என் மலர்
நீங்கள் தேடியது "தற்கொலை முயற்சி"
- கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக தகவல்.
- தற்கொலை முயற்சி தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது 'கயல்' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை நடிகை அமுதா தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை அறிந்த அமுதாவின் தோழி, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதற்கிடையே, அமுதா தற்கொலை முயற்சி செய்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அமுதாவின் கணவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சின்னத்திரை நடிகர், நடிகைகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
- பலத்த காயமடைந்த ரேகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மகன் இறந்த துக்கம் தாளாமல் மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
யோகேஷ் உயிரிழந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவரது தாய் ரேகா (40) மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததன் காரணமாக ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
- அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையம் காமராஜர் ரோட்டில் தனியார் நீட் மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையமானது அங்குள்ள கட்டிடத்தின் 3வது மாடியில் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு படிக்கும் 17 வயதான ஆனந்தி என்ற மாணவியின் தந்தை இன்று மாலை பயிற்சி மையத்துக்கு வந்தார். மாணவி ஆனந்தியுடன் பேசிக் கொண்டிருந்த போது, தந்தை மணிகண்டனை தள்ளிவிட்டு சென்ற மாணவி ஆனந்தி 3-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் பலத்த காயங்கள்ஏற்பட்டது.ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி ஆனந்தி எதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை. காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததன் காரணமாக ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் நீட் தேர்வு பயிற்சியை சரியாக பயிலாததன் காரணமாக தந்தை திட்டியதால் தற்கொலைக்கு முயன்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போடிநாயக்கனூரைச் சேர்ந்த 17 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- விடுதியின் 2-வது தளத்துக்கு சென்ற மாணவி திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
சரவணம்பட்டி,
கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இந்த கல்லூரியில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த 17 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்கு சென்று வந்தார். நேற்று மாலை 5.45 மணி அளவில் விடுதியின் 2-வது தளத்துக்கு அந்த மாணவி சென்றார். அங்கிருந்து திடீரென அவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கீழே விழுந்ததில் மாணவி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவி, அவரது சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- தலைமறைவாக உள்ள சபரியை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு வேண்டு கோள்விடுத்துள்ளனர்.
- வாலிபர் சபரி மீது ஓமலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சபரி (வயது 25). கூலி தொழிலாளி.
இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். மேலும் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி, அந்த நபரிடம் பேசியுள்ளார்.
இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. சபரியுடன் பேசுவை நிறுத்தி விடு, இல்லையென்றால் கல்லூரி படிப்பு பாதிக்கப்படும் என பெற்றோர் மகளுக்கு அறிவுரை கூறினர். இதன் பிறகு சபரியுடன் பேசுவதை மாணவி நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். இதில் போலீசாருக்கு பகீர் தகவல் கிடைத்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரி, அந்த மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது என்னை காதலிக்க வேண்டும். இல்லையென்றால் நீ என்னுடன் பேசி பழகிய படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். மேலும், மாணவியின் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். மேலும் இது பற்றி வெளியே சொன்னால் சத்தம் போடுவார்கள் என பயந்தார். மனம் உடைந்த மாணவி ஒரு கட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வாலிபர் சபரி மீது ஓமலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை அறிந்த சபரி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் துரிதமாக மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருந்து தப்பிப்பதற்காக சபரி முயற்சித்து வருகிறார். போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
தலைமறைவாக உள்ள அவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு வேண்டு கோள்விடுத்துள்ளனர்.
- பெற்றோர் மகளிடம் சமரசம் பேசி கணவருடன் சேர்ந்து வாழும் படி கூறவே மனமுடைந்த மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
- சிறுமியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள சின்ன உலகாணியை சேர்ந்த பிளஸ்-2 வகுப்பு மாணவிக்கும் கேரள மாநிலம் வண்டி பெரியார் பகுதியை சேர்ந்த உறவினரான ராஜாவிற்கு (வயது27) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்பு மாணவி கணவருடன் கேரளாவில் குடியேறியுள்ளார். திருமணமான 4 மாதத்திற்குள் அவர்களுக்குள் கருத்து வேறு ஏற்படவே தற்போது மாணவி கணவருடன் கோபித்து கொண்டு கள்ளிக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இங்கு அவரது பெற்றோர் மகளிடம் சமரசம் பேசி கணவருடன் சேர்ந்து வாழும் படி கூறவே மனமுடைந்த மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடனே அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் மைனர் பெண் என்பதால் இது குறித்து கள்ளிக்குடி சமூகநலத்துறை அலுவலர் ரூபிஅருள்மணிக்கு தகவல் கொடுத்தனர். அவர் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அவர் 17வயது மைனர் பெண் என்பது தெரியவந்தது. திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது கணவர் ராஜா, அவரது பெற்றோர் சந்திரபோஸ், பேச்சியம்மாள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
- தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சபரி (வயது 25). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
மேலும் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் சபரி மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். உறவினர் வீட்டில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீசார் நேற்று அங்கு சென்று சபரியை கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
- 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.
- நேற்று மாலை அவனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை அவனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமடைந்த மாணவன் இரவு 9 மணி அளவில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயற்சி மேற்கொண்டார். இதை கண்ட பெற்றோர் உடனடியாக மகனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவனுக்கு அவசர வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பார்வையற்ற மாற்றுத்திறனாளி காலில் விழுந்து கதறியும் கேட்காமல் வீட்டை இடித்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது.
- கோர்ட்டில் தீர்ப்பு அளித்தாலும் உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்காமல் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது40). இவரது மனைவி நிர்மலா (35). பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான இவர்களுக்கு ஜனனி (16) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜெயபால் மற்றும் அவரது மனைவி கிராமம் கிராமமாக சென்று பத்தி, சூடம் விற்பனை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் வசித்து வந்த வீடு ஆக்கிரமிப்பில் இருந்ததாக அதே பகுதியை சேர்ந்த மொக்கைச்சாமி என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜெயபால் வீடு மட்டுமின்றி அவரது வீட்டிற்கு அருகில் இருந்த மேலும் 4 வீடுகளும் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி அதனை இடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் உதவியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை இடிக்க மொக்கைச்சாமி ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தார். அப்போது மற்ற வீடுகளை கூட இடித்துக்கொள்ளுங்கள் பார்வையற்றவர்களின் வீட்டை மட்டும் இடிக்க வேண்டாம் என தெரிவித்தும் அவர் கேட்காமல் இடித்து தரைமட்டமாக்கினார். இதனால் வேதனை அடைந்த ஜெயபால், அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகிவிட்டதாலும் தனது குழந்தையின் புத்தகங்களை கூட எடுக்க முடியாததால் அவரது படிப்பை தொடர முடியாத நிலையில் ஜெயபால் குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இதனால் ஊரை விட்டு வேறு எங்காவது சென்று விடலாம் என்று முடிவு செய்தனர். தற்போதுவரை அவர்கள் அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சையில் இருப்பதால் திரும்பி வந்தாலும் அவர்களுக்கு இருப்பிடம் இல்லாத நிலை உருவானது. இதனை உணர்ந்த மயிலாடும்பாறை கிராம மக்கள் அவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர்.
இன்று மயிலாடும்பாறையில் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து நிர்வாகிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளி காலில் விழுந்து கதறியும் கேட்காமல் வீட்டை இடித்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. கோர்ட்டில் தீர்ப்பு அளித்தாலும் உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்காமல் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மயிலாடும்பாறையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. ஆட்டோக்கள் ஓடவில்லை. ஊர் மக்கள் அனைவரும் நிதி திரட்டி ரூ.3 லட்சம் மதிப்பில் ஜெயபால் குடும்பத்தினருக்கு ஒரு வீடு கட்டி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் அவர்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்தி தர ஒரு தொழில் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு கிராமமே ஒன்று சேர்ந்து கடைகளை அடைத்து உதவி கரம் நீட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- 14 வயது மாணவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- மாணவர் அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 18-ந் தேதி பள்ளியில் 2-வது திருப்புதல் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவில் மாணவர் அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தார். இதனை தனது பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என அவர் நினைத்தார். இதனால் பயந்த மாணவர் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற அவர் அங்கு இருந்த எறும்பு பொடியை கரைத்து குடித்தார். வெளியே வந்த அவர் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக தனது மகனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கவுசல்யா (28) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
- இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாமக்கல்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 34). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா (28) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
ஓட்டலில் தங்கினர்
இதற்கு இடையே ராஜசேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அவர்களை உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் நேற்று நாமக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். இன்று காலை வெகு நேரமாகியும் அறை கதவு திறக்காததால், ஓட்டல் ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால், கதவை திறந்து உள்ளே சென்றனர்.
தற்கொலை முயற்சி
அப்போது, 2 பேரும் மயங்கி கிடந்தது தெரியவந்தது. இது குறித்து நாமக்கல் நகர போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில், இருவரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளததால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்கள், தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜசேகர், கவுசல்யா உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது .இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இவர்கள் திருப்பூரில் தங்கி இருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
- நேற்று முன்தினம் நாமக்கல்லில் உள்ள லாட்ஜில் ஒன்றில் தங்கிய அவர்கள், நேற்று காலை தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்தனர்.
நாமக்கல்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 34). இவரது மனைவி கவுசல்யா. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இவர்கள் திருப்பூரில் தங்கி இருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல்லில் உள்ள லாட்ஜில் ஒன்றில் தங்கிய அவர்கள், நேற்று காலை தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்தனர். தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீசார் அவர்களை மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து நாமக்கல் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.