என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலஸ்தீனம்"

    • கடந்த வாரம் காசாவின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
    • 'போரை நிறுத்து', 'போரை முடிவுக்குக் கொண்டு வா', 'நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை', 'எங்கள் குழந்தைகளின் இரத்தம் மலிவானது அல்ல'

    கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர்.

    இரத்னனைதொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஐநா தெரிவிக்கிறது. காசா நகரம் முற்றாக சிதைக்கப்பட்டு கட்டடங்கள் கற்கலாக மட்டுமே மிஞ்சின. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

     

    இதற்கிடையில் கடந்த ஜனவரியில் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது. இதன்மூலம் இஸ்ரேலிய பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. ஆனால் கடந்த மார்ச் 1 ஆம் தேதி போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இன்னும் 59 பணய கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளனர். அவர்களில் 24 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    அவர்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. காசாவின் கிட்டத்தட்ட 2 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியது.

    மேலும் கடந்த வாரம் முதல் இஸ்ரேல் மீண்டும் காசா மீது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் காசாவின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 600 பேர் கொல்லப்பட்டனர். காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 50,000 த்தை கடந்துள்ளது.

    இந்நிலையில் போரை நிறுத்த கோரி வடக்கு காசாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

    நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லஹியாவில் சேதமடைந்த கட்டுமானங்களுக்கிடையே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்

    'போரை நிறுத்து', 'போரை முடிவுக்குக் கொண்டு வா', 'நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை', 'எங்கள் குழந்தைகளின் இரத்தம் மலிவானது அல்ல' போன்ற முழக்கங்களை மக்கள் எழுப்பினர். "ஹமாஸே வெளியேறு!" என்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். ஹமாஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைப்பதை வீடியோக்களில் காண முடிகிறது.

    போராட்டத்தில் சேருமாறு டெலிகிராம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 முதல் ஹமாஸ் காசாவை நிர்வகித்து வருகிறது. காசா மக்களை பாதுகாக்க ஹமாஸ் விரும்பினால் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.

    நினைத்த இடத்தில் குண்டுகளை வீசி நூற்றுக்கணக்கானோரை கொன்றுவிட்டு, ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் சாக்கு சொல்லி வரும் வேளையில் இந்த போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. போர் மற்றும் பட்டினியால் விரக்தியின் உச்சத்தில் உள்ள காசா மக்களுக்கு விடிவுகாலம் எப்போது பிறக்கும் என்பதே சர்வதேச சமூகத்தில் கேள்வியாக உள்ளது. 

    • ஹம்தான் பல்லால் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் கடுமையாக தாக்கப்பட்டார்.
    • பின்னர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டபோது, இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது.

    'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் (west bank) இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். தற்போது இஸ்ரேல் ராணுவம் இவரை விடுதலை செய்துள்ளது.

    இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், ஹம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இஸ்ரேல் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழும்பின.

    இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம், "நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.

    பயங்கரவாதிகள் (பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்" எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் ஹம்தான் பல்லால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு கரையில் உள்ள கிர்யாத் அர்பா காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியதை பத்திரிகையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

    அவருடன் மேலும் இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பல்லால் முகத்தில் கடுமையான காயமும், அவர் அணிந்திருந்த ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்ததாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

    • இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.
    • இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.

    ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் தற்போது பாலஸ்தீன மேற்கு கரையில் (west bank) சட்டவிரோதமாக ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்த இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.

    நோ அதர் லேண்ட் படத்தின் மற்றொரு இயக்குனர் யுவல் ஆபிரகாம் இந்த ததகவலை பகிர்ந்துள்ளார். "எங்கள் 'நோ அதர் லேண்ட்' படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பல்லால், இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது" என்று தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஹம்தானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.

    இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற நோ அதர் லேண்ட் படம், இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.

    இந்த படத்தை மசாஃபர் யட்டாவைச் சேர்ந்த பால்ஸ்தீனிய இயக்குநர்கள் ஹம்தான் பல்லால் மற்றும் பாஸல் அட்ரா மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இயக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இயக்குநர் ஹம்தாம் பல்லா கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொன்றிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.

    பயங்கரவாதிகள்(பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

    • கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது.
    • பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.

    கடந்த 5 நாட்களில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், லெபனானில் மீதும் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்ததாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது. மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 113,000 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இறந்தவர்களின் எத்தனை பேர் ஹமாஸ் அமைப்பினர், எத்தனை பேர் பொதுமக்கள் என அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.

     

    காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனின் ஹவுதிகள் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளைத் ஏவி தாக்கி வருகின்றனர்.

    இதில் ஈரானின் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாவினர் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஏவி வருகின்றனர்.

    ஹமாஸ் அமைப்பும் ஏவுகணை தாக்குதலைகளை தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின்படி பணய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. ஆனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் காசாவில் நிலவிய தற்காலிக அமைதி தற்போது வெடிகுண்டுகளால் மீண்டும் முற்றாக சீர்குலைந்து வருகிறது.

     

    கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் பக்கம் 1200 பேர் வரை உயிரிழந்தனர். அதற்கு விலையாக காசாவில் தற்போது 50,021 உயிர்களை இஸ்ரேல் குடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றே தற்போதைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. 

     

    • காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது.
    • இந்தத் தாக்குதலில் 400 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

    காசாவில் 56,000 பேர் உயிரிழந்த பின் கடந்த ஜனவரி மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1 உடன் முடிவுக்கு வந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது.

    இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் நேற்றுய காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது. இந்தத் தாக்குதலில் 400 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று இஸ்ரேலின் தெற்கு பகுதிகள் மீது ஹவுதிக்கள் ஏவுகணைகத் தாக்குதல் நடத்தினர்.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பாய்ச்சியதாக ஹவிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

    அந்த ஏவுகணைகளை இடைமறித்து அளித்ததாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் காசாவுக்கு ஆதாரவாக இஸ்ரேல் மீது ஹவுதிக்கள் பலமுறை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுதிக்களை ஒடுக்க இஸ்ரேலும், அமெரிக்காவின் கடுமையாக போராடி வருகிறது.

    • ஹார்வர்டில் முதுகலைப் பட்டம் பெற்ற ரஞ்சனி ஸ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடல் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.
    • கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முன்னணியில் இருந்தார்.

    அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    அதாவது தன்னை சுயமாக அவர் நாடு கடத்திக்கொண்டார். இதற்கு அர்த்தம், அந்நாட்டு அதிகாரிகள் அவரை பிடித்து ராணுவ விமானத்தில் கை கால்களை சங்கிலியால் பூட்டி நாடு கடத்துவதற்கு முன்பாக அவரே அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    அவரின் பெயர் ரஞ்சனி ஸ்ரீனிவாசன். செய்த குற்றம், பால்ஸ்தீனதுக்கு ஆதரவாக போராடியது. விளைவு, கடந்த மார்ச் 5 ஆம் தேதி அவரது மாணவர் விசா ரத்து. இதன் காரணமாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    அகமதாபாத்தில் உள்ள CEPT பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், ஃபுல்பிரைட், நேரு மற்றும் இன்லாக்ஸ் உதவித்தொகைகளுடன் ஹார்வர்டில் முதுகலைப் பட்டமும் பெற்ற ரஞ்சனி ஸ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.

    இதற்கிடையே கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

    200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாகி பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த 13 மாதங்களில் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 56,000 பேர் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேலிய குண்டுகளால் மொத்த நகரமும் நிர்மூலம் ஆக்கப்பட்டது. இதை இனப்படுகொலை என குற்றம்சாட்டி உலகெங்கிலும் உள்ள மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் நியூ யார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கடந்த ஆண்டு போராட்டங்கள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவர்களில் ரஞ்சினி ஸ்ரீனிவாசனும் ஒருவர்.

    பல்கலைக்கழக கட்டடம் ஒன்றை போராட்டக்குழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு பிரச்சனை தீவிரமானது. பின் பேச்சுவார்த்தை மூலம் இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையில் கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்பின் அரசு, பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வேட்டையாட தொடங்கியது.

    கொலம்பியா பல்கலைக்கழக போராட்டத்தில் ஈடுபட்ட பல வேற்று நாட்டு மாணவர்கள் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டனர். கடந்த வாரம், பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த கொலம்பியா முன்னாள் மாணவர் மஹ்மூத் கலீல் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முன்னணியில் இருந்தார். இந்நிலையில் தற்போது ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இந்த நாடுகடத்தலுக்கு இரையாகி உள்ளார்.  

     அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், ரஞ்சனி சீனிவாசன் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 5, 2025 அன்று, வெளியுறவுத்துறை அவரது விசாவை ரத்து செய்தது.

    இந்நிலையில் மார்ச் 11 அன்று சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CPB) அமைப்பு செயலியைப் பயன்படுத்தி ரஞ்சனி ஸ்ரீனிவாசன் சுயமாக நாடு கடத்தப்பட்ட வீடியோவை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியதாவது, "அமெரிக்காவில் படிப்பது ஒரு "பாக்கியம்", ஆனால் நீங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அந்த சலுகை பறிக்கப்பட வேண்டும். நீங்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

    ரஞ்சனி ஸ்ரீனிவாசன் தற்போது இந்தியா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அரசு அவர் குறித்தும், இந்த விசா ரத்து குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. 

    • பல இஸ்ரேலிய துருப்புக்கள் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது.
    • பாலஸ்தீனத் தாக்குதல்களில் இந்த ஆண்டு குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே 20-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இன்று வரை, பல வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் தாக்குதல்கள் நடத்துவதும், இதற்கெதிராக இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

    இன்று நடைபெற்ற ஒரு தாக்குதலில், மேற்குக்கரை (West Bank) நகரமான ஜெனின் தெருக்களில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய மிகப்பெரிய துப்பாக்கி சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 29 பேர் காயமடைந்ததாகவும், பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    உயிரிழந்தவர்கள் கலீத் அசாசா (21), கஸ்ஸாம் அபு சரியா (29), மற்றும் அகமது சக்ர் (15) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

    இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த சண்டையில் பல இஸ்ரேலிய துருப்புக்கள் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது.

    ஜெனின் நகரிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு வீடியோ காடசி, இஸ்ரேலிய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, ராணுவ நடவடிக்கையின்போது அப்பகுதியில் ஒரு ராக்கெட்டை ஏவுவதைக் காட்டுகிறது.

    ஜெனின் நகரம், வட மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீனியத்தின் ஒரு முக்கிய நகரம். பாலீஸ்தீன போராளிகள் நிறைந்த பகுதி. இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களும் பல மாதங்களாக வன்முறையில் சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பாக, மேற்குக்கரை பகுதியில் நடந்த வன்முறைகளில் இந்த ஆண்டு, கிட்டத்தட்ட 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீன வன்முறை வெடித்ததற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் மேற்குக்கரையில் இரவு நேர திடீர் சோதனைகளை நடத்தி வருகிறது. அவ்வாறான காலங்களில், இஸ்ரேலியர்களுக்கு எதிரான பாலஸ்தீனத்தின் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றது.

    இறந்தவர்களில் பெரும்பாலானோர் போராளிகள் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் ஊடுருவல்களை எதிர்த்து கல் எறிந்த இளைஞர்கள் மற்றும் மோதலில் ஈடுபடாத மற்றவர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

    இஸ்ரேலியர்களுக்கு எதிரான பாலஸ்தீனத் தாக்குதல்களில் இந்த ஆண்டு குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்
    • போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடைபெற்றுள்ளது

    ஆக்கிரமிப்பு வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் டிரோன் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பாலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் ஜெனின் அகதிகள் முகாமில் தேடுதல் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டது. அப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் டிரோன்கள் அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலியர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பாலஸ்தீனர்களை கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை'' என்றார்.

    பாலஸ்தீனத்தின் ரமல்லா பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம், மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயம்அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் போராளிகள் உள்ளிட்ட இரண்டு குழுக்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக கடுமையான சண்டையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளன. ஆனால், சண்டை குறித்து முழு விவரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டது.

    முன்னதாக, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பாதசாரிகள் பயன்படுத்தும் பாதையை இஸ்ரேல் ராணுவம் மூடியதால் 25 வயது பாலஸ்தீனர், காசா முனையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது இஸ்ரேல் குண்டுக்கு பலியானார்.

    மேற்கு கரையில் அடிக்கடி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால், ஒன்றரை வருடங்களாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் நடந்த சமீபத்திய வன்முறை இதுவாகும்.

    • ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல்
    • இருபக்கமும் சேர்ந்து பலி ஆயிரத்தை தாண்டியுள்ளது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை சுட்டுக்கொன்று, பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே நேற்று ஐ.நா. அவசர கூட்டம் நடைபெற்றது. பூட்டிய அறைக்குள் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது ஹமாஸின் இந்த கொடூர தாக்குதலுக்கு, அனைத்து (15) உறுப்பினர் நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஆனால், சில நாடுகள் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    கூட்டம் முடிவடைந்த பின், அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வுட் கூறுகையில் ''பெரும்பாலான சிறந்த நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. ஆனால், சில கவுன்சில் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. பொதுவாக அவர்கள் யார் என்று கூற முடியும்'' என்றார்.

    ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாஸ்சிலி நெபன்ஜியா கூறுகையில் ''கூட்டத்தில் நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை சொல்ல அமெரிக்க முயற்சி செய்தது. ஆனால், நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது உண்மையல்ல'' என்றார், மேலும், ''மக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இது என்னுடைய கருத்து'' என்றார்.

    சீனாவுக்கான தூதர் ''பொதுமக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்'' என்றார். ஆனால், ஹமாஸ் என்ற பெயரை அவர் உச்சரிக்கவில்லை.

    இறுதியில் ஐ.நா. உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    • இசை விழா நடைபெற்ற இடத்தில் ஹமாஸ் துப்பாக்கிச்சூடு
    • பலரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றுள்ளது

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் திடீரென்று தாக்குதல் நடத்தினர். 20 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், தரை வழியாக இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினர்.

    இஸ்ரேலில் ஜெவிஷ் விடுமுறை கொண்டாடப்பட்டு வந்தது. சனிக்கிழமை காஸா- இஸ்ரேல் எல்லையில் உள்ள கிராமப் பகுதியில் இசை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள்- பெண்கள் என இளையோர் கலந்து கொண்டனர்.

    வெளிநாடுகளை சேர்ந்த இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் காஸா பயங்கரவாதிகள் திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதனை எதிர்பாராத இளைஞர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். இதனால் இந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தன. ஒரே கூச்சல் குழப்பம் நிலவியது. தங்களுடன் வந்தவர்களை பார்க்க முடியாத வகையில் தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க, அங்கும் இங்கும் ஓடி மறைய முயற்சித்தனர். பலர் காருக்கு அடியில் பதுங்கி கொண்டனர். சுமார் ஆறு மணி நேரம் எந்தவித சத்தமும் போடாமல் தங்களது உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.

    இந்த தாக்குதல் காரணமாக அந்த இடத்தில் இளைஞர்கள் உடல்கள் சிதிறக் கிடந்தன. கிட்டத்தட்ட 260 பேர் உடல்கள் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக, இஸ்ரேல் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. விழா அமைப்பாளர்கள், விழாவில் கலந்து கொண்டு மாயமானவர்களை கண்டுபிடிக்க பாதுகாப்புப் படைக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள், இந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் பலரை பிணைக் கைதியாக பிடித்து சென்றுள்ளனர். இஸ்ரேலில் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.

    • நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர்.
    • இஸ்ரேலுக்கு ஆதரவாக அதன் கூட்டணி நாடுகள் முன்வந்துள்ளன.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் பயங்கரவாதிகள் அதிரடியாக ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

    நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலும், படைகளை குவித்து பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த போரில் இரு தரப்பிலும் 1,200 பேர் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனிய குழுவினரை தோற்கடிப்போம் என இஸ்ரேல் அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக காசா முனை பகுதியருகே ஆயிரக்கணக்கான படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னட் போர் முனையில் வீரர்களுடன் ஒன்றாக கைகுலுக்கி கொண்ட காட்சிகள் வெளிவந்துள்ளன. பகுதிநேர பணியாக அவர் போரில் பங்கேற்க சென்றுள்ளார்.

    இஸ்ரேலுக்கு ஆதரவாக அதன் கூட்டணி நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்கா தன்னுடைய விமானந்தாங்கி கப்பலை அனுப்பி வைத்துள்ளது. போர் கப்பல்கள் அடங்கிய வரிசையானது கிழக்கு மத்திய தரை கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், காசா முனை பகுதியில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • போரில் இரு தரப்பிலும் 1,200 பேர் பலியாகி உள்ளனர்.
    • நாங்கள் இன்னும் எங்களுடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

    நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலும், படைகளை குவித்து பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த போரில் இரு தரப்பிலும் 1,200 பேர் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனிய குழுவினரை தோற்கடிப்போம் என இஸ்ரேல் அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக காசா முனை பகுதியருகே ஆயிரக்கணக்கான படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லையர் ஹையாத் கூறும்போது, இந்த முறை யாரிடமும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    நாங்கள் போரில் இருக்கிறோம். அதனால், பேச்சுவார்த்தைக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ உரிய தருணம் இது இல்லை. நாங்கள் இன்னும் எங்களுடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம்.

    இஸ்ரேலிய எல்லை பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் யாரேனும் இருக்கிறார்களா என கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த பகுதியில் காயத்துடன் இருப்பவர்களை கண்டறியும் பணியிலும் ஈடுபட்டு உள்ளோம் என கூறியுள்ளார்.

    காசாவை உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் எடுத்து கொள்ளும் சாத்தியம் பற்றிய பரிசீலனை எதுவும் உண்டா? என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஹையத், நான் பல விவரங்களுக்குள் செல்லமாட்டேன். இஸ்ரேல் அரசு மற்றும் பாதுகாப்பு படையானது, பாதுகாப்பை மீண்டும் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்யும்.

    இஸ்ரேல் குடிமக்களை தாக்கும் இந்த திறனை ஹமாஸ் பயங்கரவாதிகள் கொண்டிருப்பதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

    ×