search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கைகள்"

    • போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
    • தனித்தனியாக சீருடைகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் திருநங்கைகள் பல்வேறு பணிகளில் பணியாமத்தப்படுவார்கள் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக ஐதராபாத் மாநகர பகுதியில் போக்குவரத்து சீரமைக்க திருநங்கைகள் படை உருவாக்க ப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

    இதற்காக தனி தனியாக சீருடைகளும் வடிவமைக்க பட்டு வருகின்றன. திருநங்கை படையில் உள்ளவர்களுக்கு இரண்டு வகையான சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    திருநங்கை படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.

    அதற்கு பிறகு ஐதராபாத் மாநகர பகுதியில் திருநங்கை படையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.

    • திட்டத்தின் கீழ் திருநங்கைகள் போக்குவரத்து மேலாண்மைக்கு பயிற்சியளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
    • திருநங்கைகளுக்கு தனித்தனியான சீருடைகளை உருவாக்கும் பணியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

    ஐதராபாத் போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக திருநங்கைகள் பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கென்று தனித்தனி சீருடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஒதுக்கப்பட்ட பிரிவினரின் வேலைவாய்ப்பை நிவர்த்தி செய்வதற்கான திட்டத்தின் கீழ் தெலுங்கானா அரசாங்கம் இந்தியாவின் முதல் திருநங்கைகள் சார்ந்த அரசு ஆட்சேர்ப்பு மற்றும் சமூக நலத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருநங்கைகள் போக்குவரத்து மேலாண்மைக்கு பயிற்சியளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

    முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்த திட்டத்தின்படி, திருநங்கைகள் அடையாளம் காணப்பட்டு பணியமர்த்தப்பட்டவுடன், அவர்கள் ஐதராபாத் போக்குவரத்து காவல்துறைக்கு உதவ சிறப்புப் பயிற்சி பெறுவார்கள்.

    அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், திருநங்கைகள் பணியமர்த்தப்படுவதால் மென்மையான சாலை நிர்வாகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "அவன்/அவள்" மற்றும் "அவன்/அவள்" தனி நபர்களுக்கு தனித்தனியான வடிவமைப்புகளுடன், திருநங்கைகளுக்கு தனித்தனியான சீருடைகளை உருவாக்கும் பணியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

    கூடுதலாக, பணியமர்த்தப்பட்டவர்களுக்கு சமத்துவம் மற்றும் மரியாதையை உறுதி செய்வதற்காக சம்பளம் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

    • ஆணாக இருந்து பிச்சை எடுக்கும்போது 2 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.
    • பெண்ணாக இருந்து பிச்சை எடுத்தால் எவ்வளவு கிடைக்கும் என்பதை நினைத்துப்பார் என ஆசை வார்த்தை.

    பெங்களூருவில் உள்ள டிஜி ஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது வாலிபர் டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். டீக்கடைக்கு தேநீர் அருந்த வந்தபோது சில திருநங்கைகளுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது ஐந்து திருநங்கைகள் அந்த நபரிடம், அதிக வருமானம் ஈட்டுவதற்கான வேலை தங்களிடம் இருப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவிக்க, திருநங்கைகள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

    மேலும், தெருக்களில் பிச்சை எடுக்க வைத்துள்ளனர். கடந்த மாதம் 12-ந்தேதி இரவு திருநங்கைகள் அந் வாலிபர் வசிக்கும் இடத்திற்கு சென்று, ஒரு ஆண் பிச்சைக்காரராக நீ ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளாய். பெண் பிச்சைக்காரராக இருந்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என எண்ணிப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

    வாலிபர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே வலுக்கட்டாயமாக ஐந்து திருநங்ககைள் அந்த வாலிபருக்கு சில ஊசிகளை செலுத்தியுள்ளனர். இதனால் அந்த நபர் மயக்கம் அடைந்துள்ளார். மயக்கம் தெளிந்த பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் கட் செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவனை வீட்டில் பூட்டு வைத்துள்ளனர்.

    ஆகஸ்ட் 3-ந்தேதி வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த அந்த வாலிபரை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளனர். எப்படியோ அங்கிருந்து தப்பித்து வந்த போலீசார் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ஐந்து திருநங்கைகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நத்தக்குளம் பகுதியில் கந்தசாமிபிள்ளை மகள் ரேணுகா என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு செல்லும் சாலை பாதையை ஆக்கிரமிப்பு செய்தும் 10 சென்ட் வீட்டு மனை பட்டா இடத்தை கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அபகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர், சங்கராபுரம் தாசில்தார் ஆகியோரிடம் முறையிட்டும் புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த திருநங்கை ரேணுகா மற்றும் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாததால் காவல்துறையின் தடையை மீறி சாலையில் அமர்ந்து அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர்.
    • கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் தயா காயத்ரி, கார்த்திகா ரதீஷ், ஸ்ருதி சித்தாரா, ஸ்ரேயா திவாகரன், மைதிலி நந்தகுமார், சந்தியா அஜித், சங்கீதா.

    இவர்களுக்கு பரத நாட்டியம் படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஒரு தனியார் அறக்கட்டளையின் முயற்சி காரணமாக திருநங்கைகளுக்கு பரதநாட்டிய பயிற்சி கொடுக்கும் அகாடமியில் சேர்ந்தனர்.

    அவர்களுக்கு பரதநாட்டிய கலைஞரான சஞ்சனா சந்திரா பயிற்சி அளித்தார். இவர் மோகன்லால் நடித்த 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார். அவரிடம் திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டிய பயிற்சியை முடித்தனர்.

    இதையடுத்து அவர்கள் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்துவதற்கு அவர்கள் பயிற்சி பெற்ற அகாடமி ஏற்பாடு செய்தது. அந்த நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவிலில் நடை பெற்றது. திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டியம் ஆடினர்.

    திருநங்கைகள் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும் போது, 'திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன். இந்த நிகழ்வு உள்ளடக்கம் மற்றும் சமூக ஏற்புக்கான ஒரு படியாகும்' என்றார்.

    திருநங்கைகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஒரு கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.
    • தனியார் அறக்கட்டளை மூலம் ரூ 40 லட்சம் செலவில் 2 இடங்களில் ஓட்டல்கள் நிறுவப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில அரசு திருநங்கைகளை வறுமையில் இருந்து மீட்பதற்காகவும் பாகுபாடுகளில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது.

    இதற்காக தேசிய விருந்தோம்பல் மேலாண்மை நிறுவனத்தில் உணவு வணிக ஆபரேட்டர்கள் மூலம் திருநங்கைகளுக்கு 3 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா நேற்று நல்கொண்டாவில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரி கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி கலந்து கொண்டு பயிற்சி முடித்த திருநங்கைகள் ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல்கள் நடத்துவதற்கான ஆணையை வழங்கினார்.

    மேலும் தன்னுடைய அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார். தனியார் அறக்கட்டளை மூலம் ரூ 40 லட்சம் செலவில் 2 இடங்களில் ஓட்டல்கள் நிறுவப்பட்டு உள்ளது.

    சமையல் செய்வது, வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது, நிர்வகிப்பது என முழுக்க திருநங்கைகள் மட்டுமே இந்த ஓட்டல்களை நடத்த உள்ளனர்.

    • திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள்
    • போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.

    திருநங்கைகள் யாசகம் பெறுவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி திருநங்கைகள் யாசகம் பெற முயன்றால், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். 

    • திருநங்கைகள் இருவரும் போலீஸ்காரர் ராஜசேகரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கினர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி டோல்கேட் சந்திப்பு பகுதியில், போலீஸ்காரர் ராஜ சேகர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அப்பகுதி மீன் கடை அருகில் 2 திருநங்கைகள் வாகன ஓட்டியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    போலீஸ்காரர் ராஜ சேகர். தகவல் அறிந்து அங்கே சென்று இருவரையும் விசாரித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் இருவரும் போலீஸ்காரர் ராஜசேகரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். மேலும் கல்லாலும் தாக்க முயன்றனர். அந்த நேரத்தில் திருக்கழுக்குன்றம் நோக்கி வந்த அரசு பஸ்சையும் வழிமறித்து அதன் முன்பு அமர்ந்து கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே ரகளையில் ஈடுபட்ட 2 திருநங்கைகளையும் விசாரணைக்கு அழைத்தனர்.

    அவர்களிடமும் அடாவடியில் ஈடுபட்ட திருநங்கைகள் தாங்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிளில் கல்பாக்கம் நோக்கி தப்பி சென்று விட்டனர். திருநங்கைகள் தாக்கியதில் காயம்அடைந்த போலீஸ்காரர் ராஜசேகருக்கு மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் மெரினா மஷேடி வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
    • ரிக்கி கோலே ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    எல்சால்வடார்:

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சவால் விடும் வகையில் திருநங்கைகளும் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அழகி போட்டி வரலாற்றில் முதன் முறையாக 2 திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.

    72-வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவர்களுக்கு போட்டியாக 2 திருநங்கைகளும் களம் இறங்கி உள்ளனர். அதில் ஒருவரது பெயர் மெரினா மஷேடி. 23 வயதான இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் இவர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

    மற்றொரு திருநங்கை பெயர் ரிக்கி கோலே. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஆவார். அவர் ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.

    உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் 2 திருநங்கைகளில் யாராவது ஒருவர் வெற்றி பெற்று மகுடம் சூட்டினால் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற சாதனையை படைக்கலாம்.

    இது தொடர்பாக ரிக்கி கோலே கூறும் போது, சிறுவயதில் இருந்து நான் என் பாதையில் வந்த அனைத்தையும் வென்றேன். எனக்கு எனது குடும்பத்தினர் நல்ல ஊக்கம் அளித்து வருகிறார்கள். அவர்கள் ஆதரவால் தான் இது போன்ற சாதனைகளை செய்ய முடிகிறது. தற்போது என்னை பாருங்கள். இங்கே நான் வலிமையான, தன்னம்பிக்கையுடன் உங்கள் முன்பு ஒரு திருநங்கையாக நிற்கிறேன் என்று தெரிவித்தார்.

    • ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பயனுள்ள திட்டமாகும்.
    • அனைத்து இடங்களிலும் திருநங்கைகளுக்கும் பணி வழங்க வேண்டும் என்கிற உத்தரவையும் அரசு பிறப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ 1000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பயனடையாத பலர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பலர் விண்ணப்பித்து உள்ளனர்.

    இதற்கிடையே திருநங்கைகள் பலரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் திருநங்கைகள் அனைவருக்கும் இந்த உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை கண்ணகி நகரில் உள்ள திருநங்கை விழிகள் அமைப்பு சென்னை மாவட்ட கலெக்டர் ராஸ்மி சித்தார்த்தை நேரில் சந்தித்து மனுவும் அளித்துள்ளது.

    அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியான துர்கா ஸ்ரீ இதுதொடர்பாக கூறியதாவது:-

    ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பயனுள்ள திட்டமாகும். திருநங்கைகள் பலர் தற்போது பலரிடமும் கையேந்தி காசு வாங்கி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் திருநங்கைகளுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 4000 திருநங்கைகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்டுள்ளோம். அவரும் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என்றார்.

    சென்னை தண்டையார்பேட்டையில் 688 திருநங்கைகள் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 13 பேருக்கு மட்டுமே உரிமைத்தொகை கிடைத்து உள்ளது. மீதம் உள்ளவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு 21 வயதுக்கும் குறைவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று காரணம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    திருநங்கைகள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் துர்க்கா ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறும்போது திருநங்கைகள் உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தாலேயே பொது இடங்களில் கையேந்துவது. பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக அனைத்து இடங்களிலும் திருநங்கைகளுக்கும் பணி வழங்க வேண்டும் என்கிற உத்தரவையும் அரசு பிறப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இன்று திருநங்கைகள் பலர் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளனர். அரசின் நடவடிக்கைகள் மூலம் அனைத்து திருநங்கைகளும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் அதற்காகவே எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து திருநங்கைகளுக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருநங்கைகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக திருநங்கைகள் கூறும்போது, இ சேவை மையங்களில் சென்று விண்ணப்பிக்கும்போது ஆண், பெண் என்கிற பகுதி உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடுவதற்கு எங்களுக்கு தகுதி இல்லை என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது மூன்றாம் பாலினத்தவர் என்ற பகுதியும் இருப்பதாக கூறியுள்ளனர்.

    • திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக கேரள அரசு பல சிறப்பான பணிகளை செய்து வருகிறது.
    • தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மாநில அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக கேரள அரசு பல சிறப்பான பணிகளை செய்து வருகிறது. அதன்படி நர்சிங் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது. பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் ஒரு இடமும், ஜெனரல் நர்சிங் படிப்பில் ஒரு இடமும் ஒதுக்கப்படும்.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மாநில அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியே செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு. செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்துவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
    • 118 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் அவர் பேசியாவது.-

    விழுப்புரம் மாவட்ட த்தில் உள்ள 274 திருநங்கை களில் 25 திருநங்கைகள் இறப்பு, 37 திருநங்கைகள் இடம் பெயர்ந்துள்ளார்கள். மீதமுள்ள 212 திருநங்கைகள் தற்பொழுது மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். 2021 2022-ஆம் ஆண்டில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மர்லிமா என்ற திருநங்கைக்கு 25 ஆண்டு சேவையை பாராட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை 45 திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் சுயதொழில் மானியமும், தலா ரூ.4 ஆயிரம் வீதம் 118 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவியும், 210 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும், திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையும், 51 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டாவும், 67 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், 6 திருநங்கை களுக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருநங்கை களின் பெரும்பாலான கோரிக்கையாக இருப்பது சுயமாக சுயதொழில் தொடங்குவதற்கு மானி யத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, மாதாந்திர ஓய்வூதி யத்தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு போன்ற பல்வேறு கோரிக்கை களாகும். எனவே, திருநங்கை கள் தங்கள் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினால் உடனடி தீர்வின் மூலம் தீர்வுகாணப்பட்டு கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) பொன்னம்பலம், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, நங்கையர் கூட்டமைப்பு தலைவி விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×