search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெர்மனி"

    • பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
    • ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டது.

    மும்பை:

    மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கிக்கு திருப்பிவிடப்பட்டது. அங்கு பத்திரமாக தரைறக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது எக்ஸ் தளத்தில், "பிராங்பேர்ட் நகருக்கு சென்ற விமானம், பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

    • கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பல பகுதிகளில் குத்தியும் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்
    • இந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    ஜெர்மனி நாட்டில் சொலிங்ஜென் நகரில் நூற்றுக்கணக்கனோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்து மர்ம நபர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சொலிங்ஜென் நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சொலிங்ஜென் நகரின் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றபோது இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பல பகுதிகளில் குத்தியும் 2 ஆண்கள் [வயது 56, 67] மற்றும் ஒரு பெண்ணை[வயது 56] கொடூரமாக கொன்றுளளார். இந்த தாக்குதலில் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

     

    சம்பவம் குறித்துத் தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்நதனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 15 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து நடத்தி வரும் நிலையில் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடியதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயது நபரைக் கைது செய்துள்ளனர்.

     

    இதற்கிடையே இந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்குப் பழிவாங்க இந்த தாக்குதலை நடந்தியகாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    கைது செய்யப்பட்ட 26 வயது நபருக்கும், ஐ.எஸ். அமைப்புக்கும் இருக்கும் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். 165,000 மக்கள் வாழும் சொலிங்ஜென் நகரம் அங்குள்ள மிகப்பெரிய கத்தி தயாரிப்பு தொழிற்சாலைக்கு பெயர் போனது குறிப்பிடத்தக்கது.

    • எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
    • ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

    உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார்.

    எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் 65,000 காபி கோப்பைகள் காணாமல் போயுள்ளதாக அந்த ஆலையின் மேனேஜர் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    அந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில், ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

    சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் உலகளவில் அந்நிறுவனத்தின் 10% பணியாளர்களைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்தார். இது டெஸ்லா நிறுவனத்தின் ஜெர்மன் ஊழியர்களை கவலையடையச் செய்தது.

    இந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் பணிப்பாதுகாப்பு, குறைவான ஊதியம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

    .

    • யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பேயர்ன் முனிச் அணியுடன் ஒரு தொடரில் விளையாடுவதற்காக தாமஸ் முல்லர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதில், ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் ஜெர்மனி தோல்வியடைந்தது.

    இதனையடுத்து, அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி க்ராஸ் அறிவித்தார்.

    டோனி க்ராசை தொடர்ந்து ஜெர்மனி அணியின் மற்றொரு முன்னணி வீரரான தாமஸ் முல்லரும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    பேயர்ன் முனிச் அணியுடன் மேலும் ஒரு தொடரில் விளையாடுவதற்காக தாமஸ் முல்லர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் ஜெர்மன் அணிக்காக இனிமேல் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • என் நாட்டுக்காக கடைசி ஆட்டத்தை விளையாடினேன்.
    • ஜெர்மனி அணிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

    ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான நேற்றைய காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    இதைதொடர்ந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணியுடன் ஸ்பெயின் அணி பலப்பரீச்சை செய்ய உள்ளது.

    இந்நிலையில், அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி க்ராஸ் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "என் நாட்டுக்காக கடைசி ஆட்டத்தை விளையாடினேன், அணியைப் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஜெர்மனி அணிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது, வரும் காலங்களில் அவர்களை டிவியில் பார்ப்பேன்" என்று தெரிவித்தார்.

    பிரபல ஜெர்மனி கால்பந்து வீரர் டோனி க்ராஸ், சர்வதேச போட்டியில் ஜெர்மனி அணிக்காக 108 ஆட்டங்களில் ஆடி 17 கோல்கள் அடித்துள்ளார்.

    ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப்புக்காக 2014-ம் ஆண்டு முதல் டோனி க்ராஸ் விளையாடி வருகிறார். அந்த கிளப் 22 பட்டங்கள் வெல்வதற்கு அவர் உதவிகரமாக இருந்துள்ளார்.

    • 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 2 அணிகளிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை
    • கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் தொடர் ஆகும்

    யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் ஜெர்மனியின் ஹாம்பெர்க் நகரில் வைத்து அனல் தெறிக்க நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் அணிகள் நேற்று நடந்த காலிறுதியில் பலப் பரீட்ச்சை செய்தன. 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 2 அணிகளிலும் ஒரு கோல் கூட அடிக்காததால் வெற்றியை பெனால்டி மூலம் தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

    பெனால்டி ஆட்டத்தில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெர்னார்டோ சிலவா, நினா மெண்டிஸ் ஆகோயோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆனால் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி 5-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஸ்பெயினுடன் பிரான்ஸ் மோத உள்ளது.

    நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் போர்ச்சுகல் தொடரில் இருந்து தற்போது வெளியேறியுள்ளது மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது. மைதானத்தில் உணர்ச்சி வயப்பட்டு காணப்பட்டார். தோல்வியால் அழுத்த பெபேவுக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக இந்த தொடரோடு யூரோ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரொனால்டோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • டேனி ஆல்மோ ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயினை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.
    • மிகெல் மெரினோ தலையால் முட்டி அடித்த அதிரடி கோல் அந்த அணியின் வெற்றிக்கு அச்சாரமானது.

    யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் நடந்து வரும் நிலையில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான நேற்றைய காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியின் 51 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றைஅடித்து ஸ்பெயின் வீரர் டேனி ஆல்மோ ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயினை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.

     

    பின் ஆட்டத்தின் மறு பாதியில் 89 வது நிமிடத்தில் ஜெர்மன் அணி வீரர் ஃபுளோரியன் ரிட்ஸ் அணியின் முதல் கோலை பதிவு செய்தார். 90 நிமிடங்கள் முடிவில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்ததால் ஆட்டம் கூடுதல் நேரம் நீடித்தது.

    இறுதியாக ஆட்டம் முடிய 1 நிமிடம் மட்டுமே இருந்த தருவாயில் ஸ்பெயின் வீரர் மிகெல் மெரினோ தலையால் முட்டி அடித்த அதிரடி கோல் அந்த அணியின் வெற்றிக்கு அச்சாரமானது. இதைதொடர்ந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணியுடன் ஸ்பெயின் அணி பலப்பரீச்சை செய்ய உள்ளது.

     

    • ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் முறியடித்தார்.
    • ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

    யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 0-0 என்ற கோல் கணக்கில் இரண்டு அணிகளும் இருந்ததால் பெனால்டி கோல் வாய்ப்பு வழங்கப்பட்டது.

     

    அப்போது இந்த போட்டியில் தனது முதலாவது கோலை அடிக்க முயன்ற போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் முறியடித்தார். கோலை மிஸ் செய்த அதிர்ச்சியில் ரொனால்டோவின் கணகளில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.

    ஆனால் அதன்பின்னர் சுதாரித்த ரொனால்டோ போட்டியின் அடுத்த பாதியில் போர்ச்சுகல் அணிக்கான முதல் கோலை ஸ்கோர் செய்து தொடர்ந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் தனது முதல் கோலை மிஸ் செய்ததால் ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

     

    சமீபத்தில் சவுதி யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தனது அல்- நாசர் அணி தோல்வி அடைந்ததால் ரொனால்டோ மைத்தனத்தில் கதறி அழுத்து குறிப்பிடத்தக்கது. 

     

    • ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது.
    • போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.

    கொலோன்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-சுலோவாக்கியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

    சுலோவாக்கியா அணிக்காக 25-வது நிமிடத்தில் இவான் ஷ்ரான்ஸ் கோல் அடித்தார். ஆட்டம் நிறைவடையும் தருவாயில் இங்கிலாந்துக்காக பெல்லிங்காம் கோல் அடித்தார். கடைசி நிமிட கோலால் இங்கிலாந்து தோல்வியில் இருந்து தப்பியது.

    இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி கால்இறுதியில் சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த மற்றொரு 2-வது சுற்று போட்டியில் ஸ்பெயின்- ஜார்ஜியா அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

    ஸ்பெயின் அணியில் ரோட்ரி (39-வது நிமிடம்), ரூயிஸ் (51), வில்லியம்ஸ் (75), ஒல்மோ(91) கோல் அடித்தனர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நார்மென்ட் அடித்த சுயகோலால் ஜார்ஜியாவுக்கு ஒரு கோல் கிடைத்தது.

    ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.

    • யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது.
    • நேற்று ஜெர்மனி அணி மற்றும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின.

    யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது. நேற்று ஜெர்மனி அணி மற்றும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின. இரண்டு அணிகளும் தரவரிசை பட்டியலில் கடைசியில் இருந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்தது.

    தரவரிசை பட்டியலில் ஜெர்மனி அணி 6 புள்ளிகளிலும், சுவிட்சர்லாந்து அணி 4 புள்ளிகளிலும் இருப்பது குறிப்பிடத்தக்கத்து. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்தி விளையாடினர். ஆட்ட முடிவில் இரு அணியும் தலா 1 கோல் எடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் தரவரிசை பட்டியலில் ஜெர்மனி சுவிட்சர்லாந்து அணியைவிட முன்னிலையில் இருக்கிறது.

    • ஹங்கேரி அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.
    • அந்த அணி முதல் கோலை அடித்தது.

    யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஹங்கேரி அணிகள் மோதின. இந்த போட்டியில் ஹங்கேரி அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    முந்தைய போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை வெற்றி பெற்ற நிலையில், ஹங்கேரியை வீழ்த்தும் முனைப்பில் ஜெர்மனி அணி விளையாடியது. போட்டியின் முதல் பத்து நிமிடங்களில் ஜெர்மனி களத்தில் செட் ஆகும் வரை மட்டும் ஹங்கேரி வீரர்கள் ஆதிக்கம் இருந்தது. திடீரென இந்த நிலையில், மாற்றம் ஏற்பட்டது.

    ஜெர்மனி வீரர்கள் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். இதற்கு பலன் அளிக்கும் வகையில், ஜெர்மனி அணி முதல் கோலை அடித்தது. இதைத் தொடர்ந்து ஹங்கேரி அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. முதல் பாதியில் ஜெர்மனி அணி ஒரு கோலில் முன்னிலை வகித்தது.

    எனினும், இரண்டாவது பாதியிலும் கோல் அடிக்கும் முனைப்பில் ஜெர்மனி தீவிரம் காட்டியது. அந்த வகையில் ஜெர்மனி வீரர் குண்டோகன் தனது 19 வது சர்வதேச கோல் அடிக்க, அந்த அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து போட்டி முழுக்க ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் ஜெர்மனி அணி 2-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஜெர்மனி அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஹங்கேரி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் க்ரூப் இ பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஸ்லோவாகியா அணி மோதின. போட்டியில் முதல் கோலை ஸ்லோவேகியா அணி 56 நிமிடத்தில் அடித்தது.

    இதையடுத்து பெல்ஜியம் அணியால் எவ்வளவு போராடியும் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் இந்த போட்டியில் ஸ்லோவேகியா அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் க்ரூப் இ பிரிவில் ஸ்லோவேகியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத வெற்றியாகும்.ஸ்டனீஸ்லாவ்  ரொபொட் ஆட்ட நாய்கனாக் தேர்வு செய்யப்பட்டார்.

    ×