என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைக்காலம்"

    • மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.
    • ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் பாதிக்கப்படும்.

    பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் பாராமரிப்பில் கூடுதல் சுவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தில் கடுமையான தணித்து குளிர்ச்சியை தந்தாலும் உடல் நலத்தை பொறுத்தவரையில் மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் அதிகமாக பாதிக்கப்படும். தலைமுடி எளிதில் வலுவிழக்கும். தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். இவற்றை தவிர்ப்பதற்கான டிப்ஸ் இதோ...

    மழைக்காலமாக இருந்தாலும், சில சமயங்களில் தலை பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறும். இந்த ஈரத்தால் தலையில் அரிப்பு. பொடுகு, பிசுபிசுப்பு என பல பிரச்சினைகள் ஏற்படும். இதை தவிர்க்க தினமும் தலைமுடியை சுத்தமான வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதற்கு ரசாயனம் கலக்காத மென்மையான ஷாம்புவை மட்டும் பயன் படுத்தலாம்.

    தலைக்கு குளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தலைமுடியை பிரி-கண்டிஷனிங் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது எசன்ஷியல் எண்ணெய்யை உச்சந்தலை முதல் முடியின் வேர்க்கால்கள் வரை முடியின் நுனி என அனைத்து பகுதியிலும் விரல் நுனியால் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

    மழைக்காலத்தில் தலைமுடியில் இருக்கும் ஈரம் எளிதில் உலராது. இதனால் சளி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே தலைமுடி தானாக உலரும் வரை காத்திருக்காமல், தலைக்கு குளித்த பின்பு ஹேர் டிரையரை பயன்படுத்தி உலர்த்தலாம். இதில் குறைந்த அளவு வெப்பநிலையை மட்டும் பயன்படுத்தி முடியை உலர்த்துவது நல்லது.

    இவ்வாறு செய்யும்போது பொடுகு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளையும் தடுக்க முடியும். மழைக்காலத்தில், தலைமுடியை இறுக்கி கட்டாமல், காற்றோட்டமான வகையில் தளர்வாக பின்னிக்கொள்வது நல்லது. இது உச்சந்தலையில் வியர்வையால் ஏற்படும் கிருமித்தொற்றை தடுக்க உதவும்.

    தலைமுடியை சீரான இடைவெளியில் டிரிம் செய்ய வேண்டும். இது முடியின் நுனியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதுடன், தலைமுடிக்கு சீரான வடிவத்தையும் தரும். இதனால் கூந்தலை பராமரிப்பதும் எளிதாகும்.

    ஈரமான கூந்தலுடன் வெளியே செல்லும்போது, தூசி, அழுக்கு ஆகியவை எளிதாக கூந்தலில் படியக்கூடும். இது தலைமுடியின் தன்மையை பாதிப்பதோடு முடி உதிர்வு பிரச்சினையையும் உண்டாக்கும். எனவே கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு வெளியில் செல்வது நல்லது.

    தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு நாம் பயன்படுத்தும் ஷாம்புவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசாயனம் கலக்காத கடினத்தன்மை இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. மழையில் நனைந்தால் வீட்டிற்கு வந்தவுடன் மிருதுவான ஷாம்பு கொண்டு உடனடியாக தலைமுடியை கழுவ வேண்டும்.

    முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழைக்கு முக்கிய பங்கு உண்டு. வாரத்திற்கு ஒருமுறை, கற்றாழை ஜெல்லை தலையில் மாஸ்க் போல பூசவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு தலைமுடியை கழுவவும். இதனால் பொடுகுத்தொல்லை, முடி உதிர்வும் குறையும், முடியின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொக்கலாடி ஊராட்சியில் 25 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டது.
    • மழைக்காலங்களுக்கு முன்னதாக அனைத்து விதைகளும் நடவு செய்யப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்திற்காக திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தை சார்ந்த ஆதிரெங்கம், கொருக்கை, கொக்காலடி ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்களால் ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு திருத்து றைப்பூண்டி தாசில்தார் கலை.காரல் மார்க்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அவ்வாறு சேகரிக்க ப்பட்ட பனை விதைகளில் முதற்கட்டமாக 20 ஆயிரம் விதைகளை திருத்துறைப்பூண்டி தாசில்தார், மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் வழங்கினார்.

    அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் பனை விதைகளை நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பனிடம் வழங்கினார்.

    இதுகுறித்து ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பன் கூறுகையில்:-

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொக்கலாடி ஊராட்சியில் 25 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டு ஒன்றரை அடி உயரம் வளர்ந்துள்ளது.

    வருகின்ற மழைக்காலங்களுக்கு முன்ன தாக அனைத்து விதைகளும் நடவு செய்யப்படும் என்றார்.

    தரமான பனை விதைகளை சேகரித்து இயற்கையை நேசிக்கின்ற ஊராட்சி தலைவர்களான ஆதிரெங்கம் வீரா (எ) வீரசேகரன், கொறுக்கை ஜானகிராமன், கொக்காலடி வசந்தன் ஆகியோர்களை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெகுவாய் பாராட்டினார்.

    நிகழ்ச்சியின் போது வருவாய் ஆய்வாளர்கள் முரளிதரன், சிவக்குமார், கொருக்கை கிராம உதவியாளர் ராஜ முத்துவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இதனால் விவசாய பாசனமும், ஏரி பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
    • இதனால் அனைத்து கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் மலட்டாறில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மலட்டாறில் வரக்கூடிய தண்ணீர் இருவேல்பட்டு, காரப்பட்டு, மேல்தணியாலம்பட்டு, டி.குமாரமங்கலம், சேமங்கலம், ரெட்டிகுப்பம், ஒறையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வழி தூர்ந்துபோய் உள்ளது. மணல் மேடாக உள்ளதால் மழைக்காலத்தில் ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் செல்ல தடை ஏற்படும்.

    இதனால் விவசாய பாசனமும், ஏரி பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனையறிந்த ஒன்றிய கவுன்சிலர் ஆடிட்டர் சுகந்தி ராஜீவ்காந்தி, ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் மேடுகளை அகற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வகையில் சரி செய்தார். இதனால் அனைத்து கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
    • அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அது தவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் குடியிருந்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் ரேஷன் பொருட்கள், மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி, சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக சமதள பரப்பிற்கு சென்றுவர வேண்டி உள்ளது.

    அந்த வகையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமராவதி வனப்பகுதியில் 3 ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதுமட்டுமின்றி சம்பகாட்டு வழிப்பாதையின் குறுக்காக செல்கின்ற ஓடையிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவித தொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தற்போது வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது.
    • மழைக்காலங்களில் மின் நுகர்வோர் மின உபயோகத்தை மிகவும் விழிப்புணர்வுடன் கையாள வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தற்போது வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.

    இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியும், நீர்நிலைகளின் குட்டைகளில் தண்ணீர் வழிந்தோடியும் சென்ற வண்ணம் உள்ளது. மேலும் இந்த மழையினால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மழை காலத்தில் வீடுகள், தனியார் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கம் இப்படி அனைத்து கட்டிடங்களிலும் மழைநீரின் ஈரத்தன்மை காணப்படுகிறது.

    மேலும் வெயில் இல்லாததால் இந்த ஈரத்தன்மை மாற சில நாட்கள் ஆகிவிடும். இப்படிப்பட்ட நிலையில் வீட்டில் உள்ள குழந்தைகள் உள்பட அனைவரும் மின்சாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் வழக்கம்போல் வீட்டில் உள்ள சுவிட்சு போடுகளை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது அந்த சுவிட்சு பாக்ஸ் அருகில் ஈரப்பதம் உள்ளதா? மேலும் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற இடங்களில் மின் கசிவு உள்ளதா? என்று ஆய்வு செய்த பிறகே சுவிட்சுகளை ஆன் செய்ய வேண்டும். ங

    தற்போது உள்ள நிலையில் வீட்டில் உள்ளவர்கள் சப்பல் அணிந்து மின்சாரத்தை பயன்படுத்துவது நல்லது. இதேபால் வீட்டில் மழைநீர் வடியும் இடத்தில் மின் கசிவு உள்ளதா? என்றும் கவனிக்க வேண்டும். அப்படி மின் கசிவு இருந்தால் மெயின்பாக்ஸ் சுவிட்சை ஆப் செய்து விட்டு மின் அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி பல பேர் உயிரிழந்து வருகிறார்கள். ஆகவே மேலும் உயிர்பலியும் எதுவும் நடக்காமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுகுறித்து மின்சார அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

    மேலும் மின் கம்பத்தில் ஏதாவது மின் வயர் அறுந்து கிடந்தால் உடனே மின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழைநீரில் நடந்து செல்ல வேண்டாம். மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும். இதேபோல் வீட்டில் உள்ள மின் விநியோகத்தில் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் மோட்டார்கள் இவைகளின் செயல்பாடுகளை நன்கு கவனிக்க வேண்டும். அதில் உள்ள மின் இணைப்புகளில் ஏதாவது கசிவு உள்ளதா? அல்லது மின் பாக்ஸில் ஈரத்தன்மை உள்ளதா? என்று ஆய்வு செய்த பிறகே மின் சுவிட்சுகளை பயன்படுத்த வேண்டும்.

    இதுகுறித்து வீட்டில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே மழைக்காலங்களில் மின் நுகர்வோர் மின உபயோகத்தை மிகவும் விழிப்புணர்வுடன் கையாள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகனமழையிலும் தண்டவாள பராமரிப்பு பணியை ஊழியர்கள் மேற்கொண்டனர்
    • செல்வகுமார் உரிய நேரத்தில் தகவல் தந்ததால் ஸ்ரீவைகுண்டத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை பெரும் சேதத்தை விளைவித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 17, 18 அன்று அதிகனமழை பெய்தது. ரெயில் தண்டவாளங்களில் நீர் நிரம்பி ஓடியதால் ரெயில் போக்குவரத்து முற்றிலுமாக செயலிழந்தது.

    ஆனால் அதிகனமழையிலும் இருப்பு பாதையின் பராமரிப்பை தண்டவாள பராமரிப்பு ஊழியர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மண் அரிப்பினால் ரெயில் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனை கண்ட தண்டவாள பராமரிப்பாளர் உரிய நேரத்தில் தகவல் அளித்ததால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

    அந்த ரெயிலில் சுமார் 800க்கும் மேற்பட்ட பயணிகள் வெவ்வேறு இடங்களில் இறங்கும் நோக்கில் பயணித்து வந்தனர்.

    துரிதமாக செயல்பட்டு தனது கடமையை சிறப்பாக செய்து 800 உயிர்களை காப்பாற்றிய பராமரிப்பாளர் செல்வகுமாரை ரெயில்வே நிர்வாகம் பாராட்டி உள்ளது.

    அத்துடன் அவருக்கு ரூ.5000 கவுரவ பரிசாகவும் ரெயில்வே துறை அளித்துள்ளது.

    செல்வகுமாரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வரும் வேளையில், 800 உயிர்களை காப்பாற்றியவருக்கு வெறும் ரூ.5000 என்பது ஒரு உயிரின் மதிப்பு ரூ.6.25 என்பது போல் உள்ளதாக விமர்சித்து, செல்வகுமார் ஆற்றிய நற்செயலுக்கு உரிய சன்மானம் வழங்க வேண்டியது ரெயில்வே துறையின் கடமை எனவும் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்ச்சல் தாக்கும் ஆபத்து அதிகம் உண்டு.
    • உடனடியாக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    நமது உடலில் சராசரியாக இருக்கவேண்டிய வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆகும். இருப்பினும், வெளிப்புற தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப உடல் வெப்ப அளவு மாறும். நமது உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் வேலையை மூளையின் அடிப்பகுதியிலுள்ள 'ஹைப்போதலாமஸ்' என்கிற உறுப்பு கவனித்துக் கொள்கிறது.

    நமது உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகள், வைரஸ், பாக்டீரியாக்கள் போன்றவற்றை அழிக்க உடலில் உற்பத்தியாகும் 'ப்ராஸ்டோக்ளாண்டின்' என்கிற திரவம் உடலின் வெப்பநிலையை 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அதிகப்படுத்திவிடுகிறது. இதைத் தான் நாம் பொதுவாக 'காய்ச்சல்' என்கிறோம். மழைக்காலத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் பிற வைரஸ் கிருமிகள் தாக்குதல்களால் காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகமாக காணப்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு விதிவிலக்கு கிடையாது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்ச்சல் தாக்கும் ஆபத்து அதிகம் உண்டு.

    உங்களுக்கு நோய்கிருமி தாக்குதல் இருந்தால் அதை எதிர்க்கும் வேலையை உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தி அமைப்பு உடனே செய்ய ஆரம்பித்துவிடும். அப்போது காய்ச்சல் காணப்படும். உடல் சூடு 103 டிகிரியை தாண்டிவிட்டாலே உடல் முழுவதும் சோர்வு, அசதி, குழப்பம், பேச்சு குளறுதல், நாக்கு-உதடு வறண்டு போதல், உடல் இயக்கங்களில் மாற்றம், மயக்கம் போன்றவை சிலருக்கு ஏற்படலாம்.

    காய்ச்சலைக் கண்டு பயப்பட வேண்டாம். உடனடியாக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடுங்கள். இந்த நேரத்தில் குளிப்பது கூடாது. சாதாரண தண்ணீரில் துணியை நனைத்து பிழிந்து உடல் முழுக்க நான்கைந்து முறை ஒத்தடம் கொடுக்க வேண்டும். காய்ச்சல் 3 அல்லது 4 நாட்களுக்கு மேலும் இருக்கிறது என்றால் குடும்ப டாக்டரைச் சந்தித்து ரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

    சாதாரண காய்ச்சலா, விஷக்காய்ச்சலா, வைரஸ் காய்ச்சலா என எந்தக் காய்ச்சல் தாக்கியுள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப உடனே சிகிச்சை பெறுவது நல்லது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் சாந்தா பேசினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;-

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் டெங்கு நோய் பாதிப்பு உள்ளது என்ற தகவல் கிடைத்தால் உடனடியாக அந்த கிராமத்தில் கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான தடுப்பு மருந்துகளுடன் போதிய முன்னேற்பாடுகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்க கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யத்தேவையான முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொண்டு, கிராமங்களில் ஆங்காங்கே தேங்கி உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், அதில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு உலர வைத்த பின்னர்தான் தண்ணீர் ஏற்ற வேண்டும். அனைத்து கிராமங்களிலும் வினியோகிக்கப்படும் குடிநீர் ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் கலந்து தினசரி குளோரினேசன் செய்யப்பட்டு வழங்க வேண்டும். மேலும், 

    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    மழைக்காலங்களில் அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார். #pollachijayaraman #rainflood

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மழை வெள்ள எச்சரிக்கை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். சி.மகேந்திரன் எம்.பி., வால்பாறை தொகுதி கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் காயத்திரி, பொள்ளாச்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், கோஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன், ஒன்றியச்செயலாளர்கள், சக்திவேல், கார்த்திக் அப்புச்சாமி, தம்பு, சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால் பாறை கீழ் பகுதிகளை சேர்ந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வரு வாய்த்துறையினர், மின்வாரியம், குடிநீர்வடிகால்வாரிய அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பங்கேற்ற அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்தும், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தனர். மேலும், மழை பாதிப்புக்கு தேவையான உதவிகள் குறித்தும் கூறினர்.

    அனைத்து அதிகாரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது-

    தென்மேற்கு பருவமழை கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதிகளான வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுப்பகுதிகளில்தான் அதிகம் பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளின் கட்டிடங்களின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். சில பள்ளிகள் மழைக்கு ஒழுகுவதாகவும், ஜன்னல் களுக்கு கதவுகள் இன்றி இருப்பதால் மாணவர்கள் அவதிப்படுவதாகவும் புகார் உள்ளது.

    இதை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள சத்துணவுகூடங்கள், சமையல் அறைகள் போன்றவையும் கண்காணிக்கப் பட வேண்டும். சில இடங்களில் சமையல் அறைகள் சிதலமடைந்து சமைக்க தகுதியற்று இருப்பதாக தெரிகிறது. அங்கன்வாடி மையங்கள், ரேசன்கடைகள் போன்றவை முக்கியமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

    இந்த கட்டிடங்கள் சேதமடைந்திருந்தால், உடனடியாக அருகில் உள்ள வேறு அரசு கட்டிடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இதை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும், கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும், ஆழியாற்றில் யாரையும் குளிக்க அனுமதிக்கூடாது, மாசாணியம்மன் கோவில் பின்புறம் உள்ள உப்பாற்றில் குளிக்க தடை விதிக்க வேண்டும், நெச வாளர்கள் மழைக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவு வேண்டும்.

    மழையில் இடிந்த வீடுகளுக்கு உடனடியாக ரூ.5000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும், வீடுகள் இடிந்து சேதமானதில் ரேசன்கார்டு, ஆதார்கார்டு போன்றவை சேதமடைந்திருந்தால் அடையாள அட்டைகளை விரைந்து வழங்க வேண்டும். அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வீராசாமி, வக்கீல் தனசேகர், ஜேம்ஸ்ராஜா, மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #pollachijayaraman #rainflood

    இந்த மழைக்காலத்தில் ஏழு மாநிலங்களில் மழை, வெள்ளத்தில் சிக்கி 718 பேர் பலியாகி உள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #MonsoonFlood
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து வருகிறது.  இதனால் நட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டின் மழைக்காலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏழு மாநிலங்களில் 718 பேர் பலியாகி உள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் 171 பேரும், மேற்கு வங்காளத்தில் 170 பேரும், கேரளாவில் 178 பேரும், மகாராஷ்டிராவில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசாமில் 44 பேரும், நாகலாந்தில் 8 பேரும் என மொத்தம் 718 பேர் பலியாகி உள்ளனர்.

    மேலும், கேரளாவில் 21 பேரும், மேற்கு வங்காளத்தில் 5 பேரும் என மொத்தம் 26 பேர் மாயமாகி உள்ளனர் என்றும், 244 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. #MonsoonFlood
    ×