என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குச்சந்தை"

    • பணக்காரர்கள் தங்களது முதலீடுகளில் 33 சதவீதத்தை குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையில் 33முதலீடு செய்கிறார்கள்.
    • பணக்காரர்கள் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

    இந்தியாவில் 30 மில்லியன் டாலருக்கு ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் இதில் எல்லாம் அதிகப்படியாக முதலீடு செய்கிறார்கள் என்பது குறித்து 150 பணக்காரர்களிடம் கோடக் மஹிந்திரா வங்கி ஆய்வு செய்துள்ளது.

    இந்த ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் தங்களது முதலீடுகளில் 45 சதவீதத்தை கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையில் 33% முதலீடு செய்கிறார்கள்.

    குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையை விட கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் அதிக வருவமானம் கிடைப்பதால் பணக்காரர்கள் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

    குறிப்பாக வெளிநாட்டு ரியல் எஸ்டேட்களிலும் பணக்காரர்கள் சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். உலக அளவில் முதலீடு செய்யும் பணக்காரர்களில் 35% பேர் வெளிநாடுகளில் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்கள்.

    வெளிநாடுகளுக்கு குடிபெயரும் நோக்கத்தில் பெரும்பாலான பணக்காரர்கள் வெளிநாடுகளில் குடியிருப்பு ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்கிறார்கள். கணக்கெடுப்பில் கலந்துகொண்ட பணக்காரர்களில் 5 இல் ஒருவர் வெளிநாடுகளுக்கு குடிப்பெயர் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் தக்க வைத்துக் கொண்டு வெளிநாட்டில் நிரந்தரமாக வசிக்க விரும்புகிறார்கள்.

    பணக்காரர்கள் தங்களது முதலீடுகளில் 32 சதவீதத்தை பங்குசந்தையில் முதலீடு செய்கிறார்கள். அதில் 89% தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் 83 சதவீதமும், PMS ஃபண்டுகளில் 55 சதவீதமும், காப்பீடு/ULIPகள் 40 சதவீதமும் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக அமெரிக்க பங்குகள், இந்திய முதலீட்டர்களிடையே தற்போது பிரபலமடைந்து வருகிறது.

    கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பணக்காரர்கள் தங்களது பட்ஜெட்டில் 10 சதவீதத்தை ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்திற்கு செலவு செய்கிறார்கள்.

    2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ரூ.26 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை சுமார் 2.18 லட்சமாக இருந்தது. இது 2028 ஆம் ஆண்டுக்குள் சுமார் 4.30 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சில நாட்களுக்கு முன்பு பங்கு விலைகள் சரியத் தொடங்கியதால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்
    • கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருப்பதைக் கண்டனர்.

    ஜார்க்கண்டில் பங்ச்சந்தையில் பணத்தை இழந்ததால் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சிட்கோரா காவல் பகுதியில் வசித்தவர் சஞ்சீவ் குமார் (25 வயது). இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

    குமார், ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் பங்குச் சந்தையில் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பங்கு விலைகள் சரியத் தொடங்கியதால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் பங்குச் சந்தையில் தனது பணத்தை இழந்ததால் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில், பலமுறை கதவைத் தட்டியும் அவர் பதிலளிக்காததால், அவரது குடும்பத்தினர் அவரது அறைக்குள் நுழைந்து பார்த்தபோது கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருப்பதைக் கண்டனர்.

    அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவிட்டனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வளர்கின்றனர்.

    தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050

    • அடுத்த வாரம் பங்குகளின் மதிப்பு மீண்டும் உயரக்கூடும் என வல்லுனர்கள் நம்புகின்றனர்.
    • அதானி பங்குகளை அதிகளவில் வைத்திருக்கும் முதலீட்டாளர்களிடம் விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாக செய்தி வெளிவந்தது.

    இந்தியாவில், பங்குச்சந்தையில் முதலீடு செய்து வரும் சிறு, குறு, மற்றும் மிகப் பெரிய முதலீட்டாளர்களை கடந்த சில ஆண்டுகளாக அதானி குழும பங்குகள் ஈர்த்து வந்தன. சில மாதங்களுக்கு முன்பு வரை அதானி குழுமத்தின் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும், முதலீட்டாளர்களுக்கு நல்ல வெகுமதி அளித்துள்ளன. அதன் தலைவர் கெளதம் அதானி இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர்.

    ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பெர்க் எனப்படும் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம், ஜனவரி 2023ல், அதானி குழுமத்தின் கணக்கு வழக்குகளில் ஊழல் இருப்பதாகவும், வரி ஏய்ப்பு புகலிடமாக இருக்கும் சில நாடுகளில் அக்குழுமம் வலை நிறுவனங்களை உருவாக்கி, பங்குகள் கையாளுதலில் குற்றங்கள் செய்ததாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    இதனையடுத்து இதன் பங்குகள் சரிந்தன. இதன் பிறகு ஏற்றத்தையும், இறக்கத்தையும் மாறி மாறி சந்தித்து வந்த அந்நிறுவனத்தின் பங்குகள், இன்று 10% சரிவை சந்தித்துள்ளது. பட்டியலிடப்பட்ட 10 அதானி குழும நிறுவனங்கள் இன்று ரூ.52,000 கோடிக்கு மேல் ஒட்டுமொத்த சந்தை மூலதனத்தை இழந்துள்ளன.

    அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள அமெரிக்க அட்டர்னி அலுவலகம், அதானி பங்குகளை அதிகளவில் வைத்திருக்கும் முதலீட்டாளர்களிடம் சமீபத்திய மாதங்களில் விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாகவும், முதலீட்டாளர்களிடம் அதானி குழுமம் என்ன சொன்னது என்பதில் பிரத்யேக கவனம் செலுத்தப்பட்டதாகவும் செய்தி வெளிவந்தது. அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் இதே போன்றதொரு விசாரணையை தொடங்கி நடத்தி வருவதாக செய்திகள் வந்தன.

    இந்தியாவை தளமாகக் கொண்ட அதானி குழுமத்தின் செய்தித்தொடர்பாளர், தனது முதலீட்டாளர்களிடம் எந்தவிதமான விசாரணையும் தொடங்கப்பட்டதற்கான எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை என கூறினார். மேலும் அவர், அக்குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

    ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி, இதன் மூலம் அதானி பங்கு வீழ்ச்சியடையும் என கணித்து, "ஷார்ட் ஸெல்லிங்" எனப்படும் பங்குகள் விலை குறையும் பொழுது லாபமீட்டும் முறையை கையாண்டு பல கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பதிலுக்கு குற்றம் சுமத்தியுள்ளது.

    இதன் விளைவாக பங்குகள் சரிந்திருந்தாலும், அடுத்த வாரம் அது மீண்டும் உயரக்கூடும் என வல்லுனர்கள் நம்புகின்றனர்.

    • கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
    • வரும் 22-ம் தேதியன்று பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-ம் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கிடையே, 22-ம் தேதியன்று பங்குச்சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வரும் திங்கட்கிழமை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதால் இன்று பங்குச்சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
    • நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.

    மக்களவைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய தேசிய ஜனநாயகக்கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

    இந்த நிலையில் முடிவுகள் குறித்து நிலையான யூகத்திற்கு வர முடியாததால் தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

    இறக்கத்துடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை சென்செக்சில் 2303.45 புள்ளிகளை இழந்து 74275.46 இறக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.

    மேலும் இன்றைய பங்குச்சந்தை முடிவில் 3000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக குற்றம்சாட்டு.
    • பல தலைவர்கள் பல லட்சங்களை சம்பாதித்திருப்பார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பா.ஜ.க. நேற்று ஒரு நாள் மட்டும் பங்குச்சந்தையில் பல லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர்கூறியதாவது:-

    எதற்காக நேற்றைய தினம் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் பங்குச்சந்தை ஏறியது, அதுமட்டுமில்லாமல் இன்று ஏன் 10 ஆயிரம் புள்ளிகள் பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது. என்ன காரணம்?

    வாக்கு எண்ணிக்கை ஒருநாள் விட்டு 1-ந்தேதி நடைபெற்றிருக்க வேண்டும். ஏன் 2-ந்தேதி பா.ஜ.க. வாக்கு எண்ணிக்கையை வைக்கவில்லை? ஏனென்றால் பா.ஜ.க. நேற்று ஒரு நாளில் மட்டும் பல லட்சம் கோடிகளை பங்குச்சந்தையில் சம்பாதித்துள்ளது.

    பங்குச்சந்தையில் லாங், ஷாட் என்று சொல்வார்கள் இதில் ஷாட்டில் சென்று அனைத்து முதலீடுகளை வாங்கிவிட்டனர். அதனை நேற்று மாலையே விற்றுவிட்டனர். இன்று மேலும் வாங்குவார்கள் இதில் பா.ஜ.க.வுக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்துள்ளது. இதில் பல தலைவர்கள் பல லட்சங்களை சம்பாதித்திருப்பார்கள் என்பது போகப்போக விசாரணையில் தெரியவரும்.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.

    • இந்தியா இன்று 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
    • தற்போது நமது சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால் பங்குச்சந்தையில் ரூ.38 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. எனவே இதுகுறித்து விரிவான விசாரணை தேவை என கோரியிருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரான பியூஷ் கோயல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    பங்குச்சந்தை முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்த சதி செய்கிறார். முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார். பங்குச்சந்தை தொடர்பான ராகுல் காந்தி குற்றச்சாட்டு ஆதாரமற்றவை.

    இந்தியா இன்று 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக நமது சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.

    இந்தியாவின் பங்குச்சந்தை உலகின் முதல் 5 பொருளாதாரங்களின் சந்தை மூலதனத்தில் நுழைந்துள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை மூலதனம் 4 மடங்கு அதிகரித்துள்ளது என்பதை நாம் அறிவோம்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது அப்போது இந்தியாவின் சந்தை மதிப்பு ரூ.67 லட்சம் கோடியாக இருந்தது. இன்று சந்தை மதிப்பு ரூ.415 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    • நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இன்றைய இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது.
    • இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது.

    நேற்று [ஜூலை 2] மும்பை பங்குச் சந்தை குறியீட்டு [BSE] சென்செக்ஸ் 79,856 என்று சாதனையை எட்டிய பின்னர் 31 புள்ளிகள் குறைந்து 79,441 என்ற புள்ளிகணக்கில் முடிவடைந்தது. மேலும் நேற்றைய தினம் தேசிய பங்குச் சந்தை குறியீடு எண் [NSE] நிஃப்டி குறியீடு 24,124 என்ற புள்ளிகணக்கில் நிலைபெற்று முடிவடைந்தது.

    இந்நிலையில் நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகணக்கிலும் நிஃப்டி 172 புள்ளிகள் அதிகரித்து 24,296 என்ற புள்ளிகணக்கிலும் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

     

    HDFC வங்கியால் இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.  

     

    • போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள் உடபட பல்வேறு தொழில்கள் முடங்கின
    • பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், வங்கிகள், பங்கு சந்தைகள் உள்பட பல்வேறு முக்கிய அத்தியாவசிய சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்டிரைக்' என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று நடந்த சென்சார் மென்பொருள் அப்டேட்டில் குளறுபடி ஏற்பட்டதால் மைக்ரோசாப்ட் சர்வர்கள் முடங்கின. இந்த சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் கணினி மற்றும் மடி கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி பல்வேறு சேவைகள் முடங்கியது.

    பாதிப்புகள் ஓரளவு சரிசெய்யப்பட்ட நிலையில்பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.மைக்ரோசாப்ட் பங்குகள் 0.74 சதவீதம் சரிந்துள்ள்ள நிலையில் Crowdstrike பங்குகள் 11.10 சதவீதம் வரையில்  சரிந்துள்ளன. இந்த பாதிப்புகளால் Crowdstrike நிறுவனம் 9 பில்லியன் டாலர்கள் [சுமார் ரூ.75,350 கோடி] சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.

    • ஆகஸ்ட் 12 வரை நடைபெற இருந்த நாடாளுமன்ற கூட்டம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது
    • நாளை இந்திய பங்குச்சந்தையில் சரிவு ஏற்படலாம் என்று முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்

    அதானி vs ஹிண்டன்பர்க் 

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன் பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பான தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.

     

    அதானி - செபி தொடர்பு 

    இதற்கிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செபியின் தலைவரான தலைவர் மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. எனவே தான் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த பொது நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

     

    பயிரை மேயும் வேலி

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பி வெளியிட்டுள்ள பதிவில், யார் பாதுகாக்க வேண்டுமோ அவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறார், நாடாளுமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் இப்போது தான் தெரிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

     

    திறந்த புத்தகம் 

    இதற்கிடையில் இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று அதானி குழுமம் மறுத்துள்ளது. . ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானவை, உள்நோக்கம் கொண்டவை, அடிப்படை ஆதாரமற்றவை. எங்களுடைய வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படைத்தன்மை கொண்டவை. ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய நபர்களுடன் அதானி நிறுவனம் எனது ஒரு வணிக தொடர்பும் மேற்கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. செபி தலைவர் மாதாபாய் புரி புச் மற்றும் அவரது கணவரும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். தங்களது வணிக நடவடிக்கைகள் அனைத்தும் திறந்த புத்தகம் போல வெளிப்படையாக உள்ளன என்று தெரிவித்துள்ளனர். இந்த புதிய ஹிண்டன்பர்க் அறிக்கையால் நாளை இந்திய பங்குச்சந்தையில் சரிவு ஏற்படலாம் என்று முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்அதானி குழுமத்தில் செபி தலைவரின் பங்குகள் இருபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றச்சாட்டு

     

    • அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 46.65 ரூபாய் குறைந்து 3,140.90 ரூபாயாக உள்ளது.
    • அதானி போர்ட் பங்கு இன்று 35.80 ரூபாய் குறைந்து 1,498 ரூபாயாக உள்ளது.

    அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர் என்று ஹிண்டர்பர்க் நேற்றுமுன்தினம் கூறியிருந்தது.

    இதனால் திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கும். முதலீட்டார்கள் லட்சக்கணக்கான கோடிகளை இழக்கும் அபாயும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்பட்டது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்திருந்தது.

    இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளுடன் ஆரம்பானது. அப்போது சுமார் 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமானது. அதன்பின் மெல்லமெல்ல வர்த்தகம் உயர்வை கண்டது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,106.18 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக 3.30 மணிக்கு வர்த்தகம் சென்செக்ஸ் 79,648.92 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை நிறைவடைந்ததை வர்த்தகம் 56.99 சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து நிறைவடைந்தது.

    இந்திய பங்குச்சந்தை நிஃப்டி வெள்ளிக்கிழமை 24,367.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு 24,320.05 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. சுமார் 47 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் இன்று அதிகபட்சமாக 105 புள்ளிகள் அதிகரித்து 24,472.80 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக நிஃப்டி 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்ததை விட 20.50 சதவீதம் குறைவாகும்.

    அதானியின் டோட்டல் கியாஸ் லிமிடெட் பங்கு 3.95 சதவீதம் குறைந்த 835.50 ரூபாயாக இருந்தது. இன்று 34.35 ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.

    அதானி எனர்ஜி பங்கு 3.25 சதவீதம் குறைந்து 1067.90 ரூபாயாக உள்ளது. இன்று 35.90 ரூபாய் குறைந்துள்ளது. என்டிடிவி பங்கு 2.32 சதவீதம் குறைந்த 203.50 ரூபாயாக உள்ளது. 4.83 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி பவர் பங்கு 1.24 சதவீதம் குறைந்த 687 ரூபாய் உடன் நிறைவடைந்தது. இன்று 8.40 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி வில்மர் லிமிடெட் பங்கு 4.10 சதவீதம் குறைந்து 369.35 ரூபாயுடன் நிறைவடைந்தது. இன்று 15.80 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 1.46 சதவீதம் குறைந்து 3,140.90 ரூபாய் உடன் உள்ளது. இன்று 46.65 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி போர்ட் பங்கு இன்று 2.33 சதவீதம் குறைந்துள்ளது. 1,498 ரூபாயாக உள்ளது. இன்று 35.80 ரூபாய் குறைந்துள்ளது.

    • அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச்சந்தைகள் உயர்ந்த நிலையில் இந்திய பங்குச்சந்தைகளும் உயர்ந்து காணப்பட்டது.
    • ஐ.டி. நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டார்கள் ஆர்வம் காட்டியது உயர்வுக்கு முக்கிய காரணம்.

    மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,330.96 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்த பங்குசந்தை இன்று உயர்ந்து காணப்பட்டது.

    நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 79,105.88 புள்ளிகளுடன் வர்த்தம் நிறைவடைந்தது. இன்று காலை 79754.85 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. சுமார் 650 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. இடையில் குறைந்தபட்சமாக 79,306.69 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 80,518.21 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக சென்செக்ஸ் 80,436.84 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஏறக்குறைய 1.68 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது.

    டெக் மஹிந்த்ரா, மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா, டாட்டா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், ஐசிஐசிஐ வங்கி, டாட்டா ஸ்டீல் நிறுவன பங்குகள் உயர்வை கண்டன.

    இந்திய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 397.40 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தை நிஃப்டி நேற்றுமுன்தினம் 24143.75 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 24563.90 புள்ளிகளுடன் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக நிஃப்டி 24204.50 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 24563.90 புள்ளிகளில் வர்த்தமானது. இறுதியாக 24541.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ஆசிய சந்தைகளான சியோல், டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் உயர்வுடன் முடிவடைந்தன. அதேபோல் ஐரோப்பிய சந்தைகளில் பெரும்பாலானவை க்ரீனில் முடிவடைந்தது, அமெரிக்க சந்தைகளும் (வியாழக்கிழமை) ஏறுமுகத்துடன் நிறைவடைந்தது.

    ×