search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாடி"

    • உடலின் ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணம் சிறந்த தூக்கம்.
    • டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டினாலும் முடிவளர்ச்சி குறையும்.

    ஆண்கள் பலருக்கும் அதிக மீசை, தாடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதுள்ள காலக்கட்டத்தில் ஏணைய ஆண்களுக்கு மீசை, தாடி அடர்த்தியாக வளருவதில்லை. இதற்கு மோசமான உணவுப் பழக்கம், தவறான உணவு முறை உள்ளிட்ட பல காரணங்களால் மீசை, தாடி வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது.

    அதேபோல் குறிப்பாக சோப்பு, முகத்தில் தடவும், கிரீம், வேலை பார்க்கும் இடத்தின் சுற்றுச்சூழல் நிலை போன்ற காரணங்களாலும் மீசை தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிசெய்ய என்ன செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

    புரோட்டீன் நிறைந்த உணவுகள்

    மீசை தாடி வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பிரச்சனை இருக்காது. இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பீன்ஸ், மீன், முட்டை, பால் உள்ளிட்ட உணவுகளை உங்கள் உணவு முறையில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    விளக்கெண்ணெய்

    மீசை மற்றும் தாடி அடர்த்தியாக வளருவதற்கு மற்றொரு மிக எளிதான வழி விளக்கெண்ணெய் கொண்டு தினமும் 15 நிடமிடம் நன்கு மசாஜ் செய்வது நல்லது.

    தூக்கம்

    தூக்கம் உடலுக்கு மிக முக்கியம். உடலின் பல ஆரோக்கிய நன்மைகள் தூக்கத்தை பொறுத்தே இருக்கிறது. அதேபோல் மீசை, தாடி வளர்ச்சிக்கும் தூக்கம் மிக முக்கியம்.

    டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்

    டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண்களுக்கான ஹார்மோன் குறைவாக இருந்தாலும் முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். காரணம் இந்த ஹார்மோன் தான் முடி வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

    இந்த ஹார்மோனை அதிகரிக்க மீன், முட்டை, வேர்க்கடலை, எள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும் 

    ஹேர் க்ரீம்

    ரோஸ்மேரி ஆயில், ஆப்பிள் சிடர் வினிகர், கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து 10 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பின்பு கழுவினால். மீசை, தாடி வளர்ச்சிக்கு நன்கு உதவும்.

    தண்ணீர்

    உடலில் டாக்ஸின் அல்லது வறட்சி இருந்தாலோ முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். இதன்காரணமாக தினசரி குறைந்தது 8 கிளாஸ் அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம்.

    மன அழுத்தம்

    மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் தலைமுடி நரைப்பதற்கும் இது முக்கிய காரணமாகும்.

    • ஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம்.
    • பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு.

    மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து காவலர் அப்துல் காதர் இப்ராஹிம், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கெளரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "இறைத்தூதர் நபிகளை பின்பற்றும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம். பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு.

    தமிழக காவல்துறையில் பணியாற்றும் முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடையில்லை. அவர்கள் நேர்த்தியாக தாடி வைத்து கொள்ள அனுமதி உண்டு. காவல் சட்ட விதிகளில் இதற்கு அனுமதி இருப்பதாகக் கூறிய நீதிபதி விக்டோரியா கெளரி, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • நெல்லிக்காய் மற்றும் மோர் ஆகியவற்றால் மாதத்திற்கு ஒரு முறை தாடியை கழுவுவேன்.
    • பீகானேரில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று மிக நீளமான தாடி வளர்த்தவர் என்ற விருதை பெற்றுள்ளேன்.

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்திரபிரகாஷ் என்பவர் மாநிலத்திலேயே நீளமான தாடி வைத்துள்ள நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 3 அடி நீளம் கொண்ட தாடியை வளர்த்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், நான் என்னுடைய தாடியை பராமரிக்க தினமும் ஒரு மணி நேரம் எடுத்து கொள்கிறேன். கடந்த 7 வருடங்களாக ஷேவ் செய்யாமல் தாடியை வளர்த்து வருகிறேன். நெல்லிக்காய் மற்றும் மோர் ஆகியவற்றால் மாதத்திற்கு ஒரு முறை தாடியை கழுவுவேன். குளிக்கும் போது கண்டிஷனரையும் தடவுவேன். இந்த பொருட்களை தவிர தாடியை நல்ல நிலையில் வைத்திருக்க தேங்காய் மற்றும் எள் எண்ணையையும் தடவுவேன்.

    பீகானேரில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று மிக நீளமான தாடி வளர்த்தவர் என்ற விருதை பெற்றுள்ளேன். இந்த போட்டிகள் நீண்ட தாடியை பராமரிக்கும் எனது ஆர்வத்திற்கு ஊக்கத்தை அளித்தது. நான் வேலை செய்யும் இடத்திற்கு செல்ல பஸ் மூலம் தினமும் 50 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். எனது பணி இடத்திற்கு செல்லும் போது தாடியை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனித்து கொள்கிறேன் என்றார்.

    • நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை தங்கள் மத சம்பந்தமான உடல் அலங்கார கடமைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டும்
    • ஒழுங்கு கட்டுப்பாடுகளின்படி, அதிக நீளத்தில் முடி வளர்ப்பதும், தாடி வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது

    அமெரிக்காவில் காவல்துறையினரும் ராணுவத்தினரை போன்றே தோற்றம் தரும் விதத்தில் இருக்கும்படி 20-ம் நூற்றாண்டில் சட்டங்கள் கடுமையாக இருந்தன. இவற்றை மீறியவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படி நேர்ந்தது.

    சமீப ஆண்டுகளில் இத்தகைய சட்டங்களில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் சீக்கியர் ஒருவரை தனது தாடியை அதிகம் வளர்க்க அமெரிக்காவின் நியூயார்க் காவல்துறை அனுமதி மறுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    அமெரிக்காவில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை தங்கள் மத சம்பந்தமான உடல் அலங்கார கடமைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டம் கூறுகிறது.

    சரன்ஜோத் டிவானா எனும் சீக்கியர் தனது திருமணத்திற்காக தனது தாடியை அரை அங்குலம் அதிகம் வளர்க்க முயன்றார். பாதுகாப்பு காரணங்களால் இதற்கான அனுமதி அவருக்கு மறுக்கப்பட்டது.

    "காவல் அதிகாரிகள் உட்பட அனைத்து நியூயார்க்கர்களும் தங்கள் மத சம்பிரதாயங்களை கடைபிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என நியூயார்க் மாநில ட்ரூப்பர்ஸ் பெனவலண்ட் அசோசியேஷன் எனும் காவலர் நலச்சங்க தலைவர் சார்லி மர்பி தெரிவித்துள்ளார்.

    சீக்கிய மத கோட்பாடுகளின்படி, ஆண்கள் கட்டாயம் தலைப்பாகை அணிய வேண்டும். அவர்கள் தங்கள் தலைமுடியையும் தாடியையும் எடுக்கக்கூடாது. ஆனால், நியூயார்க் காவல்துறையில் உள்ள ஒழுங்கு கட்டுப்பாடுகளின்படி, அதிக நீளத்தில் முடி வளர்ப்பதும், தாடி வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

    "பணியாளர்களின் பன்முகத்தன்மையை மதிக்கிறோம். தலைப்பாகை அணிவது தொடர்பாக கொள்கை வகுக்க செயல்பட்டு வருகிறோம்", என காவல்துறை செய்தித்தொடர்பாளர் டியன்னா கோஹன் கூறினார்.

    2022-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கில் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம், தாடி வைத்திருப்பதாலோ, தலைப்பாகை அணிவதாலோ சீக்கியர்களுக்கு கடற்படையில் சேருவதை தடுக்க கூடாது என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

    • தாடி என்பது சீக்கியர்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
    • மூன்றாவது முறையாக சாதனைப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

    சுவீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்திருந்தார். இதுதான் ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கடந்த 2008-ல் ஆண்டு கனடாவில் வசிக்கும் சீக்கியர் சர்வன் சிங் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.

    அப்போது சர்வன் சிங் தாடியின் நீளம் 7 அடி 8 அங்குலமாக இருந்தது. அதன் பிறகு கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலியில் நடந்த சாதனை நிகழ்ச்சியில் அவரது தாடியை அளந்து பார்த்தனர். அப்போது அது 8 அடி 2.5 அங்குலமாக வளர்ந்து காணப்பட்டது.

    இந்நிலையில் சர்வன் சிங் மீண்டும் தனது கின்னஸ் சாதனையை தானே முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது தாடியை அளந்த போது அது 8 அடி 3 அங்குலமாக வளர்ந்து காணப்பட்டது. இதன் மூலம் தனது சாதனையை தானே மீண்டும் முறியடித்துள்ளார். மூன்றாவது முறையாக சாதனைப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது என்று கின்னஸ் உலக சாதனை புதன்கிழமை மார்ச் 22, 2023 தெரிவித்துள்ளது.

    அவரது தாடி இதற்கு முன்பு கருப்பாக காணப்பட்டது. ஆனால் தற்போது நரைத்த நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து சர்வன் சிங் கூறியதாவது:-

    நான் 17 வயது முதல் தாடியை வளர்த்து வருகிறேன். இதுவரை ஒரு தடவை கூட தாடியை வெட்டியதில்லை. தாடி என்பது சீக்கியர்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். எனவே இந்த தாடியை கடவுளின் பரிசாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனது அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன தாடியை எடுக்க மறுத்துள்ள விராட் கோலி, தனது தாடியை பற்றி பேச்சு நடந்து கொண்டிருப்பது பொழுது போக்காக உள்ளது என அவர் ட்வீட்டியுள்ளார். #ViratKohli #BreakTheBeard

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி என்றதும், அவரது அதிரடி ஆட்டத்துடன் தாடியும் நம் கண் முன்னே வந்து போகும். இந்நிலையில், தற்போது கிரிக்கெட் வீரர்களிடம் பிரேக் தி பியர்ட் (தாடியை அகற்றுதல்) என்ற சேலஞ்ச் பிரபலமாக உள்ளது. இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது தாடியை ஷேவ் செய்து மற்ற வீரர்களுக்கு சேலஞ்ச் விடுகின்றனர்.

    இந்நிலையில், இந்த சேலஞ்சை ஏற்க விராட் கோலி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள கே.எல் ராகுல், ‘விராட் கோலி தனது தாடியை இன்ஸ்சுரன்ஸ் செய்ய போவதாக தனக்கு தெரிகிறது’ என பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் சிலர் விராட் கோலியின் தாடியை புகைப்படம் எடுப்பது போலவும், சில பேப்பர்களில் கையெழுத்து பெறுவது போல காட்சிகள் இருந்தன.



    ஆனால், நிஜத்தில் டெல்லியில் உள்ள மியூசியம் ஒன்றில் விராட் கோலியின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்காக அவரது உருவங்கள் அளவிடப்பட்டது. அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை ராகுல் கிண்டலுக்காக வெளியிட்டுள்ளார். ராகுலின் வீடியோவுக்கு பதில் கொடுத்துள்ள கோலி, ‘தனது தாடியை பற்றி பேசிக்கொண்டிருப்பது பொழுது போக்காக உள்ளது’ என ட்வீட்டியுள்ளார்.
    ×