என் மலர்
நீங்கள் தேடியது "கூட்டணி"
- திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
- பாஜகவில் தொண்டராக பணியாற்றிக் கூட தயாராக இருக்கிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கூட்டணி குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை இறுதி முடிவாக எடுத்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் 4-ல் ஒருவர் தான் முதல்வருக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவில் தொண்டராக பணியாற்றிக் கூட தயாராக இருக்கிறேன்.
தொண்டராக இருக்கிறேன் என்பதன் கருத்தை நீங்கள் புரி்நது கொள்ளுங்கள். பாஜகவின் வளர்ச்சியே முக்கியம், என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சி முக்கியமல்ல. என்னுடைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொண்டிருக்கிறேன். ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் வருகிறார்.
காங்கிரஸ் போல டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழக அரசியலை பாஜக கட்டுப்படுத்தாது.
விஜய்க்கான பாதுகாப்பு வேறு, அரசியல் என்பது வேறு. விஜய், செங்கோட்டையனுக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதில் அரசியல் காரணம் இல்லை.
'Y' பிரிவு பாதுகாப்பு- பாஜகவுக்கு, விஜய், செங்கோட்டையனுக்கும் இடையே எந்த உறவும் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி முறிவால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர்.
- சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதற்காக பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி. இது தமிழகத்தின் நலன்களை காப்பதற்கான சந்திப்பு என்றும் கூட்டணி பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் மத்திய மந்திரி அமித்ஷாவோ தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக 2 கட்சிகளுமே தனித் தனி அணியை உருவாக்கி போட்டியிட்டு தோல்வியையே தழுவின. அது போன்ற நிலை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் 2 கட்சி தலைவர்களும் உறுதியோடு உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி முறிவால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர். பா.ஜ.க.வால் தான் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற முடியாமல் போய் விட்டது. அதுவே சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர்.
இதற்கு பா.ஜ.க. தலைவர்களும் பதிலடி கொடுத்திருந்தனர். இது போன்ற காரணங்களால் 2 கட்சி தலைவர்களிடையே மனக்கசப்பும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே 2 கட்சிகளின் விருப்பமாக உள்ளது.
இதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என டெல்லி பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் கூட்டணி விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளநிலையில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளையும் சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் அதற்கான சூழலை உருவாக்குவதில் தமிழக தலைவர்கள் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்றும் டெல்லி பா.ஜ.க. தலைமை தெரிவித்துள்ளது.
இப்படி அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைவர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்கி விட்டு அதன் பிறகே 2-வது கட்ட கூட்டணி பேச்சுவார்த் தையை நேரடியாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறும் பட்சத்தில் அது வலிமையான கூட்டணியாக நிச்சயம் மாறும் என்றே அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- காலை உணவு திட்டம்கொண்டு வந்ததையும் தே.மு.தி.க. வரவேற்கிறது.
- ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்தான்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2006-ல் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் வந்த திட்டங்களை தான் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். எனவே நாங்கள் அதை வரவேற்கிறோம்.
மதிய உணவு திட்டம் மட்டும் இருந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் தே.மு.தி.க. கொண்டுவர இருந்த திட்டம்தான். காலை உணவு திட்டம் கொண்டு வந்ததையும் தே.மு.தி.க. வரவேற்கிறது.
தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான திட்டங்களும், விவசாயிகள் வாழ்வாதத்திற்கான திட்டங்களையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2006-ல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதை செயல்படுத்துவதாக இருந்தால் அதையும் இந்த பட்ஜெட்டில் அறிவித்தது வரவேற்கக் கூடியது.
தற்போது போராட்டம் நடத்தும் எதிர்கட்சியினரை கைது செய்வது தொடர்ந்து வருகிறது. கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பிரேமலதாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-
கேள்வி: 2026-ல் தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமாக தே.மு.தி.க.வின் இந்த பட்ஜெட் பாராட்டை எடுத்துக்கொள்ளலாமா?
பதில்: தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது.தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம். தமிழக பட்ஜெட்டில் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.
கேள்வி: டாஸ்மாக் ஊழலில் சிறு மீன்கள் முதல் பெரிய திமிங்கலம் வரை கைது செய்யப்படுவார்கள் என விஜய் கூறியது?
பதில்: அதை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அமலாக்கத்துறை உரிய விசாரணை நடத்தி உண் மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப் பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
+3
- பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரசின் யாத்திரையைத் தவிர்த்துவிட்டன.
- பாஜக அல்லது காங்கிரசின் ஆதரவின்றி எந்த மூன்றாம் அணியும் இதுவரை வெற்றி பெற்றதில்லை.
ஐதராபாத்:
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார். பல்வேறு மாநிலங்களில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல் பொதுக்கூட்டம் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் கம்மத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு பிரமாண்டமாக நடைபெற்றது.
காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வரும் சந்திரசேகர ராவ், அதற்கான முதல் படியாக, கட்சியின் முதல் பொதுக்கூட்டத்தை இன்று நடத்தி உள்ளார். இதில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேசிய அரசியலில் சந்திரசேகர ராவ் கால் பதிப்பதை ஆதரித்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, கர்நாடகாவில் பஞ்சரத்ன ரத யாத்திரை மேற்கொண்டு வருவதால், அவர் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றிருப்பது, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று சந்திரசேகர ராவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரசின் யாத்திரையைத் தவிர்த்துவிட்டன.
பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பதற்கான சந்திரசேகர ராவின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்பது விரைவில் தெரியவரும்
அதேசமயம், பாஜக அல்லது காங்கிரசின் ஆதரவின்றி எந்த மூன்றாம் அணியும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு பா.ஜ.க.வின் ஆதரவு இருந்தது. அவருக்குப் பின் வந்த சந்திரசேகர், தேவகவுடா மற்றும் ஐகே குஜ்ரால் தலைமையிலான அரசுகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளை கைப்பற்றும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
- எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கவில்லை.
சிவகாசி
சிவகாசி பகுதியில் நடை பெற்ற பல்வேறு நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள வந்த விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் நிருபர் களிடம் கூறியதாவது:-
2021-ம் ஆண்டு நடை பெற்ற அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1,000 கொடுத் தும் அண்ணாமலையால் வெற்றி பெற முடியவில்லை. அவரை செந்தில்பாலாஜி தோற்கடித்தார். அதன் காரணத்தால் தான் தற்போது செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளார்.
செந்தில்பாலாஜி கைதுக்கு முழு காரணம் அமித்ஷாவும், அண்ணா மலையும் தான். ஓடிசா விபத்துக்கு பொறுப்பு ஏற்று ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி வைக்கும் பட்சத்தில் தமிழக பா.ஜ.க.வின் தலைவராக அண்ணாமலை நீடித்தால் தி.மு.க., காங்கிரஸ், கம்யூ னிஸ்டு கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளை எளிதாக கைப்பற்றும்.
மதுரை எய்ம்ஸ் கல்லூரி தொடங்கப்பட்டு விட்டதாகவும், அதில் மாணவர்கள் படித்து வருவதாகவும் அமித்ஷா கூறியது மிகப்பெரிய பொய். நானும், மதுரை எம்.பி. வெங்கடேசும் சேர்ந்து எய்ம்சை தேடினோம் என் பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கவில்லை. இன்னும் டெண்டர் நிலையை கூட எட்டவில்லை என்பது தான் உண்மை. தமிழர் ஒருவர் பிரதமராக வருவார் என்று அமித்ஷா பேசியதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் வழக்க மாக பேசுவது போல் இதுவும் பொய்யே. பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் 10 மாதங்களில் புதிய அரசு அமைந்தவுடன் தீர்க்கப் படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
பேட்டியின் போது சிவகாசி மாநகர காங்கிரஸ் தலைவர் சேர்மத்துரை, மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், கவுன்சிலர்கள் ரவிசங்கர், கணேசன், நியாஸ், ஷேக் உள்பட பலர் உடனிருந்தனர்.
- வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டிளித்தார்.
- பீகாரில் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மாணிக்கம் தாகூர் எம்.பி. வந்தார். அவருக்கு ராஜ பாளையம் காங்கிரஸ் கட்சி அலுவலகமான, நேரு பவனத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கசாமி, நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் கணேஷ், பொதுச் செய லாளர் சக்தி மோகன்,
ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் கண்ணன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
த.மா.கா.வில் இருந்து விலகிய டைகர் சம்சுதீன் மாணிக்கம் தாகூர் முன்னி லையில் காங்கிரசில் இணைந்தார். பின்னர் நிருபர்களிடம் மாணிக்க தாகூர், எம்.பி. கூறிய தாவது:-
2014-ம் ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66-ஆக இருந்தது. பிரதமர் மோடி அதே விலைக்கு தற்போது பெட்ரோலை கொடுப்பாரா? கொரோனா காலத்தில் கூட பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது கொடுமையானது. மத்திய அரசு எரிவாயு உருளை விலையையும் குறைக்க முன்வர வேண்டும்.
மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக வெறுப்பு அரசியலை பா.ஜ.க. பரப்பி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தற்போது 60 நாட்கள் மட்டுமே ேவலை கிடைக்கிறது. முழுமையாக 100 நாட்கள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாயத்திற்கு பாதிப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டாகும். வருடத்திற்கு 365 நாட்களில் 60 நாட்கள் மட்டுமே 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதி 300 நாட்கள் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தலாம்.
பீகாரில் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அடுத்த கூட்டம் சிம்லாவில் கூடி அடுத்த கட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். பிரதமர் வேட்பாளர் யார் என்பது அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று கூடி முறைப்படி அறிவிப்பார் கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை யிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர முடியவில்லை.
- வருகின்ற ஜனவரியில் எங்களது முழு நிலைப்பாட்டை தெரிவித்து விடுவோம்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க பிரிந்துள்ளது.
ஜெயலலிதா பற்றி பேசும்போது அமைதியாக இருந்தவர்கள். இப்போது டெல்லி சென்று ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.
அதுதான் கூட்டணி விரிசலுக்கு காரணமாக உள்ளதா அல்லது அதையும் தாண்டி வேறு காரணம் உள்ளதா என தெரியவில்லை.
ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்சி தான் உண்மையான அ.தி.மு.க.
மக்கள் மத்தியில் தி.மு.க. கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளது.
2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணி பலத்தால் வென்றனர்.
தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி வென்றால் தமிழகத்திற்கு அனைத்து கிடைக்கும் என்கிறார்கள்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர முடியவில்லை. இவர்கள் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்ற முடியாது.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் தருவோம் என்றார்கள்.
தற்போது உரிமைத்தொகை கிடைக்காத ஒவ்வொரு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
இந்த ஆட்சி விடியல் தரும் ஆட்சி அல்ல. சசிகலாவிடமிருந்து பன்னீர்செல்வம் பிரிந்து சென்றதால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைந்தாலும் மாநிலத்தின் உரிமைகளுக்கு மாநில கட்சிகள் தான் போராட முடியும்.
அதேபோல் பாராளுமன்றத் தேர்தலிலும் மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் போது தான் தட்டிக் கேட்க முடியும்.
இரட்டை இலை மட்டும் இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க மூட்டையிலிருந்து நெல்லிக்காய் போல சிதறும். ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம். அப் போது தான் உள் ஒதுக்கீடு செய்ய முடியும்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக அ.ம.மு.க.வுக்கு மக்கள் அமோக ஆதாரவு அளிப்பார்கள்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்.
அப்படி வாய்ப்பு இல்லை என்றால் தனித்து போட்டியிட முடிவு செய்வோம். வருகின்ற டிசம்பர் , ஜனவரியில் எங்களது முழு நிலைப்பாட்டை தெரிவித்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
- விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டா் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன், எம்.பி.க்கள் தனுஷ்குமார், நவாஸ் கனி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனை செய் யப்பட்டது. இதையடுத்து விருதுநகர் கலெக்டர் அலு வலக வளாகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையில் தமிழக மக்கள் நலனை கருத் தில் கொண்டு அனைத்து கட்சிகளும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். கர்நாடக அரசு ஆணையத்தின் உத்தரவுப் படி தண்ணீரை திறந்து விடும் நிலையில் அங்குள்ள பா.ஜ.க. முன்னாள் முதல் வர்கள், சிலரை தூண்டி விட்டு பிரச்சினையை பெரி தாக்குகிறார்கள். காங்கிரசை பொருத்த மட்டில் மத்திய மந்திரியிடம் தமிழக மக்களின் நலனை காக்க வேண்டும் என ஜோதி மணி எம்.பி. தலை மையில் மனு கொடுத்துள்ளோம். 2 மாநிலங்களிலும் முதல்வர் களை தரம் தாழ்ந்து விமர் சிப்பதை தவிர்க்க வேண் டும். நாடாளுமன்ற தேர்த லில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
2016-ல் இருந்து தொட ரும் அ.தி.மு.க., பா.ஜனதா உறவு முறிந்து விட்டதாக கூறினாலும் அவர்கள் பிர தமர் வேட்பாளராக மோடியை தான் தெரிவிப்பார்கள். இந்தியா கூட்ட ணியை பொருத்த மட்டில் பிரதமர் வேட்பாளர் தக்க நேரத்தில் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா தவிர்க்கப் பட வேண்டியவை என கூறி வரும் சீமான் தான், தவிர்க்கப்பட வேண்டியவர்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தமட் டில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை தேசிய தலை வர் முடிவு செய்வார். விரு துநகர் மாவட்ட கண்கா ணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 சதவீதம் பேர் தொடர்ந்து இணைப்புகள் பெறவில்லை என தெரிவிக் கப்பட்டது.
விருதுநகர் வடமலை குறிச்சி விலக்கில் சர்வீஸ் சாலை, கலெக்டர் அலுவல கம் முன்பு மேம்பாலம் ஆகிய பணிகள் குறித்து விவாதிக்க தேசிய நெடுஞ் சாலை அதிகாரிகள் வராததற்கு கண்டனம் தெரிவிக் கப்பட்டது. சாத்தூரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை இல்லாமல் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
- சுதாகர்ரெட்டி கூறும்போது கூட்டணி பற்றி தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் எங்கள் பதிலை அறிவிப்போம் என்றார்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் அண்ணாமலை டெல்லியில் இருப்பதால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கட்சி அலுவலகமான கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை இல்லாமல் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த கூட்டத்தில் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில நிர்வாகிகள், கோட்ட பொறுப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பா.ஜனதா துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறும்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடக்கிறது. கூட்டணி தொடர வேண்டும் என்பதால்தான் ஆலோசனை நடக்கிறது என்றார்.
மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி கூறும்போது, கூட்டணி பற்றி தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் எங்கள் பதிலை அறிவிப்போம் என்றார்.
- மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை.
- தி.மு.க. ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல உள்ளது.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேய நத்தத்தில் உள்ள வீரசின்னம்மாள் கோவில் உள்ளது. தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் குலதெய்வ கோவிலான இங்கு சாமி கும்பிடுவதற்காக பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருமான வரித் துறையினர், அமலாக்கத் துறையினர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் மட்டும் சோதனை செய்வது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சோதனைக்கு பின்னர் என்ன என்பது மர்மமாகவே உள்ளது. மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை.
தமிழகத்தில் அதிகமாக லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. அதனால் இது போன்ற சோதனைகள் கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த சோதனையை தே.மு.தி.க. வரவேற்கிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் உள்ளது. நிச்சயமாக ஜனவரி மாதம் கூட்டணி குறித்தும், தே.மு.தி.க. நிலைப்பாடு குறித்தும் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். தமிழகத்தில் பட்டாசு வெடி விபத்து அதிகமாக உள்ளது.
அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் பிரச்சனையில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி வந்தாலும் இதே நிலை தான் தொடர்கிறது. மத்திய அரசு தலையிட்டு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
தி.மு.க. ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல உள்ளது. உரிமைக்காக போராடுபவர்கள் நியாயமான கோரிக்கையாக இருந்தால் நிச்சயமாக அரசு அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.
இஸ்ரேல் போரில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கை தாமதமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேரடியாகவே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரம் ஒதுக்க கேட்டு அறிவாலயத்தில் சந்தித்துள்ளனர்.
- தி.மு.க. அமைப்பாளர் சிவா மற்றும் நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக வைத்தியலிங்கம் எம்.பி. பொறுப்பேற்றுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்ற வைத்திலிங்கம் எம்.பி. கூட்டணி கட்சித்தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்தார்.
இந்த சந்திப்பு சென்னை அறிவாலயத்தில் நடந்தது. அவருடன் புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்றக்கட்சி தலைவர் வைத்தியநாதன் மற்றும் காங்கிரசார் உடன் சென்றிருந்தனர்.
வழக்கமாக கூட்டணிக்கட்சித் தலைவர்களை புதுவை அரசியல் கட்சித்தலைவர்கள் சந்திக்கும் போது அந்த கட்சியின் புதுவை மாநில தலைவர்கள் மூலம் அனுமதி பெற்றுதான் சந்திப்பார்கள். இதுதான் நடைமுறை வழக்கம்.
ஆனால் இந்த சந்திப்பில் தி.மு.க. அமைப்பாளர் சிவாவோ, அக்கட்சி நிர்வாகிகளோ இல்லை. நேரடியாகவே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரம் ஒதுக்க கேட்டு அறிவாலயத்தில் சந்தித்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.
அதேநேரத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தி.மு.க 6 எம்.எல்.ஏ.க்கள் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சியான காங்கிரசுடன் இணக்கமான உறவை தொடரவில்லை.
காங்கிரஸ் சார்பில் கூட்டணி கட்சி கூட்டத்துக்கு அழைத்தபோது காங்கிரஸ் அலுவலகத்துக்கு வர முடியாது என்று தி.மு.க. பதில் அளித்தது.
இதனால், ஓட்டல்களிலோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திலோ கூட்டணி கட்சி கூட்டம் நடந்து வருகிறது. இது புதுவை காங்கிரசுக்கும்-தி.மு.க.வுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே தி.மு.க. அமைப்பாளர் சிவாவை புறக்கணித்து விட்டு நேரடியாகவே ஸ்டாலினை புதுவை காங்கிரசார் சந்தித்துள்ளனர். இது புதுவை தி.மு.க. அமைப்பாளர் சிவா மற்றும் நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியா கூட்டணி உறுதியானதா என்பது கேள்வி குறியாக உள்ளது
- நாகரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
நாகர்கோவில், நவ.16-
ராஜாக்கமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் அமுதன்-மோனிஷா திருமணத்தை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளேன். நேற்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம், கோவில்களுக்கு சென்று விட்டு திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளேன். சென்னை மெட்ரோ சிட்டியாகும் ஒரு இடத்தில் ரோடு போட்டால் மற்ற இடத்தில் பள்ளம் தோண்டி வருகிறார்கள்.
அதை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மழை நீர் வடிகால் வேலை ஆரம்பித்து கடந்த 2½ ஆண்டுகள் ஆகிறது. பள்ளம் தோன்றுவதில் வேகத்தை காண்பிக்கும் அரசாங்கம் அதை மூடுவதில் காட்டுவதில்லை. இதனால் இருச்சக்கர வாகனங்கள், ஆட்டோ வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
எனவே தமிழக அரசு சிங்கார சென்னை சிங்கப்பூருக்கு இணையான சென்னை என்று கூறி அரசு அதற்கான வழியோ முயற்சிகளோ எடுக்கவில்லை. உடனடியாக மழைநீர் வடிகால் சரி செய்யும் திட்டத்தை சரி செய்து மக்களை பாதுகாப்பாக பயணம் செய்ய சாலை அமைக்க வேண்டும். தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை தீர்மானம் செய்பவர்கள் மக்கள்தான். யார் எஜமானர்கள் என்பதை மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாகும்.
தே.மு.தி.க. தற்பொழுது யாருடனும் கூட்டணியில் இல்லை. நட்பு ரீதியாக அனைவரும் எங்களுடன் பேசி வருகிறார்கள். ஆனால் யாருடன் கூட்டணி என்ற இறுதி அறிவிப்பு எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை தலைவர் தான் ஜனவரி மாதத்தில் அறிவிப்பார். அதுவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, அதுவே இறுதியான அறிவிப்பாகும். எந்த கட்சியும் கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லை. தி.மு.க. ஒரு கூட்டணி அமைத்து பயணித்து வருகிறார்கள் . மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்தியா கூட்டணி கடைசி வரைக்கும் உறுதியான கூட்டணியா என்பதை கேள்விக்குறியாக உள்ளது. அதில் இருக்கின்ற அத்தனை மாநில முதல்-அமைச்சர்களும் அடுத்த பிரதமரும் நான்தான் என்கிறார்கள். ஒருவர் தான் பிரதமராக வர முடியும். அவர்கள் கூட்டணியில் முரண்பாடு உள்ளது. அந்த கூட்டணி இறுதிவரை செல்லுமா பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மோடி உள்ளார். எந்த கூட்டணி சரியான கூட்டணி. இறுதி கூட்டணியார் வெல்லப்போகிறார் என்பதை ஜனவரி மாதத்தில் தே.மு.தி.க. முடிவு செய்யும் . யாரும் நீட் தேர்வை பற்றி பேசவில்லை. உதயநிதி மட்டும் தான் அதை பற்றி பேசி வருகிறார். 50 லட்சம் கையெழுத்து என்று கூறி வருகிறார். எல்லாமே கண்துடைப்பாக தான் நான் பார்க்கிறேன். மாணவர்களை குழப்பாமல் இருந்தாலே போதும். மாணவர்கள் படித்து தேர்வு எழுத தயாராகிவிடுவார்கள்.
நீட் தேர்வு வராது வராது என்று கூறிவிட்டு மாணவர்களை குழப்பி விட்டு அவர்களை படிக்கவும் விடாமல் ஒரு தெளிவான முடிவை எடுக்கவிடாமல் உதயநிதி பேசி வருகிறார். நீட் தேர்வு ஒழிக்க முடியாமா என்பது கேள்விக்குறிதான். மாணவர்கள், பெற்றோர்கள் தெளிவாகி விட்டனர். நீட் தேர்வை ஒழிப்பது கடினமாகும். மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் முடித்து வீட்டிற்கு வந்தவுடன் டியூசனுக்கு செல்கிறார்கள். பள்ளிகளில் சரியான கல்வியை கொடுத்தால் இதுபோன்ற கோச்சிங் சென்டர், டியூஷன் சென்டர் செல்ல தேவை இல்லை. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர உறுதியாக அறிவிக்கப்பட்ட தேர்வு வராது என்று கூறுவதற்கு பதிலாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை பள்ளியிலேயே கோச்சிங் கொடுத்து தேர்வில் வெற்றி பெற பழக்கப்படுத்த வேண்டும்.
தி.மு.க. மாநாடு நடத்துவது புதிதல்ல. எப்பொழுதும் ஆட்சிக்கு வந்தால் மாநாடு நடத்தி கொண்டு தான் வருகிறார்கள். கலைஞர் உரிமை தொகை திட்டம் வழங்குவது வெற்றி பெறவில்லை. தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் வறுமை இல்லாத நேர்மையான ஆட்சியை வழங்குவோம். படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயமாக வழங்கப்படும். மருத்துவமும், கல்வியும் இலவசமாக வழங்கப்படும்.
மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது இதெல்லாம் கண்துடைப்பாகும். இதனால் மக்களுக்கு பயன் இல்லை. இதனால் யாரும் ஆதாயம் அடையப்போவதில்லை. தொலைநோக்கு பார்வையோடு சரியான திட்டங்களை மக்களுக்கு செய்ய வேண்டும். அதுதான் மக்கள் வரவேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.