என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை நீர் தேக்கம்"

    • நல்ல தண்ணீர் பிடித்து வைக்கும் சிறு, சிறு பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும்.
    • குளிர்சாதனப் பெட்டிக ளின் பின்புறம் உள்ள டப்பாவில் தண்ணீர் சேர விடக்கூடாது.

    கடலூர்:

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொட ர்பாக கடலூர் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதா வது:- கடலூர் மாநகராட்சி நிர்வாகத்தால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஈடிஸ் கொசுக்கள் மழை தண்ணீர், நல்ல தண்ணீரில் மட்டுமே முட்டை இடும். இந்த ஈடிஸ் கொசுக்கள் கருப்பு வெள்ளை கலரில் இருக்கும். பொதுமக்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டி களை மூடி வைக்க வேண்டும். நல்ல தண்ணீர் பிடித்து வைக்கும் சிறு, சிறு பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும். மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் டேங்கு களை மூடி வைக்க வேண்டும். வீட்டில் பூந்தொட்டிகள் வைத்திரு ந்தால், அவைகளில் அதிக மாக தண்ணீர் ஊற்றி, தண்ணீர் தேங்கும் அளவுக்கு வைக்கக் கூடாது. படிக்கட்டுகளின் கீழ், மொட்டை மாடிகள் மற்றும் வீட்டின் அருகில் தேவையில்லாத பெயிண்ட் டப்பா, சிரட்டை, பிளாஸ்டிக் பாட்டில்கள், சாப்பாடு பார்சல் வாங்கி வந்த பிளாஸ்டிக் அட்டை பெட்டிகள், பழைய ஷூக்கள், உடைந்த ஹெல்மெட்டுகள் போன்ற உபயோகமற்ற அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்ப டுத்த வேண்டும்.

    வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிக ளின் பின்புறம் உள்ள டப்பாவில் தண்ணீர் சேர விடக்கூடாது. வீட்டின் பின்புறம் உள்ள பகுதி களில் ஆட்டு உர ல்களை போட்டு வைக்கக் கூடாது. மழை நீர் தேங்கும் வண்ணம் எந்த பொரு ளையும் போட்டு வைக்கக் கூடாது. குறிப்பாக வீட்டில் தூங்கும்போது கொசுக்கள் கடிக்காத வண்ணம் கொசு வலைகளை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு முழுக் கை சட்டை, முழுக் கால் பேண்ட் போட வேண்டும். மேலும், யாருக்கேனும் 2, 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் வந்தால், கண்டிப்பாக அரசு பொது மருத்து வமனைக்கு சென்று, டாக்டர் ஆலோச னைப்படி மருந்துகள் எடுத்து க்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • ஏரிகளில் அதிக அளவு ஆழத்திற்கு மண் எடுத்து லாரியில் கொண்டு செல்லப்படுகிறது.
    • மழை தண்ணீர் தேங்கி கால்நடைகள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்ட தமிழ் நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன் தஞ்சை கனிம வள உதவி இயக்குநர் மற்றும் தஞ்சை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    செங்கிப்பட்டி பகுதியில் செங்கிப்பட்டி ஆச்சாம்பட்டி, உசிலம்பட்டி, துருசுப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஏரிகளில் விதிகளை மீறி அதிக அளவு ஆழத்திற்கு மண் எடுத்து லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் குறைந்த பரப்பிற்கு அனுமதி பெறப்பட்டு பல ஏக்கர் பரப்பில் மண் எடுத்து வருகின்றனர்.

    சில இடங்களில் அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல அதிக ஆழத்தில் மண் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பருவமழை காலங்களில் இதில் மழை தண்ணீர் தேங்கி கால்நடைகள் மற்றும் மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் வளர்ச்சி பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    • மழை நீரை அகற்றுவதற்கு கூடுதலாக ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில், செயல் அலுவலர் வெற்றியரசு, துணைத்தலைவர் அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் வளர்ச்சி பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், பருவமழை தொடங்குவதற்கு முன்பு தண்ணீர் தேங்கும் தெருக்களை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி நோய்கள் அதிகமாக பரவுவதற்கு வழிவகை உள்ளதாகவும், மழை நீரை அகற்றுவதற்கு கூடுதலாக ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

    திருவாரூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததால் மழைநீர் தேங்கி நின்றது. இதை கடந்து செல்ல முடியாமல் பெண்களும், குழந்தைகளும் அவதிப்பட்டனர்.

    திருவாரூர்:

    டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பெய்து வரும் கனமழையால் அவதிப்பட்டு வருகிறார்கள். புயலால் வீடுகளை இழந்த மக்கள் , வீட்டு சுவரும் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பரிதவிப்பில் உள்ளனர்.

    கடந்த 21-ந் தேதி பெய்த மழையில் பட்டுக்கோட்டை சிவகொல்லையில் வீட்டு சுவர் இடிந்து 4 பேர் பலியானார்கள். இதனால் சேதமான வீட்டு சுவரால் வீட்டில் தங்க முடியாமல் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவாரூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.

    இந்த மழையால் திருவாரூர் நகராட்சி 30-வது வார்டு பகுதியான சாப்பாவூரில் குளம்போல் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ள மழைநீரை கடந்து செல்ல முடியாமல் பெண்களும், குழந்தைகளும் அவதிப்பட்டனர்.

    திருவாரூருக்கு வர வேண்டும் என்றால் தியானபுரம், விளமல் வழி யாக சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டும். இதனால் சாப்பாவூர் கிராம மக்கள், தங்களது பகுதியில் ஏணி வைத்து இறங்கி மழை தண்ணீரில் நடந்து செல்கிறார்கள்.

    திருவாரூர்- தஞ்சை ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பெய்த மழையால் எங்களது குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

    இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது மாற்று ஏற்பாடாக ஏணி வைத்து அதில் இறங்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் குளம் போல் உள்ள தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×