என் மலர்
நீங்கள் தேடியது "பாசப்போராட்டம்"
- குட்டியை ஏற்றி சென்ற வாகனத்தை தாய்குதிரை பின்தொடர்ந்து ஓடியது.
- ரோட்டில் திரிந்ததால் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
மதுரை
மதுரை மாநகர போக்குவரத்து சாலைகளில் மாடுகள், குதிரைகள் ஆகியவை சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. எனவே அந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று நகர் பகுதியில் ஆய்வு நடத்தி சாலைகிளில் சுற்றி திரிந்த மாடு, குதிரைகளை பிடித்து சென்றனர்.
மதுரை வைகை தென்கரை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரிந்த குதிரைகளை பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த குதிரை குட்டியை பிடித்து வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.
இதைப்பார்த்த தாய் குதிரை மாநகராட்சி வாகனத்தை பின் தொடர்ந்தபடி வெகு தூரம் ஓடிச் சென்றது. குட்டியை மீட்பதற்காக தாய் குதிரை நடத்திய பாசப்போராட்டம் பொதுமக்களை ஆச்சரியப்பட வைத்தது.
- பலர் எவ்வளவோ முயற்சி செய்தும் தாய் குரங்கிடம் இருந்து குட்டி குரங்கை பிரிக்க முடியவில்லை.
- குரங்கின் பாசப்போராட்டம் பார்க்கும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் வசித்து வருகிறது. இங்கு குரங்குகள் கூட்டமாக நடராஜர் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள சிவகங்கை குளம், மேல வீதி, காசுக்கடை தெரு பகுதிகளில் விளையாடி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் காசுக்கடை தெரு பகுதியில் குட்டி குரங்கு ஒன்று இறந்தது. ஆனால் இறந்த குட்டி குரங்கை தாய் குரங்கு விடாமல் அரவணைத்து கொண்டு அப்பகுதியில் சுற்றி வருகிறது.
மேலும் கூட்டமாக சேர்ந்து கொண்டு பாசப்போராட்டம் நடத்தி வருகிறது. குட்டி குரங்கு இறந்து துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் குட்டி குரங்கு உயிருடன் இருப்பதாக எண்ணிக் கொண்டு பாசத்துடன் குட்டி குரங்கை பராமரித்து வரும் தாய் குரங்கின் பாசம் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது.
குட்டிக்கு உயிர் கொடுக்கும் எண்ணத்துடன் வாய் வைத்து ஊதுவதும், அதன் மீது காது வைத்து பார்ப்பதும், பிறகு தூக்கி கொண்டு ஓடுவதுமாக இருந்து வருகிறது. பலர் எவ்வளவோ முயற்சி செய்தும் தாய் குரங்கிடம் இருந்து குட்டி குரங்கை பிரிக்க முடியவில்லை.
இந்த குரங்கின் பாசப்போராட்டம் பார்க்கும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் பகவான் வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றதை தாங்கிகொள்ள முடியாத மாணவ - மாணவிகள் அவரை வேறுபள்ளிக்கு செல்லவிடாமல் பாசப்போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் ஆசிரியை மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ - மாணவிகள் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த தமிழாசிரியை விஜயா அங்கிருந்து குடியாத்தம் அருகே உள்ள பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
ஆசிரியையின் பணியிட மாற்றத்தை கைவிடக்கோரி நேற்று காலை மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8.30 மணிக்கு வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவ - மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் பெற்றோருடன் பள்ளி முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு சென்று மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவ - மாணவிகள் கூறுகையில், ‘இந்த பள்ளியில் தமிழாசிரியை விஜயா கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். எங்கள் அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகுவார். நாங்கள் அதிக மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்துள்ளார். தற்போது அவர் எங்கள் பள்ளியை விட்டு சென்றது எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே தமிழாசிரியை விஜயா மீண்டும் எங்கள் பள்ளிக்கு வரவேண்டும்’ என்றனர்.
கோரிக்கையை கடிதமாக எழுதி கொடுக்குமாறும், அதை முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.