என் மலர்
நீங்கள் தேடியது "கஞ்சா கடத்தல்"
- லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்ற வாலிபரிடம் சோதனை செய்தனர். பையில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:
ஆந்திரா மாநிலத்தில் இருந்து செங்குன்றம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மலர்செல்வி தலைமையிலான போலீசார் செங்குன்றம், பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்ற வாலிபரிடம் சோதனை செய்தனர். அப்போது பையில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழைய ஆழ்குடி முதலியார் தெருவைச் சேர்ந்த காளீஸ்வரன் (25) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.
- பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தி செல்வதும் அதனை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ரெயில்வே போதை பொருள் தடுப்பு போலீசார் ரெயில்களில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயிலில் இன்று காலை போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது கேட்பாரற்று கிடந்த ஒரு கைப்பையை எடுத்து சோதனை செய்தபோது அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் அதற்கு யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.
இதையடுத்து கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ரெயில்வே போலீசார் கஞ்சா கடத்தி கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- பச்சை நிறத்தில் 20 பாக்கெட்டுகளில் மர்ம இலை பறிமுதல் செய்யப்பட்டது.
- பணத்துக்காக ஆசைப்பட்டு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை:
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த கவால்ஜித் சிங் (வயது31) என்ற பயணியின் டிராலி பையில் சோதனை நடத்திய போது, பச்சை நிறத்தில் 20 பாக்கெட்டுகளில் மர்ம இலை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அது வீரியம் மிக்க கஞ்சா என்பது தெரியவந்தது.
மேலும் அதன் மதிப்பு ரூ.9 கோடியே 53 லட்சம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் போதை பொருளை கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையின் போது அவர் கமிஷன் பணத்துக்காக ஆசைப்பட்டு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காரில் கஞ்சா கடத்தி செல்வதாக கலால்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கலால்துறையினர் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பி சென்று விட்டனர். அதில் ஒருவர் பிடிபட்டார்.
சிவமொக்கா:
சிவமொக்கா மாவட்டம் சொரப் டவுன் பத்ராவதி சாலையில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி காரில் கஞ்சா கடத்தி செல்வதாக கலால்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கலால்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை அவர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து காரை டிரைவர் நிறுத்தினார். அப்போது காரில் வந்தவர்கள் தப்பியோடினர்.
அவர்களை கலால்துறையினர் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பி சென்று விட்டனர். அதில் ஒருவர் பிடிபட்டார். விசாரணையில், அவர் பத்ராவதி தாலுகா கல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 38) என்பதும், காரில் கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அதில் இருந்த 50 கிலோ 430 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள், காரையும் கலால்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இதையடுத்து முருகனை கைது செய்து அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர் முருகன் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. கலால்துறையினர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி மஞ்சுநாயக் காரில் கஞ்சா கடத்தி சென்றது உறுதி செய்யப்பட்டதால் முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.
- பிளாட்பாரத்தில் ஒரு சாக்கு பையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார்.
- உடனே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பின் முரணாக பதில் அளித்தார்.
மதுரை:
மதுரைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியாண்டி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மதுரை ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடைக்கு இன்று அதிகாலை வந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிளாட்பாரத்தில் ஒரு சாக்கு பையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனையிட்டபோது அதில் 43 கிலோ கஞ்சா, குட்கா மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் ஆகியவை கடத்திச் செல்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓடைத்தெரு, வள்ளுவர் நகரை சேர்ந்த காதர் பாட்ஷா (வயது 39) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- 4 கிலோ போதை பொருள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே அசாம் மாநிலம் கவுகாத்தி ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லக்கூடிய பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது சேலம் ரெயில்வே உட்கோட்ட சிறப்பு பிரிவு போலிசார் அடங்கிய தனிப்படையினர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டதில் பொது பெட்டியில் உடமைகள் வைக்கும் பகுதியில் இருந்த பேக்கில் சோதனை செய்ததில் அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து குறித்து விசாரித்ததில் அந்த பெட்டியில் பயணம் செய்த அசாம் மாநிலம் போர்லெங்கிரி பகுதியை சேர்ந்த கைருல் இஸ்லாம் (வயது 34) என்பவர் கவுகாத்தி பகுதியில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் பகுதிக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- தேவகோட்டையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசாா தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் காவல்துறையினர் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். தேவகோட்டை நகரில் இளைஞர்களிடையே கஞ்சா புழக்கத்தில் உள்ளது.
இதனை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசாா தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் மற்றும் போலீசார் வாகன சோதனையை ஈடுபட்டனர்.
அப்போது பழைய சருகணி ரோடு இம்ரான் நகரை சேர்ந்த சலீம் மகன் முகமது இஸ்மாயில் (வயது 20), பழைய சருகணி ரோடு சேக் அப்துல்லா மகன் முகமது யூசுப் (23) ஆகிய இருவரும் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா இருந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்கி கடத்தி வந்தார்கள்? என்று இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஆந்திராவில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
மதுரை
மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை ஆகியவை கொடிகட்டி பறந்து வருகின்றன. எனவே அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், மீனாட்சி அம்மன் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் குருவிக்காரன் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 21 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த மதன்குமார் (30) என தெரிய வந்தது. இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி மதுரையில் விற்று வந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.எஸ்.காலனி போலீசார் கோச்சடை மேலக்கால் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த செக்கானூரணியை சேர்ந்த குபேந்திரன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் விளாச்சேரி மெயின் ரோடு முனியாண்டி புரம் சந்திப்பில் கஞ்சா விற்ற மகாவிஷ்ணு (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினர்
- 1½ கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியில் டவுன் இன்ஸ் பெக்டர் சாலோமன் ராஜா தலைமையில் பயிற்சி சப்-இன்ஸ் பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத் திற்கு இடமளிக்கும் வகையில் ஸ்கூட்டரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஆந்திர மாநி லம் ஓ.ஜி.குப்பத்தை சேர்ந்த துர்காராவ் (வயது 38), அவரது தம்பி மகேந்திரா (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அண்ணன் தம்பி மீது வழக் குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சிறுமலை பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
- திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தார்.
குள்ளனம்பட்டி:
ஐ.ஜி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் திண்டுக்கல்-நத்தம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுமலை பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிறுமலையை அடுத்த தென்மலையைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 34), நிலக்கோட்டை அணைபட்டியைச் சேர்ந்த கணேஷ் பாண்டி (24) என்பதும், விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த முத்தணம் பாளையத்தை சேர்ந்த ஜெபராஜ் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
- ஆந்திராவில் இருந்து கஞ்சாவை திருப்பூருக்கு கடத்தி வந்து திருப்பூர் மாநகரில் சப்ளை செய்ய திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
திருப்பூர்:
ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமிஷனர் பிரபாகரன், நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் ஈஸ்வரன், நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து கஞ்சா கடத்தல் கும்பலை கைது செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
தனிப்படை போலீசார் முத்தணம்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் 9 கிலோ கஞ்சாவும், 2 பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த முத்தணம் பாளையத்தை சேர்ந்த ஜெபராஜ் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் கடத்தலில் தொடர்பு டைய கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த ராஜா, செட்டி பாளையத்தை சேர்ந்த தீனதயாளன், பால கிருஷ்ணன், சுதன், வீரபாண்டியை சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை திருப்பூருக்கு கடத்தி வந்து திருப்பூர் மாநகரில் சப்ளை செய்ய திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது . கடத்தல் கும்பலிடம் இருந்து 9 கிலோ கஞ்சா, 2 பட்டா கத்தி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தலை மறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு பகுதியில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் வடபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிங்காரம் மகன் குமார்(வயது42), புதுப்பாலப்பட்டு கிராமம் பாண்டியன் மகன் வல்லரசு(21), ஆனந்தன் மகன் அருண்(21) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.