search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலித்"

    • சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பேர் கைது.
    • கைது செய்யப்பட்ட 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சியில் வயர்களை திருடியதாக குற்றம்சாட்டி 12 வயது பட்டியலின சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாடச் சொல்லி காலணிகளால் தாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வீடியோ வைரலானது அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை சந்தித்து இது தொடர்பாக புகார் கொடுக்கும்படி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷிட்டிஜ் குஜ்ஜர், யதாதி உபாத்யாய், ஆஷிஷ் உபாத்யாய், கௌரவ் சைனி, சந்தீப் சிங், அமர் சிங் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்

    கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக IRMS அதிகாரி சதீஷ்குமார் நியமனம்.
    • செப்டம்பர் 1 ஆம் தேதி ரெயில்வே வாரியத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

    இந்திய ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (IRMS) அதிகாரி சதீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ரெயில்வே வாரியத்தின் 119 ஆண்டுகால வரலாற்றில் தலைவராகும் முதல் பட்டியலினத்தவர் என்ற சிறப்பை சதீஷ்குமார் பெற்றுள்ளார்

    செப்டம்பர் 1 ஆம் தேதி ரெயில்வே வாரியத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

    சதீஸ்குமார் 1986 ஆம் ஆண்டு ரெயில்வேயில் வேலை செய்து வருகிறார். 34 ஆண்டு கால சேவைக்கு பிறகு அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    • இந்தியா முழுவதும் பெரியாரின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • பெரியார் காலத்தில் திராவிடம் என்ற அரசியல் தேவைப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் நடைபெற்ற குடியரசு சுயமரியாதை நூற்றாண்டு விழா மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தாலும் பெரியார் குடும்பத்தை சார்ந்தவர். காங்கிரசில் இருந்தாலும் தன்மான தலைவர் என பெயர் பெற்றவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தந்தை பெரியார் பகுத்தறிவு பகலவனாக இந்தியா முழுவதும் இருக்கிறார்.

    இந்தியா முழுவதும் பெரியாரின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமே பெரியாரை உற்று நோக்குகிறது. அவரின் கருத்துக்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.பெரியார் கடவுள் மறுப்பாளர், பார்பனர் எதிர்பாளர் என செய்தி பரப்பட்டுள்ளது. இது அவரின் கொள்கையும் கோட்பாடும் அல்ல. இவற்றை வலுப்படுத்த பயன்படுத்தப்பட்ட ராஜ தந்திரம்.

    பார்ப்பன எதிர்ப்பு என்பது பெரியாரில் இருந்து தோன்றியது அல்ல. அதற்கு முன்பே பல ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே கவுதமபுத்தர் எதிர்த்துள்ளார். இவரின் வரிசையில் தான் பெரியார் வந்துள்ளார். பெரியார் சமூகத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தான் காங்கிரசில் இருந்து வெளியே வந்தார்.

    பெரியார் எளிய மக்களுக்காக காங்கிரஸ் கட்சியில் பதவியில் இருந்து வெளியே வந்தவர். இந்தியாவில் 2 மரபினராக ஆரியம், திராவிட இருந்தது. ஆரிய எதிர்ப்பாக இருந்தது பெரியாரின் காலத்தில் பார்ப்பின எதிர்பாக இருந்தது. சனாதனம் என்பது கோட்பாடு, கல்வி, உரிமை, உழைப்பு, சுரண்டப்பட்ட நிலம், பறிக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வி அதிகாரம் வழங்க குறிப்பிட்ட இடம், ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இவை சமூக நீதியின் கோட்பாட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. திராவிடம் என்று சொன்னதால் தான் தமிழர் என்ற உணர்வு வரவில்லை என்பது அரசியல் மூடத்தனம். காந்தி இருந்த காலத்தில் சாதி, மதம், மொழியை மறந்து பிரிட்டிஷை இந்தியராக எதிர்த்தோம். பெரியார் காலத்தில் திராவிடம் என்ற அரசியல் தேவைப்பட்டது.

    திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது வரலாற்று பிழை. பா.ஜ.க.வினர் குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை மக்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் பாடம் புகட்டியுள்ளனர்.

    இது பெரியார் தொடங்கி வைத்த சமத்துவ போராட்டத்தின் விளைச்சல். 1938-ல் பெரியார் இந்தியை எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் 1965-ல் போராட்டம் வெடித்திருக்காது. இப்போது நாம் இந்தி பேசக்கூடிய சமூகமாக மாறி இருந்திருந்தால் மோடியின் வித்தை எடுபட்டிருக்கும். உன்னாலும் போராட முடியும், சாதிக்க முடியும், வாழ்ந்து காட்ட முடியும், நீதிபதி, முதலமைச்சர், பிரதமராக முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் பெரியார் தான்.

    தலித்துகள் இங்கு முதலமைச்சராக முடியாது என நான் சொன்னது எனது வேட்கையில் சொல்லவில்லை. இயலாமையால் உலறவில்லை. இன்றைக்கு இருக்கிற சமூக இருப்பு எவ்வாறாக உள்ளது, சாதிய கட்டமைப்பு எவ்வாறு வலுமையாக உள்ளது. அவற்றை தகர்க்கின்ற சூழல் இன்னும் கனியவில்லை. எனவே இதை தகர்க்க ஜனநாயக சக்திகள் தயாராக வேண்டும் என்கிற எச்சரிக்கையை கொடுக்கின்ற உரை.

    மாநில அரசுகளிடம் சமூகங்களை இட ஒதுக்கீடு என்ற பெயரில் கூறு போடுகிற அதிகாரத்தை தருவது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை கொடுத்துள்ளது. இது குறித்த விமர்சனம் தான் என் மீது எதிர்மறையாக கருத்து உருவாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் பொறுத்தவரை அருந்ததியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீட்டை முதலில் இருந்து ஆதரித்துள்ளது.

    தமிழகத்தில் ஓ.பி.சி சமூகத்தில் உள்ள சிறுபான்மையினர் முதல்வராக வர முடிகிறது, தமிழர் அல்லாதவர் முதலமைச்சராக வர முடிகிறது. பெரும்பான்மைச் சமூகமாக இருக்கக்கூடிய முக்குலத்தோர், வன்னியர், நாடார், கவுண்டர் முதல்வராக வர முடியவில்லை. இதுவும் ஒரு அரசியல். ஒரு தலித் முதலமைச்சர் ஆக வர முடியாது என்ற சோசியல் ஸ்ட்ரக்சர் (சமூக கட்டமைப்பு) இங்கு உள்ளது. இந்திய குடியரசுத் தலைவராக பழங்குடியினர், தலித் வகுப்பைச் சேர்ந்தவர் வரமுடியும் ஆனால் பிரதமராக வர முடியுமா? விடுதலை சிறுத்தைகள் பெரியாரின் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட பெரியார் இயக்கம்.

    தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பெரியாரை கொண்டு சேர்த்தது திருமாவளவனும், விடுதலை சிறுத்தைகளும் தான். அம்பேத்கர் இயக்கங்கள் பெரியாரை ஓ.பி.சி தலைவராக பார்த்ததை உடைத்தது விடுதலை சிறுத்தைகள் தான். சமத்துவத்தை நிலை நாட்டும் வரை பெரியார் தேவைப்படுகிறார்.

    பெரியாரின் அரசியல் சமூக நீதி மற்றும் சமத்துவ அரசியல். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான எதிர்ப்பு அரசியல் இல்லை. இதை தான் தலித் இந்த மண்ணில் முதலமைச்சராக முடியாத நிலை உள்ளது என கூறினேனே தவிர எனது ஏக்கம் மற்றும் இயலாமையால் சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாட்டு, டான்ஸ் குறித்தும், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் குறித்தும் மட்டுமே ஊடகங்கள் பேசிகொண்டிடுருகின்றன.
    • 90 சதவீத மக்களுக்குத் திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்குத் தொடர்பு இல்லாமல் உள்ளது.

    மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்கள் பட்டியலில் இதுவரை ஒரு தலித் அல்லது பழங்குடியின பெண்ணுக்குக் கூட இடம்பெறாதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நேற்று நடைபெற்ற 'சம்விதன் சம்மான் சம்மேளன்' நிகழ்ச்சியில் மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

    எந்தெந்த அரசு அமைப்புகளில், எந்த ஜாதிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர் என்ற தரவுகளை முதலில் சேகரித்தாக வேண்டும். 90 சதவீத மக்களுக்குத் திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்குத் தொடர்பு  இல்லாமல் உள்ளது.

    இதுவரை மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்களின் பட்டியலில் தலித் அல்லது பழங்குடியின பெண் யாராவது இருப்பார்களா என்று பார்த்தேன். ஆனால், தலித், பழங்குடியினர் அல்லது ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த பெண்கள் ஒருவர் கூட இல்லை. ஊடகங்களில் உயர்மட்டத்தில் இருக்கும் தொகுப்பாளர்களில் ஒருவர் கூட இந்த சமூகங்களை சேர்நதவர்கள் இல்லை. ஆனால் இன்னும் பாட்டு, டான்ஸ் குறித்தும், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் குறித்தும் மட்டுமே ஊடகங்கள் பேசிகொண்டிடுருகின்றன.

    விவசாயிகளைப் பற்றியோ தொழிலாளர்களைப் பற்றியோ அவை பேசுவதில்லை. அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரால் பாதுகாக்கப்படுகிறது. எனவே அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் 10 சதவீத மக்களுக்கானது அல்ல, அது அனைத்து குடிமக்களுக்கானது என்று தெரிவித்துள்ளார். 

    • லேட்டரல் என்ட்ரி முறையில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
    • லேட்டரல் என்ட்ரி முறைக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

    ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லேட்டரல் என்ட்ரி என்ற அரசுப் பணியில் அல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பாஜக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், லேட்டரல் என்ட்ரி முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல் ஆகும். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது" என பதிவிட்டுள்ளார். 

    • போலீசார் அவர்களின் முன்னிலையில் எனது சேலையை கழற்றிவிட்டு சார்ட்ஸ் அணியும்படி கட்டாயப்படுத்தினர்.
    • எனது தலைமுடியை ஒரு போலீஸ் அதிகாரி பிடித்துக்கொள்ள, மற்ற இரு போலீசார் எனது இரண்டு கால்கள் மீதும் கட்டையை வைத்து தாக்கினர்

    தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சாத்நகர்[Shadnagar] காவல்நிலையத்தில் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துவரப்பட்ட தலித் பெண் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தங்கம் திருடுபோன வழக்கில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை சந்தகேத்தில் அடிப்படையில் அழைத்து வந்த போலீசார், அவர்களது மகன் முன்னிலையிலேயே இந்த வெறிச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் சம்பந்தப்பட்ட போலீசாரை விசாரிக்க ACP உத்தரவிட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் அவர்கள் எனது கணவனைப் பிடித்து வந்து அடித்தனர். அதன்பின் அவரை வெளியில் விட்டுவிட்டு என்னைப் பிடித்து வந்தனர். போலீசார் அவர்களின் முன்னிலையில் எனது சேலையை கழற்றிவிட்டு சார்ட்ஸ் அணியும்படி கட்டாயப்படுத்தினர். எனது கை, கால்களை கட்டிவைத்து, என்னை தாக்கத் தொடங்கினர்.

    எனது தலைமுடியை ஒரு போலீஸ் அதிகாரி பிடித்துக்கொள்ள, மற்ற இரு போலீசார் எனது இரண்டு கால்கள் மீதும் கட்டையை வைத்து தாக்கினர். செய்யாத குற்றத்திற்காக என்னை அடிக்காதீர்கள் என்று நான் அவர்களிடம் கெஞ்சினேன். திருடுவதற்கு பதிலாக நான் பிச்சையே எடுப்பேன் என்று கூறினேன். ஆனால் அவர்கள் எனது  காலை  உடைந்தனர்.

    எனது கால் உடைந்துவிட்டது என்று வலியால் கத்தியபடி அவர்களிடம் கூறியும் அதை அவர்கள் நம்பவில்லை. அந்த நிலையில் என்னை எழுந்து நடக்கச் சொன்ன அவர்கள், அப்படி செய்யாவிட்டால் எனது கால்களை நிரந்தரமாக செயலிழக்கும்படி உடைப்போம் என்று மிரட்டியதாக தெரிவித்தார்.

    திருட்டு வழக்கில்  எப்.ஐ.ஆர் பதியாமலேயே சந்தேகத்தின் பேரில் பெண்ணை அழைத்துவந்து சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி புகார் அளித்துள்ளளார்.
    • இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    மத்தியபிரதேச மாநிலத்தில் காவலர்களின் வாகனங்களை முந்தி சென்றதற்காக தலித் தூய்மை பணியாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி புகார் அளித்துள்ளளார். அந்த புகாரில், "வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு செல்லும்போது போலீஸ் மற்றும் பணியாளர்களின் வாகனங்களை முந்தி சென்றேன். இதனையடுத்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக என்னை மிரட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
    • 'வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது'

    கடந்த ஜூலை [ஜூன் 27] ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மக்களவையில் ராகுல் காந்தியின் உரை பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் இடையிலான கருத்து மோதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    கூட்டத்தொடரின் ஆரம்ப கூட்டங்களில் தான் பேசும்போது ஜெகதீப் தன்கர் மைக்கை ஆப் செய்வதாக கார்கே பல முறை குற்றம்சாட்டினார். ஆனால் மைக்கின் கண்ட்ரோல் தன்னிடம் இல்லை என்று ஜெகதீப் விளக்கம் அளித்தார். நேற்று முன் தினம் இருவருக்கும் இடையில் சற்று இணக்கம் ஏற்பட்டு அவை கலகலப்பாக இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.

    நேற்று மாநிலங்களவையில், காங்கிரஸ் எம். பி பிரமோத் திவாரி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசியபோது, ஆளும் பாஜக பல வழிகளில் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது என்று சாடினார். இந்த கருத்தை கண்டித்த ஜெகதீப் தன்கர், ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது என்று தெரிவித்தார். உடனே எழுந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ், அதை [துரோகத்தை] எங்களால் நிரூபிக்க முடியும் என்று தெரிவித்தார். இதனால் பொறுமை இழந்த ஜெகதீப் தன்கர், ஜெயராம் ரமேஷை பார்த்து, நீங்கள் மிகவும் புத்திசாலி, திறமை வாய்ந்தவனர், நீங்கள் உடனே வந்து எதிர்கட்சித் தலைவர் கார்கேவின் இடத்தில் அமர்ந்து அவரது வேலையே நீங்களே பார்க்கலாம் என்று கிண்டலாக தெரிவித்தார்.

    ஜெகதீப் தன்கரின் கருத்தை கண்டிக்கும் வகையில் கார்கே உடனே எழுந்து, வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது, எனவே தான் ஜெயராம் ரமேஷை புத்திசாலி என்று தெரிவிப்பதன்மூலம் தலித் ஆகிய நான் மந்தமான நபர் என்றும் அவர் எனக்கு பதில் இங்கு வந்து அமர வேண்டும் என்றும் கூறுகிறீர்கள் என்று காட்டமாக ஜெகதீப் தன்கரிடம் தெரிவித்தார்.

     

    இதனால் சற்று கலக்கமடைந்த தன்கர், நான் அப்படி கூறவில்லை, எனது கருத்தை நீங்கள் திரித்துக் தவறாக எடுத்துகொண்டீர்கள், உங்கள் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. நீங்கள் இருக்கும்போது ஜெயராம் ரமேஷ் ஏன் பேச வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அவ்வாறு சொன்னேன், நீங்கள் சில பிரச்னைகளை தீர்க்க வேண்டியது உள்ளது என்று தெரிவித்தார்.

     

    இதற்கு பதிலளித்த கார்கே, என்னை உருவாகியவர் இங்கு உள்ளார் [சோனியா காந்தியை சுட்டிக்காட்டி] மேலும் மக்கள் என்னை உருவாக்கியவர்கள். நீங்களோ ஜெய்ராம் ரமேஷோ என்னை உருவாக்கவில்லை என்று தெரிவித்தார். 

     

    • வழக்கை வாபஸ் பெற பெண்ணின் குடும்பம் திட்டடவடமாக மறுத்த நிலையில் அன்றிலிருந்து அந்த குடுமபத்தை சோகம் நாலாபுறப்பும் சூழத் தொடங்கியது.
    • தனது மகனைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் முன்னிலையில் தனது ஆடைகளை சிறுவனின் தாய் களைந்து நின்ற கொடூரமும் நிகழ்ந்தது.

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் வசித்து வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

    அப்பகுதியைச் சேர்ந்த நால்வர் தன்னை அடித்துத் துன்புறுத்தி வன்கொடுமை செய்து, போலீசிடம் சென்றால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

    இந்த விவகாரம் அந்த சமயத்தில் அரசியல் ரீதியாக பூதாகரமாக வெடித்த நிலையில் வழக்கு மீதான விசாரணை இன்று வரை நடந்து வருகிறது. வழக்கை வாபஸ் பெறும்படி பெண்ணின் குடும்பத்துக்கு உறவினர்கள் மூலமும் ஊர்க்காரர்கள் மூலமும் அழுத்தம் கொடுக்கப்பட்டது வந்தது.

    ஆனால் வழக்கை வாபஸ் பெற பெண்ணின் குடும்பம் திட்டவட்டமாக மறுத்த நிலையில் அன்றிலிருந்து அந்த குடுமபத்தை சோகம் நாலாபுறப்பும் சூழத் தொடங்கியது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 18 வயது தம்பியை 9 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொன்றது. தனது மகனைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் முன்னிலையில் தனது ஆடைகளை சிறுவனின் தாய் களைந்து நின்ற கொடூரமும் நிகழ்ந்தது.

    இந்த சம்பவத்தில் 9 பேர் மீதும் சிறுபான்மையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலையை நேரில் பார்த்த சிறுவனின் உறவினரை கடந்த மே 25 ஆம் தேதி சமாதானம் பேசுவதாக அழைத்து வழக்கில் சம்பந்தமுடையவர்கள் கொலை செய்துள்ளனர்.

    இதைதொடரந்து பாதிக்கபட்ட பெண்ணும் உயிரிழந்த உறவினரின் உடலுடன் கடந்த மே 26 ஞாயிறுக்கிழமை வேனில் வரும்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக நடந்து வரும் இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தொடந்து கொலை செய்யப்பட்டு, அந்த பெண்ணும் உயிரிழந்துள்ளது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகம் காட்டியதாக ஆளும் பாஜக கட்சியை எதிரிக்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

    • மத்தியப் பிரதேசத்தில் வயதான தலித் தமபதியை கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி செருப்பு மாலை அணிவித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • . இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மத்தியப் பிரதேசத்தில் வயதான தலித் தமபதியை கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி செருப்பு மாலை அணிவித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் முங்காளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிளோரா கிராமத்தில் வசித்து வரும் வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியின் மகன் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    அவர்மீது நேற்று முன்தினம் (மே 17) காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அந்த இளைஞரின் குடும்பம் கிராமத்தை விட்டு வெளியேறியது. இந்த நிலையில் இன்று (மே 20) அந்த இளைஞரின் வயதான தாய்-தந்தை கிராமத்துக்குள் வந்துள்ளனர்.

    அப்போது அவர்களை பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து 10 க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று சரமாரியாக அடித்து துன்புறுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி செருப்புகளை கோர்த்து மாலையாக அவர்களின் கழுத்தில் அணிவித்திருக்கிறது.

    இதனையடுத்து அந்த இடத்தில இருந்த கும்பல் தலைமறைவாகியுள்ளது. இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈவ் டீசிங் அந்த இளைஞர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசம், தலித், தாக்குதல், கிராமம், போலீஸ், வழக்குப்பதிவு

    • இந்தியாவில் ஐஐடிகள் இருப்பது போல் அமெரிக்காவில் SAT என்ற உயர்கல்வி தேர்வுகள் இருக்கின்றன.
    • இங்கு கேள்வி யாருக்கு தகுதி இருக்கிறது' என்பது அல்ல, 'யார் அதிகாரத்தில் இருக்கிறார்' என்பதே கேள்வி.

    அண்மையில் தகுதித்தேர்வு குறித்து ராகுல்காந்தி பேசிய வீடியோ வைரலானது.

    அந்த வீடியோவில், "இந்தியாவில் ஐஐடிகள் இருப்பது போல் அமெரிக்காவில் SAT என்ற உயர்கல்வி தேர்வுகள் இருக்கின்றன. அந்தத் தேர்வுகள் அமல்படுத்தப்பட்ட போது வெள்ளையர்கள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றனர். கறுப்பினத்தவரும் லத்தீன் அமெரிக்கர்களும் தேர்ச்சி பெற முடியவில்லை. அவர்களுக்கு தகுதியும் அறிவும் இல்லை எனப் பேசினார்கள்.

    பிறகொரு நாள் ஒரு பேராசிரியர் வந்தார். அதே தேர்வுத்தாள்களை கறுப்பினத்தவர்களைக் கொண்டு தயார் செய்து, கறுப்பினத்தவர்களை எழுத வைத்தார். வெள்ளை மாணவர்கள் எவரும் தேர்ச்சி பெற முடியவில்லை.

    எனவே இங்கு கேள்வி யாருக்கு தகுதி இருக்கிறது' என்பது அல்ல, 'யார் அதிகாரத்தில் இருக்கிறார்' என்பதே கேள்வி."

    உயர் சாதியினர் நடத்தும் தேர்வுகளில் தலித்துகள் தோல்வி அடைகிறார்கள் என்று சொன்னால், ஒன்று செய்வோம், தலித்துகளை தேர்வுத் தாளை தயாரிக்க வைத்து, உயர் சாதியினரை தேர்வு எழுதச் சொல்லுங்கள்" என்று ராகுல்காந்தி பேசுகிறார்.

    தகுதியின் சிக்கலான விஷயங்களை ராகுல்காந்தி மிக எளிமையாக விளக்கியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஆந்திராவைச் சேர்ந்த ரோஹித் வெமுலா கடந்த 2016 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்
    • பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவரின் தற்கொலைக்கு, சாதி வேறுபாடு தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது

    ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்பு படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரோஹித் வெமுலா கடந்த 2016 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவரின் தற்கொலைக்கு, பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., உடனான மோதலும், சாதி வேறுபாடும் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஹைதராபாத் போலீசார், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதில் "ரோகித் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரே அல்ல. அவரின் தந்தை ஓ.பி.சி. இனத்தைச் சேர்ந்தவர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ரோகித்தின் தாய் ராதிகா, உண்மையை மறைத்து போலி சான்றிதழ் பெற்றுள்ளார். உண்மையான சாதி அடையாளம் வெளியே தெரிந்ததால் பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்தில் தான் ரோகித் தற்கொலை செய்துள்ளார். இதற்கு யாரும் காரணம் அல்ல" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ரோகித் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதே சமயம், இந்த அறிக்கையில் சில சந்தேகங்கள் உள்ளன. ரோகித் வெமுலாவின் தாயும், அவரைச் சார்ந்தோரும் சில சந்தேகங்களை எழுப்பினர்

    ஆதலால், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெலங்கானா டிஜிபி ரவி குப்தா தெரிவித்துள்ளார்.

    ×