search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிலையன்ஸ்"

    • ஜியோசினிமா - டிஸ்னி இந்தியா இணைப்பு என்பது இந்திய எண்டர்டெயின்மென்ட் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
    • இந்த இணைப்பில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைகள் பகிர்ந்துகொள்ளப்படாது என்றும் சொல்லப்படுகிறது.

    அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இந்தியா இடையேயான 8.5 பில்லியன் டாலர் மதிப்பிலான இணைப்பிற்கு இந்திய போட்டி ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

    ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையும், டிஸ்னி நிறுவனத்திடம் ஐபிஎல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் உள்ளது. இந்நிலையில் இந்த 2 நிறுவனங்களின் இணைப்பின் மூலம் மொத்த கிரிக்கெட் உரிமையும் இந்த கூட்டணிக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

    இதன் காரணத்தால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டித்தன்மை முற்றிலுமாக குறைந்து மோனோபோலி நிலை உருவாகும் என சொல்லப்படுகிறது.

    ஆகவே ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இந்தியா இணைப்பு என்பது இந்திய எண்டர்டெயின்மென்ட் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய போட்டி ஆணையம் தனது கருத்தை 2 நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது.

    இந்த 2 நிறுவனங்களின் இணைப்பின் மீது ஏன் விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது என்பதற்கான காரணங்களை கூறுமாறு அந்நிறுவனங்களிடம் இந்திய போட்டி ஆணையம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    அதே சமயம் இந்த இணைப்பில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைகள் பகிர்ந்துகொள்ளப்படாது என்றும் சொல்லப்படுகிறது.

    இந்த 2 நிறுவனங்களின் இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தில் ரிலையன்ஸ் 56% பங்கும், டிஸ்னி 37% பங்கும் வைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    இந்த புதிய நிறுவனத்தில் 110க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா ஆகிய இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

    ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இந்தியா இணைப்பினால் உருவாகும் புதிய நிறுவனம் சோனி, ஜீ என்டர்டெயின்மென்ட், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் ஆகியவற்றுடன் 120 தொலைக்காட்சி சேனல்களும் மற்றும் இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு கடும் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.
    • ஒற்றை ஒடிடி இயங்குதளத்தை இயக்குவது செலவுகளைச் சேமிக்க திட்டம்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை அதன் சொந்த ஸ்ட்ரீமிங் சேவையான ஜியோ சினிமாவுடன், ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 இணைப்பிற்குப் பிறகு இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் விளைவாக மூத்த பங்குதாரராக ஆவதற்கு ஒரு லாபகரமான பேரம் நடத்தி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சந்தைகளில் ஒன்றான லீடர்போர்டில் தன்னைத்தானே முன்னிலைப்படுத்தியுள்ளது.

    ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், வயாகாம் நிறுவனத்தின் ஊடகச் செயல்பாடுகள், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் ஸ்டார் இந்தியா உடன் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    இதையடுத்து ரூ. 70,352 கோடி மதிப்புள்ள இந்த கூட்டு முயற்சியில், ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் அதன் வளர்ச்சி ஆதரிக்க முயற்சியில் ரூ.11,500 கோடி செலுத்தும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 ஆகியவற்றின் இணைப்பிற்குப் பிறகு ஜியோ சினிமாவை டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒற்றை ஒடிடி இயங்குதளத்தை இயக்குவது செலவுகளைச் சேமிக்கவும், யூடியூப், நெட்ப்ளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ போன்ற தளங்களுக்கு வலுவான போட்டியை அளிக்கவும் உதவும் என்பதால் இந்த நடவடிக்கை சாத்தியமாகும் என கூறப்படுகிறது.

    • 98 நாட்கள் பிளான் 999 ரூபாய் கொண்டதாகும்.
    • 72 நாட்கள் பிளான் 749 ரூபாய் வசதி கொண்டதாகும்.

    ரிலையன்ஸின் ஜியோ செல்போன் சேவை நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் 72 மற்றும் 98 நாட்கள் என இரண்டு ப்ரீபெய்டு பிளான்களை அறிவித்துள்ளது.

    98 நாட்கள் பிளான்

    98 நாட்கள் பிளான் 999 ரூபாய் கொண்டதாகும். இந்த பிளான்படி தினந்தோறும் 2GP டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு 2GB என்ற வகையில் 98 நாட்களுக்கு மொத்தம் 196GB டேட்டா வழங்குகிறது. தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் மெசேஜ்கள் இலவசமாக அனுப்பிக் கொள்ள முடியும். அன்லிமிடெட் 5G டேட்டா வசதி இடையூறு இல்லாமல் கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் வசதியையும் உள்ளடக்கியது.

    72 நாட்கள் பிளான்

    72 நாட்கள் பிளான் 749 ரூபாய் வசதி கொண்டதாகும். இந்த திட்டத்தில் தினந்தோறும் 2GB டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். கூடுதலாக 20GB உடன் மொத்தம் 164GB டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்ய முடியும். அன்லிமிடெட் 5G பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    இந்த காலக்கட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    • 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இன்போசிஸ் நிறுவனம் 2-ம் இடம் பிடித்துள்ளது.
    • 4-ம் இடத்தில் எல்.ஐ.சி.யும் 5-ம் இடத்தில ரிலையன்ஸ் நிறுவனமும் உள்ளது.

    2024ம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 இந்திய பிராண்டுகளை பிராண்ட் பைனான்ஸ் இந்தியா பட்டியலிட்டுள்ளது.

    அதில் 2023 ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த டாடா நிறுவனமே இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டை விட 9% வளர்ச்சியுடன் 28.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் முதலிடத்தை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது.

    கடந்தாண்டை விட 9% வளர்ச்சி மற்றும் 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இன்போசிஸ் நிறுவனம் 2-ம் இடம் பிடித்துள்ளது.

    கடந்தாண்டை விட 38% அபார வளர்ச்சியுடன் எச்.டி.எப்.சி குழுமம் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. 4-ம் இடத்தில் எல்.ஐ.சி.யும் 5-ம் இடத்தில ரிலையன்ஸ் நிறுவனமும் உள்ளது.

    6-ம் இடத்தில் எஸ்.பி.ஐ.யும், 7-ம் இடத்தில் ஏர்டெல்லும் 8-ம் இடத்தில் எச்.சி.எல். டெக்னாலஜியும் 9-ம் இடத்தில் லார்சன் & டர்போ நிறுவனமும் 10-ம் இடத்தில் மகேந்திரா நிறுவனமும் உள்ளது.

    • ஜியோ டிஜிட்டல் வங்கித் துறையில் காலடி எடுத்து வைக்கிறது. ஜியோ' UPI என்ற பெயரில் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது
    • இதன் மூலம் Paytm, PhonePe, Google Pay ஆகியவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க முகேஷ் அம்பானி தயாராகி வருகிறார்

    பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தற்போது டிஜிட்டல் வங்கித் துறையில் காலடி எடுத்து வைக்கிறது. ஜியோ' UPI என்ற பெயரில் புதிய டிஜிட்டல் வங்கி வணிக பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது ரிலையன்ஸ். Paytm, போன்று 'ஜியோ' சில்லரை விற்பனை கடைகளில் பணம் செலுத்தும் சேவையை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளது.

    தற்போது 'ஜியோ பே' செயலி தொழில்நுட்பம் மூலம் இந்த விரிவாக்கத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 'ஜியோ' நிறுவனம் இதனை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சில்லறை விற்பனைக் கடைகளில் உடனடி பணப் பரிமாற்றங்கள் செய்ய முடியும்.

    மேலும் Paytm, PhonePe, Google Pay போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் 'ஜியோ' இதனை அமைத்துள்ளது. விரைவில் ஜியோ UPI செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் Paytm, PhonePe, Google Pay ஆகியவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க முகேஷ் அம்பானி தயாராகி வருகிறார்.

    டிஜிட்டல் வங்கித் துறையில் போட்டியை உருவாக்கும் ஜியோவின் நடவடிக்கை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • கொல்கத்தாவில் சர்வதேச வர்த்தக மாநாடு இன்று நடைபெற்றது.
    • 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவன பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் சர்வதேச வர்த்தக மாநாடு இன்று நடைபெற்றது. இதில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவன பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    மேற்கு வங்காள மாநிலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கு வங்காளத்தில் சுமார் 45,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மாநிலத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.20,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    ரிலையன்ஸ் அறக்கட்டளை கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலை புதுப்பிக்கும் ஒரு லட்சிய திட்டத்தை எடுத்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய கட்டமைப்புகள் உள்பட முழு கோவில் வளாகத்தையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    • முகேஷ் அம்பானிக்கு இ.மெயில் மூலம் தொடர் கொலை மிரட்டல் வந்தது.
    • அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த தெலுங்காவை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மும்பை:

    இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானிக்கு சில தினங்களுக்கு முன் மர்ம நபர் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்.

    அவர் அந்த இ.மெயிலில், "எனக்கு ரூ.20 கோடி பணம் தர வேண்டும். தவறினால் சுட்டு கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடுபவர்கள் இருக்கிறார்கள்" என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதுகுறித்து தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மும்பை கம்தேவி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, முகேஷ் அம்பானிக்கு மீண்டும் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. அவர் விடுத்த கொலை மிரட்டலில், "நான் ரூ.20 கோடிதான் கேட்டேன். ஆனால் எனக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளேன். நீங்கள் எனக்கு இனி ரூ.200 கோடி தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்" என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மும்பை போலீசாரும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில், அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த தெலுங்கானாவைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், தொடர்ந்து 5 முறை அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

    • முகேஷ் அம்பானிக்கு நேற்று மீண்டும் 2-வது முறையாக இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
    • தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டும் கொலை மிரட்டல் வந்தது.

    மும்பை:

    இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானிக்கு நேற்று முன்தினம் மர்ம நபர் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்.

    அவர் அந்த இ.மெயிலில், "எனக்கு ரூ.20 கோடி பணம் தர வேண்டும். தவறினால் சுட்டு கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடுபவர்கள் இருக்கிறார்கள்" என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதுகுறித்து தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மும்பை கம்தேவி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் முகேஷ் அம்பானிக்கு நேற்று மீண்டும் 2-வது முறையாக இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. வெள்ளிக்கிழமை மிரட்டிய அதே நபர்தான் மீண்டும் மிரட்டல் விடுத்திருந்தார்.

    நேற்று 2-வது தடவை அவர் விடுத்த கொலை மிரட்டலில், "நான் ரூ.20 கோடிதான் கேட்டேன். ஆனால் எனக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளேன்.

    நீங்கள் எனக்கு இனி ரூ.200 கோடி தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்" என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இ.மெயில் எங்கிருந்து வந்திருக்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மும்பை போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டும் கொலை மிரட்டல் வந்தது.

    அந்த மிரட்டலை விடுத்த பீகாரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த தடவை அம்பானியை மிரட்டியது யார்? என்று விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் எங்களிடம் சிறந்த துப்பாக்கி சுடும் நபர் உள்ளனர்
    • பணம் தராவிட்டால் கொலை செய்யப்படுவீர்கள் என இ-மெயில் மூலம் மிரட்டல்

    ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 27-ந்தேதி சதாப் கான் என பெயரிட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது.

    அதில் எங்களுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்காவிடில் உங்களை கொலை செய்வோம். இந்தியாவில் சிறந்த துப்பாக்கி சுடும் நபர்கள் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் அடையாளம் தெரியாத அந்த நபர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த வருடம் பீகாரில் இருந்து அம்பானி மற்றும் அவரது குடும்ப நபர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

    • 7 வருடங்களுக்கு முன்பு ஒரு உறுதியளித்து அதனை செய்து காட்டினோம்
    • இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும், தொழில்துறைக்கும் இது பயன்படும்

    இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவன குழுமம் ரிலையன்ஸ்.

    இந்நிறுவனத்தின் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் 2016 செப்டம்பரில் தனது சந்தாதாரர்களுக்கு இலவசமாக 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணைய சேவை மற்றும் அழைப்பு வசதியை இலவசமாக கொடுத்தது. குறிப்பிட்ட காலம் மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டாலும், பிறகு அதனை நீட்டித்து கொண்டே சென்றது.

    அதிரடியாக ஜியோவின் சேவை கட்டணங்கள் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததால், பல புதிய சந்தாதாரர்களும் இதில் இணைந்தனர். இதன் காரணமாக பிற தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்கள் சேவை கட்டணத்தை குறைத்து தர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

    இந்நிலையில், உலகெங்கும் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்க வைக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். இது பற்றிய அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது வருடாந்திர பொது கூட்டத்தில் அவர் வெளியிட்டார். அப்போது முகேஷ் அம்பானி கூறியதாவது..,

    "களைப்பே இல்லாத இந்தியாவின் சக்தியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. முழுக்க முழுக்க தன்னம்பிக்கையால் தூண்டப்பட்ட ஒரு புதிய இந்தியா இது. புதுமைகளுக்கும், வளர்ச்சிக்கும், தேச முன்னேற்றத்திற்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட வேண்டும். உலகளாவிய போட்டி திறன் வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியாதது. இதனை இந்தியாவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்."

    "இதன்படி, 2 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு திறனுள்ள செயற்கை நுண்ணறிவுக்கான கணினி திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்தும். 7 வருடங்களுக்கு முன்பு, அனைவருக்கும் இணைய சேவை தருகிறோம் என நாங்கள் வாக்களித்தோம். அதனை நிறைவேற்றியும் காட்டி இருக்கிறோம். இன்று உங்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியை அளிக்கிறோம். எல்லோருக்கும், எங்கேயும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிடைக்க செய்வோம் என உறுதியளிக்கிறோம். இந்தியாவிற்கு ஏற்ற செயல் வடிவங்களில் செயற்கை நுண்ணறிவு கட்டமைக்கப்படும்."

    "இது இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும், வர்த்தகங்களுக்கும், தொழில்துறைக்கும் பயன்படும் வகையில் அமையும். இதற்கான எல்லா தகவல்களும், தரவுகளும், திறனும், திறமை வாய்ந்த வல்லுனர்களுக்கும் இந்தியாவில் பஞ்சமில்லை," என்று அவர் தெரிவித்தார்.

    4ஜி சேவையில் புரட்சி செய்தது போல், செயற்கை நுண்ணறிவிலும் ஜியோ கால்பதிக்க போவதால் சந்தாதாரர்கள் மட்டுமின்றி அனைவரும் உற்சாகத்துடன் ரிலையன்ஸ்-இன் அடுத்தக் கட்ட நகர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    • ஜியோபுக் லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஜியோபுக் லேப்டாப்-இல் ஜியோ ஒஎஸ், ஜியோ டிவி ஆப் உள்ளிட்ட சேவைகள் உள்ளன.

    ரிலையன்ஸ் ரிடெயில் நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப் 2023 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஜியோபுக் மாடல் ஸ்டைலிஷ் மேட் பினிஷ் செய்யப்பட்டு, மிக மெல்லிய தோற்றத்தில், 990 கிராம் எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த லேப்டாப் 11.6 இன்ச் ஆன்டி-கிளேர் HD ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்கிரீன் எக்ஸ்டென்ஷன் வசதி, வயர்லெஸ் ப்ரின்டிங், இன்டகிரேட் செய்யப்பட்ட சாட்பாட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 4ஜி எல்டிஇ, டூயல் பேன்ட் வைபை, பில்ட்-இன் USB/HDMI போர்ட்கள், HD வெப்கேமரா மற்றும் எட்டு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கப்படுகிறது.

     

    ஜியோபுக் லேப்டாப்-இல் ஜியோ ஒஎஸ், ஜியோ டிவி ஆப், ஜியோ-பியான் கோடிங், ஜியோ கிளவுட் கேம்ஸ்-இன் கீழ் ஏராளமான கேம்கள், ஒரு வருடத்திற்கான 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், டிஜிபாக்ஸ் மற்றும் குயிக்ஹீல் பேரன்டல் கன்ட்ரோல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

    ஜியோபுக் அம்சங்கள்:

    11.6 இன்ச், 1366x768 பிக்சல், ஆன்டி கிளேர் HD டிஸ்ப்ளே

    மீடியாடெக் 2.0 GHz ஆக்டா கோர் பிராசஸர்

    4 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஜியோ ஒஎஸ்

    2MP HD வெப் கேமரா

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    இன்பினிட்டி கீபோர்டு

    ப்ளூடூத், 4ஜி, டூயல் பேன்ட் வைபை

    I/O, USB, HDMI மற்றும் ஆடியோ போர்ட்கள்

    ஜியோ-பியான் கோடிங், ஜியோகிளவுட் கேம்ஸ், ஜியோ டிவி ஆப்

    4000 எம்ஏஹெச் பேட்டரி

    8 மணி நேரத்திற்கு பேக்கப்

    இந்திய சந்தையில் ஜியோபுக் மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர், அமேசான் வலைதளம் உள்ளிட்ட தளங்களில் நடைபெறுகிறது.

    ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், “ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்” என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #Rafale #RahulGandhi #ArunJaitley
    புதுடெல்லி:-

    ரபேல் விமான பேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டி இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம், “எங்களுக்கு தேவையான நிறுவனத்தை நாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்” என விளக்கம் அளித்திருந்தது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், நிதி மந்திரி அருண் ஜெட்லி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது:-

    ராகுல் காந்தி மத்திய அரசு மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரபேல் விமானம் குறித்து அளித்த பேட்டிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. 30-ம் தேதி ராகுல் ட்விட்டரில் ஒரு கருத்து தெரிவிக்கிறார். அடுத்த சில வாரங்களில் ஹாலண்டே சர்ச்சை கருத்தை வெளியிடுகிறார். இந்த இரண்டு கருத்துக்களும் நன்கு திட்டமிட்டு வெளியிடப்பட்டவை போல தோன்றுகிறது. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. இரண்டும் ஒரே அலைவரிசையில் காணப்படுகின்றன. 



    ஏதோ ஒரு விதமான பழிவாங்கும் எண்ணத்தில் ராகுல் இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. இந்த மொத்த குற்றச்சாட்டுகளுமே திட்டமிட்ட ஒன்றாக இருந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இரு நாடுகளின் எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே அலைவரிசையில் பேசுகின்றனர். 

    பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, தான் முன்பு கூறியதை உடனே மறுக்கிறார். அவர் இரண்டாவதாக அளித்த பேட்டியில், “ ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என பிரான்சின் டசால்ட் நிறுவனத்துக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததா என்பது எனக்கு தெரியாது. இது குறித்து டசால்ட் நிறுவனம் தான் பதில் கூற வேண்டும்” என, குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இரண்டு பேட்டிகளும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளன.

    ராகுல் காந்தி மற்றும் சில கட்சிகள் குற்றம் சாட்டுவதால் ஒப்பந்தத்ததை ரத்து செய்ய முடியாது. ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும்

    என அருண் ஜெட்லி பேசினார்.
    ×