என் மலர்
நீங்கள் தேடியது "slug 184351"
- தினமும் பலருடன் செல்போனில் பேசியதால் கழுத்தை நெரித்து கொன்றேன்
- ஏளனமாக பேசி கிண்டல் செய்வார்
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி பெனிஸ்டர் (வயது 30). இவரது மனைவி பத்மா (30).
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை வீட்டில் பத்மா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து பத்மாவின் தந்தை வடசேரி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீ சார் பத்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பத்மா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர் பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் பத்மாவின் கணவர் ஆண்டனி பெனிஸ்டர் வடசேரி போலீசில் சரண் அடைந்தார். மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற தாக கூறினார். போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆண்டனி பெனிஸ்டரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆண்டனி பெனிஸ்டர் கூறியதாவது:-
நானும் பத்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். எங்களுக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரண மாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். இதையடுத்து கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.இருவரும் விவாகரத்து பெற்ற பிறகு பிரிந்து செல்லலாம் அதுவரை ஒரே வீட்டில் வசிக்கலாம் என்று கூறி ஒரே வீட்டில் வசித்து வந்தோம் .
இந்தநிலையில் நேற்று காலை எனது மகனும் மகளும் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். வீட்டில் இருந்த எனது மனைவி பத்மா தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். ஏற்கனவே அவர் நடத்தை யில் எனக்கு சந்தேகம் இருந்ததால் இது தொடர்பாக அவரிடம் கேட்டேன். அப்போது அவர் நமக்கு தான் விவாகரத்து ஆகப் போகிறது, நான் யாருடன் பேசினால் உனக்கு என்ன என்று என்னிடம் கூறினார்.இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரது கழுத்தை நெரித்தேன். இதில் பத்மா மயங்கி விழுந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே சென்று விட்டேன். வீட்டிற்கு வந்த போதுதான் எனது மனைவி இறந்திருக்கும் தகவல் தெரிய வந்தது.உடனே நான் போலீசில் சரணடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஆண்டனி பெனிஸ்டரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
புத்தளம் அருகே உள்ள பெத்தபெருமாள் குடியிருப்பை சேர்ந்தவர் கமலன் (வயது 63).
இவர் புத்தளம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி மூத்த மனைவியின் தங்கையாகும்.இரண்டாவது மனைவி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அன்று முதல் கமலன் மன வேதனையில் இருந்து வந்தார். இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை கமலன் அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை கமலன் அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் டீக்கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து இவரது மூத்த மனைவி தங்ககனி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கமலன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இவரது மனைவி 2 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே முளவிளை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஜோஸ் (வயது 38). இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அனிதா 2 குழந்தைகளுடன் பிரிந்து அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் மெர்லின் ஜோஸ் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் படுத்து இருந்தார்.
இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மெர்லின் ஜோஸ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- படுகாயமடைந்தவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதி
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணத்தை அடுத்த பனங்காலமுக்கு பகுதியை சேர்ந்த அல்போ ன்ஸ் மகன் பிரபு (வயது 36). கடல் தொழில் செய்து வரு கிறார்.
இவரது மனைவி சுபலதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடங்களாக கருத்து வேறுபாடு காரண மாக கணவன்- மனைவி இடையே பிரச்சினை உள்ளது. இதனால் அடிக்கடி சண்டைகள் நடப்பது உண்டு.
சம்பவத்தன்று வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்ப்பட்டது. பிரபு குறைவாக பணம் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த சுபலதா வெட்டுக்கதியால் வெட்டியுள்ளார்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரபு, குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி பெற்று, ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மனைவி விவாகரத்து கேட்டதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை சமயநல்லூர், வெங்கடாசலப்புரத்தை சேர்ந்தவர் விஸ்வேஸ்வர் (வயது 32). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் விஸ்வேஸ்வர்- ராஜலட்சுமி இடையே கடந்த 2 மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் வேதனை அடைந்த ராஜலட்சுமி, சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் விவாகரத்து கேட்டு மனு கொடுத்தார்.
இது விஸ்வேசருக்கு தெரியவந்தது. இதில் மனம் உடைந்த அவர் விஷம் குடித்துவிட்டார். அவர் மயங்கிய நிலையில் தேனூர் பாலம் அருகில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலை, வழக்கம்போல இவர்கள் வீட்டிற்கு பால் கொடுப்பதற்காக பால்காரர் வந்துள்ளார்.
- பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தினர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (55) இவரது மனைவி புஷ்பவதி( 50) இந்த நிலையில் இன்று காலை, வழக்கம்போல இவர்கள் வீட்டிற்கு பால் கொடுப்பதற்காக பால்காரர் வந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் அழைத்துப் பார்த்தும் யாரும் வராததால், பக்கத்து வீட்டில் இது குறித்து சொல்லி உள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது தங்கவேல் தூக்கு போட்டு தொங்கிய நிலையில்இருந்தார். அருகே புஷ்பவதி இறந்து கிடந்தார் .இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தினர் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் முதல் கட்ட விசாரணையில் நேற்று இரவு கணவன்- மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகவே மனைவியை கொன்றுவிட்டு தங்கவேல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏது காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கணவன் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட வேதனையால் விபரித முடிவு
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் ராஜா க்கமங்கலம் அருகே உள்ள தம்மத்துக் கோணம் சத்ரபதி சிவாஜி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 54). இவர் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (47).
இவர்களுக்கு அருள்ஜோதி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் மகன் அருள்ஜோதி மட்டும் தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இர வில் உணவு அருந்தியதும் செல்வ குமார் மற்றும் புவனேசுவரி தங்கள் அறைக்கு தூங்கச் சென்று விட்டனர். நேற்று காலை அவர்கள் இருவரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வரவில்லை.
இதனால் பதட்டமடைந்த அருள்ஜோதி, அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு பெற்றோர் பிண மாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட செல்வ குமார், புவனேசுவரி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கணவன்-மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில வருடங்க ளாக செல்வகுமார் நோயால் அவதிப்பட்டு வந்ததும் அதில் ஏற்பட்ட வேதனையில் தான் மனைவியுடன் சேர்ந்து தற்கொலை முடிவை எடுத்திருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தம்பதியர் இடையே, சரியான புரிதல் இருந்தால், வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இருக்காது.
- கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் இருக்காது.
திருப்பூர் :
திருப்பூர் அமர்ஜோதி நகர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா, மணி மஹாலில் நடந்தது. மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார்.
மேயர் தினேஷ்குமார், உலக சமுதாய சேவா சங்க மண்டல தலைவர் கருணாநிதி, அறக்கட்டளை செயலாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். முதுநிலை பேராசிரியர் விவேகானந்தன், தம்பதியர் உயிர்க்கலப்பு தவம் நிகழ்த்தினார்.சச்சிதானந்தா ஜோதி நிகேதன்பன்னாட்டுப்பள்ளி செயலாளர் கவிதாசன் பேசியதாவது:- திருமணமான பிறகே சமுதாயத்தில் மதிக்கப்படும் நிலை உருவாகிறது.வாழ்க்கை சிறப்பாக மாற்றப்படுகிறது. மனைவி ஒரு பல்கலைக்கழகம். குடும்பம் சிறப்பாக இருக்க, மனைவி சிறப்பாக இருக்க வேண்டும்.தம்பதியர் இடையே, சரியான புரிதல் இருந்தால், வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இருக்காது. கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் இருக்காது. இருந்தாலும் கூட, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மனநிறைவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
சட்டம் பேசுபவர் வழக்கு நடத்தலாம். வாழ்க்கை நடத்த முடியாது. குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட மனைவியை கணவன் மனதார பாராட்டினால், பிரச்னையே இருக்காது. வாரம் ஒருமுறையாவது பாராட்டினால் வாழ்க்கை இனிமையாக அமையும்.தொழிலில் வெற்றியடைந்தவன் வாழ்வே முழுமை பெறும். அதற்கு மனைவியின் உறுதுணை அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
- கணவன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொன்னைப் பட்டியைச் சேர்ந்த சேவுகன் மகள் பானுமதி (வயது 30) இவருக்கும், கண்டிக்க பட்டியைச் சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
துபாயில் வேலை பார்த்து வந்த செல்வம் சமீபத்தில் சொந்த ஊர் வந்தார். அவர் நண்பர்களுடன் மது குடிக்க பழகினார். போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் வேதனை அடைந்த பானுமதி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அவர் தனது 2 மகன்களையும் அழைத்து சென்றதால் செல்வம் ஆத்திரம் அடைந்தார். மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து கத்தியால் அவரை குத்திக் கொல்ல முயன்றார்.இதனை கண்ட மாமியார் செல்வமணி அவரை தடுக்க முயன்றார்.
அப்போது செல்வம் மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மாமியார் செல்வமணி பரிதாபமாக இறந்தார். மனைவி பானுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
- இது மட்டுமின்றி போலீஸ் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு, ஆக. 10-
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே செயல்பட்டு வரும் கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே வேம்பத்தி சிந்தகவுண்டம்பாளையம் ராம்தாஸ் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (45). இவரது மனைவி பழனியம்மாள்.
தம்பதியினர் 2 பேரும் சம்பவத்தன்று பவானி புதிய பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து விசாரித்தபோது தம்பதியினர் வைத்திருந்த பையில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் கஞ்சாவை கைப்பற்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேப்போல் நேற்று ஒரே நாளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சூரம்பட்டி, பெருந்துறை பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி விற்ற 1 பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி போலீஸ் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- சேலத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- கார் டிரைவராக பணிபுரிந்து வந்த வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
கொண்டலாம்பட்டி:
சேலம் அழகாபுரம் ஏடிசி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38) இவருக்கு ஜீவிதா (வயது 34) என்ற மனைவி உள்ளார்.வினோத்குமார் சேலம் போக்சோ கோர்ட் நீதிபதியின் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த வினோத்குமாருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.பின்னர் கோரிமேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வினோத்குமார் சென்றுவிட்டார்.ஜீவிதா அவரது பெற்றோர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார், பின்னர் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் வினோத்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அருகில் விஷ பாட்டில் இருந்துள்ளது.உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வினோத்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வேல்சாமி குடித்துவிட்டு வந்து தனது மகள்களிடம் தகராறு செய்துள்ளார்
- தனது மகளை அடிப்பதற்கு அவர் விரட்டி சென்றபோது கீழே விழுந்துள்ளார்
கன்னியாகுமரி :
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆலங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 58). மாங்காய் பறிக்கும் தொழிலாளி. இவரது மனைவி பூவதி நாகர்கோவிலில் உள்ள ஒரு ஹோட்டலில் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில நாட்களாக இவர் தனது வீட்டிற்கு வரவில்லை இதனால் மனமுடைந்த வேல்சாமி குடித்துவிட்டு வந்து தனது மகள்களிடம் தகராறு செய்துள்ளார். சம்பத்தன்று தனது மகளை அடிப்பதற்கு அவர் விரட்டி சென்றபோது கீழே விழுந்துள்ளார்.
அதில், அவர் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் அவரை அருகில் உள்ளவர்கள் பார்த்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜா க்கமங்கலம்போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.