என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம் விபத்து"

    • விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
    • தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா சிமி பள்ளத்தாக்கில் உள்ள வுட்ராஞ்சல் பகுதியில் நடுவானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

    இந்த விபத்தில் அதில் பயணம் செய்த விமானி உயிர் இழந்தார். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    விமானம் விழுந்த வீடுகளில் இருந்த பொதுமக்களை உடனடியாக வெளியேற்றினார்கள். இதில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • கடந்த 11 ஆண்டுகளில் இரு முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
    • ஆனாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

    கோலாலம்பூர்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 2014ம் மார்ச் 8-ம்ம் தேதி 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட 777 வடிவமைப்பு கொண்ட எம்.எச்.370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வியட்நாம் வான்பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்துக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் செயலிழந்தன.

    கடந்த 11 ஆண்டுகளில் இரு முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

    இந்நிலையில், 11 ஆண்டுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த முறை இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணி மேற்கொள்ளப்படும். அதற்காக பிரிட்டனில் செயல்படும் ஓஷன் இன்பினிடி நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம் செய்துள்ளது.

    விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மலேசிய அரசாங்கம் அந்நிறுவனத்துக்குக் கட்டணம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து.
    • விபத்தில் கேப்டன் விஷால் யாதவ் உயிரிழந்தார் என்றும், பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த விமானி ஒருவர் உயிரிழந்தார்.

    நேற்று இரவு 11.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், விமானத்தில் இருந்த மற்றொரு பயிற்சி விமானி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கோயில் மற்றும் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்று சோர்ஹாட்டா காவல் நிலையப் பொறுப்பாளர் ஜேபி படேல் தெரிவித்தார்.

    மேலும் அவர், "இந்த விபத்தில் கேப்டன் விஷால் யாதவ் (30) உயிரிழந்தார் என்றும், பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் காயமடைந்து அரசு நடத்தும் சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

    • பிக் பியர் பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்றில் 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, அங்குள்ள பிக் பியர் என்ற குடியிருப்பு பகுதி அருகே விமானம் சென்றுக் கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

    இதையடுத்து, தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், பிக் பியர் பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர்.

    இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • விமான விபத்து குறித்து கண்டறிய விரிவான விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டு உள்ளது.

    சூரத்கார்:

    ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இன்று காலை இந்திய விமான படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வான் வெளியில் தாறுமாறாக பறந்தது. உடனே அதில் பயணம் செய்த விமானி பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து கீழே குதித்தார். உடனே அந்த விமானம் ஹனுமந்த் ஹார்க் அருகே பஹ்லோக்நகர் என்ற கிராமத்தில் உள்ள வீட்டின் மேல் பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது.

    இதில் அந்த வீட்டின் அருகே இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விமானம் விழுந்ததில் அந்த வீடு முற்றிலும் தேசம் ஆனது. பாராசூட்டில் குதித்ததால் விமானி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    சத்தம் கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர். விபத்து குறித்து கேள்வி பட்டதும் போலீசாரும் மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர்.

    விமானத்தின் சிதறிய பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணம் என்ன வென்று தெரிய வில்லை. விமான விபத்து குறித்து கண்டறிய விரிவான விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டு உள்ளது.

    • மீட்புக்குழுவினர் பாராசூட் மூலம் சென்று தேடினர்.
    • விபத்து குறித்து விசாரணை நடத்த கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஒரு குழுவை நியமித்துள்ளது.

    ஒட்டலா:

    கனடாவின் வடமேற்கில் உள்ள போர்ட் ஸ்மித் நகரில் இருந்து வடக்கு பகுதியில் உள்ள சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு சிறிய பயணிகள் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்துடனான தொடர்பு துண்டானது.

    இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மீட்புக்குழுவினர் பாராசூட் மூலம் சென்று தேடினர். அப்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

    இந்த விமான விபத்தில் 6 பேர் பலியானார்கள். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து விசாரணை நடத்த கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஒரு குழுவை நியமித்துள்ளது.

    • ஹெலிகாப்டர் போர்பந்தருக்கு அப்பால் அரபிக்கடலில் விழுந்ததில் மூன்று பேர் காணாமல் போயினர்.
    • காணாமல் போன பைலட் ராகேஷ் குமார் ராணாவை தேடும் பணி தொடர்ந்தது.

    அமகதாபாத்:

    இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த மாதம் குஜராத் கடற்கரையில் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி மாயமானார். ஹெலிகாப்டர் விபத்தில் காணாமல் போன கடலோர காவல்படை விமானியின் உடல் ஒரு மாதத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த மாதம் 2-ந்தேதி ALH MK-III ஹெலிகாப்டர் போர்பந்தருக்கு அப்பால் அரபிக்கடலில் விழுந்ததில் மூன்று பேர் காணாமல் போயினர். இதில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன பைலட் ராகேஷ் குமார் ராணாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    ராணாவின் உடல் போர்பந்தருக்கு தென்மேற்கே 55 கிமீ தொலைவில் கடலில் இருந்து நேற்று மீட்கப்பட்டது என்று கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விமான நிலையம் அருகே வந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நைரோபி:

    கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் மலிண்டி மாகாணத்தில் நேற்று சிறிய ரக விமானம் பறந்துகொண்டிருந்தது அந்த விமானத்தில் 3 பேர் பயணித்தனர்.

    மலிண்டி விமான நிலையம் அருகே வந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலிண்டி-மாம்பசா நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சாலையில் பைக்கில் சென்ற பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, விமானத்தில் பயணித்த உள்பட விமானி உள்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விமானம் புறப்பட்ட நிலையில், திடீரென தீப்பிடித்துள்ளது.
    • விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

    அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருந்து நியூ யார்க் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பான சூழல் உருவானது. ஜார்ஜ் புஷ் இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட நிலையில், திடீரென தீப்பிடித்துள்ளது.

    விமானம் புறப்பட தயாரான போது அதன் இறக்கைகளில் ஒன்றில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறின. இதையடுத்து விமானம் டேக் ஆஃப் ஆவது ரத்து செய்யப்பட்டது. மேலும், விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஹூஸ்டன் தீயணைப்புத் துறை (HFD) தெரிவித்துள்ளது.

    "விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் டேக் ஆஃப் ஆகும் முன் பிரச்சினை ஏற்பட்டதாக தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஹூஸ்டன் தீயணைப்பு துறையின் விமான நிலைய மீட்பு தீயணைப்பு வீரர்கள் களத்திற்கு விரைந்து சென்று, விமானத்தில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை," என்று ஹூஸ்டன் தீயணைப்பு துறை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஒரு வார காலத்திற்குள் அமெரிக்காவில் மட்டும் இரண்டு விமான விபத்துகள் அரங்கேறிய நிலையில், இந்த சம்பவம் விமானத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகளில் சிலர் தீப்பிழம்புகளைக் கண்டதும் அதனை வீடியோ பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் அரங்கேறிய விமானத்தில் 104 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    நேபாளத்தில் விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். #nepalplanecrash

    காத்மண்டு:

    நேபாளத்தில் லுகியா விமான நிலையத்தில் இன்று ஒரு குட்டி விமானம் புறப்பட்டது அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது மோதி நொறுங்கியது.

    இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரின் இணை விமானி துங்கானா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராம்பகதூர் காட்கா ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர்.

    படுகாயம் அடைந்த மற்றொரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் ருத்ரா பக்தூர் ஸ்ரேஸ்தா காத்மண்டுவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்கள் தவிர ஹெலிகாப்டரில் அமர்ந்து இருந்த விமான கேப்டன் ஆர்.பி. ரொசாயா, கேப்டன் சேட் குரங் ஆகியோர் காயம் அடைந்தனர். #nepalplanecrash

    மெக்சிகோவில் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். #Mexico #PlaneCrash
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அதிசாபன் டி ஸரகோசா நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. இதில் 2 பேர் இருந்தனர்.

    விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. #Mexico #PlaneCrash  
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானம் வீட்டின் மீது மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. #Aircraftcrashes #Aircraftcrashesintohouse
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆரஞ்சு கவுண்டியில் இருக்கும் புல்லர்டென் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு விமானி மட்டுமே இருந்தார்.



    யோப்ர லிண்டா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் விமானி மற்றும் வீட்டில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    ×