந்த மண்ணில் இருந்து கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாத தாக்குதல்களில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

    இது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் கோபத்தை காட்டி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த சூழலில்தான் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஆப்கானிஸ்தானுக்கான தனது புதிய கொள்கையை வெளியிட்டார். இதில் பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலையை எடுத்துவரும் பாகிஸ்தானுக்கு அவர் கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், அந்த நாட்டுக்கு வழங்கி வரும் நிதியுதவியை ரத்து செய்யவும் முடிவு செய்தார்.

    இந்த விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானை கடுமையாக தாக்கிய அவர், ‘பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கோடிக்கணக்கில் நிதியுதவி செய்து வருகிறது, ஆனால் அந்த நாடு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனவே அவர்களுக்கு வழங்கப்படும் 1.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரத்து 100 கோடி) நிதியுதவி நிறுத்தப்படும்’ என்று ஆவேசமாக கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள 20 பில்லியன் டாலர் அற்பமானது. ஆனால் அந்த நாட்டுடன் இணைந்து நாங்கள் மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு போரில் 75 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். 123 பில்லியன் டாலரை நாங்கள் செலவழித்து இருக்கிறோம். இது தொடர்பான வரலாற்று உண்மைகளை டிரம்ப் அறிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    இவ்வாறு இரு தலைவர்களுக்கு இடையே வார்த்தை மோதல் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.21 ஆயிரம் கோடி) நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த தொகை பல்வேறு நிதியாண்டுகளில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய மொத்த தொகை என தெரிகிறது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என தெரிகிறது. முன்னதாக, பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தினாலும் அந்த நாட்டுடன் நல்ல உறவை நீடிக்கவே அமெரிக்கா விரும்புவதாக டிரம்ப் கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது. 
    பாகிஸ்தான் நாட்டில் லாகூர் நகரின் அருகே உயிர் காக்கும் அரசு ஆம்புலன்ஸ் வாகனத்துக்குள் வைத்து 15 வயது சீக்கிய சிறுமியை இருவர் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #SikhGirl #Ambulance
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள நன்கானா சாகிப் பகுதியில் உள்ள குருத்வாரா அருகே 15 வயதுடைய சீக்கிய சிறுமி கடந்த சனிக்கிழமை மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் அவரை தேடும் பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது நன்கானா பைபாஸ் சாலையில் நின்றிருந்த அரசு ஆம்புலன்சிலிருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டனர்.



    இதையடுத்து ஆம்புலன்ஸ் அருகே சென்றபோது, அதிலிருந்த 2 பேர் ஒரு பெண்ணை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
    கீழே விழுந்த பெண் தனது மகள் என்பதை அறிந்து அவர்கள் கதறினர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஹசன் அலி, சமீன் ஹைதர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Pakistan #SikhGirl #Ambulance
    பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்ப தடை விதித்து, தலைமை நீதிபதி சாஹிப் நிஷார் தீர்ப்பு வழங்கினார். #India #Pakistan #TVChannel
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு மக்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.

    இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஒளிபரப்பப்படுவதை தடை செய்யக்கோரி அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து, பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்ப தடை விதித்து, தலைமை நீதிபதி சாஹிப் நிஷார் தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது நீதிபதி சாஹிப் நிஷார், “இந்தியா பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டத்தை சுருக்கிவிட்டபோது, நாம் ஏன் அவர்களுடைய சேனல்களுக்கு தடை விதிக்கக்கூடாது” என கேள்வி எழுப்பினார்.

    முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலிகளில் இந்திய தொடர்கள் இடம்பெற தடை விதிக்கப்பட்டதும் பின்னர் 2017-ம் ஆண்டு லாகூர் ஐகோர்ட்டு அந்த தடையை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. 
    பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பதவி வகிப்பவர், டேவிட் ஹேலே. இவரை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திடீரென முடிவு எடுத்து உள்ளார். #DonaldTrump #DavidHale
    வாஷிங்டன்:

    டேவிட் ஹேலேவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையில் கீழ்நிலை செயலாளர் பதவி வழங்க அவர் தீர்மானித்து இருக்கிறார். அமெரிக்காவில் வெளியுறவுத்துறையில், துறைக்கான மந்திரி, செயலாளர் பதவிக்கு அடுத்த மூன்றாவது உயர் பதவி இந்தப் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் பதவியில் இருந்து வந்த தாமஸ் ஷானோன் கடந்த மாதம் 4-ந் தேதி ஓய்வு பெற்று விட்டதை அடுத்து உருவாகி உள்ள காலி இடத்தை நிரப்புவதற்கு டேவிட் ஹேலே வருகிறார்.

    டேவிட் ஹேலே, வெளியுறவுத்துறையில் கீழ்நிலை செயலாளர் பதவி ஏற்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல்சபையான செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும்.

    இவர் 2015-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் அமெரிக்க தூதர் பதவி வகித்து வருகிறார். இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்கு இவர் தனது ஆதரவை தெரிவித்து வந்தார். இவர் லெபனான் நாட்டிலும் அமெரிக்க தூதர் பதவி வகித்து இருக்கிறார்.  #DonaldTrump #DavidHale #Tamilnews 
    ×