என் மலர்
நீங்கள் தேடியது "காசா"
- கடந்த வாரம் காசாவின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
- 'போரை நிறுத்து', 'போரை முடிவுக்குக் கொண்டு வா', 'நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை', 'எங்கள் குழந்தைகளின் இரத்தம் மலிவானது அல்ல'
கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர்.
இரத்னனைதொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஐநா தெரிவிக்கிறது. காசா நகரம் முற்றாக சிதைக்கப்பட்டு கட்டடங்கள் கற்கலாக மட்டுமே மிஞ்சின. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

இதற்கிடையில் கடந்த ஜனவரியில் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது. இதன்மூலம் இஸ்ரேலிய பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. ஆனால் கடந்த மார்ச் 1 ஆம் தேதி போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இன்னும் 59 பணய கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளனர். அவர்களில் 24 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. காசாவின் கிட்டத்தட்ட 2 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியது.
மேலும் கடந்த வாரம் முதல் இஸ்ரேல் மீண்டும் காசா மீது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் காசாவின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 600 பேர் கொல்லப்பட்டனர். காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 50,000 த்தை கடந்துள்ளது.
இந்நிலையில் போரை நிறுத்த கோரி வடக்கு காசாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லஹியாவில் சேதமடைந்த கட்டுமானங்களுக்கிடையே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்
'போரை நிறுத்து', 'போரை முடிவுக்குக் கொண்டு வா', 'நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை', 'எங்கள் குழந்தைகளின் இரத்தம் மலிவானது அல்ல' போன்ற முழக்கங்களை மக்கள் எழுப்பினர். "ஹமாஸே வெளியேறு!" என்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். ஹமாஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைப்பதை வீடியோக்களில் காண முடிகிறது.
போராட்டத்தில் சேருமாறு டெலிகிராம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 முதல் ஹமாஸ் காசாவை நிர்வகித்து வருகிறது. காசா மக்களை பாதுகாக்க ஹமாஸ் விரும்பினால் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.
நினைத்த இடத்தில் குண்டுகளை வீசி நூற்றுக்கணக்கானோரை கொன்றுவிட்டு, ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் சாக்கு சொல்லி வரும் வேளையில் இந்த போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. போர் மற்றும் பட்டினியால் விரக்தியின் உச்சத்தில் உள்ள காசா மக்களுக்கு விடிவுகாலம் எப்போது பிறக்கும் என்பதே சர்வதேச சமூகத்தில் கேள்வியாக உள்ளது.
- காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது.
காசா பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று நடந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 65 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இது அதற்கு முந்தைய தாக்குதலில் பதிவான உயிரிழப்புகளை விட அதிகம் ஆகும். இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் தினமும் உயிரிழந்து வருவதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்தும் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் கடந்த ஒருவார காலத்திற்குள் காசா பகுதிகளில் வசித்து வந்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த 17 மாதங்களில் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
தொடர் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரு்ம நிலையில், மீண்டும் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு எகிப்து யோசனை வழங்கியுள்ளது. அதன்படி அமெரிக்க-இஸ்ரேல் குடியுரிமை கொண்டவர் உள்பட ஐந்து பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் காசா பகுதிக்குள் இஸ்ரேல் மனிதாபிமான உதவிகளை அனுமதித்து, ஒருவார காலத்திற்கு போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என்று எகிப்து அதிகாரி தெரிவித்தார்.
இதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய பணயக்கைதிகள் விடுவிக்க வேண்டும். இந்த யோசனைக்கு சாதகமான பதில் அளித்துள்ளதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும், காசாவில் உள்ள ரெட் கிராஸ் அலுவலகத்தில் தவறுதலாக தாக்குதல் நடத்திவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
- ஹமாஸ் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
- இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் கடும் முயற்சி மேற்கொண்டன. இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அப்போது காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன்படி ஏழு வாரங்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. போர் நிறுத்தம் முடிவடைந்த பிறகு மேலும் போர் இடைநிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 7 வார போர் நிறுத்தம் முடிவடைந்த பின்னர், தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. மனிதாபிமான உதவிகள் செல்ல தடைவிதித்தது.
இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை எகிப்து வழங்கியது. எகிப்து தனது பரிந்துரையில், "ஹமாஸ் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதில் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் அடங்குவார். அதற்குப் பதிலாக இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும். சில வாரங்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இஸ்ரேல் சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்" குறிப்படப்பட்டுள்ளது.
இந்த போர் நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இதுவர 50,082 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,13,408 பேர் காயம் அடைந்துள்ளனர்.
- சுகாதார துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
- ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காசாவில் அமைந்துள்ள மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர்- ஹமாஸ் அமைப்பின் தலைவர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனை ஹமாஸ் அமைப்பு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
ஹமாஸ் அரசியல் அமைப்பை சேர்ந்த இஸ்மாயில் பர்ஹோம் நாசர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆக்கிரமிப்பின் நீண்டகால பயங்கரவாதத்தை தொடரும் வகையில் உயிர்கள் மற்றும் மருத்துவ வசதிகளை அழிக்கும் இந்த குற்ற செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளை புறக்கணித்து, மக்கள் மற்றும் தலைமைக்கு எதிராக திட்டமிட்ட படுகொலை செய்யும் தொடர்ச்சியான கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது," என தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல்களில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது.
- பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
கடந்த 5 நாட்களில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், லெபனானில் மீதும் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்ததாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது. மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 113,000 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் எத்தனை பேர் ஹமாஸ் அமைப்பினர், எத்தனை பேர் பொதுமக்கள் என அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.


காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனின் ஹவுதிகள் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளைத் ஏவி தாக்கி வருகின்றனர்.
இதில் ஈரானின் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாவினர் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஏவி வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பும் ஏவுகணை தாக்குதலைகளை தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின்படி பணய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. ஆனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் காசாவில் நிலவிய தற்காலிக அமைதி தற்போது வெடிகுண்டுகளால் மீண்டும் முற்றாக சீர்குலைந்து வருகிறது.


கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பக்கம் 1200 பேர் வரை உயிரிழந்தனர். அதற்கு விலையாக காசாவில் தற்போது 50,021 உயிர்களை இஸ்ரேல் குடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றே தற்போதைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

- ஏமனில் இருந்தபடி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
- ஹவுதிக்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
தெற்கத்திய காசா எல்லையில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 19 பேர் உயிரிழந்தனர் என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர் ஏமனில் இருந்தபடி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
ஹவுதிக்கள் ஏவிய ஏவுகணையை இடைநிறுத்தம் செய்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. தெற்கத்திய காசா பகுதிகளில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பிறகு 17 உடல்கள் கிடைக்கப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என ஐரோப்பிய மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இதேபோல் மற்றொரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றொரு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொரு தாக்குதலில் உயிரிழந்த பெண் மற்றும் குழந்தையின் உடல் தங்களுக்கு கிடைக்கப் பெற்றதாக குவைத் மருத்துவமனை தெரிவித்தது.
இதேபோல் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான சலா அல்-பர்தவீல் மற்றும் அவரது மனைவி தாக்குதல்களில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஹமாஸ் உடனான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் கடந்த வாரம் முடிவுக்கு கொண்டு வந்து, திடீரென கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹவுதிக்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு.
தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்து அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே செய்தியை ஹமாஸ் ஆதரவு ஊடகங்களும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, போரின் முக்கிய நோக்கம் ஹமாஸ் அமைப்பின் ராணுவ அமைப்பை அழிப்பது தான் என்று பலமுறை கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, தெற்கு காசாவில் ஹமாஸின் ராணுவ உளவுத்துறை தலைவரை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
- இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
- இஸ்ரேல் படைகள் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
டெய்ர் அல் பலாஹ்:
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் படைகள் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
மறுபுறம் ஏமனைச் சேர்ந்த ஹவுதிகளும் இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களால் இஸ்ரேல் - காசா பகுதிகளில் மீண்டும் உறுதியற்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், காசா குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது என காசா சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் நள்ளிரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
- தாக்குதல்களால் இஸ்ரேல் - காசா பகுதிகளில் மீண்டும் உறுதியற்ற சூழல் நிலவுகிறது.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் படைகள், வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. மறுப்பக்கம் ஏமனை சேர்ந்த ஹவுதிக்களும் இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களால் இஸ்ரேல் - காசா பகுதிகளில் மீண்டும் உறுதியற்ற சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், காசா குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 58 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அங்குள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் நள்ளிரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது. காசா சுகாதார அமைச்சகத்தின்படி, செவ்வாய்க்கிழமை மட்டும் 400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
ஹமாஸ் ராக்கெட்டுகளை வீசியதாகவோ அல்லது பிற தாக்குதல்களை நடத்தியதாகவோ எந்த அறிக்கையும் இல்லை. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நடந்த தாக்குதல்களில் ஒன்று, இஸ்ரேலின் எல்லைக்கு அருகிலுள்ள அபாசன் அல்-கபிராவில் வசித்து வந்த அபு டாக்கா குடும்பத்தின் வீட்டைத் தாக்கியது.
இந்த தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இதனை அந்த பகுதியின் அருகில் இயங்கி வரும் ஐரோப்பிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.
- இஸ்ரேலின் போரை கண்டித்து சில மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
- பதர் கான் சூரியை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து சில மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளித்த இந்திய மாணவியின் விசா சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தாமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் ஹமாஸ் ஆதரவு குற்றச்சாட்டில் அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த பதர் கான் சூரி அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். அவர் பல்கலைக் கழகத்தின் எட்மண்ட் ஏ. வால்ஷ் வெளிநாட்டு சேவைப் பள்ளியில் உள்ள அல்வலீத் பின் தலால் மையத்தில் முஸ்லிம்-கிறிஸ்தவ புரிதலுக்கான முதுகலை பட்டதாரி ஆவார்.
இதற்கிடையே ஹமாஸ் ஆதரவு பிரசாரத்தை பரப்பியதாக பதர் கான் சூரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவருடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து வர்ஜீனியாவில் உள்ள வீட்டில் இருந்த அவரை குடியேற்ற அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. பதர் கான் சூரியை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் உதவிச் செயலாளர் டிரிசியா மெக் லாப்லின் கூறும்போது, பதர் கான் சூரி ஹமாஸ் பிரசாரத்தை சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரப்பி யூத எதிர்ப்புவாதத்தை ஊக்குவித்தார் என்றார்.
அமெரிக்க பெண்ணை மணந்துள்ள பதர் கான் சூரி, கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும், தனது மனைவியின் பாலஸ்தீன பூர்வீகம் காரணமாக தான் குறி வைக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.
- இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படுவது முக்கியம் என தெரிவித்தது.
புதுடெல்லி:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிவடைந்த நிலையில், காசா மீது நேற்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும், பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்னும் 59 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ளது.
இந்நிலையில், காசா நிலவரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், காசாவின் நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படுவது முக்கியம். காசாவில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
- இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
- 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் நேற்று காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இந்நிலையில் இந்த தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
"கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் எங்கள் கையின் வலிமையை ஏற்கனவே உணர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக அதிக பலத்துடன் செயல்படும். இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையின்படி இஸ்ரேலிய பிணையக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் போர் நிறுத்தம் முடிந்ததும் மேற்கொண்டு அமைதி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
இந்த நிலையில்தான் இஸ்ரேலின் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. "ஹமாஸ் எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்க பலமுறை மறுத்ததைத் தொடர்ந்து" இந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது.
இன்னும் 59 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ளது. இந்நிலையில் தற்போதைய காசா தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹமாஸ், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிரந்தர தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் தடுக்கிறது. இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவை அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளது.

மேலும் மற்றோரு அறிக்கையில், அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய முயற்சியில் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறியடிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. வன்முறையை மீண்டும் தொடங்கினால் மீதமுள்ள உயிருள்ள பணயக்கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்க நேரிடும் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே 400 பேரை கொன்ற இந்த தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பு இஸ்ரேல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், மீண்டும் போர் தொடங்குவதற்கு ஹமாஸ் முழுப் பொறுப்பையும் ஏற்கிறது என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.