என் மலர்
நீங்கள் தேடியது "உண்ணாவிரதம்"
- ஜாக்டோ ஜியோ சார்பில் எழிலகம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் எழிலகம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் தொடக்க உரையாற்றினார். தலைமை செயலக சங்க ஒருங்கிணைப்பாளரான வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில உயர்மட்ட குழு உறுப்பினரான விஜய குமரன், மாநில ஒருங்கிணைப்பாளரான சீனிவாசன் உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வருகிற 30-ந்தேதி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர்.
- பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது.
- அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும்.
சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. சமீபத்திலும் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மறியல் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்துசெய்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதேபோல், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் 2004-2006 தொகுப்பூதிய பணிக்காலம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதியத்தை பழைய முறைப்படி வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்துதல் போன்ற எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம். இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளார்.
- தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வட மாநில தொழிலா ளர்களை பணியில் அமர்த்தக் கூடாது. தினக்கூலி தொழிலா ளர்களை நிரந்தரப்ப டுத்த வேண்டும். ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு நூற்பாலை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் பட்டியல் தினக்கூலி தொழிலாளர்களை காலதாமதம் இன்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துவதை நிர்வாகம் கைவிட வேண்டும் என கூறினார். இதில் அண்ணா தொழிற்சங்கம் மாசானம், ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் சுகுமாரன், சேர்மன் சகாயராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் மகாராஜா பிள்ளை, சி.ஐ.டி.யு.சக்திவேல், ஏ.ஐ.டி.யூ.சி. இசக்கிமுத்து, நகர பொருளாளர் சுயம்புலிங்கம், கச்சேரி நாகராஜன், சங்கரலிங்கம், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கிறது
- பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பேட்டி
நாகர்கோவில்:
நாகர்கோவில் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் இன்று நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வேணுகோபால் கமிஷனை மீறி மாவட்ட நிர்வாகம் பல வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இது கண்டனத்துக்கு உரியது. வருத்தமும் அளிக்கிறது.
குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும். எனவே வேணுகோபால் கமிஷன் பரிந்துரையை மீறி குமரி மாவட்டத்தில் புதிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை பதில் தரவில்லை. எனவே குமரி மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி டிசம்பர் 11-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இதில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ள உள்ளார்கள். அதோடு மாவட்ட நிர்வாகம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வருத்தம் அளிக்கிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர், மேயர், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கலந்து கொண்டனர். அதே சமயம் இந்த கூட்டத்தில் அமைச்சரின் மகனும் கலந்து கொண்டு உள்ளார். இது கண்டிக்கத்தக்கதாகும். இது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மகளிர் அணி மாநில செயலாளர் உமாரதி ராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- நிதி நெருக்கடி காரணமாக தனி அலுவலர் மற்றும் தொடர்பு அலுவலர் உள்பட 634 பேரை தற்போது பதவி இறக்கம் செய்துள்ளனர்.
- பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர்.
கடலூர்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக தனி அலுவர் மற்றும் தொடர்பு அலுவலர் உள்பட 634 பேரை தற்போது பதவி இறக்கம் செய்துள்ளனர். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னதாக அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது தனியார் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பதவி இறக்கம் உள்ளிட்ட5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பூமா கோவில் அருகே 75 பெண்கள் உள்பட 300 தனியார் அலுவலர்கள் 1 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி போலீசார் உத்தரவின் பேரில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் பெரும் பரபரப்பாக உள்ளது.
- காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன் தென்னை, வாழை, மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தாற்போல் லேசான காற்றுக்கு பயிர்கள் அசைவது ரம்மியமாக காட்சியளிக்கும். காலப்போக்கில் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் நலிவடைந்த நிலையில் பலர் திருப்பூர் போன்ற நகரங்களில் வெவ்வேறு தொழில்களை நாடிச்சென்றனர். இருப்பினும் பழமையை மறவாமல் விவசாயம்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கம் என்ற நோக்கில் பல இன்னல்களுக்கிடையே சில விவசாயிகள் மனம் தளராமல் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பயிர்களை நல்லமுறையில் பாதுகாத்து இரவு விடியவிடிய கண்விழித்து தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து நல்லமுறையில் பயிர்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் தோட்டம் ,காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் ,முன்பெல்லாம் தோட்டம், காடுகளில் விவசாயதொழிலுடன் ஆடு,மாடு, கோழிவளர்ப்பில் ஈடுபடுவார்கள். நாகரீக உலகத்தில் தற்போது நாட்டுக்கோழி, ஆடுகள் வளர்ப்பது மறைந்துவருகிறது. அதேசமயம் மான், மயில்கள் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயபயிர்களை நாசம் செய்துவிடுகிறது. அரும்பாடுபட்டு வளர்த்த பயிர்கள் நாசமாவதுடன் எங்கள் பாடு வீணாகி பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மட்டுமே மான்கள் இருந்த நிலையில் இப்போது அவினாசி ஒன்றியத்தில் 40 கி.மீ சுற்றளவிற்கு தோட்டம் ,காடுகளில் மான்கள், மயில்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது. எனவேதான் சிறுத்தை நடமாட்டம் தொடங்கிவிட்டது. வாழ்நாள் முழுவதும் மான், மயில்களுடன் போராடுவது போதாதென்று தற்போது எந்த நேரத்தில் தோட்டப்பகுதிக்குள் சிறுத்தை வருமோ என்ற அச்சத்தில் உள்ளோம்
மான், மயில்களின்தொந்தரவை கட்டுப்படுத்த அரசு,விவசாயத்துறை, தோட்டக்கலை துறையினரிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் அதற்குஎந்த முயற்சியும் எடுப்பதில்லை. அரசும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் இதற்கு தீர்வுகாண அவினாசி ஒன்றியத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றுதிரண்டு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒன்றுதான் வழிஎன்றனர்.
- மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது.
- மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த2 மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவர் கிராமங்கள் உள்ளது. இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவர் கிராமங்கள் இருக்கின்றது .இந்த மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது.
இந்த மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த2 மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை.
இந்த 2 மாவட்ட மக்களின் கோரிக்ககைளை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தில் அழகன் குப்பம் பக்கிங்காம் கால்வாயிலும் செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு ஆலம்பரா என்கிற இடத்திலும் 2 பீப்பிள் துறைமுகங்கள் அமைக்க கடந்த 2ஆண்டுக்கு முன் அரசு சார்பில் ரூபாய் 236 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர்கள் மேற்கொண்டனர்.
தற்போது இந்த பணிகள் கிடப்பில் உள்ளது. எனவே இந்த 2 மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டு உள்ள துறைமுகப் பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ.சி.ஆர். சாலையில் அனுமந்தையில் உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது
- ஸ்ரீ அம்மன் போர்வெல் என்ற நிறுவனத்தை கூட்டாக நடத்தி வந்தனர்.
- ரிக்வண்டி மற்றும் சப்போர்ட் வண்டி என 2 வாகனங்கள் சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ளது என தெரிகிறது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த புதுப்பாளையம் காந்தி ஆசிரமம் அருகே உள்ள புளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி, (வயது 37). இவருக்கு கவிதா (32) என்ற மனைவியும் கர்ணிகா (7) என்ற பெண் குழந்தையும், நிஷாந்த் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
பெரியசாமிக்கு சித்ரா என்ற மூத்த சகோதரி உள்ளார் .இவரது கணவர் சேகர் (48). இவரும், பெரியசாமியும் இணைந்து ஸ்ரீ அம்மன் போர்வெல் என்ற நிறுவனத்தை கூட்டாக நடத்தி வந்தனர். அதில் ரிக்வண்டி மற்றும் சப்போர்ட் வண்டி என 2 வாகனங்கள் சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ளது என தெரிகிறது.
இந்த நிலையில் சித்ரா வுக்கும், பெரியசாமிக்கும் சொத்து தகராறு ஏற்படவே ரிக் வாகனத்தை பெரியசாமி தனது அக்காள் சித்ராவின் கணவருக்கே விட்டுக் கொடுத்து விடுவது எனவும், சொத்துக்கள் முழுமையும் பெரியசாமிக்கு விட்டுக் கொடுத்து விட வேண்டும் எனவும் பேசி முடிவான நிலையில் சேகருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2018 -ம் ஆண்டு உடல் நலம் தேறிய சேகர், பெரியசாமிக்கு சொத்து ஆவணத்தை மாற்றி தராமல் இருந்தார். மேலும் அவருக்கு தெரியாமல் அப்போதைய வட்டார போக்குவரத்து அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் உதவியுடன் பெரியசாமியின் கையெழுத்தை போலியாக போட்டு போலி ஆவணத்தை வைத்து ரிக் வாகனத்தையும், சப்போர்ட் லாரியையும் தனது பெயருக்கு சேகர் மாற்றி உள்ளார் என தெரிகிறது இதனை அறிந்த பெரியசாமி புகார் தெரிவிக்கவே அவரை அழைத்து சிலர் மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெரியசாமி, தனது மனைவி கவிதா மற்றும் குழந்தைகளுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னுடைய ரிக் வாகனத்தை, தனது பெயருக்கு மாற்றம் செய்து தரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெரியசாமி தெரிவித்தார். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- முறைகேடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.
கடலூர்:
திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் சார்பாக தி.இளம ங்கலத்தில் பகுதியில் உள்ள ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி சேதமடைந்தது இருப்பதை கண்டித்தும், மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் தயா.பேரின்பம் தலைமையில் உண்ணா நிலை அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொரு ளாளர் பாண்டுரங்கன், மாநிலத் துணைச் செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணை செயலாளர் வீரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கி பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஆதிதிராவிட நல விடுதியின் கட்டிடத்தின் தன்மை குறித்தும் அதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.
போர்கால அடிப்ப டையில் ஆதிதிராவிட மாண வர்களின் பாது காப்பை உறுதிப்படுத்த தற்காலி கமாக விடுதியை மாற்று இடத்தில் அமைத்து தர வலியுறுத்தியும்.அரசி னர் ஆண்கள் மேல்நி லைப் பள்ளியின் அருகி லேயே ஆதிதிராவிட மாணவர் விடுதி அமைக்க வலியுறுத்தியும் உண்ணா நிலை போராட்டம் நடை பெற்றது. இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா, கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் முரு கேசன்,மங்களூர் ஒன்றிய செயலாளர் பாலமுரு கன், கிராம தெருக்கூத்து கலை பேரவை திட்டக்குடி தொகுதி செயலாளர் ராயர், கிளைச் செயலாளர் சாமிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் அறிக்கை
- தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடக்கிறது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் அரசன் பொன்ராஜ் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உத்தரவுபடி நாளை (3-ந்தேதி) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் எனது தலைமையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவை புழக்கங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகக்கூடிய நிலையில் உள்ளது. மாணவர்களும் இந்த பழக்கத்திற்கு அடிமை யாகி வருவதால் அவர்களது வாழ்க்கை சீரழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
போதை மாத்திரை, போதை ஊசியால் தொழி லாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே போதைப் பொருட்களை கட்டுப்படுத்த துரித நடவ டிக்கை எடுக்க வேண்டும், இளைஞர் சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த போராட்டம் நடக்கிறது.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- புத்தியை கெடுக்கும் போதை பொருட்களை முற்றிலுமாக அகற்றிட வேண்டும்.
- போதைப் பழக்கம் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் :
தமிழகத்தில் மது மற்றும் போதை பொருட்களை முற்றிலும் அகற்றிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் உத்தரவின் பேரில் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.கிழக்கு மாவட்ட செயலாளர் அக்குவா டெக்ஸ் ரமேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது மதுவால் மனரீதியான சமூக ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், புத்தியை கெடுக்கும் போதை பொருட்களை முற்றிலுமாக அகற்றிட வேண்டும், தமிழகத்தில் மது விற்பனையை தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருவதால் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மாரியப்பன், மணி, சந்தோஷ், சேனு, ரமேஷ், விக்கி, சுந்தர்ராஜ், ராஜதுரை உள்ளிட்டதிரளானோர் கலந்து கொண்டனர்.
- போராட்டம் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியினர் 200 பேர் கைது
- ஆர்ப்பாட்டத்தில் போதை பொருளை தடை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில்:
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று தமிழக முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
நாகர்கோவிலில் போராட்டம் நடத்துவதற்கு சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு திரண்டனர். போராட்டத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் கால்டுவின் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் செண்பகவல்லி முன்னிலை வகித்தார்.
மாநில கலை இலக்கிய துணை செயலாளர் அமலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் டார்வின் தாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், ஜெபஸ்டின், தெற்கு மண்டல தலைவர் நலன் குமார், மகளிர் அணி செயலாளர் சந்திரா, தொண்டரணி செயலாளர் ராஜேஷ் மற்றும் ரதீஷ், எபனேசர், பாபு, செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் போதை பொருளை தடை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு போராட்ட க்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கு மேற்பட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.