என் மலர்
நீங்கள் தேடியது "ரவுடி"
- ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக இயங்கி வந்திருக்கிறார்.
- அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டி வந்திருக்கிறார்.
டெல்லியின் சீலம்பூரில் வியாழக்கிழமை மாலை பட்டப்பகலில் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் குணால் என்ற 17 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் டெல்லி காவல்துறை, இளம் பெண் தாதா ஜிக்ராவை கைது செய்துள்ளனர்.
ஜிக்ரா தன்னுடைய உறவினரான சாஹிலுடன் சேர்ந்து, பழி வாங்கும் ஒரு பகுதியாக இந்த கொலையை செய்திருக்கிறார்.
2023-ம் ஆண்டு நவம்பரில் சாஹிலை மீது கொலை முயற்சி நடந்தது. அதில், அவர் உயிர் தப்பினார். இந்த வழக்கில் லாலா மற்றும் ஷம்பு என 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் குணாலின் நெருங்கிய நண்பர்கள். சிறுவன் என்பதற்காக குணால் பெயர் எப்.ஐ.ஆர். பதிவில் இல்லை. குணாலே திட்டமிட்டு சாஹில்- ஐ கொலை செய்ய முயன்றதாக ஜிக்ரா நினைத்துள்ளார். இதனால் அவர் தற்போது சாஹில் உடன் சேர்ந்து குணாலை கொலை செய்துள்ளார்.

ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக இயங்கி வந்திருக்கிறார். ஆயுதங்களுடனும், இந்த சிறுவர்களுடனும் அவர் அடிக்கடி அந்த பகுதியில் சுற்றி வந்திருக்கிறார். அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டி வந்திருக்கிறார்.
ஜோயா என்பவருக்கு பவுன்சராகவும் ஜிக்ரா வேலை செய்து வந்திருக்கிறார். ஜோயா தற்போது சிறையில் இருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜிக்ரா, சாஹில் மற்றும் தில்ஷாத் ஆகியோருடன் 7 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
- சிம்சோனி (34) ரிஜேஸை வழிமறித்து பணம் கேட்டார். ரிஜேஸ் பணம் இல்லை என கூறினார்.
- அப்போது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரிஜேஸிடமிருந்து ரூ.200 ஐ பறித்தாக கூறப்படுகிறது.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சோனியை கைது செய்தனர்.
குளச்சல், அக்.27-
குளச்சல் அருகே திக்கணங்கோடு கீழ புல்லுவிளையை சேர்ந்தவர் ரெத்தினகுமார்.
இவரது மகன் ரிஜேஸ் (வயது26).கூலி த்தொழிலாளி. கடந்த 24-ந் தேதி இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சேனம்விளை அரசு மருத்துவமனை அருகில் செல்லும்போது பெத்தேல்புரத்தை சேர்ந்த சிம்சோனி (34) ரிஜேஸை வழிமறித்து பணம் கேட்டார். ரிஜேஸ் பணம் இல்லை என கூறினார்.
அப்போது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரிஜேஸிடமிருந்து ரூ.200 ஐ பறித்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் படுகாய மடைந்த ரிஜேஸ் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சோனியை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சிம்சோனி பிரபல ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது மேலும் 4 வழக்குகள் குளச்சல் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
- சப்-கலெக்டர் உத்தரவு
- தக்கலை சப்-கலெக்டரிடம் தக்கலை இன்ஸ்பெக்டர் மனு
கன்னியாகுமரி:
தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் என்ற வெடிகுண்டு ஆல்பர்ட் (வயது 49). பிரபல ரவுடியான இவர் மீது தக்கலை போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் அவர் ரவுடி பட்டியலில் உள்ளார். இவர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்.
இதனையடுத்து இவர் மேலும் குற்ற செயலில் ஈடுபடாமல் இருக்க நன்னடத்தை சான்று பெற தக்கலை இன்ஸ்பெக்டர் மூலம் கல்குளம் தாசில்தார் வினோத் முன்னிலையில் ஆஜர்படுத்தி 1 வருடம் எந்த குற்ற செயலிலும் ஈடுபடாமல் நன்னடத்தையுடன் இருப்பேன் என பாண்டு பத்திரத்தில் கையொப்பம் இட்டு உறுதியளித்திருந்தார்.
இந்த உறுதியை மீறும் வகையில் மறு மாதமே போலி மதுபாட்டில் ஒரு வாகனத்தில் கடத்தி கொண்டு போகும் போது மார்த்தாண்டத்தில் வைத்து மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட் டார்.
இதனையடுத்து நன்ன டத்தை உறுதியை மீறி மீண்டும் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்ட ஆல்பர்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு தக்கலை சப்-கலெக்டரிடம் தக்கலை இன்ஸ்பெக்டர் மனு தாக்கல் செய்தார். சப்-கலெக்டர் விசாரணைக்கு பிறகு ஆல்பர்ட் குற்ற வழக்கில் ஈடுபட்டு நன்னடத்தையை மீறியது தெரியவந்துள்ளது.
எனவே 268 நாட்கள் ஆல்பர்ட்டை சிறையில் அடைக்க பத்மனாபபுரம் உட்கோட்ட நடுவரும் சப்-கலெக்டருமான கவுசிக் உத்தரவிட்டார்.
- ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் போலீசார், பிரபல ரவுடி தீனா என்கிற தீன தயாளனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிர் அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் ராஜசேகர் (வயது 34) என்பவர், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது, போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த ரவுடி தீனதயாளன், எப்படி எனக்கு எதிராக நீ சாட்சி சொல்லலாம்? என ராஜசேகரிடம் கேட்டு மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நேற்று காலை சண்முகா நகர் ஜங்ஷன் அருகே நடந்த சென்று கொண்டிருந்தபோது, இவரை சண்முகா நகர் ராஜகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வழிமறித்தார்.
- பின்னர் கத்தி முனையில், சீனிவாசனிடம் இருந்து 2 1/4 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.4,300 பறித்து கொண்டார்.
சேலம்:
சேலம் லைன்மேடு வடக்கு காடு பென்ஷன் லைன் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 54). இவர் நேற்று காலை சண்முகா நகர் ஜங்ஷன் அருகே நடந்த சென்று கொண்டிருந்தபோது, இவரை சண்முகா நகர் ராஜகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விஜி (வயது 36) என்பவர் வழிமறித்தார்.
பின்னர் கத்தி முனையில், சீனிவாசனிடம் இருந்து 2 1/4 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.4,300 பறித்து கொண்டார். இது குறித்து சீனிவாசன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி விஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த ஒருவர், பால்ராஜை திடீரென வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.2150 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் லைன்மேடு, தர்மலிங்கம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் தனது வேலை விஷயமாக அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், பால்ராஜை திடீரென வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.2150 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட , மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ரவுடி மாதேஸ் என்கிற மாதேஸ்வரன் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து செயின், பணம் உள்ளிட்டவை மீட்கப்பட்டது.
அவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- எதிரிகளை அச்சுறுத்த துப்பாக்கி வைத்திருந்த ரவுடி ப்ற்றி பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.
- ரவுடி அலெக்சிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை கீழஅண்ணா தோப்பை சேர்ந்தவர் அலெக்ஸ் என்ற பெரிய அலெக்ஸ் (வயது 38). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அவர் இட்லி கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அலெக்ஸ் வீட்டில் கைத்துப்பாக்கி இருப்பதாக திலகர்திடல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அவரது வீட்டில் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தி னர்.
அப்போது அவரது வீட்டில் ஏர் பிஸ்டல் ரகத்தை சேர்ந்த கைத்துப்பாக்கி இருந்தது. அதனை போலீ சார் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அது ஆளை கொல்லும் அள வுக்கு சக்தியுடைய துப்பாக்கி இல்லை என்பதும், விசையை அழுத்தினால் அதிக சத்தத்து டன் வெடிக்கும் சாதாரண துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.அலெக்ஸ் சில ஆண்டு களுக்கு முன்பு தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் குருசாமியுடன் இருந்து உள்ளார். அப்போது தான் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
குருசாமி சிறைக்கு சென்றதும் திருந்தி வாழ்வது என முடிவெடுத்து அலெக்ஸ் இட்லி கடை நடத்தி வந்துள்ளார். ஏற்கனவே ரவுடியாக இருந்ததால் அவருக்கு மறைமுக எதிரிகள் இருப்ப தாக கூறப்படுகிறது. ஆகவே அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரவுடி அலெக்சி டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில தினங்களாக வீச்சரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு கிடைத்தது.
- இதையடுத்து மேட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்த சென்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேட்டூர்:
மேட்டூர் அருகே கருமலை கூடல் பகுதியைச் சேர்ந்த குமரவேல் மகன் சிபி வயது ( வயது 22 ). இவர் மீது கடந்த ஆண்டு கருமலை கூடல் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வீச்சரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து மேட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்த சென்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மதுரையில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- வீட்டில் பதுங்கியிருந்த போது பிடிபட்டார்.
மதுரை
மதுரை சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மாயக்கண்ணன் என்ற மாயாண்டி. இவரது மகன் காசி மணி (வயது 23). இவர் மீது தெற்கு வாசல் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் ஆகிய 2 போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து தாக்குதல், பொது இடத்தில் ஆபாசமாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதைத்தொடர்ந்து காசிமணியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து காசி மணி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்காக தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இந்த நிலையில் காசிமணி மதுரை புறநகரில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது காசிமணி ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து கைது செய்து மீண்டும் மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- 1994-ம் ஆண்டு சீட்டு பணத் தகராறில் தனது தாயின் சகோதரரை கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார்.
- மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சசிகுமார் தொடர்ந்து செல்போனில் பேசி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போரூர்:
சென்னை சாலிகிராமம், அடுத்த தசரதபுரம் பகுதியை சேர்ந்தவர் சசி என்கிற சசிகுமார் (வயது49) ரவுடி.
இவர் கடந்த 1994-ம் ஆண்டு சீட்டு பணத் தகராறில் தனது தாயின் சகோதரரை கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கில் சசிகுமார் உள்பட 5பேரையும் விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கில் சசிகுமார் உள்பட 5 பேருக்கும் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2009-ம் ஆண்டு பரோலில் வந்த சசிகுமார் திடீரென தலைமறைவாகிவிட்டார் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் அவர் சிக்கவில்லை.
இந்நிலையில் மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சசிகுமார் தொடர்ந்து செல்போனில் பேசி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சசிகுமாரின் குடும்ப உறுப்பினர்களின் செல்போன் எண்ணை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது கோயமுத்தூர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரியில் படித்து வரும் மகனிடம் சசிகுமார் அடிக்கடி பேசி வருவது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையம் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சசிகுமாரை கைது செய்தனர். தலைமறைவான சசிகுமார் மேட்டுப்பாளையம் சென்று முதலில் டிராவல்ஸ் கார் ஓட்டி வந்தார். தற்போது படிப்படியாக உயர்ந்து அங்கிருந்து கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கும் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது.
சுமார் 14 ஆண்டுகள் போலீசுக்கு தண்ணி காட்டி வந்த சசிகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர்.
- யாபேஸ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் ஏழானை பொற்றை பகுதியில் வந்து கொண்டிருந்தார்
- கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் 15 வழக்குகளுக்கு மேல் இருக்கிறது
கன்னியாகுமரி:
தக்கலைஅருகே பெருஞ்சிலம்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55). விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெருஞ்சிலம்பு ஈஞ்சையடி விளை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் சந்திரசேகருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சந்திரசேகர் தாக்கப்பட்டார். அதில் ஏற்பட்ட வழக்கு பதிவு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சந்திரசேகரின் மகன் யாபேஸ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் ஏழானை பொற்றை பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது சுரேஷ் அவரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் மாறி மாறி வாக்குவாதம் ஏற்படவே சுரேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து யாபோஸின் தலையில் வெட்டினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட யாபோசை தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார்வழக்கு பதிவு செய்தனர். போலீசாரின் விசாரணை யில் சுரேஷ் மீது ஏற்கனவே தக்கலை, கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் 15 வழக்குகளுக்கு மேல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொற்றிக்கோடு போலீசார் வலைவீசி சுரேசை தேடி வருகின்றனர்.
- தலைமறைவாக உள்ள 4 பேர் நெல்லையில் பதுங்கல்
- தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி அருகே உள்ள அனந்த பத்மநாத புரத்தை சேர்ந்தவர் ராஜ் குமார் (வயது 34), பிரபல ரவுடி. இவர், கடந்த 16-ந்தேதி நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வந்த போது வழிமறித்த கும்பல் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத் தினார்கள். கொலையாளி களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சூப் கடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக தாழக்குடி பகுதியைச் சேர்ந்த பிரவீன் (23), நாகர்கோவில் ஆசாரி மார் தெருவை சேர்ந்த ராம சித்தார்த் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பிரவீன் கூறுகையில், சூப் கடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ராஜ்குமார் என்னையும் எனது நண்ப ரையும் கொன்று விடுவ தாக மிரட்டினார். இதனால் நாங்கள் முந்திக் கொண் டோம் என்று கூறினார்.
இதையடுத்து போலீ சார் பிரவீனையும் ராம சித்தார்த்தையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இருவரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 4 பேரை யும் பிடிக்க போலீ சார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். போலீசார் தேடு வது அறிந்து அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
அவர்கள் தற்போது நெல்லை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.