என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இன்ஸ்டாகிராம்"
- இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரிழந்ததுபோல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்ற இளைஞர் போலீசில் வசமாக சிக்கினார்.
- உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவிட்டு லைக்ஸ்களை குவிக்க போராடும் பலரில் ரெயில்களில் சிக்கியோ, பள்ளத்தாக்கில் விழுந்தோ உயிரிழக்கும் சம்பவங்களும் நாம் நிறைய பார்த்திருப்போம்.
ஆனால், இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரிழந்ததுபோல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்ற இளைஞர் போலீசில் வசமாக சிக்கியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்காக சாலையில் பிணமாக படுத்து வீடியோ எடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, முகேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.
- முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.
- ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் படத்திலும் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.
2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் நடிகையாக பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சூர்யாவின் சனிக்கிழமை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் படத்திலும் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது அவர் சேலை கட்டி எடுத்த அழகிய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன்.
- நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
புதுடெல்லி:
மலையாள திரையுலகில் எழுந்துள்ள நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து புகார் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் முகேஷ், சித்திக், ஜெயசூர்யா மற்றும் தயாரிப்பாளர் ரஞ்சித், பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் நடிகர் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயசூர்யா மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குகிறார்.
தமிழ் சினிமாவில் என் மன வானில், மனதோடு மழைக்காலம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சக்கரவியூகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் மீது நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2013-ம் ஆண்டு தொடுபுழாவில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது தன்னிடம் நடிகர் ஜெயசூர்யா அத்துமீறயதாக திருவனந்தபுரத்தை சேர்ந்த நடிகை அளித்த புகார் மீது ஜெயசூர்யா மீது 2-வது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன் மீதான பாலியல் புகார்களை நடிகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஜெயசூர்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒரு பொய் எப்போதும் உண்மையைவிட வேகமாக பயணிக்கும். ஆனால் உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும்.
என் மீதான புகார்களை சட்ட ரீதியாக தொடர முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கு தொடர்பான மீதமுள்ள நடவடிக்கைகளை எனது வக்கீல்கள் குழு கவனித்து கொள்ளும்.
மனசாட்சி இல்லாத எவரும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது எளிது. துன்புறுத்தலை போல, துன்புறுத்தப்படுதலும் வேதனையானது.
நமது நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பிறந்தநாளை மிகவும் வேதனையான பிறந்தநாளாக மாற்ற பங்களித்தவர்களுக்கு நன்றி.
இவ்வாறு ஜெயசூர்யா தனது பதிவில் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 20 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்த தாய், மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- மகனுக்கும் தாய்க்கும் அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தாயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
21 வயதான நிலேஷ், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நான் உங்களை கொன்றுவிட்டேன். மிஸ் யூ' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது தாயை கொலை செய்துவிட்டு அவரது சடலத்தின் பக்கத்தில் அமர்ந்திருந்த மகனை போலீசார் கைது செய்தனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்த தாய், மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மகனுக்கும் தாய்க்கும் அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முரண்பாடு வாக்குவாதமாய் மாறி கடைசியில் பெற்ற தாயையே மகன் கொலை செய்துள்ளார்.
தாயின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பெண்ணின் முன்னாள் கணவரிடம் உடலை பெற்றுக்கொள்ள சொல்லி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் உடலை பெற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டதால், அப்பெண்ணின் உடலுக்கு போலீசாரே இறுதி சடங்குகள் மேற்கொண்டனர்.
- ஒரிஜினல் மாம்பழங்களின் மூலம் இந்த ஜூஸ்கள் தயாரிக்கப்டுகின்றனவா என்ற கேள்வி பலருக்கு இருக்கும்.
- இதுதான் உங்களின் மாம்பழ ஜூஸ் என்ற கேப்ஷனுடன் இஸ்டாகிராமில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது
சீசனில் மட்டுமே கிடைப்பதால் வாட்டத்தில் இருக்கும் மாம்பழப் பிரியர்களுக்கு பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழ ஜூஸ்கள் ஆறுதலாக இருந்து வருகிறது. ஒரிஜினல் மாம்பழங்களின் மூலம் இந்த ஜூஸ்கள் தயாரிக்கப்டுகின்றனவா என்ற கேள்வி பலருக்கு இருக்கும். அந்த வகையில், செயற்கையான முறையில் மாம்பழ ஜூஸ் தயாரிக்கப்பட்டு பேக்கேஜிங் செய்யப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாம்பழ ஜூஸ் தயாராகும் ஆலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறமிகளுடன், மாம்பழத்தைப் போன்ற மஞ்சள் நிறம் வரவைத்து செயற்கையான திரவத்தைக் கலந்து அதில் இனிப்புச் சுவைக்காக சர்க்கரையை கலக்கின்றனர். இறுதியாக அதை பிளாஸ்டிக் பேப்பர் பாக்கெட்டுகளில் அடைகின்றனர்.
இதுதான் உங்களின் மாம்பழ ஜூஸ் என்ற கேப்ஷனுடன் இஸ்டாகிராமில் இந்த வீடியோ பகிரப்பட்ட நிலையில், இதைப்பார்த்த நெட்டிஸின்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
- சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட போலீசார் அவனை மீட்டுள்ளனர்.
- தன்னை யாரோ கடத்தி விட்டதாக சிறுவன் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதேபூரில் 17 வயது சிறுவனை காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து போலீசாரின் விசாரணையில், சிறுவனை யாரும் கடத்தவில்லை என்று, தன்னை யாரோ கடத்தி விட்டதாக சிறுவன் நாடகம் ஆடியதும் தெரிய வந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் இந்த சிறுவன் மெசேஜ் அனுப்பி தொடர்ச்சியாக பேசி வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட பெண்ணின் குடும்பம் சிறுவனின் குடும்பத்திடம் இதை பற்றி தெரிவித்துள்ளனர்.
இதனால் பயப்பட்ட சிறுவன் இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளான். அவரது தந்தைக்கு செல்போனில் அழைத்து உங்கள் மகனை கடத்தியுள்ளோம். உங்கள் மகனை விடுவிக்க ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் மிரட்டியுள்ளான். பின்னர் தனது செல்போனை சிறுவன் சுவிட்ச் ஆப் செய்துள்ளான்.
சிறுது நேரம் கழித்து தனது போனை சிறுவன் சுவிட்ச் ஆன் செய்த போது சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட போலீசார் அவனை மீட்டுள்ளனர்.
- இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
- இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இன்ஸ்டாகிராமில் 91.3 மில்லியன் ஃபாலோயர்களுடன் பிரதமர் மோடி மூன்றாம் இடத்தில் இருந்து வந்தார்.
- கிரிக்கெட் வீரர் விராட் கோலி 271 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்
பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை விட அதிக ஃபாலோயர்களை பெற்று பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி 271 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்திலும், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 91.8 மில்லியன் ஃபாலோயர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவில் இவர்களுக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாகிராமில் 91.3 மில்லியன் ஃபாலோயர்களுடன் பிரதமர் மோடி மூன்றாம் இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ஷ்ரத்தா கபூரின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 91.4 மில்லியன் அதிகரித்துள்ளது. இதனால் பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஷ்ரத்தா கபூர்.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஷ்ரத்தா கபூர் நடித்த 'ஸ்ட்ரீ 2' படம் வெளியாகி கவனம் ஈர்த்துவரும் நிலையில் ஒரே வாரத்தில் படத்தின் வசூல் ரூ.300 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த படத்தின்மூலம் தற்போது அதிகம் பேசப்பட்டுவரும் ஷ்ரத்தா கபூரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையும் இதனாலேயே அதிகரித்துள்ளது.
85.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் ஆலியா பட், 80.4 மில்லியன் ஃபாலோயர்களுடன் கத்ரினா கைஃப் மற்றும் 79.8 மில்லியன் ஃபாலோயர்களுடன் தீபிகா படுகோன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரீல்ஸ் எடுக்க முயலும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது.
- பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் கிராத்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் பைக்கில் பயணம் செய்தவாறே ரீல்ஸ் எடுத்த 2 இளைஞர்கள் மீது கார் மோதியதில் இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் முந்தாலா கிராமத்தைச் சேர்ந்த சமர் மற்றும் நோமன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அண்மை காலங்களில் செல்பி மற்றும் ரீல்ஸ் எடுக்க முயலும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது.
UTTARPRADESH | @bijnorpolice दिल्ली-पौड़ी नेशनल हाईवे पर ड्रोन कैमरे से रील्स बनाते समय दो युवक सड़क हादसे का शिकार हो गए। इस हादसे का लाइव वीडियो सोशल मीडिया पर वायरल हो गया है। दोनों युवकों को गंभीर चोटें आई हैं, लेकिन उनकी जान बच गई है। यह घटना एक महत्वपूर्ण संदेश देती है कि… pic.twitter.com/AQpMifpQpf
— ℝ?? ???? (@Rajmajiofficial) August 14, 2024
- 6 ஆவது மாடிக்கு சென்று 16 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துள்ளார்.
- படுகாயம் அடைந்த அப்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் 6 ஆவது மாடியில் இருந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்கும் போது தவறி விழுந்த 16 வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
11 ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி 6 ஆவது மாடிக்கு சென்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது செல்போன் அவளது கையை விட்டு தவறி விழ, அதை பிடிக்க முயன்றபோது அவர் 6 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
ஆனால் களிமண் நிறைந்த பூந்தொட்டி மேல் அவள் விழுந்ததால் உயிர் பிழைத்துள்ளார். அவளது வலது காலில் எலும்பு முறிவும், தலையின் சிறிய அளவிலான காயமும் ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த அப்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயரமான இடங்களில் இருந்து செல்பி மற்றும் ரீல்ஸ் எடுக்க முயலும் போது தவறி விழுந்து பலர் உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது.
देखिए गाजियाबाद इंदिरापुरम सोसाइटी में मोनिशा अपने फ्लैट की बालकनी में खड़ी होकर अपने मोबाइल से रील वीडियो शूट कर रही थी,तभी उसके हाथ से मोबाईल छूट गया जिसको पकड़ने के चक्कर मैं वह छठवीं मंजिल से नीचे गिर गई गंभीर हालत में अस्पताल में भर्ती कराया #AAPDelhi #delhi pic.twitter.com/COBpeNUDdk
— Lavely Bakshi (@lavelybakshi) August 13, 2024
- இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் 10 புகைப்படம், வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும்.
- இந்த புதிய அம்சம் உலகம் முழுவதும் அறிமுகமாகியுள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.
இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் 10 புகைப்படம் மற்றும் வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும். இந்த எண்ணிக்கையை தற்போது 10ல் இருந்து 20 ஆக மெட்டா நிறுவனம் உயர்த்தியுள்ளது
இதன்மூலம் பயனாளர்கள் ஒரே பதிவில் 20 போட்டோக்கள் அல்லது வீடியோக்களை பதிவிட முடியும். இந்த புதிய அம்சம் உலகம் முழுவதும் அறிமுகமாகியுள்ளது.
- போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
- கஞ்சாவுடன் ரீல்ஸ் வீடியோவால் சிக்கிக்கொண்டனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த முடிச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை அதிரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முனுபு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வாலிபர்கள் சிலர் கஞ்சா புகைப்பது போன்று வீடியோ வெளியானது. இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்த போது ரீல்ஸ் வெளியிட்டது அப்பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளான தீபக், சந்துரு என்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க போலீசார் செல்போன் எண்ணை வைத்து கண்காணித்தனர்.
இந்த நிலையில் லட்சுமி நகர் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றின் மதகு அருகே பதுங்கி இருந்த தீபக், சந்துரு ஆகிய 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோத சுமார் 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் தீபக் , சந்துரு ஆகிய இருவருக்கும் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவர்களை போலீசார் கைது செய்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு கை, காலில் மாவு கட்டு போடப்பட்டது. விசாரணையில் பள்ளிக்கரணை பகுதி முழுவதும் கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டி பறந்துள்ளது தெரிந்தது.
மாணவர்கள், வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த மாதம் கஞ்சா விற்பனை தொடர்பாக எதிர்தரப்பினருடன் ஏற்பட்ட மோதலில் தீபக்கின் நண்பரான விக்னேஷ் படுகொலை செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக தீபக் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் அதே பகுதியில் உள்ள வீடுகளை அடித்து நொறுக்கிய சம்பவமும் நடந்து உள்ளது.
கைது செய்யப்பட்ட சந்துரு கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ளார். தற்போது கூட்டாளிகள் 2 பேரும் கஞ்சாவுடன் ரீல்ஸ் வீடியோவால் சிக்கிக்கொண்டனர்.
அந்த வீடியோவில் உள்ள மற்ற நபர்கள் குறித்து போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைதான தீபக், சந்துருவிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்