search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இத்தாலி"

    • 62 வயதான ஃபேப்ரிசியோ லாங்கோ கடந்த 2013 முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் யூனிட்டுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ஆவார்.
    • அடமெல்லோ மலைத்தொடரில் அமைந்துள்ள Cima Payer சிகரத்தை நோக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார்.

    பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி [Audi] நிறுவனத்தின் இத்தாலி யூனிட்டின் தலைவர் ஃபேப்ரிசியோ லாங்கோ [Fabrizio Longo] மலையேற்றத்தில் போது 10,000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான ஃபேப்ரிசியோ லாங்கோ கடந்த 2013 முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் யூனிட்டுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ஆவார்.

     

    மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட லாங்கோ இத்தாலி-சுவிஸ் எல்லைக்கு சில மைல் தூரத்தில் உள்ள அடமெல்லோ மலைத்தொடரில் [Adamello mountains] அமைந்துள்ள Cima Payer சிகரத்தை நோக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். கேபிள்கள், பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தும் இருந்தும் துரதிருஷ்டவசமாகச் சிகரத்தின் அருகில் செல்வதற்கு முன்னர் 10,000 ஆதி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.

     

    அவருடன் சென்ற மற்றொரு மலையேற்ற வீரர் உடனே மீட்புக்குழுவுக்குத் தகவல் தெரிவித்த நிலையில் ஹெலிகாப்டர் உதவியுடன் 700 அடி பள்ளத்தாக்கிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஃபேப்ரிசியோ லாங்கோ மறைவுக்கு ஆடி நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. 

    • தனது மனைவியிடம் கேட்டுள்ள கவித்துவமான மன்னிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
    • இத்தாலியக் கோடியை உயரத்திப்பிடிக்கும் போது என் கையில் இருந்து மோதிரம் நழுவியது

    இத்தாலிய உயரம் தாண்டுதல் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான ஜியான்மார்கோ தாம்பெரி [ Gianmarco Tamberi] நேற்று தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்சில் பங்கேற்றுள்ளார். இத்தாலி நாட்டின் சார்பில் நேற்று முன் தினம் இரவு செய்ன் நதி [Seine River] மீது படகில் நடந்த தொடக்கவிழா அணிவகுப்பில் இத்தாலிய கோடியை அவர் ஏந்திச்சென்றார்.

     

    இந்நிலையில் அன்றைய இரவு தனது திருமண மோதிரத்தை செய்ன் நதியில் அவர் தொலைத்துள்ளார். அதற்கு அவர் தனது மனைவியிடம் கேட்டுள்ள கவித்துவமான மன்னிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மனுஷன் என்னமா பீல் பண்ணி எழுதியிருக்கிறார் என்று இணையவாசிகள் மனம் நெகிழ்ந்து வருகின்றனர்.

     

    மோதிரத்தை தொலைத்ததற்காக அவர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு எழுதியுள்ள இன்ஷ்டாகிராம் பதிவில், 'என்னை மன்னித்துவிடு அன்பே, இத்தாலியக் கோடியை உயரத்திப்பிடிக்கும் போது என் கையில் இருந்து மோதிரம் [என் கை விரலில் இருந்து] நழுய தருணத்தில் [அது படகின் உள்ளே விழுந்துவிடும் எடுத்துக்கொள்ளலாம்] என்று ஒரு சிறிய நம்பிக்கை இருந்தது.

    ஆனால் அது கீழே விழுந்து தவறான திசையில் எகிறி நதிக்குள் சென்றது. எதோ அது அங்கு தான் இருக்கவேண்டும் என்று விரும்பியதுபோல் இருந்தது. சில கணம் நான் உறைந்து நின்றேன். ஆனால் இது நடந்துதான் தீரும் என்றால் இந்த நதியை விட சிறந்த ஒரு இடத்தை என்னால் கற்பனை செய்திருக்க முடியாது. காதலின் நகரமான பாரிசில் உள்ள இந்த நதிப்படுகையில் அது [மோதிரம்] என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

     

    நேற்று நடந்த இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் ஒரு கவித்துவமான தன்மையும் இணைந்தே இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீ விரும்பினால் உனது மோதிரத்தையும் இந்த நதியில் வீசி விடலாம். அவ்வாறாக இருவரின் மோதிரங்களும் நதியில் ஒன்று சேரும். இதில் இன்னொரு நன்மையும் உள்ளது, நீ அடிக்கடி என்னிடம் கேட்பதுபோல், நாம் உறுதிமொழி கூறி புதிதாக மீண்டும் ஒருமுறை திருமணம் செய்துகொள்ளலாம்' என்று எழுதியுள்ளார். 

    • பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டடிருந்தார்.
    • தன்னை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவமதித்ததாக மெலோனி தொடர்ந்த வழக்கில் ராபர்ட்டோ சேவியானோ என்ற மற்றொரு பத்திரிகையாளருக்கு 1000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

    இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இத்தாலியில் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் கோர்டீஸே[Cortese] கடந்த 2021 இல் தனது எக்ஸ் [ட்விட்டர்] பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின்  உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டடிருந்தார்.

     

    'நீ என்னை பயமுறுத்த முடியாது,மெலோனி.. நீ வெறும் 1.2 மீட்டர் [4 அடி] உயரம்தான். என்னால் உன்னை பார்க்க கூட முடியவில்லை' என்றும் கோர்ட்டிஸே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். எக்ஸ் தளத்தில் மட்டுமின்றி பல்வேறு சமூக ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.   இந்த கருத்து தொடர்பாக இருவருக்குமிடையில் சமூக  வலைதளத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில்  மெலோனி கோர்டீஸே மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த மிலான் நீதிமன்றம் தற்போது கோர்டீஸே -கு 5000யூரோக்கள் [ ரூ.4.5 லட்சம்] அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

     

    2021 இல் மெலோனியின் தீவிர இடதுசாரி சகோதரர்கள் கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதன்பின்னர் 2022 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அக்கட்சி சார்பில் மெலோனி இத்தாலி பிரதமர் ஆனார். தற்போது இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள கோர்டீஸே,'கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு எதிராக தீவிர பிரச்னையை இத்தாலி அரசு கொண்டுள்ளது. இது சுயாதீன பத்திரிகையாளர்களுக்கு கடுமையான காலம். வரும் காலத்தில் சிறந்த நாட்களுக்காக நாம் காத்திருப்போம். நாங்கள் மனம் தளரப் போவதில்லை' என்று தெரிவித்துள்ளார். 

    முன்னதாக ராபர்ட்டோ சேவியானோ என்ற பத்திரிகையாளர் தன்னை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவமதித்ததாக மெலோனி தொடர்ந்த வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரோம் நீதிமன்றம் ராபர்ட்டோவுக்கு 1000 யூரோக்கள் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கை துண்டிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை வழங்காமல் அப்படியே சாலையோரத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்
    • வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இத்தாலி நாட்டில் உள்ள வெரோனா மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்களில் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடந்தப்பட்ட 33 இந்திய விவசாயப் பணியாளர்களை அங்கிருந்து இத்தாலிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

    கடந்த ஜூன் மாதம் அந்த பகுதியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான சத்தன் சிங் எனபரின் கை பணியின்போது இயந்திரத்தில் சிக்கி துண்டானது. அவர்க்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் அவரை அப்படியே சாலையோரம் ரத்த வெள்ளத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்.

     

    இதனைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இத்தாலிய பண்ணைகளில் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.360 கூலியாக வழங்கப்பட்டு வந்துள்ளது.

    ரூ.15 லட்சம் கட்டினால் இத்தாலியில் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித்தருவதாக 2 இந்திய ஏஜெண்டுகள் இவர்களை ஏமாற்றி சீசனல் ஒர்க்கர் பெர்மிட்டில் அங்கு அழைத்துச்சென்று வேலைக்கு சேர்த்துள்ளனர்.

    இந்த ரூ.15 லட்சம் தொகையை முழுமையாக கழிக்கும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது. மேலும் கூடுதலாக ரூ.12 லட்சம் செலுத்தினால் நிரந்தர பெர்மிட் வாங்கித்தருவதாகவும் இவர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றியுள்ளனர். தற்போது அப்படி ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக 33 இந்தியர்களை மீட்ட இத்தாலிய அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலை வாய்ப்பு மற்றும் குடியிருப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

     

    • வைக்கோல் வெட்டிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எந்திரத்தில் அவரது கை சிக்கி துண்டிக்கப்பட்டது.
    • சத்னம் சிங் இறந்த விவகாரத்தில் பண்ணை உரிமையாளர் அன்டோனெல்லோ லோவாடோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்தியாவைச் சேர்ந்த சத்னம் சிங் (31) இத்தாலியில் கூலித் தொழில் செய்து வந்தார். ரோம் நகருக்கு அருகிலுள்ள லாசியோவில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்தார். அவர் வைக்கோல் வெட்டிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எந்திரத்தில் அவரது கை சிக்கி துண்டிக்கப்பட்டது.

    அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அவரது முதலாளி குப்பை கொட்டும் இடத்துக்கு அருகில் விட்டு சென்றுவிட்டார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சத்னம் சிங் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாராளுமன்றத்தில் பேசும்போது, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் சத்னம் சிங் இறந்த விவகாரத்தில் பண்ணை உரிமையாளர் அன்டோனெல்லோ லோவாடோவை போலீசார் கைது செய்துள்ளனர்.


    • எங்களது நிறுவனத்தின் அனைத்து கார்களும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்று நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை.
    • இந்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.

    சீனாவில் தயாரிக்கப்படும் கார்களை இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என பொய்யாக விளம்பரப்படுத்தியதால் டி.ஆர். ஆட்டோமொபைல்ஸ் கார் நிறுவனத்திற்கு இத்தாலி அரசு 53 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

    டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் கம்பெனி சீன கார் தயாரிப்பாளர்களான செரி, பி.ஏ.ஐ.சி. மற்றும் ஜே.ஏ.சி. தயாரித்த உதிரிபாகங்களை அசெம்பிள் செய்து கார்களை தயாரிக்கிறது.

    ஆனால், டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் தனது நிறுவனத்தின் கார்கள் இத்தாலியில் தயாரிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறது. அவற்றின் அசெம்ப்ளி மற்றும் இறுதிப் பணிகள் மட்டுமே இத்தாலியில் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்நிலையில், "எங்களது நிறுவனத்தின் அனைத்து கார்களும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்று நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை. ஆதலால் இந்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்" என்று டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் தெரிவித்துள்ளது.

    • ஸ்பெயிண் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    • இத்தாலி அணி அடுத்த போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் குரூப் "பி"-யில் இடம் பிடித்துள்ள இத்தாலி- ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் ஸ்பெயின் அணி வீரர் ரிக்கார்டோ கலாஃபியோரி ஒரு கோல் அடித்தார்.

    இதன்பின் இத்தாலி அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஸ்பெயிண் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இத்தாலி அணி அடுத்த போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.

    • இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
    • அலெசாண்ட்ரோ பஸ்டோனி போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐரோப்பியாவை சேர்ந்த 24 அணிகள் விளையாடுகின்றன. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த போட்டி தொடங்கிய 23 நொடியிலேயே அல்பேனிய வீரர் நெடிம் பஜ்ராமி தனது அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையாக அமைந்தது.

    இதைத் தொடர்ந்து இத்தாலி அணியின் அலெசாண்ட்ரோ பஸ்டோனி போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக கோல் அடித்தார். இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிவேக கோல் என்ற சாதனையானது.

    இந்த போட்டியில் இத்தாலி அணி 2-1 என்ற கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்களில் இத்தாலி அணி இரண்டாவது முறையாக பத்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    முன்னதாக ஜூன் 1968 முதல் ஜூன் 1988 வரையிலான காலக்கட்டத்தில் இத்தாலி அணி தனது முதல் பத்து போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அல்பேனியா கோல் அடித்தது.
    • 11-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து இத்தாலி சமன் செய்தது.

    டார்ட்மென்ட்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    24 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் ('ஏ' பிரிவு) ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

    நேற்று நடந்த ஒரு ஆடடத்தில் சுவிட்சர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் அங்கேரியை ('ஏ') தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஸ்பெயின் -குரோஷியா அணிகள் மோதின.

    இதில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஸ்பெயின் அணிக்காக மொரட்டா (29-வது நிமிடம்) பேபியன் (32-வது நிமிடம்) கார்வஜல் (47-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த போட்டியில் இத்தாலி- அல்பேனியா ('பி' பிரிவு) அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அல்பேனியா கோல் அடித்தது. பஜ்ராமி இந்த கோலை அடித்தார்.

    11-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து இத்தாலி சமன் செய்தது. பஸ்டோனி தலையால் முட்டி இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது.

    16-வது நிமிடத்தில் இத்தாலி 2-வது கோலை அடித்தது. நிக்கோலா பாரெல்லா இந்த கோலை மிகவும் அற்புதமாக அடித்தார். இதன் மூலம் இத்தாலி 2-1 என்ற முன்னிலையை பெற்றது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இதே நிலை இருந்தது.

    2-வது பாதி ஆட்டத்திலும் இதே நிலை தான் நீடித்தது. இத்தாலி வீரர்கள் 3-வது கோலை அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை தவற விட்டனர். இதேபோல 2-வது கோலை அடித்து சமன் செய்ய அல்பேனியா வீரர்கள் கடைசி வரை போராடி னார்கள். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

    இறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தாலி 2-வது ஆட்டத்தில் ஸ்பெயினுடன் 20-ந் தேதியும், அல்பேனியா 2-வது போட்டியிலும் குரோஷியாவுடன் 19-ந் தேதியும் மோதுகின்றன.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் போலந்து- நெதர்லாந்து (மாலை 6.30 மணி), சுலோவெனியா- டென்மார்க் (இரவு 9.30), இங்கிலாந்து - செர்பியா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    • ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மாநாட்டின் நடுவே இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார்.
    • மெலோனி மோடியுடன் ‘செல்பி’ வீடியோ எடுத்தார்.

    இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டின் நடுவே இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார். அப்போது மெலோனி மோடியுடன் 'செல்பி' வீடியோ எடுத்தார். பின்னர் அவர் அந்த வீடியோவை 'மெலோடி' என்ற தலைப்புடன் 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்தார். இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், 'மெலோடி' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.

    அந்த வீடியோவில், 'மெலோடி குழுவில் இருந்து ஹலோ' என்று மெலோனி கூற அவருக்கு பின்னால் நிற்கும் பிரதமர் மோடி சத்தமாக சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

    இதனிடையே மெலோனி பகிர்ந்த வீடியோவை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் மீண்டும் பகிர்ந்து 'இந்தியா-இத்தாலி நட்புறவு நீண்டநாள் நீடிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வைரல் ஆனது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, 'செல்பி' பெரும் வரவேற்பை பெற்றது.
    • மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.

    50-வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்

    இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

    இந்நிலையில், மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை இத்தாலி பிரதமர் மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், 'மெலோடி டீமிடம் இருந்து ஹலோ' ( Hello from the Melodi team ) என்று கூற பின்னால் பிரதமர் மோடி சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

    இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, 'செல்ஃபி' பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், 'மெலோடி' என்ற வார்த்தையை மெலோனி பயன்படுத்தினார். அப்போது மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.

    • தொழில் நுட்பத்தில் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
    • செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய மூலோபாயத்தை வகுத்த முதல் சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி ஜி-7 அமைப்பின் மாநாடு இத்தாலியில் நடந்தது. இதில் இத்தாலியின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் மெக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகிய நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது பல்வேறு விஷயங்களை பற்றி ஆலோசனை நடத்தினார்.

    மேலும் போப் ஆண்டவர் பிரான்சிசை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருவரும் ஆரத்தழுவிக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது, போப் ஆண்டவர் பிரான்சிசை இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

    இதற்கிடையே ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, தொழில் நுட்பத்தில் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஒரு உள்ளடக்கிய சமுதாயத்தின் அடித்தளத்தை அமைப்பதற்கு அது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.

    செயற்கை நுண்ணறிவுக்கு குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து தொழில்நுட்பத்தில் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வருவதன் முக்கியத்துவம் நாம் உணர வேண்டும். செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய மூலோபாயத்தை வகுத்த முதல் சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்றார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டார். பிரிண்டிசி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவரை இந்திய மற்றும் இத்தாலி அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

    இத்தாலியில் இருந்து புறப்பட்ட மோடி இன்று காலை நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    சமீபத்தில் 3-வது முறையாக பிரதமர் பதவியேற்ற பிறகு மோடி தனது வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×