என் மலர்
நீங்கள் தேடியது "விளையாட்டு போட்டி"
- அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன.
- மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருப்பூர் :
தமிழகத்தில் கிராமப்புறங்களில் மாணவா்கள் இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், உடற்பயிற்சிகள் செய்வதற்கான ஆா்வத்தை ஏற்படுத்தவும் கடந்த 2006ஆம் ஆண்டுதி.மு.க. ஆட்சிக் காலத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
இந்த விளையாட்டு சாதனங்கள் ஊராட்சி நிா்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னா் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மைதானங்கள் பராமரிக்கப்படவில்லை.
பின்னா் கடந்த 2020ம் ஆண்டில் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கிராமம்தோறும் ஊரக வளா்ச்சித் துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது.
தற்போது, அனைத்து கிராமங்களிலும் மைதானங்கள் பயன்பாடு இல்லாமல் புதா் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் விளையாட்டு பயிற்சி உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டன. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது. தற்போது, விளையாட்டில் சாதிக்க நினைப்பவா்களுக்கு கிராமங்களில் எவ்வித வசதியும் இல்லை. எனவே கிராமப்புற மைதானங்களை பராமரித்து உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டும். இதற்கு சிறப்புக் குழு அமைத்து மைதானம், உபகரணங்கள் பராமரிப்பை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். கிராமம்வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இளைஞா்களை ஊக்குவிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- ரூ.15 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது
- பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு விளையாட்டு பாட வேளையில், விளையாட தேவையான ரூ.15 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு பொருட்கள் பிடிஏ மற்றும் எஸ்எம்சி சார்பில் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தலைமை ஆசிரியர் பாபு, பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- எம்.எல்.ஏ, ஆசிரியர்கள் மாணவிகளை பாராட்டினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு மாவட்ட அளவில் அதிக இடங்களில் முதல் இடம் பிடித்துள்ளனர்.
அவர்கள் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினார்.
இதில் ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக் மற்றும் பள்ளியின் கல்விக் குழு தலைவர், உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினர்.
- வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
- போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வட்டார வளமையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மீனாட்சி முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் துவக்கி வைத்தார்.போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
- 19 வயது பிரிவினருக்கான மாநில, குழு விளையாட்டு போட்டி 10ந் தேதி வரை நடக்கிறது.
- 242 பேர் அடங்கிய குழு அணியினர் நாமக்கல் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பர்.
திருப்பூர் :
பள்ளி கல்வித்துறை சார்பில் நாமக்கல், கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 19 வயது பிரிவினருக்கான மாநில, குழு விளையாட்டு போட்டி 10ந் தேதி வரை நடக்கிறது
இதில் பங்கேற்க திருப்பூர் மாவட்ட அணிகளுக்கு வழியனுப்பு விழா ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ள திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவிகள் விவரம் வருமாறு: - உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி, உடுமலை லுார்துமாதா கான்வென்ட் மெட்ரிக் பள்ளி (கால்பந்து), ஆர்.வி.ஜி., குறிச்சிக்கோட்டை மாணவர் மற்றும் மாணவிகள் அணி (ஹாக்கி), தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், செயின்ட் அலோசியஸ் பள்ளி (கூடைப்பந்து). காங்கயம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி, காங்கயம், கார்மல் பெண்கள் பள்ளி (கோ கோ), மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கபடி), திருப்பூர் வேலவன் மெட்ரிக் பள்ளி, வித்யவிகாசினி மெட்ரிக் பள்ளி (வாலிபால்).
பொங்கலூர் பி.வி.கே.என்., அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லடம் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி (த்ரோபால்), ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி, காங்கயம் கார்மல் பள்ளி (ஹேண்ட்பால்), சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி, வித்யவிகாசினி பள்ளி (பால்பேட்மின்டன்), சென்சுரி பவுண்டேசன் பள்ளி, பிரன்ட்லைன் பள்ளி (பேட்மின்டன் - தனிநபர்), (பேட்மின்டன் - குழு) தி பிரன்ட்லைன் அகாடமி, கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லடம், ஆதர்ஸ் வித்யாலயா (டேபிள் டென்னிஸ் - தனிநபர்), ஏ.வி.ஏ.டி., பள்ளி, சாமளாபுரம் கொங்கு வேளாளர் பள்ளி (டேபிள் டென்னிஸ் - குழு) ,டீ பப்ளிக் மெட்ரிக் பள்ளி, பிளாட்டோஸ் மெட்ரிக் பள்ளி (டென்னிஸ் - தனிநபர், குழு) உள்ளிட்ட 242 பேர் அடங்கிய குழு அணியினர் நாமக்கல் பயணமாகியுள்ளனர். வருகிற 10-ந் தேதி வரை நடக்கும் போட்டிகளில் இவர்கள் பங்கேற்பர்.
- விளையாட்டு போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மாநில அளவிலான 38-வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி 3-வது இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. சாதனை படைத்த மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியரையும், பள்ளியின் செயலர், நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்தினர்.
- 50 வகையான போட்டிகள் வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.
- பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், காஞ்சிபுரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண்/பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பளு தூக்குதல், கடற்கரை கையுந்து பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் மண்டல அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். பிற விளையாட்டுகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.
பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மாவட்ட அணிகளின் சார்பாக மாநிலப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
தனி நபர் போட்டிகளில் தரவரிசையின்படி சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
மாவட்ட அளவிலான போட்டிகள்: தனிநபர், ஒற்றையர், இரட்டையர் முதல் இடம் ரூ.3000, 2-ம் இடம் ரூ.2000, 3-ம் இடம் ரூ.1000 மும், குழுப் போட்டிகள் ஒவ்வொருவருக்கும் முதல் இடம் ரூ.3000, 2-ம் இடம் ரூ.2000, 3-ம் இடம் ரூ.1000 மும் அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண். 7401703481, 044-27222628 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விளையாட்டு போட்டியில் அரசு கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்
- மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர்
கரூர்:
கரூரில் மாநில அளவில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் முதல் பரிசை நாமக்கல் மாவட்ட அணியும், இரண்டாம் பரிசை கரூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரன் உள்பட அனைத்து பேராசிரியர்களும், பாராட்டினர்.
- மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
- குண்டு எறிதல், நீளம்தாண்டுதல் மற்றும் இறகு பந்து, கையுந்து பந்து போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தபடும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பபில் அவர் கூறியிறுப்பதாவது:-
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி கள் 2022-2023 மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவி கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திற னாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பொதுபிரிவினர் 15 வயது முதல் 35 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி, சிலம்பம், தடகளம் (100 மீ, 1500 மீ (பெ), 3000 மீ), குண்டு எறிதல், நீளம்தாண்டுதல் மற்றும் இறகு பந்து, கையுந்து பந்து போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தபடும்.
12 முதல் 19 வயது வரை மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17 முதல் 25 வயது வரை கபடி, சிலம்பம், தடகளம் (100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 110மீ மற்றும் 100மீ) தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல்கையுந்துபந்து, மேசைப்பந்து, போட்டிகளும், மாற்றுதி றனாளி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 50 மீ ஓட்டம், இறகுபந்து-5நபர், பார்வை த்திறன் மாற்று த்திறனாளி 100மீ ஓட்டம், 7 நபர் மனவளர்ச்சி குன்றியோர் 100 மீ ஓட்டம், எறிபந்து- 7 நபர், செவித்திறன், மாற்றுத்தி றனாளி 100 மீ ஓட்டம், கபடி-7நபர் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி, தடகளம் 100மீ, 1500மீ, 3000 மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிக ளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெரும் தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.3,000, 2-ம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000, மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கபடி, கூடைப்பந்து, கையுந்துபந்து, முதல் பரிசு ரூ.36,000 2-ம் பரிசு ரூ.24,000 3-ம் பரிசு ரூ.12,000 மற்றும் கால்பந்து, ஹாக்கி முதல் பரிசு ரூ.54,000, 2-ம் பரிசு ரூ.36,000, 3-ம் பரிசு ரூ.18,000, வீதம் ஒவ்வொரு அணிகளுக்கும் பரிசு தொகை வழங்ப்பட உள்ளது. மேலும், இப்போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண்- 99435 09394, 86757 73551, 74017 03485, ல் தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிதந்து கொள்ளலாம். இந்த விளையாட்டு போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட த்தை சேர்ந்த வீரர், வீராங்க னைகளும் பெரும் அளவில் கலந்துகொள்ள வேண்டும் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
- இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளை யாட்டு வீரர், வீராங்கனைகள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள www.sdat.tn.gov.in முகவரியில் குழு மற்றும் தனி நபர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பொதுப்பிரிவு 15-35 வயது ஆண்கள், பெண்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து போட்டிகள் நடைபெறும்.
பள்ளி மாணவ, மாணவிகள் 12-19 வயது கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும். மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12-19 வயது டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடைபெறும்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17-25 வயது கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும். மண்டல அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17-25 வயது டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர் ஓட்டம், பேட் மின்டன், பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், கைப்பந்து போட்டி நடைபெறும். மனவளர்ச்சி குன்றி யோருக்கு 100 மீட்டர் ஓட்டம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், கபடி போட்டி நடைபெறும்.
அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண், பெண்களுக்கு கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்து பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் நடைபெறும். மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1000 வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெல்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
- குழு போட்டிகளில் குழுவினரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு முதல் பரிசாக ரூ.6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை வழங்கப்படும்.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
"தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2022-23"-ஐ நடத்தவும், மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி உள்பட ரூ.47.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாணையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடுத்துறை அமைச்சர் முதல் கையெழுத்திட்டார்.
அதன்படி www.sdat.tn.gov.in இணையதளத்தின் மூலம் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களிடம் இருந்து 1,21,686 முன்பதிவுகள் வரப்பெற்றுள்ளன.
தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெல்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் குழுவினரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு முதல் பரிசாக ரூ.6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை வழங்கப்படும்.
இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. முன்பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 17-ந்தேதி ஆகும்.
எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஊராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி, எந்தவித உரிமையும் இன்றி பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி வருகிறார் .
- பிரார்த்தனை கூடம் நடத்தக்கூடாது என்று அவினாசி தாசில்தார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் .
அவினாசி :
அவினாசி அருகே பொங்கல் பண்டிகை கொண்டாடும் தருணத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஜெபக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் செம்பியநல்லூர் ஊராட்சி தாசம்பாளையம் நேரு நகர் பகுதியில் ஒருவர் ஊராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி அந்த இடத்தில் எந்தவித உரிமையும் இன்றி பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி வருகிறார் .அங்கு பிரார்த்தனை கூடம் நடத்தக்கூடாது என்று அவினாசி தாசில்தார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் .அதையும் மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்தி வருகிறார்.ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நேரு நகர் பொதுமக்கள் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மேற்படி நபர் பிரார்த்தனை நடத்த வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து தங்க வைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். பொங்கல் பண்டிகை காலத்தில்நாங்கள் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டுப் போட்டிகளில் கலவரத்தை ஏற்படுத்த இருப்பதாக தெரிய வருகிறது. எனவே கலவரத்தை ஏற்படுத்த இருக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.