என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர்"

    • முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என ஆளுநர் கூறினார்.
    • தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழி பெயர்த்து கொடுக்குமாறு கேட்கின்றார்- தமிழக அரசு

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருவதாகவும், இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு கடந்த ஜனவரி 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனிடையே, தனக்கு எதிரான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, 'ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு நியாயமானதாக இல்லை. கவர்னரிடமிருந்து ஒப்புதல் ஆணை பெறுவதில் சிக்கல் உள்ளது' என தெரிவித்தார்.

    ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி சி.பி.ஐ. விசாரிக்க கோரிய ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வாதிட்டார்.

    பின்னர் கடந்த 7-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, 'இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சூசகமான உத்தரவு பிறப்பிக்கவில்லையென்றால் ஒப்புதல் ஆணை பெறுவதில் மேலும் தாமதம் ஏற்படும்' என வாதிட்டார்.

    ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் வி.கிரி வாதிட முற்பட்டபோது, மனுதாரருக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் என்ன? என நீதிபதிகள் கேட்டனர்.

    இதற்கு மூத்த வக்கீல் வி.கிரி, மனுதாரருக்கான எதிரான புலன்விசாரணை நிறைவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் மனுதாரர் ராஜேந்திர பாலாஜி கடந்த 5 ஆண்டுகளாக ஆஜராகியுள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், நேரடியாக புலன் விசாரணையை தொடங்க முடியும் என வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் ஆணை கோரி தமிழ்நாடு அரசு எழுதிய கடிதங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும் பிரமாண பத்திரத்தை தமிழ்நாடு கவர்னரின் முதன்மைச் செயலாளர் அடுத்த விசாரணை நடைபெறும் வருகிற மார்ச் 17-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அதன்படி இன்று வழக்கு விசாரணைக் வந்தது. 

    அப்போது தமிழக அரசு தரப்பில் "முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என ஆளுநர் சொன்னார். ஆனால் தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழி பெயர்த்து கொடுக்குமாறு கேட்கின்றார்" எனக் கூறப்பட்டது.

    அப்போது, ஆளுநர் வேண்டுமென்றே தாமதம் செய்கிறாரா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர். இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து தமிழக அசு ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.

    மொழி பெயர்த்து தந்ததும், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    • தடையை மீறி ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
    • பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவங்கள் அதிகரித்து வந்தது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஏராளமான பேர் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் அவலம் தமிழகத்தில் நடைபெற்று வந்தது. இந்த சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு பலதரப்பில் இருந்தும் கோரிக்கை மனுக்கள் வந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் போதே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

    ஆனால் இதை எதிர்த்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக் காட்டி சட்டத்தை ஏற்க இயலாது என்று ரத்து செய்துவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் மீண்டும் நடைபெற்று வந்தது. இதில் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்வது தொடர்ந்தது.

    இந்தநிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை மீண்டும் தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது.

    இக்குழு கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 26ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசரச்சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 7-ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதன்படி நடைபெறும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்ட அமைச்சர் ரகுபதி கடந்த 19-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார்.

    அன்றைய தினமே இந்த சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

    அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குடிமக்களின் மனநலத்தை பாதுகாக்கும் பொறுப்பும், பந்தயம் கட்டுதல் உள்பட எந்த வடிவத்திலும் சூதாட்டத்தின் தீய விளைவுகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் அரசிற்கு உள்ளது.

    இதன் காரணத்தால் 1930-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் மற்றும் 1888-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் ஆகியவற்றில் பிரதிபலிக்கும் வகையில் தனிநபர் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை தடை செய்யும் நீண்டகாலக் கொள்கையை அரசு பேணி வருகிறது.

    இணைய வழி விளையாட்டுகளின் மீது புதிய சட்டத்தை இயற்றுவதற்கு, அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துருவின் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவானது அதன் அறிக்கையில், விளையாட்டு எதுவாயினும் இணைய வழி பதிவானது சீரற்ற வெளியீட்டு உருவாக்கி எதிலும் ஈடுபடாத வார்த்தை விளையாட்டுகள் அல்லது பலகை விளையாட்டுகளின் நேர்வுகளைத் தவிர அந்த விளையாட்டின் இணைய வழியல்லாத பதிப்புடன் ஒப்பிட முடியாது மற்றும் சீரற்ற உருவாக்கியை உள்ளடக்கிய இணைய வழி வாய்ப்பு விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கு தெரியும் என்பதால் அவை போலியான சீரற்ற உருவாக்கிகள் ஆகும்.

    மேற்கூறப்பட்ட குழுவின் அறிக்கை, அரசுப் பள்ளி மாணவர்களின் மீது இணைய வழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், இதுகுறித்த ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள், பல்வேறு சட்டங்களை ஆய்வு செய்த பின்னர், அதன்படி உள்ள முடிவுகள் ஆகியவற்றை கவனமாக பரிசீலனை செய்த பின்னர் அரசானது, இணைய வழி சூதாட்டங்களை தடை செய்வது எனவும், இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துவது எனவும் முடிவு செய்தது.

    அரசின் மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது தேவையாக இருந்தது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துதல் அவசரச் சட்டமானது (தமிழ்நாடு அவசரச் சட்டம் 4/2022) 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் நாள் அன்று கவர்னரால் பிரகடனம் செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு சட்டத்துறை அனுப்பி வைத்திருந்தது. இப்போது கவர்னர் ஆர்.என்.ரவி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

    • தமிழக கவர்னரின் சனாதன பஜனை திராவிட மண்ணில் எடுபடாது என்று பசும்பொன் பாண்டியன் கூறி உள்ளார்.
    • ஆளுநர் ரவியை, குடியரசுத்தலைவர் தமிழக மக்களின் நலன் கருதி திரும்பப்பெற வேண்டும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தமிழகத்தின் அமைதியை யும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையில் வருகிற 6-ந்தேதி நடை பெறும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முழுமையாக தடை விதிக்க தமிழக அரசு சட்டப்படியான நடவ டிக்களை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தியல் அடிப்படையில் வர லாற்றை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்புச் செயலாளராக தன்னுடைய கடமையை செய்து வருகிறார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பிரசாரக்காரராக செயல்படலாம்.

    மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தின் பெயரால் பொறுப்பேற்றுள்ள ஒருவர், அரசியல் சாச னத்தின் சாரத்திற்கு ஏதிராக பேசுவதும், செயல்படு வதும், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாளையொட்டி நாகர்கோவிலில் கவர்னர் பேசியது வரலாற்று திரிப்பு வேலையாகும்.

    இன்றைய குமரி மாவட்டத்தை உள்ளடக்கிய அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி ஆளுநர் கூறுவதற்கு நேர் எதிர்மாறான வரலாறாக தான் உள்ளது. பெண்கள் மேலாடை அணிவது கூட தடுக்கப்பட்டது. அதை எதிர்த்து தோள் சேலை போராட்டம் நடைபெற்று 200ஆண்டுகள் ஆகிறது.

    இது குறித்து ஆளுநர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அன்று எல்லாம் உன்னதமாக இருந்தது என்றும், மேற்கத்தியர்கள் தான் தவறான கதையை கட்டி விட்டார்கள் என்றும் பழமைக்கு பட்டுத்துணி போர்த்துகிறார் ஆர்.என்.ரவி. தீண்டாமை கொடுமை, பாராமை என்ற கொடுமையும் இருந்தது.

    இதனால் தான் அந்த மண்ணில் அய்யங்காளை, நாராயண குரு, வைகுண்ட சாமிகள் போன்ற சமூக சீர்திருத்த தலைவர்கள் உருவாகி கேரளத்தில் பெரும் இயக்கங்களை முன்னெடுத்தார்கள். தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.

    இதையெல்லாம் மறைத்து ஒரு புல்லைக்கூட கிள்ளிப்போடாத சனாதன கூட்டத்தில் வளர்ந்த ஆர்.என்.ரவி நடத்தும் சனாதன பஜனை திராவிட மண்ணில் எடுபடாது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை, குடியரசுத்தலைவர் தமிழக மக்களின் நலன் கருதி திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேற்கு வங்க அரசை எதிர்த்த, ஜெகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவரானார்.
    • அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவது கண்டிக்கத்தது.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சிகளில் ஆற்றும் உரையின்போது புதிய கல்விக் கொள்கை, இந்துமதம், சனாதனம், திருக்குறள் ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்துகளை ஆளுநர் வெளியிடுவதாக அண்மையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கையெழுத்திட்ட மனுவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதாவது: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை தூண்டி விட்டு பாஜக சிந்தனைகளை தூண்டுவதற்கு அவர்கள் (மத்திய அரசு) முயற்சி செய்து வருகிறார்கள்.

    கேரளா, தமிழ்நாட்டில், மேற்கு வங்கத்தில் அதுதான் நடக்கிறது. அண்மையில் சென்னை வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதைத்தான் தெரிவித்தார். மேற்கு வங்க அரசை எதிர்த்ததால், அந்த மாநில ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்று விட்டார்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் கூட தமிழக அரசை எதிர்த்தால் உயர் பதவி பெறலாம் என்று எண்ணத்தில் கூட இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கலாம். எது எப்படி இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவது கண்டிக்கத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கி, அரசியலமைப்பு விழுமியங்களை காத்திட வேண்டும் என்று புகார்.
    • ஆளுநரை திரும்ப பெறக்கோரிய மனுவில் திமுக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.

    தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் தி.மு.க அரசுக்கும் இடையே சில விஷயங்கள் தொடர்பாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டினர்.

    கவர்னர் ஒரு மதத்திற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் எனக்கோரி டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஒரு மனு தயாரித்து அதில் கையெழுத்திட்டனர்.

    இந்த மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் நேரில் கொடுக்க நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டு இருந்தனர். ஆனால் இதற்கு நேரம் கிடைக்கவில்லை. இதையடுத்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் சார்பில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.

    அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் மாநிலத்தின் பெயரளவிலான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை அவரது பெயரிலேயே முன்னெடுக்க வேண்டியுள்ளது.

    ஆகவே, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கொள்கை அளவிலும் செயல்பாட்டளவிலும் எதிர்ப்பது அரசமைப்புச் சட்டத்தை மீறியதும் மக்களாட்சிக்குச் சாவுமணி அடிப்பதுமான செயலாகும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கையுடன் ஓர் ஆளுநர் இப்படி வெளிப்படையாக முரண்படுவதையோ, சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றித் தாமதப்படுத்துவதையோ, மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதையோ கற்பனையில் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். ஆளுநரின் செயலால் அத்தகைய ஒரு சூழல்தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.

    ஆட்சியுரிமையை மாநில மக்கள் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு வழங்கினார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலாக, தி.மு.க. அரசு இரவும் பகலும் மக்களுக்காக உழைத்து, மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

    எனினும், தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றி வரும் பணிகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாகப் பொதுவெளியில் முரண்படுவது, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கியமான சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையின்றிக் காலம் தாழ்த்துவது என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருவது பற்றிய எங்கள் அதிருப்தியை அவருக்கான உச்சபட்ச மரியாதையுடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் பல்வேறு சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தேவையின்றிக் காலந்தாழ்த்துகிறார். இது மாநில நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை அலுவல்களில் தலையிடுவதாக இருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன் மக்களுக்காகப் பணியாற்றுவதைத் தடுப்பதாக இருக்கிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்.

    பல்வேறு மதங்கள், மொழிகள், சாதிகளைச் சார்ந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் சொர்க்கமாக திகழ்கிறது. கவர்னர் ஆர்.என். ரவி இந்நாட்டின் மதச்சார்பின்மை கருத்தியலில் தனது நம்பிக்கையின்மையை பொதுவெளியில் தெரிவிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, அடிக்கடி சமுதாயத்தில் பிளவுபடுத்தும் பேச்சுகளில் ஈடுபடுகிறார். இத்தேசத்தின் மதச்சார்பின்மைப் பண்புகளில் மாறாப்பற்று கொண்ட எங்கள் அரசுக்கு இது பெரும் சங்கடமாக உள்ளது.

    தாம் வகிக்கும் கவர்னர் பொறுப்புக்குச் சிறிதும் பொருத்தமற்ற வகையில், அவர் ஆபத்தான, பிளவு படுத்தும் நோக்கிலான, மதரீதியான கருத்துகளைப் பொதுவெளியில் பேசி வருகிறார்.

    சட்டத்தினால் நிறுவப்பட்ட அரசின்பால் வெறுப்பையும் நம்பிக்கையின்மையையும் தூண்டும் வகையில் அல்லது தூண்ட முயலும் வகையில் அவரது அறிக்கைகள் இருப்பதால் அவை தேசத்துரோகமானவை என்றும் சிலர் கருதக்கூடும்.

    தனது நடத்தையாலும் செயல்களாலும், ஆர்.என்.ரவி அரசியலமைப்பினால் நிறுவப்பட்ட கவர்னர் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை நிரூபித்துவிட்டார். ஆகவே அப்பொறுப்பில் இருந்து அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

    அரசியல் சட்டப் பிரிவு 156(1)-ன்படி, குடியரசுத் தலைவர் விரும்பும் வரையில் கவர்னர் தனது பதவியில் நீடிப்பார். ஆகவே, தமிழ்நாடு கவர்னர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கி, அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்களைக் காப்பாற்றுமாறு குடியரசுத் தலைவரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை இந்தி பேசாத மாநிலங்கள் சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருவகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் 22 வது வட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சிவன் தியேட்டர் அருகில் நடந்தது. கூட்டத்திற்கு

    மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலரும், முன்னாள் மண்டல தலைவருமான ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான செல்வராஜ், வடக்கு மாநகர செயலா ளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ் குமார், தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி.நாகராஜ், அண்ணா காலனி தொகுதி செயலாளர் மின்னல் நாகராஜ், 1 மண்டல தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் பேசினர்.

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக தலைமை வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டம ன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை மேற்கு வங்கம் , கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருவகின்றனர். இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்ற பொய் பரப்புரையை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகின்றனர். மேலும் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய சுந்தர் பிச்சை திமுக ஆட்சி காலத்தில் கல்வி கற்று ஆங்கிலம் தெரி ந்ததால் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.

    தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி பாஜக காரர்களைப் போல பேசி வருகிறார் , ஆளுநரை திரும்ப பெறக்கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கி இருக்கிறோம் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரு ம்போது அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள சபாநாயகர் மீது குறை கூறி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. அதிமுக எப்போது இருந்தாலும் திமுகவிற்கு பங்காளிதான், ஆனால் பாஜக திமுகவிற்கு மட்டுமல்ல நம் இனத்திற்கே பகையாளி இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தலைமை நிலைய செயற்குழு உறுப்பினர் பா.குணராஜ், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி, வடக்கு மாவட்ட நிர்வாகி திலக்ராஜ், வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், மாணவரணி அமைப்பாளர் தளபதி அன்பு, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சேகர், முன்னாள் நகர செயலாளர் சிவபாலன், கவுன்சிலர்கள் பி.ஆர்.செந்தில்குமார், அனுஷ்யா, பத்மாவதி, பிரேமலதா கோட்டாபாலு, வேலம்மாள், வடக்கு மாவட்ட நிர்வாகி அன்பழகன், மாநகர நிர்வாகி பாக்கியராஜ், வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்கள் பாக்கியராஜ், ஜான் வல்தாரிஸ்,பகுதி நிர்வாகி குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திமுக அரசின் தவறுகளை உடனுக்குடன் கண்டுபிடித்து பிரதமரிடம், ஆளுநர் சொல்லி விடுகிறார்.
    • திமுக அரசுக்கு தனது விருப்பம் போல் செயல்பட முடியவில்லை.

    ஆளுநரை திரும்பப் பெறக்கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள், குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள மனு குறித்து, பா.ஜ.க. மகளிர் அணியின் தேசிய தலைவரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஆளுநர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாதவராக இருக்கலாம், ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பிரதிநிதிதான் ஆளுநர்.  திருக்குறளை ஆங்கிலத்தை மொழி பெயர்த்த கிறிஸ்தவ பாதிரியார் ஜி.யு.போப், அதிலுள்ள ஆன்மீகம் என்ற ஆன்மாவை தவிர்த்து விட்டார் என ஆளுநர் கூறியிருக்கிறார். இந்த விமர்சனத்திற்காக கொந்தளிக்கும் திமுகவினர் திருக்குறள் பற்றி பெரியார் கூறியதை ஒருமுறை படித்துக் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமை உள்ளது. அதன்படியே அவர் பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். அதில் தி.மு.க.விற்கு உடன்பாடு இல்லையெனில், ஜனநாயக ரீதியாக கருத்துக்கு கருத்து என்ற வகையில் பதில் அளிக்கலாம். அதை விடுத்து ஆளுநரை பதவியில் இருந்து நீக்குமாறு கோருவதன் மூலம், தி.மு.க.விற்கு ஜனநாயக வழியிலான கருத்து பரிமாற்றத்தில் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.

    திமுக அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக சட்டத்தை மீறும் போது, பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதைக் கூட வாக்கு வங்கி அரசியலுக்காக மறைக்க முயலும் போதும், மாநில அரசை தட்டிக் கேட்கும் கடமை பொறுப்பில் ஆளுநர் இருக்கிறார். கடமையை செய்தவரை எதற்காக பதவியில் இருந்து நீக்க வேண்டும்?

    திமுக அரசு தனது விருப்பம் போல் செயல்படமுடியவில்லை. திமுக அரசின் தவறுகளையும், எல்லா உண்மைகளையும் ஆளுநர் கண்டுபிடித்து விடுகிறார். அதனை மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமருக்கு உடனுக்கு உடன் சொல்லி விடுகிறார் என்ற வருத்தம் இருக்கலாம். அதனால் திமுகவினருக்கு இழப்பும் ஏற்பட்டிருக்கலாம். அதனால் அவரை நீக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக முதல் குழுவை ஆளுநர் இன்று வழி அனுப்பி வைக்கிறார்.
    • தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம்-2022 நிகழ்ச்சி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்குகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் டிசம்பர் 16ந் தேதிவரை ஒரு மாத காலம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகின்றன. 


    இந்திய கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மை குறித்து கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாநில மக்களுடனான உறவை ஆழப்படுத்துவது இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து முதல் குழு இன்று ரெயில் மூலம் வாரணாசி புறப்பட்டுச் செல்கிறது.

    216 பேர் அடங்கியுள்ள இந்த குழுவில் 35 பேர் ராமேஸ்வரத்தில் இருந்தும், 103 பேர் திருச்சியில் இருந்தும், 78 பேர் சென்னை எழும்பூரில் இருந்தும் இன்று பயணம் மேற்கொள்கின்றனர்.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் கொடி அசைத்து அவர்களை வழி அனுப்பி வைக்கிறார். இந்த நிகழ்வில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல்.முருகன் கலந்து கொள்கிறார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு மொத்தம் 13 ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் மொத்தம் 2,592 பேர் பயணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் புதுப்பித்துள்ளார்.
    • கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது

    காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் ஆன்மீக யாத்திரை செல்லும் எல்லோரும் காசி– ராமேஸ்வரம் என்ற சொல்வது மிகவும் பிரபலமானது. ராமேஸ்வரத்திற்கு வந்தபின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற கலாச்சார, ஆன்மீக இணைப்பை பிரதமர் மீண்டும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.

    காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பு இன்று, நேற்றல்ல காலம்காலமாக இருந்து வருவதாகும். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் நரேந்திர மோடி புதுப்பித்துள்ளார்.

    இங்கு நடைபெறும் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் போன்ற கலாச்சார நிகழ்வுகளை பார்க்கும் போது கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

    மகாகவி பாரதியின் பேரனை காசியில் சந்தித்தேன். தமிழ் சங்கமம் குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக காசியில் உள்ள பாரதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

    வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது தேசிய கீதம் ஒலித்த பின்பு நிகழ்ச்சி தொடங்கியது. பின்பு நான் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இடம்பெறாமல் இருப்பதா? என்று எடுத்துக்கூறி மனோன்மணியம் பெ‌.சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பாடினேன். இதை அங்கிருந்தவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி வரவேற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக செயல்படுகிறது.
    • வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப பாடமாக சேர்க்க பேசி வருகிறேன்.

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை தாங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 406 மாணவ, மாணவியருக்கு பட்டங்களும், 49 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கினார். விழாவில் உரையாற்றிய அவர் கூறியதாவது :

    புத்தக கல்வி அறிவு மட்டும் இன்றைய சமூகத்தில் போதாதது. அதைத்தாண்டி திறன் சார்ந்த கல்வியும் தேவைப் படுகிறது. நீங்கள் இன்னும் தொடர்ந்து வளர வேண்டும். இந்த பட்டம் முடிவு கிடையாது. உங்கள் திறமையை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் நாடு முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக நாம் இருப்போம். போட்டி நிறைந்த உலகில் நாம் இருக்கிறோம். சுலபமாக வளர்ச்சி இருக்காது. முயன்று முன்னேற வேண்டும். தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக செயல்படுகிறது.

    திருக்குறளை மற்ற மாநிலங்களின் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். இதற்கு திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டியிருக்கும். அதன் ஒரு கட்டமாக காசி தமிழ் சங்கத்தில், பிரதமர் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். இதேபோல், வடகிழக்கு மாநிலங்களின் பாடத் திட்டங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக சேர்க்க முதலமைச்சர்களுடன் பேசி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்படுகின்றன.
    • ஆளுநரின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டிக்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

    நாடு முழுமையும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நிழல் அரசாங்கங்களை நடத்த மத்திய அரசு முனைந்து வருகிறது. தமிழகத்தில் ஆர்.என்.ரவி, கேரளாவில் ஆரிப் முகமதுகான், தெலுங்கானாவில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட ஆளுநர்கள் கடைப்பிடிக்கும் போக்குகள் அரசியல் சாசனத்தை அத்து மீறுபவை.

    சர்ச்சைக்குரிய பேச்சுக்கள், அரசியல் சாசனம் மீறிய நடவடிக்கைகள், சட்டமன்றங்களை அவமதிக்கும் வகையில் மசோதாக்களை கிடப்பில் போடுவது என ஆளுநர்களின் அத்துமீறல்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியே தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தருவதில் தாமதம். தற்போது அவசர சட்டமும் காலாவதியாகி விட்டது. இது உயிர் குடிக்கும் பிரச்சினை. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 30 உயிர்கள் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

    தாமதமாகிற ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் உயிர்களோடு விளையாடுகிற விபரீதமாக உள்ளது. ஆனால் ஆளுநர் ரவி இதை உணர்ந்தும் மத்திய அரசின் கைப்பாவையாக மட்டும் செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    சட்டமன்றம் துவங்கிய முதல் நாளான அக்டோபர் 17, 2022 அன்றே ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கும் அனுப்பப்பட்டது. நவம்பர் 10 வரை பதில் இல்லை, ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கமும் கேட்கப்படவில்லை என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அதற்கு பிறகும் இரண்டு வாரம் ஆளுநர் தரப்பில் அசைவில்லை. ஆளுநரை நேரில் சந்திப்பதற்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

    கடைசியில் நவம்பர் 24 அன்று ஆளுநர் விளக்கம் கேட்கிறார். முழுமையான தடை என்பது சென்னை உயர்நீதி மன்ற ஆணைக்கு முரணானது என்பது ஆளுநர் கேட்ட விளக்கம். தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள்ளாக பதில் தந்து விட்டது.

    இது பகுதி தடை தான்; தேவையான அளவிற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பு சட்டத்தின் 7 வது அட்டவணை பட்டியல் 2ல் உள்ள பிரிவுகளின்படியே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதற்கு பிறகும் ஆளுநர் செய்த தாமதத்தால் அவசர சட்டமும் காலாவதியாகிவிட்டது.

    மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநரை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அவரவர்களுக்கு தேவையான மொழியை கற்றுக் கொள்கிற சுதந்திரம் வேண்டும்.
    • இதை சொன்னவுடனேயே மொழி திணிப்பு என்று சிலர் தவறாக முன் நிறுத்துகிறார்கள்.

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள் வார விழாவில் கலந்து கொண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு தமிழிசை அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: 


    மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டு விட்டு, அவரவர்களுக்கு என்ன மொழி தேவையோ அந்த மொழியை கற்றுக் கொள்கிற சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இன்னொரு மொழியை கற்றுக் கொள் என்ற சொன்னவுடனேயே அதை திணிப்பு என்று தவறாக முன் நிறுத்துகிறார்கள், இது திணிப்பு அல்ல. இனிப்பான தமிழை அனைவரும் கற்க வேண்டும். நம் தமிழை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு, மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×