என் மலர்
நீங்கள் தேடியது "விக்கிரமராஜா"
- சாமானிய மக்களை மட்டுமன்றி சிறு, குறு, நடுத்தரவர்க்க வணிகர்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- சில்லரை வணிகர்களே 20,000 ரூபாய்க்கு மேல், வங்கிக்கு செலுத்த செல்லுகின்றபோது அதனை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்விக்குறியும் எழுப்பப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டவுடன், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த சமயத்தில் பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் மிகப்பெரும் இடையூறுகளையும், துயரங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியது என்பது அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.
7 ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் விடப்பட்ட இந்த 2000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்றைய தினம் திடீரென அறிவித்திருக்கின்றது.
இது சாமானிய மக்களை மட்டுமன்றி சிறு, குறு, நடுத்தரவர்க்க வணிகர்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்த உடனேயே, சேமிப்பாக வைத்திருக்கக்கூடிய எளிமையான மக்களிடம் இருந்து, வணிகர்களிடமே அன்றாட தேவைக்காக புழக்கத்திற்கு கொண்டு வரப்படும்.
இந்நிலையில் வணிகர்கள் அந்த நோட்டுக்களை வாங்க மறுக்கும் நிலை ஏற்படும். அதுபோன்ற நிலை ஏற்படும்போது பொது மக்களுக்கும்-வணிகர்களுக்கும் சர்ச்சைகள் ஏற்படும் நிலை உருவாகும். மேலும், சில்லரை வணிகர்களே 20,000 ரூபாய்க்கு மேல், வங்கிக்கு செலுத்த செல்லுகின்றபோது அதனை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்விக்குறியும் எழுப்பப்படுகிறது.
இவற்றிற்கெல்லாம் விடைகாணும் விதமாக, பொதுமக்களின் அன்றாட புழக்கத்திற்கும், வணிகர்களின் வங்கி பயன்பாட்டிற்கும், 2000 ரூபாய் நோட்டுக்களின் நிலையை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெளிவுபடுத்திட வேண்டும்.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களிடம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வணிக புழக்கத்திற்கு கொண்டு வந்து, அதனை மாற்றிக் கொள்வதற்கான எளிய நடைமுறைகளை, உரிய கால அவகாசத்துடன் தற்போது அறிவித்துள்ள 2023 செப்டம்பர் 30 என்பதை-டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு அளித்தும், வணிகர்களும்-பொதுமக்களும் வங்கிகளில் 60,000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்து பொதுமக்களும் வணிகர்களும் பதற்றமின்றி 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் நிலையை உருவாக்கி மத்திய அரசுக்கு எந்தவித அவப் பெயரும் ஏற்படாதவண்ணம் விதிகளை உடனடியாக அறிவித்திடுமாறு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுமக்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வணிகர்கள் நலன் கருதி வேண்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூடியதற்கு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
- தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூடியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், மார்க்கெட், பஜார், பள்ளிக்கூடங்கள் நிறைந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சிறு வணிகர்களின் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் விக்கிரமராஜாவிடம் கேள்வி எழுப்பினர்.
- வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் பாதிப்புகள் இனி எங்கும் நடக்காமல் கணிகாணிப்பதாக கூறினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவநேரி ஐடியல் பீச் ரிசார்ட்டில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டம் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கோயம்புத்தூரில் திறக்கப்பட்ட "லூலூ மால்" ஹைப்பர் மார்க்கெட், அடுத்தடுத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திறக்கும் நிலையில், சிறு வணிகர்களின் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் விக்கிரமராஜாவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அடுத்து சென்னையில் திறக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இங்கு திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.
மேலும், வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் பாதிப்புகள் இனி எங்கும் நடக்காது, அதற்கான குழு அமைத்து தீவிரமாக கண்காணிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
- சுயநலமின்றி உழைத்துக்கொண்டிருக்கின்ற வணிக வர்க்கத்தின் மீது உள்நோக்கோடு திணிக்கப்படுகின்ற இந்த அமலாக்கத்துறைச் சட்டம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
- தலைநகர் டெல்லியில் உரிய ஆலோசனைக்குபின் போராட்டத்தை முன்னெடுத்து, களம் அமைத்திட தயாராக இருக்கின்றது.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு திடீரென வணிகர்கள் மீது ஜி.எஸ்.டி வரிச்சட்ட நடைமுறையின் கீழ், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படுவதாக செய்திகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரியவருகின்றது.
கள்ளக்கடத்தல்காரர்கள், கள்ளப் பணப்பரிமாற்றம் செய்பவர்கள், வருமான வரி இழப்பு ஏற்படுத்துபவர்கள் போன்ற நிதிநிலை மோசடிகளில் ஈடுபடக்கூடிய சட்டத்திற்கு புறம்பானவர்கள் மீது அமல்படுத்தப்படக்கூடிய அமலாக்கத்துறை சட்டநடவடிக்கை என்பது, சட்டத்திற்கு கட்டுப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு, பதிவு செய்துகொண்டு உரிய உரிமங்கள் பெற்று, அரசு அனுமதியோடு, நேர்மையான வணிகத்தை மேற்கொண்டு, தனது வாழ்வாதா ரத்தையும், தன்னை நம்பியிருக்கின்ற பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்புகான அடித்தளங்களையும் அமைத்துத் கொடுத்து அரசுக்கும், வருவாய் ஈட்டி, சுயநலமின்றி உழைத்துக்கொண்டிருக்கின்ற வணிக வர்க்கத்தின் மீது உள்நோக்கோடு திணிக்கப்படுகின்ற இந்த அமலாக்கத்துறைச் சட்டம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில், அகில இந்திய வணிக சம்மேளனத்தின் பங்கேற்புடன் தலைநகர் டெல்லியில் உரிய ஆலோசனைக்குபின் போராட்டத்தை முன்னெடுத்து, களம் அமைத்திட தயாராக இருக்கின்றது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாடு தழுவிய அளவில் டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறுகிறது.
- முன்னதாக, பெருந்துறையில் வணிகர் சங்க பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்த விக்கிரமராஜா சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு:
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பெருந்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு, ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் போது வரி ஏய்ப்பு இருக்காது. கூடுதல் வரி வசூல் கிடைக்கும், வணிகர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்று அரசு சொன்னது. இதுவரை 12 முறை சட்டம் மாற்றப்பட்டது. அரசுத்துறை அதிகாரிகளுக்கே சட்டத்தின் முழுமையான நடைமுறைகள் தெரியவில்லை.
சாமானிய வியாபாரிகளை வாட்டி வதைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. துறை அதிகாரிகள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். தற்போது புதிதாக அமலாக்கத்துறை கையில் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் விசாரிப்பார்கள் என்று செய்திகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அந்த நிலை கட்டாயம் ஏற்பட கூடாது. அந்த நிலையை அரசு கொண்டு வந்தால் அதை எதிர்த்து வணிகர் சங்க பேரமைப்பு போராட்டத்தை முன்னெடுக்கும்.
போராடுவதை தவிர வேறு வழியே இல்லை. நாடு தழுவிய அளவில் டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறுகிறது. இது போன்று அமலாக்கத்துறையை, வணிகர் மத்தியில் நுழைய விட்டால் ஜி.எஸ்.டி. சோதனை என்ற அடிப்படையில் முழு அதிகாரத்தை பயன்படுத்தி சாமானிய வணிகர்கள், வணிகத்தை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலை ஏற்படும், அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.
மத்திய, மாநில அரசுகள் அமலாக்கத்துறையை ஜி.எஸ்.டி. விசாரணைக்கு அனுமதிக்க கூடாது. அதனை மீறி அனுமதித்தால் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பெருந்துறையில் வணிகர் சங்க பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்த விக்கிரமராஜா சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.
- தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சத்திய மூர்த்தி நகரில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-
வணிகர்களை அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான முடிவு எடுக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறது.
கொள்ளையடிப்பவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தான் அதனை பயன்படுத்த வேண்டுமே தவிர வியாபாரிகள் மீது அந்த துறையை பயன்படுத்தினால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும். ஆகவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக சந்தித்து எக்காரணத்தைக் கொண்டும் அமலாக்கத்துறை என்பது வணிகர்கள் மத்தியில் வந்து விடக்கூடாது என வலியுறுத்த இருக்கின்றோம்.
இதற்காக நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.
தக்காளி விலை உயர்வுக்கு வியாபாரிகள் தான் காரணம் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தக்காளி விலை போகவில்லை என்றால் அதனை கீழே கொட்டுவது வாடிக்கையாக நடக்கிறது.
ஆகவே நெல் கொள்முதல் செய்வதை போன்று தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும். தக்காளி பொடியாக மாற்றி அதனை கொடுத்தாலும் நாங்கள் விற்க தயார். நாங்கள் தேர்தலில் நிற்கமாட்டோம்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறி விட்டு நுழைந்த பின்னர் யார் யாருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்பதை அரசு சோதிப்பது கிடையாது. தமிழ்நாட்டில் 5சதவீத வேலைவாய்ப்பை கூட அவர்கள் வழங்கவில்லை. ஆனால் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, அருண் சின்னப்பா, சாகுல் ஹமீது மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- தொழில் நசிவு காரணத்தினால், தொழிலிலிருந்து வெளியேறும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது.
- நிரந்தர நிலைக்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிற்சாலைகள், சிறு-குறு தொழில்களுக்காக உச்சபட்ச மின்பயன்பாடு நேர கட்டண உயர்வு ஏற்கனவே காலை 6 முதல் 9 மணி வரை, மாலை 6 முதல் 9 மணி வரை என 6 மணிநேர மின்கட்டண உயர்வு வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 8 மணிநேரமாக உயர்த்தி மறுவரையரை செய்யப்பட்டிருக்கிறது. வரையரை செய்யப்பட்டதோடு அல்லாமல் கட்டண உயர்வும் அமலாக்கத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே, தொழில் துறையினர் தங்களது உற்பத்தியில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தங்களது தயாரிப்புப் பொருட்களின் உற்பத்தியை குறைத்திருப்பதாக தெரியவருகின்றது.
இதனால் இத்தொழில் சார்ந்த துறையினர் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதோடு, தங்களது தொழில் நசிவு காரணத்தினால், தொழிலிலிருந்து வெளியேறும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது. எனவே தொழில் துறை கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்துப்பேசி, உச்சபட்ச நேர மின்பயன்பாட்டு உயர்வு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்து, பொதுமக்கள், தொழில்துறையினர், சிறு வியாபாரிகள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். இதேபோல் நிரந்தர நிலைக்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வணிகர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது.
- ஆன்லைன் வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை யாகும்.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வணிகர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் வணிகர்கள் பொது மக்களுக்கு எந்த அளவில் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை அறிவீர்கள். ஆன்லைன் வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை யாகும். அன்னிய நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றுக்கு 4 இலவசம், 2-க்கு 2 இலவசம் என்று மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
பொதுமக்கள் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க முன் வர வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை புறக்கணியுங்கள். தற்போது தீபாவளி பண்டிகை வர உள்ளது. அனைத்து கடைகளுக்கும் சென்று பொது மக்கள் பொருட்கள் வாங்க முன் வர வேண்டும். இந்த நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில், கடைகளுக்குள் நுழைந்து வணிகர்களிடையே அச்சுறுத்த கூடாது.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்படும். இந்த நேரத்தில் பட்டாசு கடைக்காரர்களுக்கு அரசு துறை அதிகாரிகள் அச்சுறுத்தலை தந்து வருகிறார்கள். சில்லறை பட்டாசு விற்பனை கடைகளில் எங்காவது விற்பனை நடந்துள்ளதா? உற்பத்தி செய்யும் இடங்களில் விபத்துக்கள் நடந்திருக்கலாம். எனவே பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் உடனே உரிய அனுமதி வழங்க வேண்டும்.
இது தொடர்பாக நாங்கள் சென்னையில் அதிகாரிகளை சந்தித்துள்ளோம். இதே நிலை நீடித்தால் ஒரிரு நாட்களில் பிரச்சினை தீராவிட்டால் முதலமைச்சரை ஒரிரு நாட்களில் சந்தித்து தமிழ்நாடு முழுவதும் பட்டாசு கடைகளை திறக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பக்கத்து மாநிலங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் நமது மாநிலத்தில் அப்படி இல்லை. சாமானிய வணிகர்களை காக்க முதலமைச்சர் முன் வர வேண்டும்.
உள்நாட்டு வணிகர்களை காக்க வேண்டும். அதற்காக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து வலியுறுத்தும். ஜி.எஸ்.டி. அதிகமாக கட்ட கூடிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் நமது மாநிலத்திற்கு வரக்கூடிய தொகை குறைவாகும். ஜி.எஸ்.டி.யில் அடிக்கடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
கவுன்சிலிங் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்படுவது வணிகர்கள் தான். வியாபாரிகளை, வணிகர்களை காக்க பிரதமர் முன் வர வேண்டும். பட்டாசு கடைகளை பொது இடத்தில் வைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதற்கான வழிமுறைகள் தற்போது இயலாது. சட்டத்தை உடனடியாக மக்களிடம் கொண்டு வந்தால் தொழில் நடத்த முடியாது. ஆகவே தகுந்த பாதுகாப்புடன் பட்டாசு கடைகளை வைக்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
- அண்ணாமலை, வணிகர் சங்கப் பேரமைப்பு புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்துக்கு சென்னை கே.கே.நகரில் 2 கிரவுண்ட் பரப்பளவில் ரூ.6 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
5 மாடிகள் கொண்டதாக அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் கடைகள் அமைந்துள்ளது. முதல் மாடியில் பேரமைப்பு தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. 2-வது மாடியில் கருத்த ரங்கம், கூட்டம் நடைபெறுவதற்காக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
3-வது மாடியில் 'சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்' அமைக்கப்பட்டுள்ளது. 4-வது மாடியில் ஆலோசனை அரங்கமும், 5-வது மாடியில் வெளியூர்களில் இருந்து வரும் வணிகர்கள் தங்குவதற்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 15 அறைகள் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பேரமைப்பு தலைமை அலுவலக திறப்பு விழா இன்று காலையில் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கோவிந்த ராஜூலு வரவேற்க பொருளாளர் ஹாஜி ஏ.எம். சதக்கத்துல்லா கொடி ஏற்றினார்.
பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் வளாக கட்டிடத்தை லெஜண்ட் குழும தலைவர் லெஜன்ட் சரவணன் திறந்து வைத்தார்.
யோக ரத்தினம் லெஜண்ட் சரவணன் அரங்கத்தை ஸ்ரீ கோகுலம் குழுமம் நிறுவனர் கோகுலம் கோபாலன் திறந்து வைத்தார்.
சிட்டி யூனியன் பெயரிலான அரங்கத்தை வங்கியின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் காமகோடி, பேரமைப்பு அலுவலகத்தை போத்தீஸ் ரமேஷ் திறந்து வைத்தனர். பேரமைப்பு அரங்கத்தை ஹட்சன் அக்ரோ நிர்வாக இயக்குனர் சந்திரமோகன் திறந்து வைத்தார்.
நலிந்த வணிகர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர் விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், கரு.நாகராஜன், தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோசம், ஜெயமுருகன், பத்மஸ்ரீ ஐசக், மெடிமிக்ஸ் அனுப், ஜமாலுதீன், கிருஷ்ண மூர்த்தி.

புதுச்சேரி சிவசங்கர் எம்.எல்.ஏ., பிரபாகரராஜா எம்.எல்.ஏ. மற்றும் சிவ அருள் துரை, அருள் முருகன், மண்டலத் தலைவர்கள் சண்முகம், சூலூர் சந்திர சேகரன், ஆம்பூர் கிருஷ்ணன், கிருபாகரன், ஜோதிலிங்கம், ஆற்காடு சவுகத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை செயலாளர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், பேரமைப்பு துணைத் தலைவர்கள் கொரட்டூர் த.ராமச்சந்திரன், ஆவடி அய்யார் பவன் அய்யாத் துரை, பேரமைப்பு மாநில துணைத் தலைவரும், செங்கல்பட்டு நகர வியாபாரிகள் நலச்சங்க தலைவருமான எஸ்.உத்திரகுமார், மாவட்ட தலைவர்கள் என்.டி.மோகன், அயனாவரம் எஸ்.சாமுவேல், கிழக்கு மாவட்ட தலைவர் திருவொற்றியூர் ஆதி குருசாமி,
ஆவடி மாநகராட்சி அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர்கள் ஆர்.கே.எம்.துரைராஜ், ஆர்.வேலுச்சாமி, கூட்டமைப்பு தலைவர் அய்யார்பவன் வி.அய்யாத் துரை, சட்ட ஆலோசகர் இரா. அந்திரிதாஜ், செயலாளர் சத்யா கோ.ரவி, பொருளாளர் கே.ஆனந்தன், துணைத் தலைவர் கே.தாமோதரன், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இப்ரா கிம்பாஷா, ராஜேந்திர பிரசாத், வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் என்.ஜெயபால், மாவட்ட செயலாளர் ஹாஜி கே.முகமது, பொருளாளர் சி.மகேஷ்,
முத்தமிழ்நகர் வியாபாரிகள் சங்க தலைவர் என்.ரவிச்சந்திரன், செயலாளர் ஜெ.சங்கர், பொருளாளர் ராஜா, வி.பி.வில்லியம்ஸ், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.தேசிகன், பொருளாளர் ஜெ. சின்னவன், திருவான்மியூர் செந்தில்குமார், கந்தன் சாவடி வில்சன், மாவட்ட துணைத் தலைவர் சி.எம்.சாமி, அடையாறு பாஸ்கர், அண்ணாநகர் ஆர்.பாலாஜி, வி.ராஜேந்திரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல், மாவட்ட செயலாளர் ஷேக் முகைதீன், பொருளாளர் சத்திய ரீகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, வணிகர் சங்கப் பேரமைப்பு புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார்.
- பேரமைப்பு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
- ஜெயக்குமார், இளைஞரணி பாலாசீர், வடபழனி வி.பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை:
சென்னை கே.கே.நகரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பேரமைப்பு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கோலப் போட்டியில் வென்றவர்களுக்கு ஏ.எம்.விக்கிரமராஜா பரிசு பொருட்கள் வழங்கினார்.
மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, பேராசிரியர் ராஜ்குமார் கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் என்.டி.மோகன், வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆதி குருசாமி, என்.ஜெயபால், எட்வர்டு, யு.நடராஜன், ஆர்.எம்.பழனியப்பன், ஜெயக்குமார், இளைஞரணி பாலாசீர், வடபழனி வி.பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வியாபாரிகளும் தரமான பொருட்களை வாங்கி விற்க வேண்டும்.
- வணிகர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடியேற்று விழா நடந்தது. நகரத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டுரங்கன், பொருளாளர் கனகராஜ், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், துணைச் செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவத் தலைவர் புருஷோத்தமன் வரவேற்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் சங்க கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கடைவீதி பகுதிக்கு மேள தாளங்கள் முழங்க நடை பயணமாக சென்று பேசினார்.
ஆன்லைன் வர்த்தகம் வணிகர்களை பெரிதும் பாதிக்கிறது. உணவு பாதுகாப்பு துறை வியாபாரிகளை மிரட்டினால் அவர்களை வீட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். வியாபாரிகளும் தரமான பொருட்களை வாங்கி விற்க வேண்டும். காய்கறிகளின் விலைகள் ஏறாமல் தடுக்க குளிர் பதனக்கிடங்குகளை அரசு அமைத்து, காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அரசே விலை நிர்ணயம் செய்து மக்களுக்கு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிகர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். வணிகர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது.
- தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை.
ஈரோடு:
வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழ் பெயர் பலகை இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.
பின்னர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோட்டில் தொடங்கி இருக்கும் இந்த விழிப்புணர்வு பேரணி மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக பேரணிகள் நடத்தி வணிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மீதும் தமிழ் பெயர் வைக்க வலியுறுத்துவோம். 60 சதவீதம் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என வணிகர்களிடம் கூறி உள்ளோம்.
இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது. வணிகர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு கேட்டிருந்தோம். அது குறித்து எதுவும் இல்லை. ஜி.எஸ்.டி வரி விலக்கில் மாற்றங்கள் கேட்டிருந்தோம், ஒரே முறை வரியாக கேட்டிருந்தோம், வரியை குறைத்தால் வரி ஏய்ப்பு இருக்காது என்பதையும் வலியுறுத்தி இருந்தோம்.
ஜி.எஸ்.டி சட்ட ரீதியான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பார்த்து ஜி.எஸ்.டி சட்டத்தை தெரிந்து கொள்வதாக இருக்கிறது. இதனை எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். காலாவதியான சுங்கச்சாவடிகளை 6 மாத காலத்தில் அகற்றுவதாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக துறையின் அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.
ஆனால் இன்னும் எதுவும் அகற்றப்படவில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சாலைகளில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று எதுவும் செய்யாத பட்ஜெட்டாக இருக்கிறது.
சோலார் பயன்படுத்து பவர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் தருவதையும் ஒரு லட்சம் கோடி வட்டி இல்லா கடன் தருவதையும் வரவேற்கிறோம். ஆனால் அது யாருக்கு தரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றோம். அவர்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுத்து வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.
இந்தியாவில் வணிகவரி அதிகம் கட்டுவது தமிழ்நாட்டில் தான். இதில் சிறு சிறு குறைபாடுகளை கூட அதிகாரிகள் கையில் எடுத்துக்கொண்டு அபராதம் விதிக்கின்றனர். ஏற்கனவே நசிந்து வரும் தொழிலை மேலும் நசுக்க வேண்டாம்.
தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை. விரைவில் அதன் உண்மை தன்மையை அம்பலப்படுத்துவோம். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். வணிகர் சங்க மாநில மாநாட்டில் பல்வேறு பிரகடன தீர்மானத்தை வெளியிட இருக்கின்றோம். இந்த ஆண்டு சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மேயர் நாகரத்தினம் தமிழ் பெயர் பலகையை திறந்து வைத்தார். பேட்டியின் போது அமைச்சர் முத்துசாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் நெல்லை ராஜா, பேரமைப்பின் மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் உதயம் செல்வன், இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.