search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி"

    • சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜை போலீசார் தேடி வந்தனர்.
    • போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ரோகித் ராஜை எஸ்.ஐ. கலைச்செல்வி காலில் சுட்டு பிடித்தார்.

    சென்னை:

    சென்னையில் கடந்த மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் ரவுடிகளை பிடிக்க இரவு பகலாக அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த வகையில் சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜையும் போலீசார் தேடி வந்தனர்.

    ரவுடி ரோகித்ராஜ் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தலைமையிலான போலீசார் துப்பாக்கியுடன் ரவுடி ரோகித் ராஜை பிடிக்க களம் இறங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வியுடன், போலீஸ் ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் ஆகிய இருவரும் உடன் சென்றனர்.

    கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்குள் இன்று அதிகாலை நுழைந்த போலீசார் ரவுடி ரோகித் ராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர்.

    போலீசார் எச்சரித்தும் தப்பி ஓடுவதிலேயே குறியாக இருந்த ரவுடி ரோகித் ராஜ் போலீசாரை தாக்கியதில் ஏட்டுகள் பிரதீப், சரவணகுமார் இருவருக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ரோகித் ராஜை எஸ்.ஐ. கலைச்செல்வி காலில் சுட்டு பிடித்தார். இதில் வலது காலில் குண்டு பாய்ந்து ரோகித்ராஜ் நடுரோட்டில் சாய்ந்தான்.

    இதையடுத்து எஸ்.ஐ. கலைச்செல்வி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இந்நிலையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த டி.பி. சத்திரம் எஸ்.ஐ. கலைச்செல்வியை நேரில் அழைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்தார்.

    • போலீசாரை பார்த்ததும் ரோகித்ராஜ் தப்பி ஓட முயற்சித்தான்.
    • ரவுடிகள் துப்பாக்கி சூடு சம்பவத்தால் மேலும் கலக்கம் அடைந்து பீதியில் தவித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் கடந்த மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் ரவுடிகளை பிடிக்க இரவு பகலாக அதிரடி வேட்டையில் ஈடு பட்டுள்ளனர்.

    அந்த வகையில் சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜையும் போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ரவுடி ரோகித்ராஜ் கீழ்ப்பாககம் கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தலைமையிலான போலீசார் துப்பாக்கியுடன் ரவுடி ரோகித் ராஜை பிடிக்க களம் இறங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வியுடன், போலீஸ் ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் ஆகிய இருவரும் உடன் சென்றனர்.

    கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்குள் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நுழைந்த போலீசார் ரவுடி ரோகித் ராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர்.

    போலீசாரை பார்த்ததும் ரோகித்ராஜ் தப்பி ஓட முயற்சித்தான். இதனால் உஷாரான போலீசார் "டேய் தப்பி ஓட நினைக்காதே... போலீஸ் விசாரணைக்கு எங்களோடு வந்து விடு. இல்லையென்றால் நடப்பதே வேறு" என்று எச்சரித்துள்ளனர்.

    ஆனால் ரோகித் ராஜோ, போலீசார் சொல்வதை கேட்காமல் தப்பிச் செல்வதிலேயே குறியாக இருந்தான். இதைத் தொடர்ந்து போலீஸ் ஏட்டுகள் சரவணகுமார், பிரதீப் இருவரும் ரவுடி ரோகித் ராஜை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது ரோகித் ராஜ் திடீரென தாக்குதலில் ஈடுபட்டான். மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினான். இதில் ஏட்டுகள் பிரதீப், சரவணகுமார் இருவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

    இதில் நரம்பு துண்டிக்கப்படும் அளவுக்கு கொடுங்காயம் ஏற்பட்ட போதிலும் ஏட்டுகள் இருவரும் ரவுடி ரோகித்ராஜை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்து மல்லுக்கட்டினார்கள்.

    அப்போது அவர்களோடு கத்தியை வைத்துக் கொண்டே கட்டிப்புரண்டு சண்டை போட்ட ரோகித் ராஜ் போலீஸ் பிடியில் இருந்து நழுவி தப்பி ஓடினான்.

    இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தனது துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ரவுடி ரோகித்ராஜின் பின்னால் ஓடினார். "ஓடாதே... நில்..." என்று அவர் எச்சரித்தார். ஆனால் ரவுடி ரோகித் ராஜோ போலீசில் சிக்கி விடக் கூடாது. தப்பி ஓடி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் ஓட்டம் பிடித்தான். கல்லறை தோட்டத்துக்கு வெளியே உள்ள கல்லறை சாலையில் தலைதெறிக்க ஓடிய ரவுடி ரோகித்தை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

    ரவுடி ரோகித் ராஜை சுட்டுப் பிடிக்க முடிவு செய்த அவர் ரோகித்தை நோக்கி குறி பார்த்து சுட்டார். இதில் வலது காலில் குண்டு பாய்ந்து ரோகித்ராஜ் நடுரோட்டில் சாய்ந்தான். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாலையில் நடந்ததால் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லை.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். டி.பி.சத்திரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரவுடி ரோகித் ராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ரோகித் ராஜ் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். காலில் கட்டு போடப்பட்டு ரோகித்ராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் இருவரும் கீழ்ப்பாக் கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு பிறகு கடந்த மாதம் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    இந்த நிலையில் ரவுடி ரோகித் ராஜை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். ஏற்கனவே என்கவுண்டர் பீதியில் தவிக்கும் ரவுடிகள் துப்பாக்கி சூடு சம்பவத்தால் மேலும் கலக்கம் அடைந்து பீதியில் தவித்து வருகிறார்கள்.

    • சேதுபதி, பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • சேதுபதியிடம் இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் துப்பாக்கி முனையில் ரவுடி சேதுபதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சேது என்கிற சேதுபதி, பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின் அடிப்படையில் ஆவடி ஆணையரகத்தின் அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக செங்குன்றம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு தனது கூட்டாளியுடன் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சேதுபதியை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் வந்ததை அறிந்த ரவுடி சேதுபதி ஆயுதங்களை பயன்படுத்தி தப்பிக்க முயன்றதாகவும், அப்போது போலீசார் துப்பாக்கி முனையில் சேதுபதியை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சேதுபதியிடம் இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சேதுபதியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வருவதை அறிந்ததும் சத்யாவுடன் இருந்த கூட்டாளிகள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

    திருப்போரூர்:

    சீர்காழியை சேர்ந்த பிரபல ரவுடி சத்யா. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரவுடி சத்யாவை கிரேன் மூலம் மலர் தூவி வரவேற்று உள்ளனர்.

    இதுபற்றி போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் இன்று காலை ரிசார்ட்டுக்கு விரைந்து வந்தனர். இதற்குள் சத்யாவும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து காரில் தப்பிசென்றனர். இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் தப்பி செல்ல முயன்ற ரவுடி சத்யாவை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    ஆனால் அவர் போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் சத்யாவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதல் பலத்த காயம் அடைந்த சத்யாவை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் வருவதை அறிந்ததும் சத்யாவுடன் இருந்த கூட்டாளிகள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் கடந்த மே 7 ஆம் தேதி ரவுடி கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கும்பலைச் சேர்ந்த அஜய் சிங்கோரா என்ற முக்கிய ரவுடி, டெல்லி புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று (மே 16) மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் கடந்த மே 7 ஆம் தேதி ரவுடி கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்தனர். கார் ஷோரூம் முற்றிலுமாக சேதமடைந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் ஹிமான்சு பாகு என்ற ரவுடியின் கும்பலைச் சேர்த்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் தங்களின் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி ததுப்பாகிச்சூடு நடத்திய ஷோரூமில் பகிரங்கமாக விட்டுச் சென்றுள்ளனர்.

    இதனையடுத்து குற்றவாளிகளை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த அஜய் சிங்கோரா என்ற முக்கிய ரவுடி, டெல்லி புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று (மே 16) மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்த போலீசார் குற்றவாளியை சுற்றி வளைத்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் அஜய் சிங்கோராவை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

    இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றொரு கொலை வழக்கிலும் தேடப்பட்டு வந்த நிலையில் இந்த என்கவுன்டர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுத்தகட்டமாக ரவுடி கும்பலின் தலைவன் ஹிமான்சு பாகுவை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். டெல்லியை பயமுறுத்தி வந்த ரவுடி கும்பலைச் சேர்ந்த முக்கிய நபரை போலீசார் என்கவுன்டர் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பல்வேறு இடங்களில் கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் எல்லையில் புதுச்சேரி மாநிலம் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடலூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட போலீசாரும், புதுச்சேரி மாநில போலீசாரும் ஒன்றிணைந்து கடலூர் மாவட்ட மற்றும் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகளில் அதிரடியாக சோதனை ஈடுபட்டு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களின் வீடுகளுக்கு சென்று கடும் எச்சரிக்கையும் விடுத்து வந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதையொட்டி கடலூர் மாவட்ட போலீசார் குற்ற சம்பவங்கள், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை பகுதியில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதுக்கடை சுடுகாடு பகுதியில் ஒரு கும்பல் இருந்ததை பார்த்த போலீசார் அவர்களைப் பிடிக்க சென்றனர்.


    அப்போது ஒரு நபர் தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள 5 நபர்களை சுற்றி வளைத்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 25), கவியரசன் (30), புதுக்கடை சேர்ந்த வேல்முருகன் (27), சந்தோஷ் (21), கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 32) என்பது தெரியவந்தது.

    மேலும், தப்பியோடியது கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி தாடி அய்யனார் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து கத்தி, 2 மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், இவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டியதாக தெரியவந்தது. இது மட்டுமன்றி இவர்கள் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதனை தொடர்ந்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் பிரபல ரவுடி தாடி அய்யனாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரபல ரவுடி மாதவன் என்கிற மண்டை வெட்டு மாதவன் என்பது தெரியவந்தது.
    • மணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி ஆவார்.

    திருச்சி:

    திருச்சி திருவானைக்கோவில் சன்னதி தெரு தீட்சிதர் தோப்பு பகுதியில் இன்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் திருச்சி மணச்சநல்லூர் மேல சீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாதவன் என்கிற மண்டை வெட்டு மாதவன் 50 என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி ஆவார்.

    இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மேலகொண்டையம் பேட்டை பகுதிக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு வசித்து வந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரை திருவானைக்கோவிலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவரது தலை துண்டித்து கீழே விழும் அளவுக்கு சரமாரியாக கழுத்து மார்பு மற்றும் தலைப்பகுதியில் வெட்டி உள்ளனர். ஆகவே இது பழிக்கு பழியாக நடந்த கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவானைக்காவல் மற்றும் மணச்சநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர்.
    • கொலையில் தலைமறைவான ரவுடி ஆனந்தன் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி, பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பொன்னேரி சின்ன கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி பிரியா (24) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து பழகி வந்தனர்.

    இந்நிலையில் பிரியாவுக்கு சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த ரவுடியான ஜில்லா என்கிற ஆனந்தன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இத னால் பிரியா ஏற்கனவே பழகி வந்த கோபால கிருஷ்ணனுடன் ஏற்பட்ட தொடர்பை துண்டித்தார். மேலும் அவருடன் பேசுவதையும் தவிர்த்தார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு பொன்னேரி அடுத்த புளியந்தோப்பு பகுதியில் கோபால கிருஷ்ணனை வழி மறித்த மர்ம கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கோபால கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் கள்ளக்காதலியை அடையும் போட்டியில் கோபாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே புழல் அருகே காரில் தப்பி செல்ல முயன்ற பிரியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரத்த கறைபடிந்த 4 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிரியாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கோபால கிருஷ்ணனுடன் உள்ள தொடர்பை பிரியா தவிர்த்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது. கோபால கிருஷ்ணன், பிரியாவின் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி உள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இதையடுத்து கோபால கிருஷ்ணனை தீர்த்துகட்ட முடிவு செய்த பிரியா இதுபற்றி தனது மற்றொரு கள்ளக்காதலனான ரவுடி ஆனந்தனிடம் கூறினார். அவரும் பிரியாவை அடையும் ஆசையில் கோபால கிருஷ்ணனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    அவர்களது திட்டப்படி பிரியா, கள்ளக்காதலன் ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் மேலும் 3 பேர் அரிவாள் கத்தியுடன் நேற்று இரவு கோபால கிருஷ்ணனை தேடி அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். ஆனால் கோபால கிருஷ்ணன் நண்பர்களை பார்க்க புளியந்தோப்பு பகுதிக்கு சென்றால் அங்கு சென்று அவரை தீர்த்து கட்டிவிட்டனர். கோபால கிருஷ்ணனை அரிவாளல் வெட்டி கொன்ற போது அருகே நின்ற கள்ளக்காதலி பிரியா அதனை ரசித்து பார்த்து உள்ளார். பின்னர் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் கொலையாளிகள் அனைவரும் பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து தனியாக நின்ற பிரியா அவ்வழியே வந்த காரில் சவாரி கேட்டு புழல் பகுதிக்கு தப்பி சென்ற போது போலீசாரின் சோதனையில் சிக்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    கைதான பிரியா கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஆட்டோ டிரைவரான லட்சுமணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் பிரியாவின் கள்ளத் தொடர்புகள் அதிகமானதால் லட்சுமணன் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டு அவ்வப்போது வந்து தனது குழந்தைகளை மட்டும் பார்த்து சென்று உள்ளார்.

    கணவர் வீட்டுக்கு வராததால் மேலும் சந்தோஷம் அடைந்த பிரியா பலருடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. கோபால கிருஷ்ணன் தன்னுடன் தொடர்பை தொடர கூறியதால் ஏற்பட்ட மோதலில் அவரை மற்றொரு கள்ளக்காதலனை ஏவியே பிரியா தீர்த்து கட்டிவிட்டார்.

    இந்த கொலையில் தலைமறைவான ரவுடி ஆனந்தன் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது
    • கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தலையை கைப்பற்றியதுடன் உடலையும், கொலையாளியையும் தேடினர். தொடர்ந்து தலை வீசப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் குள்ளம்பட்டி பள்ளக்காட்டை சேர்ந்த பிரபல ரவுடியான திருமலை (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர் உடலை அங்குள்ள நாட்டாமங்கலம் ஏரிக்கரையில் வீசியதாக தெரிவித்தார். அதன்படி அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.

    திருமலை கொடுத்த தகவலின்பேரில் அவரது பைக் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமலை கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது - பிரபல ரவுடியான திருமலை நேற்று முன்தினம் பைக்கில் வாழப்பாடி முத்தம்பட்டி சென்றார். அங்கு விவசாய தோட்ட பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த முத்தம் பட்டியை சேர்ந்த மாணிக்கம் மனைவி ஜோதி 45 என்பவரை மிரட்டி ஒன்றரை பவுன் நகையை பறித்தார்.

    அங்கிருந்து நடுப்பட்டி வழியாக வந்த போது சாலையில் நடந்து வந்த குமார் மீது மோதுவது போல சென்று தகராறு செய்தார். பின்னர் இரு வரும் சமரசம் ஆகிய நிலையில் தன்னுடன் வந்தால் மது வாங்கி தருவதாக கூறி குமாரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு நீர்முள்ளிக் குட்டை சிவசக்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கினர்.

    பின்னர் இருவரும் அக்ரஹாரம் நாட்டாமங்கலம் ஏரிக்கரைக்கு வந்து மது அருந்தினர். அப்போது 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த திருமலை, குமாரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து தலையை அறுத்து குள்ளம்பட்டி பிரிவு சாலையில் வீசி விட்டு சென்றதும், அங்குள்ள சி.சி.டி.சி. காமிரா பதிவால போலீசாரிடம் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்துஅவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டு உள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ைகதான பிரபல ரவுடி ஏற்கனவே 2 கொலைகள் செய்துள்ள நிலையில் தற்போது சிறிய பிரச்சினையில் ஒருவரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பீதி நிலவி வருகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடும்நிலை உள்ளது.

    • மினி லாரியில் திருவதிகை மண்டப தெரு பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் வழங்கி கொண்டு இருந்தனர்.
    • ரவுடி என்றும், உங்களிடம் உள்ள பணத்தை கொடு என்று கேட்டு மிரட்டியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை ரெயில்வே காலனியை சேர்ந்தவர் மணி (வயது 33). இவர் மினி லாரியில் குடிநீர் வழங்கி வருகிறார். இவரும் அதே ஊரை சேர்ந்த பாண்டியனும் நேற்று மாலை மினி லாரியில் திருவதிகை மண்டப தெரு பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் வழங்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த திருவதிகையை சேர்ந்த சந்தோஷ் (25), தான் மிகப் பெரிய ரவுடி என்றும், உங்களிடம் உள்ள பணத்தை கொடு என்று கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது பணத்தை கொடுக்க மறுத்த மணியின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். அவரிடமிருந்து லாவகமாக தப்பிய மணி, இது குறித்து பண்ருட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சந்தோஷை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சமீபத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு ஒன்றில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கோழி அருளை தேடி வந்தனர்.

    நெல்லை:

    பாளை பெருமாள்புரம் தாமஸ் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் என்ற கோழி அருள். இவருக்கு சொந்த ஊர் சுரண்டையை அடுத்த பங்களா சுரண்டை ஆகும்.

    இவர் மீது கொலை, கொலை முயற்சி, சமூக வலைதளங்களில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவிட்டல் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், சில வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

    சமீபத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு ஒன்றில் அவரை போலீசார் தேடி வந்தனர். அவரை பிடித்து வந்து ஆஜர்படுத்துமாறு நெல்லை மாவட்டம் அம்பை கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கோழி அருளை தேடி வந்தனர்.

    அவர் ஓசூர் பகுதியில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு முகாமிட்டு தனியார் விடுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று இரவில் ஒரு விடுதியில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். தொடர்ந்து இன்று காலை கோழி அருளை பாதுகாப்புடன் நெல்லை மாவட்டத்திற்கு ஜீப்பில் அழைத்து வந்தனர்.

    • சேலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டாமணி (30), பிரபல ரவுடி, இவர் தற்போது கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார்.
    • மகாவிஷ்ணு தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு, மணிகண்டன் தலையில் கம்பியால் சரமாரியாக தாக்கினார்.

    சேலம்:

    சேலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டாமணி (30), பிரபல ரவுடி, இவர் தற்போது கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகாவிஷ்ணு. இவர் நேற்று மணிகண்டன் காரை வாடகைக்கு கேட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மணிகண்டன் காருக்கு டீசல்போட்டு தயாராக வைத்துள்ளார். ஆனால் மகாவிஷ்ணு , மணிகண்டன் காரை எடுக்காமல் வேறு நபரிடம் வாடகை காரை எடுத்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மகாவிஷ்ணுவின் சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினார். இது குறித்து மகாவிஷ்ணு தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு, மணிகண்டன் தலையில் கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் படு காயம் அடைந்த மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×