search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைக்காலம்"

    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் சாந்தா பேசினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;-

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் டெங்கு நோய் பாதிப்பு உள்ளது என்ற தகவல் கிடைத்தால் உடனடியாக அந்த கிராமத்தில் கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான தடுப்பு மருந்துகளுடன் போதிய முன்னேற்பாடுகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்க கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யத்தேவையான முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொண்டு, கிராமங்களில் ஆங்காங்கே தேங்கி உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், அதில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு உலர வைத்த பின்னர்தான் தண்ணீர் ஏற்ற வேண்டும். அனைத்து கிராமங்களிலும் வினியோகிக்கப்படும் குடிநீர் ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் கலந்து தினசரி குளோரினேசன் செய்யப்பட்டு வழங்க வேண்டும். மேலும், 

    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    மழைக்காலங்களில் அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார். #pollachijayaraman #rainflood

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மழை வெள்ள எச்சரிக்கை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். சி.மகேந்திரன் எம்.பி., வால்பாறை தொகுதி கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் காயத்திரி, பொள்ளாச்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், கோஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன், ஒன்றியச்செயலாளர்கள், சக்திவேல், கார்த்திக் அப்புச்சாமி, தம்பு, சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால் பாறை கீழ் பகுதிகளை சேர்ந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வரு வாய்த்துறையினர், மின்வாரியம், குடிநீர்வடிகால்வாரிய அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பங்கேற்ற அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்தும், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தனர். மேலும், மழை பாதிப்புக்கு தேவையான உதவிகள் குறித்தும் கூறினர்.

    அனைத்து அதிகாரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது-

    தென்மேற்கு பருவமழை கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதிகளான வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுப்பகுதிகளில்தான் அதிகம் பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளின் கட்டிடங்களின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். சில பள்ளிகள் மழைக்கு ஒழுகுவதாகவும், ஜன்னல் களுக்கு கதவுகள் இன்றி இருப்பதால் மாணவர்கள் அவதிப்படுவதாகவும் புகார் உள்ளது.

    இதை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள சத்துணவுகூடங்கள், சமையல் அறைகள் போன்றவையும் கண்காணிக்கப் பட வேண்டும். சில இடங்களில் சமையல் அறைகள் சிதலமடைந்து சமைக்க தகுதியற்று இருப்பதாக தெரிகிறது. அங்கன்வாடி மையங்கள், ரேசன்கடைகள் போன்றவை முக்கியமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

    இந்த கட்டிடங்கள் சேதமடைந்திருந்தால், உடனடியாக அருகில் உள்ள வேறு அரசு கட்டிடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இதை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும், கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும், ஆழியாற்றில் யாரையும் குளிக்க அனுமதிக்கூடாது, மாசாணியம்மன் கோவில் பின்புறம் உள்ள உப்பாற்றில் குளிக்க தடை விதிக்க வேண்டும், நெச வாளர்கள் மழைக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவு வேண்டும்.

    மழையில் இடிந்த வீடுகளுக்கு உடனடியாக ரூ.5000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும், வீடுகள் இடிந்து சேதமானதில் ரேசன்கார்டு, ஆதார்கார்டு போன்றவை சேதமடைந்திருந்தால் அடையாள அட்டைகளை விரைந்து வழங்க வேண்டும். அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வீராசாமி, வக்கீல் தனசேகர், ஜேம்ஸ்ராஜா, மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #pollachijayaraman #rainflood

    இந்த மழைக்காலத்தில் ஏழு மாநிலங்களில் மழை, வெள்ளத்தில் சிக்கி 718 பேர் பலியாகி உள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #MonsoonFlood
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து வருகிறது.  இதனால் நட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டின் மழைக்காலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏழு மாநிலங்களில் 718 பேர் பலியாகி உள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் 171 பேரும், மேற்கு வங்காளத்தில் 170 பேரும், கேரளாவில் 178 பேரும், மகாராஷ்டிராவில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசாமில் 44 பேரும், நாகலாந்தில் 8 பேரும் என மொத்தம் 718 பேர் பலியாகி உள்ளனர்.

    மேலும், கேரளாவில் 21 பேரும், மேற்கு வங்காளத்தில் 5 பேரும் என மொத்தம் 26 பேர் மாயமாகி உள்ளனர் என்றும், 244 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. #MonsoonFlood
    ×