என் மலர்
நீங்கள் தேடியது "பிரசாந்த் கிஷோர்"
- பீகாரின் முதல் மந்திரியாக 5 மாதங்கள் மட்டுமே நிதிஷ்குமார் இருப்பார்.
- பா.ஜ.க. ஒருபோதும் நிதிஷ்குமாரை மீண்டும் முதலமைச்சராக விடாது என்றார்.
பாட்னா:
பீகார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கோட்டையாக உள்ள ரகோபூர் தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன். கட்சி முடிவு செய்தால், நான் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவேன்.
தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ரகோபூரில் இருந்து போட்டியிட வேண்டும் என கட்சி விரும்பினால் நான் போட்டியிடுவேன்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொரோனா கால ஆட்சியால் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். நிதிஷ்குமார் தனது கடைசி அரசியல் இன்னிங்சில் இருக்கிறார்.
பா.ஜ.க. ஒருபோதும் நிதிஷ்குமாரை மீண்டும் முதலமைச்சராக விடாது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்காது.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ்குமார் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது. எனவே அவர் பீகாரின் முதல் மந்திரியாக 5 மாதங்கள் மட்டுமே இருப்பார் என தெரிவித்தார்.
- கர்நாடகாவில் தற்போது தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
- கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் வெற்றிக்காக தீவிரம் காட்டி வருகின்றன.
தேர்தல் வந்துவிட்டாலே கள நிலவரம், மக்களின் மனநிலை, சர்வேக்கள் நடத்துவது, பிரசார வியூகம், சமூக வலைதளங்கள் என பல்வேறு விஷயங்களை கையாள வேண்டும்.
அதற்கு தேர்தல் வியூக நிறுவனங்களின் தேவை அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இதை தொடங்கி வைத்தது யார் என எண்ணி பார்த்தால் பிரசாந்த் கிஷோர் தான் நினைவிற்கு வருவார்.
தற்போது இவர் தேர்தல் வியூக நிபுணர் பதவியில் இருந்து ஓய்வுபெற்று விட்டு பீகார் மாநிலத்திற்கு சென்று விட்டார். அங்கு அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இவரது நிறுவனம் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது.
பிரசாந்த் கிஷோரிடம் பயிற்சி பெற்ற அவரது சீடர்கள் தற்போது அந்த பணியை செய்து வருகிறார்கள். தற்போது இவர்களை கர்நாடக அரசியல் கட்சிகள் குறி வைத்துள்ளன. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க., தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சியை பிடித்த போது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது ஐபேக் நிறுவனமும், பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த வியூகமும் தான். அதன்பிறகு பிரசாத் கிஷோரின் எனும் பி.கே.யின் புகழ் பரவியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் பகுதி பி.கே.வை அழைக்க தொடங்கினர்.
கர்நாடகாவில் தற்போது தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் வெற்றிக்காக தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி எம்.எல்.ஏக்களும் தனியாக தேர்தல் வியூக நிபுணர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். பி.கே. சீடர்கள் மூலம் தாங்கள் போட்டியிடும் தொகுதியின் கள நிலவரத்தை அறிந்து, பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்காக சுமார் 50 தேர்தல் வியூக நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு களப்பணியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் பணியாற்றும் நபர்கள், 'நாங்கலாம் பி.கே பாய்ஸ்' என்று பெருமையாக கூறி வருகிறார்களாம். அதுமட்டுமின்றி இந்த பெயரால் ஒரு நம்பகத்தன்மையும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
பா.ஜ.க.வை பொறுத்த வரை 'வராஹி' என்ற பெயரில் தேர்தல் வியூக நிறுவனத்தை கட்டமைத்துள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் தேர்தல் பணிகளை ஆற்ற முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியானது 'மைண்ட் ஷேர்' என்ற நிறுவனத்தை வேலையில் அமர்த்தியுள்ளது. இவை இரண்டில் பணியாற்றும் நபர்களும் பிரசாந்த் கிஷோரிடம் அரசியல் பாடம் கற்றவர்கள்.
இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பலரை தேர்தல் வியூகத்திற்காக நியமித்துள்ளது. இவர்களும் பி.கே மற்றும் ஐபேக் உடன் தொடர்புடையவர்கள். தேர்தல் அரசியலில் வியூக நிபுணர்களை பயன்படுத்துவதில் மூத்த அரசியல் கட்சிகளும் விதிவிலக்கல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரசாந்த் கிஷோர் அவரது மாநிலத்தில் கட்சி தொடங்கப் போகிறார்.
- தமிழ் மக்கள் பற்றி என்ன தெரியும். நான் தமிழன். தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது:-
"வட மாநிலத்தவர்கள் தான் இதுவரை தமிழ் மக்களை தாக்கியுள்ளனர். பிரசாந்த் கிஷோர் அவரது மாநிலத்தில் கட்சி தொடங்கப் போகிறார். அதனால் பீகார் மாநில மக்களுக்கு ஆதரவாக எதையாவது பேசுகிறார். அவருக்கு தமிழ் மக்கள் பற்றி என்ன தெரியும். நான் தமிழன். தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன்.
நான் பேசிய வீடியோவை அவருக்கு அனுப்பி, அவர் அங்கிருந்து டுவிட்டரில் பதிவிட்டு, இங்கிருக்கும் காவல் துறை உடனே வழக்கு பதிவும் செய்து, அவரிடம் தகவல் சொல்கிறது. இதுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் பீகாரில் இருக்கும் அவர் தான் என்பது இப்போது தான் தெரிகிறது" என்றார்.
- பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.
- நான் சட்ட நிபுணர் அல்ல.
புதுடெல்லி :
ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி, எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் (தேர்தல் வியூக வல்லுனர்) ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதில் அவர்...
நான் சட்ட நிபுணர் அல்ல. இருப்பினும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக தோன்றுகிறது. இது முதல் நிகழ்வும் அல்ல, கடைசி நிகழ்வாகவும் இருக்காது.
சிறிய இதயம் படைத்த யாரும் மாமனிதர்களாக மாற மாட்டார்கள் என்ற அடல்பிகாரி வாஜ்பாயியின் பிரபலமான வரியை மத்திய அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அவர்கள் பெரிய மனதைக் காட்டி இருக்க வேண்டும். அவர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருந்து இருக்க வேண்டும். ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, அங்கு நிவாரணம் கிடைக்காதபோது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சந்திரபாபு நாயுடு மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
- ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் கடந்த ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகம் வகுத்தார். இதில் ஜெகன்மோகன் ரெட்டி மாபெரும் வெற்றி பெற்று முதல் மந்திரியானார்.
இந்த நிலையில் இந்த முறையும் பிரசாந்த் கிஷோர் தான் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொடுப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத விதத்தில் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் இருவரும் ஒன்றாக வெளியே வந்தனர்.
அதன் பிறகு இருவரும் ஒரே காரில் சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டிக்கு வெற்றி பாதை அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் இந்த முறை திடீரென தேர்தலுக்கு முன்பாக சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில்:-
சந்திரபாபு நாயுடு ஒரு மூத்த தலைவர். அவர் என்னை சந்திக்க வேண்டும் என விரும்பினார். அதன்படி அவரை சந்தித்தேன்.
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. வேறு எதுவும் இல்லை என்றார்.
- தேர்தல் வியூக அமைப்பாளர்கள் பல நூறு கோடி கட்டணம் பெறுகின்றனர்
- ராகுல், 10 வருடங்களில் பல தோல்விகளுக்கு பிறகும் சரியான பாதையில் செல்கிறார்
இவ்வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
2014 பொதுத்தேர்தலில் தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் வெல்வதற்கான வியூகங்களை அமைத்து தரும் நிபுணர்கள் முன்னிலை வகிக்க ஆரம்பித்தனர். அவர்கள் வகுத்து தரும் திட்டங்களுக்கு ஏற்ப கட்சிகள் தேர்தல் நேரங்களில் செயல்படத் தொடங்கின.
பல நூறு கோடிகளை கட்டணமாக வசூலித்த இத்தகைய அரசியல் வியூக அமைப்பாளர்களின் திட்டங்கள், சில நேரங்களில் சில கட்சிகளுக்கு வெற்றியை கொடுத்தது.
தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநில ரோஹ்தாஸ் மாவட்டத்தை சேர்ந்த "பிகே" என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் (Prashant Kishor).

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பிகே தெரிவித்ததாவது:
புலனாய்வு அமைப்புகளினால் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு அரசியல் பிரமுகர், பா.ஜ.க.வில் இணைந்து விட்டால், அவர் மீது நடவடிக்கைகள் நின்று விடுகின்றன. இது பிரதமர் நரேந்திர மோடி கூறி வரும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானது.
பா.ஜ.க. பெரிதளவு மோடியை சார்ந்தே இருப்பது அக்கட்சியின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியலாம்.
அடுத்து வரும் தேர்தல்களில் 90 சதவீதம் பா.ஜ.க. தோற்றால் மோடி மக்களை சந்திக்க தயங்குவார்.
ஆனால், ராகுல் காந்தி கடந்த 10 வருடங்களில் பல தோல்விகளுக்கு பிறகும், நேர்மறையாக, தான் செல்ல நினைக்கும் பாதையிலேயே சரியாக செல்கிறார்.
ராகுலுக்கு மன உறுதி அதிகம்.
ஆனால், தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அவர் பாத யாத்திரை செல்வது சரியான முடிவு அல்ல. போர் நடக்கும் போது தளபதி, தலைமையகத்தில் இருந்து தனது படையினருக்கு வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்கவில்லை.
- ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.
திருப்பதி:
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆந்திராவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தோல்வியை சந்திப்பார். அது சாதாரண தோல்வி அல்ல. மிகப்பெரிய தோல்வியை அவரால் தவிர்க்க முடியாது.
ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்க வில்லை. வேலை வாய்ப்புக்காக வேலை தேடி அலைகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து வளங்களையும் ஒரு சில பிரச்சினைகளுக்காக செலவழித்து ஆந்திராவின் வளர்ச்சியை புறக்கணித்தது ஜெகன்மோகன் ரெட்டி பெரிய தவறு செய்துவிட்டார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் தற்போதைய நிலையை பார்க்கும் போது மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். அதுபோல் இல்லாமல் அரண்மனைகளில் தங்கி மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நினைக்கிறார்கள்.
இதுபோன்ற அணுகு முறையால் மக்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் சிறந்த பாத்திரமாக விளங்க வேண்டும். ஆனால் பல தலைவர்கள் தங்களை பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குபவர்களாகவே பார்க்கின்றனர்.
அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் பெரும் விலை கொடுக்க வேண்டியது வரும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற முடியாது.
பொதுமக்கள் மாறி மாறி வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை.
- ராகுல் காந்தி தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை. ஆனாலும் தற்போதும் அவர் தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார். மற்றவர்கள் கட்சியை வழிநடத்த அவர் அனுமதிக்கவில்லை.
நடைமுறையில் என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறதோ அத்தனையையும் ராகுல் காந்தி முயற்சி செய்து பார்த்து வருகிறார். ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளில் அவரால் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் வேறு யாரையும் வழிநடத்தவும் அவர் விடவில்லை. என்னை பொறுத்தவரை இது ஜனநாயக விரோதம்.
கடந்த 10 வருடமாக இந்த வேலையை செய்து வெற்றி பெறாமல் இருக்கும் போது அவர் ஓய்வெடுத்து எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. 5 ஆண்டுகள் வேறு யாரிடமாவது பொறுப்பை ஒப்படைக்கலாம். இதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. ராஜீவ் காந்தி இறந்த போது சோனியா காந்தி இதை செய்தார்.
ராகுல் காந்தி தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு உதவி தேவை என்பதை உணரவில்லை. என்றால் யாராலும் உங்களுக்கு உதவ முடியாது. தான் நினைப்பதை செய்யக்கூடிய ஒருவர் நமக்கு தேவை என்று அவர் நம்புகிறார். அது சாத்தியமில்லை.
2019-ம் ஆண்டு காங்கிரஸ் படுதோல்வி அடைந்த போது கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், கட்சியை வேறு யாராவது வழி நடத்தட்டும் என்றும் அவர் எழுதினார். ஆனால் அவர் சொன்னதுக்கு மாறாக நடந்து வருகிறார். தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும் முக்கிய முடிவுகள் எடுப்பதில் ராகுல் தான் இறுதியானவர்.

ஒரு தொகுதி தொடர்பான முடிவுகளுக்கு கூட ராகுல் காந்தியின் ஒப்புதல் தேவை என்பதை பல தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்வார்கள்.
எந்த ஒரு தனிநபரையும் விட காங்கிரசும், அதன் ஆதரவாளர்களும் பெரியவர்கள் என்பதால் கட்சிக்கு வழிவிடுவதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கக் கூடாது. காங்கிரசில் ஒரு கட்சியாக மட்டும் பார்க்க கூடாது. நாட்டின் அது பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தை ஒரு போதும் முடிவுக்கு கொண்டு வந்து விட முடியாது. அது சாத்திய மில்லை.
காங்கிரஸ் அதன் வரலாற்றில் பல முறை பரிணாம வளர்ச்சி அடைந்து, மறு பிறவி எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் ஊடகங்கள் போன்ற அமைப்புகள் சமரசம் செய்து கொண்டதால் தனது கட்சி தேர்தலில் பின்னடைவை சந்தித்து வருகிறது என்று ராகுல் காந்தி கூறுவது உண்மையல்ல.
2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. ஆனால் அப்போதே 206 இடங்களில் இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பிலேயே குறைபாடுகள் இருக்கிறது. அதை சரிசெய்வது வெற்றிக்கு அவசியம்.
நீங்கள் கடந்த 1984-ம் ஆண்டு முதல் தேர்தல்களை பார்த்தீர்கள் என்றால் அதில் வாக்கு சதவிகிதம் மற்றும் மக்களவை, சட்டமன்ற தொகுதிகளில் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. காங்கிரசில் இப்போது சிக்கல் என்பது தனிப்பட்ட நபர்களால் வருவது அல்ல. அது கட்சியின் கட்டமைப்பில் இருக்கும் சிக்கல்.
மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தாலும் கட்சியை நான்தான் அதில் இருந்து மீட்பேன் என்று ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கக் கூடாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால் ராகுல் காந்தி ஒதுங்கி வழிவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றுள்ளனர்.
- ஆந்திரா தேர்தல் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
ஆந்திரா தேர்தல் குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 67 இடங்கள் மட்டுமே கிடைக்கும். தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 இடங்களில் வெற்றி பெறும்.
இதே போல 25 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி 15 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ச்சியான தவறுகளை செய்துள்ளார். முதலில் அவர் தனது அம்மாவையும் சகோதரியையும் பார்த்திருக்க வேண்டும். இருவரும் அவருக்கு எதிராக இருக்கிறார்கள்.
2019 தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றுள்ளனர். அதுவே அவருக்கு ஆபத்தானது.
கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜா போல நடத்தினார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல அவர் நடந்து கொள்ளவில்லை. மேலும் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு துரோகம் செய்துள்ளார். 2019 தேர்தலில் நாங்கள் உதவி இருக்காவிட்டால் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திரா தேர்தல் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆட்சிக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தால் மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள்.
- ஆனால், நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் நாம் மக்களின் கோபத்தை கேட்கவில்லை.
தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்தார். அப்போது மக்களவை தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது குறித்து தனது பார்வையை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஜூன் 4-ந்தேதி முடிவு என்னதாக இருக்கும் என்பதை எதிர்காலம் காட்டும். ஆனால் பத்திரிகையாளரக்ள், நிபுணர்கள் போன்றோர் தங்களது கருத்துகளை கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்த வரையில், நிலைத்தன்மை (தொடர்ந்து விசயத்தை கூறுவது) சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுவேன்.
கடந்த ஐந்து மாதங்களாக நீங்கள் தேர்தலை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள் என்பது விசயம் இல்லை. பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறேன். கடந்த தேர்தலில் பிடித்த அதே இடங்களை பிடிக்கும் அல்லது கூடுதலாக சில இடங்களை பிடிக்கும்.
அடிப்படையை நாம் பார்க்க வேண்டும். ஆட்சிக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தால், மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால், நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் நாம் மக்களின் கோபத்தை கேட்கவில்லை. ஏமாற்றங்கள், ஆசைகள் நிறைவேறாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாடு தழுவிய கோபத்தை கேட்கவில்லை.
இந்த நபர் ஆட்சிக்கு வந்தால் நம்முடைய நிலை முன்னேற்றம் அடையும் என மக்கள் உணர்வதாக வைத்துக் கொண்டால் ராகுல் காந்தி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நாம் எங்கேயும் கேட்க முடியவில்லை. அவருடைய ஆதரவாளர்கள் சொல்லலாம். நான் நாடு தழுவிய அளவில் பேசிக் கொண்டிருக்கிறேன்.
பதவியில் இருப்பவருக்கு எதிராக பரவலான கோபமோ அல்லது சவாலாக இருக்கும் எதிர்ப்பு குரலோ இல்லை. அதனால் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன்.
கிழக்கு மற்றும் தெற்கில் சுமார் 225 இடங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு பா.ஜனதா மிகப்பெரிய அளவில் சோபிக்கவில்லை. 50-க்கும் குறைவான இடங்களைத்தான் தற்போது வைத்துள்ளது. அவர்கள் தோல்வியடைந்தால், அவர்கள் வடக்கு மற்றும் மேற்கில் சறுக்கியிருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டியது அவசியம். என்னுடைய மதிப்பிட்டின்படி அப்படி இல்லை. ஆனுால், கிழக்கு மற்றும் தெற்கில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்றத்தில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை.
- பாரதிய ஜனதா கட்சி 3-வது முறையாக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சுமார் 300 இடங்களை கைப்பற்றும் என்று பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் மற்றொரு அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவும் அதேபோன்று கருத்தை தற்போது வெளியிட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
பாரதிய ஜனதா கட்சிக்கு தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் 240 முதல் 260 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளுக்கு 35 முதல் 45 இடங்கள் வரை கிடைக்கலாம்.

எனவே பாரதிய ஜனதா கூட்டணிக்கு மொத்தம் உள்ள 543 இடங்களில் 275 முதல் 305 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 3-வது முறையாக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
பாராளுமன்றத்தில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. ஆகையால் எந்த கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஜூன் 14-ந்தேதி உங்களுக்கு விடை தெரிந்து விடும்.
இவ்வாறு அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டில் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
- 2019-ம் ஆண்டில் அக்கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:
பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவார்.
பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை.
காங்கிரஸ் 55 தொகுதிகளில் இருந்து 65 அல்லது 68 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பது என்பது பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்? என தெரிவித்தார்.
2014-ம் ஆண்டில் 44 தொகுதிகளிலும், 2019-ம் ஆண்டில் 52 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.