search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா"

    • கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு சாதாரண தேநீர் ரூ.340க்கு விற்கப்படுகிறது.
    • சென்னை விமான நிலையத்தில் தேநீர் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    கொல்கத்தா விமான நிலையத்தில் விற்கப்படும் தேநீரின் விலை குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பேசுபொருளானது.

    அவரது பதிவில், "கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள The Coffee Bean and Tea Leaf உணவகத்தில் பால் சேர்க்கப்படாத ஒரு சாதாரண தேநீர் ரூ.340க்கு விற்கப்படுகிறது.

    சில வருடங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் ஒரு சாதாரண தேநீர் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டதை குறித்து நான் பதிவிட்டுள்ளேன். தமிழ்நாட்டை விட மேற்குவங்கத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    ப. சிதம்பரத்தின் பதிவிற்கு பதிலளித்த கொல்கத்தா விமான நிலையம், "நீங்கள் குறிப்பிட்டுள்ள விலை வித்தியாசத்தை குறித்து விசாரித்து விரைவில் உங்களுக்கு தெரிவிக்கிறோம். இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளது.

    • குப்பை அள்ளும் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • பிளாஸ்டிக் பையில் இருந்தே வெடித்ததாக சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் மத்திய பகுதியில் ப்லோக்மான் தெருவில் [Blochmann Street] உள்ள எஸ்.என்பானர்ஜி சாலையில் சிறிய அளவிலான திடீர் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் பிளாஸ்டிக் பையில் இருந்த மர்ம பொருள் வெடித்ததில் அங்கு வசித்து வந்த குப்பை அள்ளும் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்தை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பையில் இருந்தே குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். பெண் டாகடர் கொலையை கண்டித்து ஜூனியர் மருத்துவர்கள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் வேளையில் இந்த குண்டுவெடிப்பு அரங்கேறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, மிக கொடூரமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்த விவகாரத்தில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும் மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்த நிலையில், அதையும் ஏற்க மறுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவர்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தி இருந்தார்.

    இந்த பேச்சுவார்த்கையில் கலந்து கொள்ள சம்மதித்த மருத்துவர்கள், முதல்வர் உடனான பேச்சுவார்த்தையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எனினும், இதற்கு அம்மாநில அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது.

    இதைத் தொடர்ந்து ஆளும் அரசு இந்த விவகாரத்தில் மிகவும் விடாப்பிடியாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர். இதோடு முதல்வர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை தாங்கள் ஒருபோதும் கோரவில்லை என்றும் தெரிவித்தனர்.

    பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்துவிட்டனர். இன்றைய பேச்சுவார்த்தையில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருந்த நிலையில், அவர் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தார். எனினும், மருத்துவர்கள் மற்றும் முதல்வர் இடையிலான சந்திப்பு நடைபெறவே இல்லை.

    "நாங்கள் முதல்வரை ராஜினாமா செய்ய கோரிக்கை வைக்கவில்லை, அதற்கான அழுத்தம் கொடுக்கவும் நாங்கள் இங்கு வரவில்லை. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி வேண்டி, எங்களது கோரிக்கைகளுடன் இங்கு வந்திருக்கிறோம்."

    "எங்களுக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும். பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு தில் கிடைக்கும் என்று இப்போதும் காத்துக் கொண்டே இருக்கிறோம்," என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

    • 2 இடங்களில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை.
    • முதல்வர் சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேடு வழக்கு உள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் கடந்த மாதம் இளம் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்டார்.

    இந்த கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேடு வழக்கு உள்ளது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இதன் தொடர்ச்சியாக ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு மருந்துகள் வினியோகம் செய்தவர் வீடு உள்ளிட்ட 2 இடங்களில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

    • கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் தொடர்ந்து அரசு மற்றும் போலீஸ் மீது குற்றச்சாட்டு.
    • பணம் தர முன்வந்ததாகவும், தாங்கள் அதை மறுத்ததாகவும் பெற்றோர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே சோகத்தில் உலுக்கியது. தற்போது பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

    போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். மேற்கு வங்க போலீசார் தொடக்கத்தில் இருந்தே தங்கள் மகள் கொலையை மூடி மறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பணம் தர முயன்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

    இதற்கிடையே மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இழப்பீடு தொடர்பாக பணம் தருவதாக பெண் டாக்டரின் பெற்றோரிடம் கூறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "பெண் டாக்டர் குடும்பத்தினருக்கு பணம் (இழப்பீடு) கொடுக்க நான் ஒருபோதும் முன்வரவில்லை. அவதூறைத் தவிர இது வேறு ஏதுமில்லை. பெற்றோர்கள் பெண் டாக்டர் நினைவாக

    ஏதாவது செய்ய விரும்பினால், அரசு அதற்கு ஆதரவாக இருக்கும் என்பதை மட்டும்தான் தெரிவித்தேன்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் முன்வந்தார். ஆனால், துர்கா பூஜையின்போது சட்டம் ஒழுங்கை பற்றி நன்கு அறிந்தவர் எங்களுக்கு தேவை" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜி பொய் சொல்வதாக பெண் டாக்டரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் "முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய மகள் திரும்ப வரப்போவதில்லை. அவள் பெயரில் நான் பொய் சொல்லலாமா?.

    நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி எங்களிடம் கூறினார். மேலும், உங்கள் மகள் நினைவாக ஏதாவது உருவாக்குகிறோம் எனவும் தெரிவித்தார். நீதி கிடைத்த பிறகு உங்களுடைய அலுவலகம் வந்து பணத்தை பெற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தோம்" என்றனர்.

    பெண் டாக்டர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

    • பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட தொடர்பான விசாரணை நிலை அறிக்கை உச்சநீதிமன்றம் தாக்கல்.
    • டாக்டர்கள் போராட்டத்தால் 23 நோயாளிகள் உயிரிழந்துள்ள என மேற்கு வங்க சுகாதாரத்துறை அறிக்கை.

    மேற்கு வங்க மாநிலத்தில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் பயிற்சி டாக்டர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வந்தது. அப்போது மேற்கு வங்க சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படடது. அந்த அறிக்கையில் பெண் டாக்டர் கொலையை கண்டித்து மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிஐஎஸ்எஃப்-க்கு தேவையைான அனைத்தையும் இன்றைக்குள் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, தடயவியல் மாதிரிகளை எய்ம்ஸ் மருத்துவனைக்கு அனுப்ப சிபிஐ முடிவு செய்துள்ளன எனக் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17-ந்தேதி புதிய விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வெண்டும் என உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.

    • தீபம் ஏற்றி நேற்றிரவு போராட்டம் நடைபெற்றது.
    • நீங்கள் எல்லோரும் எங்களுக்கு ஆதரவாக இருப்பது போராடுவதற்கு தைரியத்தை கொடுத்துள்ளது- பெற்றோர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பெண் டாக்டர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு கொல்கத்தா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களில் தீபம் ஏற்றி நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    நேற்றிரவு நடைபெற்ற போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை கூறும்போது "நாம் நீதியை எளிதாக பெற முடியாது. அதை பறிக்க வேண்டும். எல்லோருடைய உதவியும் இல்லாமல் இது சாத்தியமில்லை. நீங்கள் எல்லோரும் எங்களுக்கு ஆதரவாக இருப்பது போராடுவதற்கு தைரியத்தை கொடுத்துள்ளது" என்றார்.

    பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    • ஜுனியர் மருத்துவர்கள் குழு போலீஸ் தலைமையகத்தில் கமிஷனர் வினீத் கோயலை நேரடியாக சந்தித்தது.
    • அன்பே சிவம் படத்தில், எல்லாவற்றிற்கும் வளைத்து கொடுப்பதால் 'உங்களுக்கு இருப்பது முதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா?' என்ற வசனம் வரும்

    பெண் மருத்துவர் கொலை 

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செமினார் ஹாலில் வைத்து பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

    அரசும் போலீசும் 

    மேற்கு வங்க மம்தா அரசும், போலீசும் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டைப் போராடும் மருத்துவர்கள் முன்வைக்கின்றனர். குறிப்பாக அன்றைய தினம் மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவற்றைச் சூறையாடியது. இதைக் கொல்கத்தா போலீஸ் கை கட்டி வேடிக்கை பார்த்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவன் குற்றவாளியாக கண்டறியப்பட்டு போலீசால் கைது செய்யப் பட்டான். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ வசம் சென்றது.

    ஜுனியர் மருத்துவர்கள் போராட்டம் 

    இந்நிலையில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் (போலீஸ் கமிஷனர்) வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி கடந்த நேற்று முன் தினம் முதல் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமை இரவு, லால்பஜார் பகுதியில் நடுவீதியில் அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்திய அவர்கள் நேற்றைய தினம் லால்பஜார் பகுதியில் அமைந்துள்ள கொல்கத்தா போலீஸ் தலைமையகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

     

    கமிஷனருடன் சந்திப்பு 

    இதனையடுத்து போராட்டக்காரர்கள் சார்பாக ஜுனியர் மருத்துவர்கள் குழு ஒன்று போலீஸ் தலைமையகத்தில் கமிஷனர் வினீத் கோயலை நேரடியாக சந்தித்தது. குற்றம் நடத்த அன்றைய தினம் உங்களின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே நீங்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியதாகப் பின்னர் அவர்கள் தெரிவித்தனர். தான் பதவி விலக வேண்டுமா என்பதை மேலிடம் தான் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    முதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா? 

    இதற்கிடையில் வினீத் கோயலிடம் செயற்கையாக கையால் தயாரிக்கப்பட்ட முதுகுத்தண்டை ஜூனியர் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். இது போலீசால் கோழைத்தனமாக இல்லாமல்  முதுகெலும்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துவதாக அமைந்துள்ளது. கமல் நடித்த அன்பே சிவம் படத்தில், எல்லாவற்றிற்கும் வளைத்து கொடுப்பதால் 'உங்களுக்கு இருப்பது முதுகுத் தாண்டாமுதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா?..ரப்பர் துண்டா?' என்று சந்தேகம் வருகிறது  என இடம்பெற்றிருந்த வசனத்தை இது நினைவுபடுத்தும் வண்ணம் உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் வினீத் கோயால் ராஜினாமா செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று ஜூனியர் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். 

    • சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
    • ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தில் நடந்த குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் உள்ளன. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

    சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த 2 வாரங்களாக சந்தீப் கோஷை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் இன்று அவரை அதிரடியாக கைது செய்தனர். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் கொல்கத்தா நீதிமன்றத்தில் சந்தீப் கோஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிய நிலையில் அவருக்கு 8 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா இன்று மேற்கு வங்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
    • குற்றவியல் சட்டமானது பொதுப் பட்டியலில் உள்ளதால் மாநில அரசுகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது

    தூக்கு  தண்டனை 

    மேற்கு வங்க தலைநகர் கல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா இன்று [செவ்வாய்க்கிழமை] மேற்கு வங்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த இந்த மசோதாவுக்குக் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பேசிய முதல்வர் மம்தா, மாநிலத்துக்கு உரிமை இருந்திருந்தால், பெண் டாக்டர் கொலை நடந்த 7 நாட்களுக்குள்ளாகவே குற்றவாளிக்குத் தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருப்போம் என்று தெரிவித்திருந்தார்.

    மசோதா 

    இந்நிலையில் நேற்று மேற்கு வங்க சட்டமன்றம் கூடிய நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றைய தினம் மசோதா மீது விவாதம் நடத்திய பின் நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால் மாநில அரசுகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளதா என்று பல தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்துவருகின்றன.

    கேள்வி 

    இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் கூறியதாவது, குற்றவியல் சட்டமானது பொதுப் பட்டியலில் உள்ளதால் மாநில அரசுகளுக்கும் , மத்திய அரசுக்கும் ஒரே மாதிரியாக சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. ஆனால் மாநில அரசு, Article 254 படி தாங்கள் கொண்டுவந்த மசோதாவுக்கு ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் வாங்க வேண்டும். இதற்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மத்திய அரசின் அறிவுரைப்படியே செயல்பாடுவார். மேலும் இதுகுறித்து பதிலளிக்க காலவரையறை என்பதும் கிடையாது என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அஸ்வனி தூபே, மேற்கு வங்க அரசுக்குச் சட்டத்திருத்தம் கொண்டுவர உரிமை உள்ளது. ஆனால் தற்போது இதை நிறைவேற்ற சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. Article 174 சட்டப்பிரிவு படி மாநிலத்தின் ஆளுநர் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட முடியும் என்ற விதி இருக்கும் நிலையில் தற்போது ஆளுநர் அல்லாமல் மாநில அரசே தன்னிச்சையாகச் சட்டமன்றத்தைக் கூட்டியுள்ளது. இது நிச்சயம் அவர்கள் கொண்டுவரும் மசோதா ஒப்புதல் பெறுவதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சத்யம் சிங் ராஜ்புத், இந்த மசோதா குற்றவியல் சட்டத்தின் பாற்பட்டுள்ளதால் இதற்கு மத்திய அரசின் ஒப்புதலும் நிச்சயம் வேண்டும். நாட்டின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை இந்த மசோதா பூர்த்தி செய்கிறதா என்பதை ஆராய்ந்த பின்னரே மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளிக்கும். அப்படி மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தலும் ஜனாதிபதி ஒப்புதலும் கிடைத்த பின்னரே மசோதா சட்டமாக அமலாகும் என்று தெரிவித்துள்ளார். 

    • சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
    • ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தில் நடந்த குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் உள்ளன. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

    சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த 2 வாரங்களாக சந்தீப் கோஷை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் இன்று அவரை அதிரடியாக கைது செய்தனர். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

    சந்தீப் கோஷ் பிப்ரவரி 2021 முதல் செப்டம்பர் 2023 வரை ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வராகப் பணியாற்றினார். பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நாள் வரை அவர் பதவியில் தொடர்ந்தார்.

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காக சந்தீப் கோஷுக்கு கொல்கத்தா காவல்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

    • சஞ்சய் ராய் நிரபராதி என்பதை நிறுவும் வகையில் அவனது வக்கீல் கவிதா சர்க்கார் சில விவரங்களைத் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
    • சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று இரவு செமினார் ஹாலுக்குள் நுழையும்போது மயக்க நிலையிலிருந்த பெண் மீது முழுவதுமாக ரத்தம் படிந்திருந்தது .

    கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் சிபிஐ பல கட்டங்களாக விசாரணை நடத்தி வருகிறது. சிசிடிவி காட்சிகளில் அடிப்படையிலும், சஞ்சய் ராயின் ப்ளூ டூத் ஹெட் செட் ஆனது சம்பவம் நடத்த மருத்துவமனையின் செமினார் ஹாலில் கண்டெடுக்கப்பட்டதன் அடிப்படையிலும் சஞ்சய் ராய்தான் குற்றவாளி என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் சஞ்சய் ராய் நிரபராதி என்பதை நிறுவும் வகையில் அவனது வக்கீல் கவிதா சர்க்கார் சில விவரங்களைத் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையான பாலிகிராப் டெஸ்ட் நடத்தப்பட்டது. அந்த சோதனையில் சஞ்சய் ராயிடம் 10 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் பெண்ணை கொலை செய்த பிறகு என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு , நீங்கள் கேட்கும் கேள்வியை தவறு, நான் கொலை செய்யவே இல்லை என்று சஞ்சய் ராய் தெரிவித்தார். மேலும் உண்மை கண்டறியும் சோதனையில், தான் செமினார் ஹாலுக்குள் செல்லும்போதே அந்த பெண் சுயநினைவின்றி கிடந்ததாகக் கூறியதும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

    அந்த பாலிகிராப் டெஸ்ட் அறிக்கைப்படி, சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று இரவு செமினார் ஹாலுக்குள் நுழையும்போது மயக்க நிலையிலிருந்த பெண் மீது முழுவதுமாக ரத்தம் படிந்திருந்தது .எனவே பயத்தில் நான் அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்தேன் என்று சஞ்சய் ராய் தெரிவித்தார் என்று கவிதா சர்க்கார் கூறியுள்ளார்.

    ஏன் முதலிலேயே தான் நிரபராதி என்று கல்கத்தா போலீஸ் கைது செய்தபோது சஞ்சய் ராய் சொல்லவில்லை என்று கேள்விக்கு பதிலளித்த கவிதா சர்க்கார், அப்போது சஞ்சய் ராய் பயத்திலிருந்ததாகவும், தான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். சஞ்சய் ராய் எளிதாக செமினார் ஹாலுக்குள் நுழைய முடிந்தது என்றால் அவருக்கு முன்பாகவே அந்த இடத்திலிருந்த பாதுகாப்பு குறைபாட்டை யாரோ பயன்படுத்தியுள்ளனர் என்று அர்த்தம். எனவே உண்மையான குற்றவாளி வேறு எங்கோ ஒளிந்துள்ளான் என்று கவிதா சர்க்கார் தெரிவித்துள்ளார். 

    ×