என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைக்கால கூட்டத்தொடர்"

    • புதிய வருமான வரி மசோதா 2025 பாராளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
    • வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    புதிய வருமான வரி மசோதா 2025 பாராளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பேசியதாவது:

    புதிய வருமான வரி மசோதா பாராளுமன்றத்தின் அடுத்த மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    நிதி மசோதா 2025, வரி செலுத்துவோரை கவுரவிப்பதற்காக முன்னெப்போதும் இல்லாத வரி நிவாரணத்தை வழங்குகிறது.

    சர்வதேச பொருளாதார நிலையில் உள்ள நிச்சயமற்ற தன்மையை நிவர்த்தி செய்ய ஆன்லைன் விளம்பரங்கள் மீதான சமன்படுத்தல் வரி ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறும்
    • கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

    "பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், 2023 ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை தொடரும். மழைக்காலக் கூட்டத்தொடரின் போது சட்டமன்ற அலுவல் மற்றும் பிற விஷயங்கள் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பங்களிக்குமாறு அனைத்துக் கட்சிகளையும் வலியுறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    இக்கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெற்றது.
    • மணிப்பூர் கலவரம் விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    2023-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெற்றது. 2-வது அமர்வு மார்ச் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. அதானி விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன.

    இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் கலவரம் விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி, குகி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. 2 மாதங்களாக நடந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாக எதிர்கட்சிகள் ஏற்கனவே விமர்சனம் செய்து இருந்தன. பாராளுமன்றத்தில் மணிப்பூர் கலவர பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷத்துடன் எழுப்பும்.

    மேலும் விலைவாசி உயர்வு, விசாரணை அமைப்புகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய பாராளுமன்ற கூட்டத்தில் நடைபெறும் இந்த கூட்டத் தொடர் 15 அமைப்புகளை கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளன. மேலும் 7 பழைய மசோதாக்கள் விவாதத்துக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

    டிஜிட்டல் தனிநபர் தரவு மசோதா, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் ஆகும் என்று கருதப்படுகிறது.

    பாராளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதற்காக பாராளுமன்றம் கூடுவதற்கு முந்தைய தினம் அனைதது கட்சி கூட்டம் நடைபெறும். அதன்படி மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற அவைக்கு தகவல் தெரிவித்தார்.
    • நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை.

    திண்டுக்கல்:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைக்கவும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை சார்பில் இதுகுறித்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கவும், விவாதங்களில் பங்கேற்குமாறும் அமைச்சர் பிரகலாத்ஜோஷி, தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து தான் அந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக ரவீந்திரநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் உள்ள ஒரே எம்.பி. தேனி பாராளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத். இவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில் பொய்யான தகவல்களை அளித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்தார்.

    ஏற்கனவே ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற அவைக்கு தகவல் தெரிவித்தார். இருந்தபோதும் ரவீந்திரநாத் அ.தி.மு.க. உறுப்பினராகவே தொடர்ந்து செயல்பட்டார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். ரவீந்திரநாத்துக்கு மேல்முறையீடு செய்யும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஒரு மாதம் நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார். அதற்கான முயற்சியில் ரவீந்திரநாத் இறங்கி உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    தற்போது அ.தி.மு.க. பிரதிநிதியாக ரவீந்திரநாத் அழைக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் கட்சி மணிப்பூர் கலவரம் விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்ப திட்டம்.

    2023-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார்.

    அதன் பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெற்றது.

    2-வது அமர்வு மார்ச் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. அதானி விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன.

    இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, மணிப்பூர் கலவரம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் புயலை கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

    • மணிப்பூர் பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
    • இன்று வெளியான வீடியோ இதன் நோக்கத்தை இன்னும் அதிகரித்துள்ளது

    இந்திய பாராளுமன்றம் பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப ஆயத்தம் ஆகியுள்ளது.

    இந்த நிலையில் நின்று மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்படும் காட்சி இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குள்ளாகி வரும் நிலையில், பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

    இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பல்வேறு கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம.பி. எலராமன் கரீம், காங்கிரஸ் எம்பி. இம்ரான் பிரதாப்கார்கி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    • ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்.
    • 17 அமர்வுகள் இடம்பெறும் நிலையில், 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு.

    இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிக்கட்சிகள் கேள்விகள் எழுப்பி நெருக்கடி அளித்து வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற கூட்டத்த நடத்த விடக்கூடாது என்பதில் என்பதில் எதிர்க்கட்சிகள் தெளிவாக இருப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.
    • மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு உள்துறை மந்திரி அமித் ஷா விரிவாக பதில் அளிப்பார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியும், எதிர்க்கட்சிகள் கூட்டணியும் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

    குறிப்பாக அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்கவேண்டும் என்றும், பெண்கள் மீதான கொடூர தாக்குதல் தொடர்பாக பிரதமர் பாராளுமன்றத்தில் பேசவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து அமளி நீடித்ததால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

    எதிர்க்கட்சிகள் முன்வைத்த விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்ற பிறகும், எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை பார்க்கும்போது, அவர்கள் பாராளுமன்ற கூட்டத்த நடத்த விடக்கூடாது என்பதில் என்பதில் தெளிவாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது என பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக பார்ப்பதாகவும், விவாதிக்க தயாராக இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் அதில் இருந்து விலகுவதாகவும் மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை ஏற்கனவெ தெளிவுபடுத்திவிட்டதாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். மேலும், மணிப்பூர் விவகாரம் உணர்வுபூர்வமான பிரச்சினை, விவாதத்திற்கு உள்துறை மந்திரி விரிவாக பதில் அளிப்பார். விவாத தேதியை சபாநாயகர் முடிவு செய்யட்டும் என்றும் பிரகலாத் ஜோஷி கூறினார்.

    • துரதிர்ஷ்டவசமாக மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கின்றன.
    • ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கின்றன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மணிப்பூர் பிரச்சினையை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முதல் நாளிலேயே முடங்கின.

    எதிர்க்கட்சிகளின் இந்த செயலுக்கு மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    பாராளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர், இது தொடர்பாக கூறியதாவது:-

    துரதிர்ஷ்டவசமாக மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கின்றன. அத்துடன் இதை அரசியலாக்கவும் முயற்சிக்கின்றன.

    மணிப்பூர் நிலைமை குறித்து விவாதிக்க தயார் என நாங்கள் கூறிவிட்டோம். ஆனால் இது குறித்து விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம் எடுக்கின்றன.

    ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் சோனியா, ராகுல் மற்றும் எதிர்க்கட்சிகள் மவுன பார்வையாளர்களாக கடந்து விடுகின்றன. ஒரேயொரு மாநிலத்துக்காக (மணிப்பூர்) கண்ணீர் வடிக்கின்றனர்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நீங்கள் எப்படி மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு காட்ட முடியும்? பெண்களை அரசியல் ஆயுதமாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள்.

    மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் விவாதிக்காமல் ஏன் ஓடுகிறீர்கள்? ராஜஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு சோனியா, ராகுல் ஆகியோரும் பதிலளிக்க வேண்டும்.

    இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்தார்.

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறுகையில், 'மணிப்பூர் பிரச்சினையில் விவாதத்துக்கு தயாராக இருப்பதாக அரசு தெளிவாக கூறியபோதும், காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் பாராளுமன்ற அலுவல்களை முடக்கியுள்ளன. சபையை செயல்பட விடக்கூடாது என்ற முடிவோடுதான் அவர்கள் வந்துள்ளனர் என்பது எதிர்க்கட்சிகளின் இந்த அணுகுமுறையில் இருந்து தெரிகிறது' என குற்றம் சாட்டினார்.

    மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் வன்முறை மற்றும் சத்தீஷ்கார், ராஜஸ்தானில் நடைபெறும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் காரணமாக எதிர்க்கட்சிகள் மனதில் கவலை இருக்கலாம் என்றும் அவர் சாடினார்.

    இதைப்போல மணிப்பூர் பிரச்சினையில் பாராளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதாவும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'இன்று நாம் ஜூலை மாதத்தில் இருக்கிறோம். ஆனால் மே முதல் வாரத்தில் நடந்த ஒரு சம்பவம், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் டுவிட்டரில் வெளியாகி இருக்கிறது. இதன் மர்மம் தொடர்பாக எனது மனதில் பல கேள்விகள் எழுகின்றன' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'மணிப்பூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதனால் நாங்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தை விவாதிக்க தயாராக இருக்கிறோம் என மத்திய மந்திரிகள் பாராளுமன்றத்தில் அறிவித்தபோதும், காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் விவாதத்துக்கான விதிகளுக்கு வாதம் செய்கிறார்கள். அப்படியானால் இந்த சம்பவங்கள் உங்களுக்கு முக்கியமில்லை, விதிகள்தான் முக்கியமா' என்றும் கேள்வி எழுப்பினார்.

    • பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தல்
    • கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் கூச்சல் குழப்பம்

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளே எதிர்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் கொடூரம் செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தை எழுப்பினார்கள்.

    மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை குறித்தும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பிரதமர் மோடி மவுனத்தை கலைத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் பாராளு மன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை இரண்டும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இரு அவைகளிலும் எந்த பணிகளும் நடைபெறாமல் முடக்கம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்ததால் விவாதம் எதுவும் நடைபெறாமல் நாள் முழுவதும் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

    முன்னதாக இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் கேள்வி- நேரம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று முன்னதாக நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.

    தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கினார்கள். ஆனால் அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து பாராளுமன்றத்தில் இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரி முழக்கங்கள் எழுப்பினார்கள். இதனால் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

    இந்த அமளிகளுக்கு மத்தியில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் எழுந்து மணிப்பூர் விவகாரம் முக்கியமான விஷயம். சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. மணிப்பூரில் நடந்துள்ளது ஒட்டு மொத்த நாட்டிற்கே அவமானம் என பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. அனைத்து கட்சி கூட்டத்திலும் இதனை தெரிவித்து இருக்கிறேன். பாராளுமன்றத்திலும் அதை உறுதியாக கூறுகிறேன். ஆனால் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த விடக்கூடாது என சில கட்சிகள் நினைத்து செயல்படுகின்றன என்று பேசினார்.

    ஆனால் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சை ஏற்க எதிர்க்கட்சியினர் மறுத்துவிட்டனர். பிரதமர் மோடி இரு அவைகளிலும் இதற்கு விரிவாக பேச வேண்டும் என கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

    சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையில் பதாகைகள் ஏந்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களை பார்த்து சபாநாயகர் ஓம் பிர்லா அனைவரும் அமைதியாக இருக்கைக்கு சென்று அமருமாறு கூறினார்.

    ஆனால் சபாநாயகர் வேண்டுகோளை ஏற்காமல் எதிர்க்கட்சியினர் ஒட்டு மொத்தமாக தொடர்ந்து கோஷங்கள் போட்டவாறு இருந்தனர். இதனால் சபையில் யார்? என்ன பேசுகிறார்கள் என கேட்க முடியாத அளவுக்கு நிலைமை மாறியது. சபையில் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.

    இதையடுத்து பாராளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே சபையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். பின்னர் 12 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடியது. சபை கூடியதுமே எதிர்க்கட்சிகள் மறுபடியும் பிரச்சினையை கிளப்பினார்கள்.

    மணிப்பூர் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? எதிர்கட்சிகள் கேள்விக்கு பிரதமர் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் இருக்கையை விட்டு எழுந்து தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.

    கையில் பதாகைகள் ஏந்தியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களை இருக்கையில் அமருமாறு சபையை நடத்திய ராஜேந்திர அகர்வால் கூறினார். ஆனால் தொடர்ந்து பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்ததால் சபை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியது. இதனால் வருகிற திங்கட்கிழமைக்கு சபையை ஒத்தி வைத்து அவைத்தலைவர் உத்தரவிட்டார்.

    மணிப்பூர் விவகாரம் மேல்சபையிலும் இன்று புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அங்கும் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் போட்டனர். இடைவிடாமல் அவர்கள் முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் இருந்ததால் சபை நடவடிக்கை 2-வது நாளாக இன்றும் முடங்கியது.

    இதனால் மேல்-சபையை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்தி வைத்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார். மணிப்பூர் விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 2-வது நாளாக விவாதம் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.

    • 140 கோடி மக்களின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பேசுகிறார்
    • பிரதமர் மோடி இரு அவைகளிலும் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வியாழக்கிழமை (20-ந்தேதி) தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அலுவல் பணி ஏதும் நடைபெறாமல் இன்று காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

    விவாதத்திற்கு நாங்கள் தயார் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையிலும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இன்று காலை பாராளுமன்றம் தொடங்கியதும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இதன்காரணமாக மதியம் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது. இதற்கிடையே இன்று காலை பாராளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அமளியில் ஈடுபடுவது ஏன்? என்பது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் ''நாங்கள் விவாதத்திற்கு தயார், ஆனால் 140 கோடி மக்களின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பேசிய நிலையில், அந்த மக்களின் பிரதிநிதிகள் அமர்ந்து இருக்கும் பாராளுமன்றத்திற்குள் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும்'' என்றார்.

    • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.
    • எதிர்க்கட்சிகள் பிரதமர் விளக்கம் அளிக்க கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.

    மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    2-வது நாளான வெள்ளிக்கிழமை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினர். மணிப்பூர் ரத்தம் சிந்துகிறது என்ற முழக்கத்துடன் அவையின் மைய பகுதியில் முற்றுகையிட்டனர். இதனால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் 2-வது நாளாக முடங்கி இருந்தன.

    இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று 3-வது நாளாக அமளி நிலவியது.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி முறையிட்டார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.

    இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாக விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்போது, மணிப்பூர் விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

    ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் விளக்கம் அளிக்க கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவையை 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

    12 மணிக்கு பிறகு பாராளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினார்கள். இதை தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை 2-வது முறையாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன.

    பாராளுமன்ற மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரத்தில் அமளி காணப்பட்டது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த கோரி 11 கட்சிகள் நோட்டீஸ் அளித்தன.

    இது தொடர்பாக அவை தலைவர் ஜெகதீப்தன்கருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்ஒபிரையலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியால் அவை முதலில் 12 மணி வரையும், 2-வது முறையாக 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

    மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் கடும் அமளியில் ஈடுபட்டார். அவை தலைவர் இருக்கை அருகே சென்று அமளி செய்தார்.

    இதைத் தொடர்ந்து சஞ்சய்சிங்கை சஸ்பெண்டு செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப்தன்கர் உத்தரவிட்டார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    ×