search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர்"

    • குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.
    • கேள்வித்தாளில் 96வதாக இடம்பெற்ற ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-2 தேர்வு நடைபெற்றது. குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    கேள்வித்தாளில் 96வதாக இடம்பெற்ற ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    அதாவது, ஆளுநர் அரசின் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி என 2 வித பணிகளை செய்கிறார் என கூற்றாகவும், காரணமாக ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசு, ஆளுநர் இடையே தொடரும் மோதல் போக்கிற்கு மத்தியில், குரூப் 2 தேர்வில் சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    சனாதானம் குறித்து பேசியவர்கள் தற்போது அமைதியாகிவிட்டார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதியை இன்று மறைமுகமாக சீண்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மம்தா வங்கத்தின் பெண் மாக்பெத், அவருடன் நான் இனி ஒன்றாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன்.
    • மாக்பெத் என்பது நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான நாடகம் ஆகும்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். கொல்கத்தாவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சகத்தின் முன் போராடி வரும் மருத்துவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா நேரடி பேசுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் பேசுவார்த்தயை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே தாங்கள் வருவோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் இதனை ஏற்க மருத்த மம்தா, யாரும் வராததால் 2 மணி நேரம் காலி இருக்கைகளுக்கு மத்தியில் மம்தா காத்துக்கிடந்தார். மேலும், இந்த விவகாரத்தால் தான் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தாயாராக உள்ளதாகத் தெரிவித்த மம்தா போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் சிலர் நீதியை விரும்பவில்லை தனது நாற்காலியையே விரும்புகின்றனர் என்று மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

     

    இந்நிலையில் மம்தா குறித்து மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார். 'மம்தா பானர்ஜி வங்கத்தின் பெண் மாக்பெத், அவருடன் நான் இனி ஒன்றாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன். பொதுவெளியில் அவரை புறக்கணிப்பேன். மம்தா உள்துறை அமைச்சர் பொறுப்பையும் அதே சமயம் சுகாதர அமைச்சர் பொறுப்பையும் தன்வசம் வைத்துள்ளது இந்த நேரத்தில் நகை முரணாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் லேடி மாக்பெத், ஹூக்லி நீரை கையில் வைத்திருந்தும் தனது கரை படிந்த கரங்களை கழுவ முடியாமல் விழிக்கிறார். மாநிலத்தின் முதல்வர் பாதுகாப்பதற்குப் பதிலாகப் போராடுகிறார். நகரங்களிலும், தெருக்களிலும், மருத்துவமனைகளிலும் என அனைத்து இடங்களிலும் வன்முறை தான் மலிந்துள்ளது என்று ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார்.

    மாக்பெத் என்பது நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான நாடகம் ஆகும். ஸ்காட்லாந்தை சேர்ந்த மாக்பெத் என்ற படைத் தலைவன் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு மன்னரைக் கொலை செய்து அரியணையைக் கைப்பற்றுவான். இதனால் ஏற்பட்ட குற்ற உணர்வாலும், தனக்கு ஆபத்து வரும் என்ற அச்சத்தாலும் மேலும் பலரை கொன்று குவிப்பான். இதனால் நாட்டு மக்களிடையே கலவரம் வெடித்து உள்நாட்டு போர் உருவாகும்.

    தற்போது மாக்பெத்தின் சூழலில் மம்தா உள்ளதாக ஆளுநர் விமர்சித்துள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் பொறுப்பில் உள்ள ஒருவர் அரசியல்வாதி போல் பேசி வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஒருவர் புகார் அளித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

    • வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.
    • ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.

    கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் அல்லது, அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை, ஒருமித்த கருத்துடன் நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் தெலுங்கானாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக் மனு சிங்வி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், "இந்த அரசாங்கத்தின் மிகப் பெரிய தோல்வி என்னவென்றால், அது ஒவ்வொரு நிறுவனத்தையும் இழிவுபடுத்தி, மதிப்பை குறைத்துள்ளது.

    கவர்னர்கள் இரண்டாவது தலைமை நிர்வாகியாக அல்லது ஒரே உறையில் இரண்டு கத்தியாக செயல்படும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன. கவர்னர் பதவியை அகற்ற வேண்டும் அல்லது ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும். வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும். அல்லது ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்.

    கவர்னராக இருப்பவர் முதலமைச்சருக்கு சவாலாகவோ, அச்சுறுத்தலாகவோ இருந்தால் கீழே இறங்க வேண்டியது கவர்னர்தான் . ஏனென்றால், முதலமைச்சர் யார்? என்பதற்குத்தான் தேர்தல் நடக்கிறது. கவர்னர் யார்? என்பதற்கு அல்ல

    இறுதியில் நீதிமன்றத்திற்குச் சென்று மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறும்போது, அதை ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என கவர்னர் கூறுகிறார். ஆட்சி பாதிக்கப்படுகிறது. முடிவுகளை எடுக்க முடியவில்லை. அதே கோவத்தில் ஒரே உறையில் இரண்டு கத்தியாக மற்றொரு தலைமை நிர்வாகி போல் கவர்னர் செயல்படுகிறார்" என்று தெரிவித்தார்.

    • கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
    • எனது கேரக்டருக்கு மம்தா போன்ற ஒருவர் களங்கம் விளைவிக்க முடியாது.

    கடந்த மே 2 ஆம் தேதி மேற்கு வங்க கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக கல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    இந்நிலையில் கடந்த ஜூன் 27 இல் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்' என்று பேசியிருந்தார்.

     

    இதைத்தொடர்ந்து தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மம்தா மீதும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ஆனந்தா போஸ் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில் தற்போது மம்தாவின் கருத்து குறித்து பேசியுள்ள ஆனந்தா போஸ், மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் மம்தாவை நான் மதிக்கிறேன்.அதுபோல மம்தாவும் நாகரீகமான முறையில் பேச வேண்டியது அவசியம். யாரை வேண்டுமானாலும் சீண்டலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார்.

    எனது கேரக்டருக்கு மம்தா போன்ற ஒருவர் களங்கம் விளைவிக்க முடியாது. எனது சுய மரியாதையில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். மம்தா என்னை சீண்டவோ பயமுறுத்தவே முடியாது. அந்த அளவுக்கு அவர் வளரவில்லை.

     

    ஒரு முதலமைச்சராக சட்டப்படி என்னை அவர் எதிர்க்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைக் குறித்து பொய்களைப் பரப்பி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் மம்தா மேனியாவை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நான் மம்தா என்ற தனி நபர் மீதே அவதூறு வழக்கு தொடர்ந்தேன். அந்த தனி நபர் முதலமைச்சராக உள்ளார் அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார். 

    • ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.
    • நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.

     திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்க வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மீது அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தா போஸ் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மீதும் ஆனந்தா போஸ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    கடந்த மே 2 ஆம் தேதி மேற்கு வங்க கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக கல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் மெல்ல புகைந்து கொண்டிருந்த நிலையில் நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்' என்று பேசியிருந்தார். மேலும் ஆளுநர் மீதான குற்றச்சாட்டு குறித்து திரிணாமுல் கட்சித் தலைவர்களும் பலமுறை பொதுவெளியில் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.

     

    இந்த நிலையில்தான் ஆளுநர் ஆனந்தா போஸ் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மம்தா மீதும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் நேற்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக பார்க்கமுடிகிறது. தமிழகம் மற்றும் கேரளாவைப் போல் மேற்கு வங்கத்திலும் ஆளுநருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் சமீப காலங்களாக மோதல் போக்கு  நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • கருப்புப் பண ஒழிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கருப்புப் பண ஒழிப்பு என்ன ஆனது?
    • ஆளுநர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறுவதற்கு பதில், அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும்

    ஐதராபாத்தில் நடைபெற்ற சட்டப்பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "நவம்பர் 8, 2016ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் 98% திரும்ப வந்துவிட்டது. கருப்புப் பண ஒழிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கருப்புப் பண ஒழிப்பு என்ன ஆனது? கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பண மதிப்பிழப்பு ஒரு நல்ல வழி என்று நினைக்கின்றேன்.

    அதன் பிறகு வருமானவரித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அது தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை தந்தேன்

    மேலும், சமீபகால நிகழ்வுகளை பார்க்கும் போது, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாலும், அவர்களின் பிற நடவடிக்கைகளினாலும், உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆளுநர்கள் முக்கிய பேசுபொருளாக இருக்கின்றனர். இது ஆரோக்கியமான போக்கு அல்ல. ஆளுநர் பதவி என்பது முக்கியமான அரசியலமைப்பு பதவியாகும். ஆளுநர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறுவதற்கு பதில், அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
    • தமிழக அரசின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன?

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, "பொன்முடி 8 முறை எம்எல்ஏவாக இருந்தவர். சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளி என தீர்மானித்ததால், பொன்முடி தகுதி நீக்கத்திற்கு உள்ளானார்" என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும், "பொன்முடியை மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக விரும்புகிறோம்.

    சாக்குபோக்கு செல்வதற்காக அரசியலமைப்பு சட்ட அறம் குறித்து ஆளுநர் பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விவகாரத்திற்கும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு வர வேண்டுமா?

    இருப்பினும், பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன? என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு பொன்முடி பதவியை ராஜினாமா செய்தாரா ? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மேலும், குற்வாளி என தீர்மானித்ததை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு, ஆளுநருக்கு இதில் என்ன வேலை இருக்கிறது? இந்த விவகாரத்தில் தீவிரமாக கருத்துக்களை தெரிவிக்க உள்ளோம் என்பதை ஆளுநரிடம் தெரிவியுங்கள்.

    ஆளுநர் பதவி அடையாளத்திற்கு மட்டுமே.

    ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவலை தரக்கூடியவையாக இருக்கின்றன.

    ஆளுநருக்கு இன்று இரவு வரை காலக்கெடு விதிக்கிறோம். நாளை உத்தரவிடுகிறோம். நாளைக்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே ஆளுநருக்கு உத்தரவிடும்.

    இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக" தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

     

    • சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
    • பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிப்பு.

    சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இதைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, இன்று மாலை அல்லது நாளை காலை அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொபர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்ப உள்ளார்.

    • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93% வருமானம் தேர்தல் பாத்திரங்கள் வழியாக வந்தது என அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் என சொல்வதற்கு பதில் ஆளுநர் என அண்ணாமலை மாற்றி கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93% வருமானம் தேர்தல் பாத்திரங்கள் வழியாக வந்தது என அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரபூர்வ இணைய தளத்தில் மார்ச் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசினார். அதில், "தேர்தல் பத்திரம் திட்டத்தின் மூலம் பாஜகவுக்கு வரக்கூடிய பணம் 52 சதவீதம்தான். திமுகவுக்கு 91 சதவீதம் வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 62 சதவீதம் வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93 சதவீதம் வருகிறது என புள்ளி விவரங்களோடு அவர் பேச ஆரம்பித்தார்.

    இதனை பார்த்த நெட்டிசன்கள் திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு பதிலாக தமிழ் மாநில காங்கிரஸ் என அண்ணாமலை மாற்றி கூறியதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் என சொல்வதற்கு பதில் ஆளுநர் என அண்ணாமலை மாற்றி கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.
    • எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

    கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் அவர், மூவரும் ஆளுநர் என்பதையே மறந்து, பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை பற்றி ஆளுநர் விமர்சித்துள்ளார். அரசு திட்டத்தில் விளக்கம் தேவைப்பட்டால் அது குறித்து கேட்டறியலாம்.

    அதைவிட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா?" என்றார். 

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார்.

    அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பது போலத் தெரிகிறது.

    மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். 

    நேற்றைய தினம் நாகப்பட்டினம் சென்ற ஆளுநர், அதன்பிறகு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தைப் பற்றி விமர்சித்துள்ளார். வீடுகள் சரியில்லை என்றும் இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அக்கறையின்மை என்றும், ஊழல் என்றும் வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

    அரசு திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அதுகுறித்துக் கேட்டறியலாம். அதை விட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா?

    எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் என்று கூறுகின்றார்? வாய்க்கு வந்ததைப் பேசிடவும் எழுதிடவும் அவர் அட்ரஸ் இல்லாத ஆள் அல்லவே?

    கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார் ஆளுநர். குடிசைகளுக்கு மத்தியில் கான்கிரீட் கட்டுமானம் கட்டி இருக்கிறார்களாம். இது தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமாம்.

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிலப்பிரபுத்துவ - ஜாதியவாத சக்திகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் எழுப்பட்ட நினைவுச் சின்னம் அது.

    அத்தகைய கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட தியாகிகளைப் போற்றும் வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தச் சின்னத்தை அமைத்துள்ளது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? சுற்றிலும் இருக்கிற குடிசைகளை அகற்றச் சொல்கிறாரா?

    அயோத்தியில் இப்போது ஆயிரம் கோடியில் கோயில் கட்டி இருக்கிறார்கள். அயோத்தி நகர் இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு முறை அங்கு போய் பார்த்துவிட்டு திரும்பட்டுமே. உலகத் தலைவர்கள் வரும்போது குஜராத் மாநிலத்து ஏழைகளின் வாழ்விடங்களை பச்சை 'ஸ்கிரீன்' போட்டு மறைத்ததை இந்த நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.

    எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி. 

    'தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது, தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார் ஆளுநர். வரலாற்றில் காலம் காலமாக இருக்கும் பெயரை மாற்றும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது என்று சொன்னதும், அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் ஆளுநர்.

    சில நாட்களுக்கு முன்னால், 'மகாத்மா காந்தியால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை' என்றார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், ' நான் அப்படிச் சொல்லவில்லை' என்று சொல்லி விட்டார்.

    தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாட்டின் நன்மைக்காக இதுவரை ஏதாவது செய்துள்ளாரா என்றால் இல்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசிடம் இருந்து ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறாரா என்றால் இல்லை.

    குடும்ப வேலையாக அடிக்கடி டெல்லி செல்லும் அவர், தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைக்காக எப்போதாவது டெல்லி சென்றுள்ளாரா என்றால் இல்லை. அவர்தான், சொந்தமாக எந்த நன்மையும் செய்யவில்லை.

    நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் உதவியாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. இடைஞ்சலாகவும், மாநிலத்துக்கு அதிக கெடுதல் செய்பவராகவும், கெடுதல் நினைப்பவராகவும் இருக்கிறார் ஆளுநர். 

    ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதாவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது முதல், ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளில் சிக்கி கைதான சேலம் பல்கலைக் கழக துணைவேந்தரைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் வரை ஆளுநரின் அனைத்து நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாகவும் அமைந்துள்ளன.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப் பட்ட சட்டமுன்வடிவுகளையும், உத்தரவுகளையும், கோப்புகளையும் பல மாத காலமாக ஊறுகாய்ப் பானையில் ஊற வைப்பதைப் போல கிண்டி மாளிகையில் ஊற வைத்துக் கொண்டு இருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம்.

    "ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அவர் பெயரளவில்தான் மாநிலத்தின் தலைவராக இருக்கிறார். ஆளுநர் என்பவருக்கு அரசியல் சட்டப்படி சில அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன.

    அந்த அதிகாரங்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகள் சட்டமியற்றும் வழக்கமான பணிகளை முறியடித்துவிட முடியாது" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியாகத் தெரிவித்தார்கள். அதன்பிறகும் ஏதோ அதிகாரம் பொருந்தியவராக, தன்னை மன்னரைப் போல நினைத்துக் கொண்டு ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார்.

    ஆளுநராக இருந்து அரசியல் செய்வதை விடுத்து, நேரடியாக அவர் அரசியல் களத்துக்கு வரலாம். அவரது அந்த ஆசைக்கு அகில இந்திய பா.ஜ.க தலைமை அனுமதி அளித்தால், 'அவருக்கும் நல்லது தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது' என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை ராஜ் பவனில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கோரிக்கை விடுத்தும் மாநில அரசில் இருந்து யாரும் வரவில்லை.

    ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டின் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் தற்போதைய நிலவரத்தை மறுஆய்வு செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணத்துக்கான அதிகபட்ச வளங்களைத் திரட்டும் சாத்தியம் குறித்தும் விவாதிக்க மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராஜ் பவனில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ரெயில்வே, பிஎஸ்என்எல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.

    ஆனால், தமிழ்நாடு அரசு சார்பில் இருந்து யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார். 

    இதுகுறித்து ராஜ்பவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தின் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆளுநர் இன்று சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.

    ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படை, என்டிஆர்எஃப், ரயில்வே, பிஎஸ்என்எல், ஐஎம்டி, ஏஏஐ மற்றும் ரெட் கிராஸ் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கோரிக்கை விடுத்தும் மாநில அரசில் இருந்து யாரும் வரவில்லை.

    குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் தங்கள் வளங்களை மாநில அரசின் வசம் வைத்து, மாநிலம் கோரும் போது செய்து வருகின்றன.

    அவர்கள் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குகிறார்கள்.

    சில முகவர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை மதிப்பிடாதது குறித்து கவலையை எழுப்பினர்.

    மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கூடுதல் ஆதாரங்களைத் திரட்டுமாறு ஆளுநர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.

    • நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்.
    • ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஓணம் பண்டிகை இன்று கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    ஓணம் திருநாளில், நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும் - ஆளுநர் ரவி

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×