search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.ராமகிருஷ்ணன்"

    தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து இருக்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார். #Sophia #TamilisaiSoundararajan
    கோவை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கோவையில் உள்ள மாவட்ட கட்சி அலுலவகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் உரிமையை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை கண்டித்து வருகிற 18-ந் தேதி சி.ஐ.டி.யூ., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கர், விவசாய தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளது.

    இதனை மார்க்சிஸ்டு ஆதரிக்கிறது. கோவை மக்களின் வாழ்வாதார பிரச்சனையை மையமாக வைத்து நடைபெறும் இந்த போராட்டத்தை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக என்.டி.சி. மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.


    தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி சோபிகா தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பிய விவகாரத் தில் பழி வாங்கும் நோக்கில் மாணவிக்கு தீவிரவாதிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தமிழிசை புகார் அளித்துள்ளார். இது தமிழிசைக்கு அழகல்ல. அவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

    இந்த விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் மாணவி மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது போல் தமிழிசை மீது மாணவி தந்தை கொடுத்த புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sophia  #TamilisaiSoundararajan
    அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
    கம்பம்:

    மத்திய மாநில அரசுகளின் கொள்ளை விரோத செயல்களை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கடமலைக் குண்டு, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பிரசார இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். போராட்டக் காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். புதிதாக யாரையும் கைது செய்யக் கூடாது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். இது கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சியாகும். அரசாங்கத்தை எதிர்த்து பேசினாலே கைது செய்யப்படுவது, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்ந்து வருகிறது. இதனை அரசு கைவிட வேண்டும்.

    மத்திய  அரசின் உத்தரவுக்கு பயந்து தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதனை கைவிட வேண்டும். மத்திய  அரசு விவசாய விளை பொருட்களுக்கான விற்பனை விலையை உற்பத்தி செலவுடன் 1 மடங்கு கூடுதலாக சேர்த்து நிர்ணயிக்க வேண்டும். நலிந்து வரும் சிறு தொழில்களை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மத்திய அரசு முதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    நிலக்கோட்டை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிலக்கோட்டை வந்தார். அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது,

    ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி. தற்போது மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் இன்னலை தருகிறது.

    விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டது. மாட்டுஇறைச்சி கடை மூலம் ஏழை மக்களுக்கு எதிரான போக்கை கையாண்டு உள்ளது. 2015-ம் ஆண்டு தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 38 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டது. 2016-ம் ஆண்டு அது 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    வன்கொடுமை தடுப்புசட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது அந்த சட்டத்தை நீர்த்துபோகசெய்யும். கல்விக்கடன் பெற்ற மாணவர் ஒருவர் ரூ.70ஆயிரத்தை திருப்பி கட்டவில்லை என வங்கி அதிகாரிகள் தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

    ஆனால் மத்திய அரசு முதலாளிகளுக்கு கோடிகணக்கில் கடன் கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புகிறது. எனவே இவர்கள் ஏழைகளுக்காக செயல்படவில்லை. முதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளனர்.

    இதனை எதிர்ப்பதற்காகத்தான் போராடுவோம் தமிழகமே என குமரி மாவட்டத்தில் இருந்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

    மாநில அரசு 800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூடஉள்ளது. அதில் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டத்தில் 72 பள்ளிகள் மூடப்பட உள்ளன. கேரளாவில் அரசு பள்ளிகளை மேம்படுத்தி கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகி சவுந்திரராஜன், ஒன்றிய செயலாளர் காசிமாயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி உண்மை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். #ThoothukudiFiring #CBI
    நித்திரவிளை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் இருந்து பிரசார பயணம் மேற்கொண்டு திருச்சி சென்றடைய முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி, எட்டயபுரம், கடலூர், திருவள்ளூர், வேலூர், நீலகிரி ஆகிய 6 இடங்களில் இருந்து இன்று இந்த பிரசார பயணம் தொடங்கியது.

    குமரி மாவட்டம் நித்திரவிளையில் இன்று காலை தொடங்கிய பிரசார பயணத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தை 6 மாதத்துக்கு முன்பு ஒக்கி புயல் தாக்கியபோது பலர் உயிரிழந்தனர். அப்போது இங்கு வேதனையான மனநிலையுடன் வந்தேன். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக எந்தவித உதவியும் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அதேசமயம் கேரள மாநில முதல்வர், அங்கு ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனைத்து நிவாரணங்களும் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

    மக்களை பாதுகாக்கும் அரசாக மத்திய அரசும், தமிழக அரசும் திகழவில்லை. உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி. தமிழக மக்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு மூலம் இரண்டு பக்கமும் இடி விழுகிறது.

    குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் மோடி அரசு அதை செய்யவில்லை. பாரதிய ஜனதா ஆட்சியில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கரும்பு, பருத்தி, நெல் போன்றவற்றுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. வரிக்கு பிறகு பெரும் பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று மோடி அறிவித்தார். ஆனால் கடந்த 10 மாதத்தில் 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.


    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் மக்கள் நலனை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் 13 பேர் சுட்டுக்கொல்லப்படும் நிலை ஏற்பட்டது. தமிழக அரசு கேட்டுக்கொண்டால் துணை ராணுவத்தை அனுப்புவதாக கூட மத்திய மந்திரி கூறினார். எனவே ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி உண்மை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, செயற்குழு உறுப்பினர் நூர்முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #ThoothukudiFiring #CBI #GRamakrishnan
    மத்திய திட்டக் குழுவின் அறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
    கும்பகோணம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றதை தொடர்ந்து அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப போலீஸ் படையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி உள்ளது. இந்த நடவடிக்கை போதாது.

    கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் மத்திய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. மூலமாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டுமே தவிர கைது செய்ய கூடாது.

    மாநில அரசின் தவறான கொள்கை காரணமாக உயர்கல்வி துறையில் 95 சதவீதம் தனியாரிடம் சென்றுவிட்டது. மத்திய திட்டக் குழுவின் அறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தமிழக அரசு மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்திருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி விட்டது.

    மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பிரசார பயணம் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 14-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், சின்னைபாண்டியன், ஜெயபால் மற்றும் பலர் உடன் இருந்தனர். #GRamakrishnan
    ×