என் மலர்
நீங்கள் தேடியது "டிஎஸ்பி"
- இயக்குனர் பொன்ராம் இயக்கிவரும் 'டிஎஸ்பி' படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
- இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கனவன் ஈர்த்தது.

டிஎஸ்பி
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'நல்லா இரும்மா' என்ற இந்த பாடலை விஜய் முத்துபாண்டி எழுதியுள்ளார். உதித் நாராயணன், செந்தில் கணேஷ், மாளவிகா சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவந்து வருகிறது.
விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.

டிஎஸ்பி
மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

டிஎஸ்பி
இந்நிலையில்' டிஎஸ்பி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ள்து. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படம் ‘டிஎஸ்பி’.
- இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.

டி.எஸ்.பி
மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

டி.எஸ்.பி
இந்நிலையில், 'டிஎஸ்பி' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் கமல்ஹாசன் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
- இவர் விஜய் சேதுபதி 'டிஎஸ்பி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். சமீபத்தில் ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, சென்னை திரும்பினார்.

கமல்ஹாசன்
இதைத்தொடர்ந்து அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

கமல்ஹாசன்
அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவரிடம் உடல்நலம் குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு கமல் கூறியதாவது, "முன்பு பெரிய விபத்து எல்லாம் நேர்ந்தபோதுகூட அடுத்தப் படத்தின் ஷுட்டிங் எப்போது என்று என்னிடம் கேட்பார்கள். இப்போது சின்ன இருமல் என்றால்கூட என்னைப் பற்றி பெரிய செய்திகள் எல்லாம் வருகிறது. அதற்கு காரணம், ஒன்று ஊடகம், பெருகிவரும் அன்பு என்று நான் நம்புகிறேன். நான் நன்றாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிஎஸ்பி'.
- இப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.

டிஎஸ்பி படக்குழு
மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி
இதையடுத்து 'டிஎஸ்பி' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, "நான் கமர்ஷியல் படங்கள் அதிகமாக செய்வதில்லை. இயக்குனர் பொன்ராமுடன் படம் செய்வேன் என நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுதாக இப்படத்தில் மாற்றிவிட்டார். இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன் அவர்கள் இங்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் இங்கு வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு பெரிய ஊக்கமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கும் உங்களுக்கு எங்களின் நன்றி" என்று பேசினார்.
- நடிகர் விஜய் சேதுபதி 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய்சேதுபதி நடிப்பில் விக்ரம், மாமனிதன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் 3 இந்தி படங்கள், ஒரு தெலுங்கு படம் கைவசம் உள்ளன. தற்போது தமிழில் பொன்ராம் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

டி.எஸ்.பி
இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது.

டி.எஸ்.பி போஸ்டர்
அதன்படி, உப்புளியப்பன் என்ற கதாபாத்திரத்தில் சிங்கம்புலியும் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் தீபாவும் முருக பாண்டி கதாபாத்திரத்தில் இளவரசும் நடித்துள்ளனர். இது தொடர்பான போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
Introducing #SingamPuli as Uppiliyappan #Ilavarasu as Murugapandi #GnanaSammandham as Shanmugam #Deepa as Pandiyamma #DSP in theaters from Dec 2nd. #DSPonDec2nd
— VijaySethupathi (@VijaySethuOffl) November 29, 2022
A @ponramvvs directorial
A @immancomposer musical
A @stonebenchers production pic.twitter.com/cwpfrV88yw
- உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட எஸ்.பி., வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
- காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் போலீஸ் டி.எஸ்.பி. இருந்து வருபவர் தங்கவேலு.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு சி.சி.ஏ. என்ற வழக்கில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 26.6. 2023 அன்று பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
அந்த உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட எஸ்.பி., வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு 26.6.2023-ந் தேதி கடந்த பின்பும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இன்று (16-ந் தேதி) பாப்பிரெட்டிப்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார், காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின் காரணமாக அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
- சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
- கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீராங்கனையாக தீப்தி சர்மா உள்ளார். இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதனைதொரந்து 2014 -ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2016 -ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். இவர், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் 225 ரன்கள் எடுத்து 2023 டிசம்பரில் ஐசிசியின் மாதாந்திர வீராங்கனை விருதை வென்றார். கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.
இந்நிலையில் இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக உத்தரபிரதேச மாநில அரசு துணை காவல் கண்காணிப்பாளர் என்ற உயரிய பதவியை தீப்தி சர்மா-வுக்கு வழங்கியுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவருக்கு வழங்கினார். மேலும் இவருக்கு, 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.
- தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை புறநகர் சப்-டிவிஷன் காவல் டிஎஸ்பியாக இருந்த பாலசுந்தரம் மதுரை காவல் மாவட்ட ஊமச்சிக்குளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையராக எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த இளஞ்செழியன் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- எனது சிறு வயது பயணம் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது.
- எங்களுக்கு உணவுக்கு போதுமான பணம் இல்லாத நாட்கள் நிறையவே இருந்தது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக சிராஜ் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய சிராஜ்-க்கு அம்மாநில அரசு போலீஸ் டிஎஸ்பி பதவியை வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில் ஆட்டோ டிரைவரின் மகன் முதல் டிஎஸ்பி வரையிலான எனது பயணம் என்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், எனது சிறு வயது பயணம் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது. எனது அப்பா ஆட்டோ டிரைவர். எங்களுக்கு உணவுக்கு போதுமான பணம் இல்லாத நாட்கள் நிறையவே இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் குறையவில்லை. எனது எதிர்காலத்திற்காக கிரிக்கெட்டை மட்டுமே நம்பினேன். நான் எப்போதும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு கண்டேன்.

எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்டது எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஆர்சிபி அணியில் இணைந்தது மிகப்பெரிய தருணம். அப்போதுதான் எனது உண்மையான பயணம் தொடங்கியது. அணியில் இணைந்த நேரத்தில் விராட் பாய் எனக்கு ஆதரவாக இருந்தார்.

எனது தந்தையின் மரணம் போட்டியின் போது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாகும். அதன் பிறகும், நான் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற அவரது கனவை நினைத்துப் பார்த்தேன். இதனால் இந்தியாவுக்கு திரும்பவில்லை. அந்த தொடரில் வெற்றி பெற்றோம்.

ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியே என்னுடையே சிறந்த பந்து வீச்சு ஆகும். அந்த போட்டியில் டாப் ஆர்டர் பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது வெற்றிக்கு உதவியது. அதன்பிறகு எனது செயல்பாடுகள் மேம்பட்டு வருகின்றன. எனது உழைப்பிற்காக அரசு எனக்கு டிஎஸ்பி பதவியை வழங்கி உள்ளது.

என்னுடைய இந்த பயணம் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். என சிராஜ் கூறியிருந்தார்.
- கழிவறைக்கு அருகில் அழைத்துச் சென்ற ராமச்சந்திரப்பா தகாத முறையில் நடந்துள்ளார்.
- உள்துறை அமைச்சர் பரமேஷ்வரின் சொந்த மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது
கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாவகடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நிலத் தகராறு தொடர்பாக புகார் அளிக்க துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
துமகுரு மாவட்டம் மதுகிரி பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ராமச்சந்திரப்பா இந்த வெட்கக்கேடான செயலில் ஈடுபட்டுள்ளார்.
புகார் அளிக்க வந்த அந்த பெண்ணை அலுவலக கழிவறைக்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற ராமச்சந்திரப்பா தகாத முறையில் வற்புறுத்தி நடந்துள்ளார். இந்த சம்பவம் முழுவதையும் அங்கிருந்த நபர் ஒருவர் கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரின் சொந்த மாவட்டமான துமகுருவில் நடந்த இந்த சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே இதுபோன்ற கொடுமைகளை புரிவதை பலர் கண்டித்துள்ளனர்.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து டிஎஸ்பி ராமச்சந்திரப்பா தலைமறைவானர். இந்த சம்பவத்தில் ராமச்சந்திரப்பா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மதுகிரி போலீசார் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.