என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பேருந்து"

    • 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்.
    • கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுவதாக அமீன் அகமது அன்சாரி பஸ் பயணிகளிடம் புலம்பி உள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு அவரது தந்தை உயிரிழந்ததையடுத்து கருணை அடிப்படையில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டது.

    அமீன் அகமது அன்சாரி 7 அடி உயரம் உள்ளார். 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலைகுனிந்தபடி வேலை செய்ததால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் அவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கு அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.

    கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுவதாக அவர் பஸ் பயணிகளிடம் புலம்பி உள்ளார். மேலும் அவர் தனக்கு வேறு வேலை வழங்குமாறு போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.

    10 மணி நேர கண்டக்டர் பணியில் அமீன் அகமது அன்சாரி டிக்கெட் வழங்க குனிந்து போராடுவது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

    இதையடுத்து போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர் அமீன் அகமது அன்சாரியை பொருத்தமான பணியில் நியமிக்க உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானா போக்குவரத்து தலையகத்தில் அவரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    • கழுத்து வலியால் அவதிப்படுவதாக கண்டக்டர் பயணிகளிடம் புழம்பி வருகிறார்.
    • பஸ் பயணிகள் அவருக்கு போக்குவரத்து கழக பணிமனையில் வேறு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தெலுங்கானா மாநிலம், சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு உடல்நிலை குறைவு காரணமாக இறந்தார். கருணை அடிப்படையில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டது.

    அமீன் அகமது அன்சாரி 7 அடி உயரம் உள்ளார். 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலை குனிந்த படி வேலை செய்து வருகிறார். இதனை பார்க்கும் பஸ் பயணிகள் அவர் மீது பரிதாபம் கொண்டனர்.

    இதனால் அவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது.

    இதனால் அடிக்கடி டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். கழுத்து வலியால் அவதிப்படுவதாக கண்டக்டர் பயணிகளிடம் புழம்பி வருகிறார்.

    இதுகுறித்து பஸ் பயணிகள் அவருக்கு போக்குவரத்து கழக பணிமனையில் வேறு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன் பேரில் அவருக்கு போக்குவரத்து பணிமனையில் வேறு வேலை வழங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

    • பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நீடூர் வழியாக பந்தநல்லூர் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் உள்ள ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை மட்டும் தனியாக இருந்துள்ளது. அதை தவிர மற்ற இருக்கைகளில் பயணிகள் ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர்.

    அந்த பஸ்சிற்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்ததும் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் குழந்தை தனியாக இருப்பதை கண்ட சக பயணிகள் குழந்தை யாருடையது? என தெரியாமல் குழம்பினர். பின்னர், உடனடியாக கண்டக்டர் மாதவனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

    இதனால் பதறிப்போன அவர் டிரைவரிடம் தெரிவித்து, பஸ்சை உடனடியாக பழைய பஸ் நிலையத்திற்கு திருப்பினர். அதனை தொடர்ந்து, பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பஸ்சில் இருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பயணிகள் சிலர் குழந்தை அழாமல் இருப்பதற்காக சாக்லெட் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து, பணிமனை அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் குழந்தையை அமர வைத்திருந்த பஸ்சை காணவில்லை என பதறிப்போன பெற்றோர்கள் ஆட்டோவில் ஏறி பஸ் செல்லும் பாதையை நோக்கி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மறுபடியும் பஸ் நிலையத்தையே வந்தடைந்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ்சில் இடம் பிடிப்பதற்காக குழந்தையுடன் ஏறிய தந்தை குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வருவதற்காக பஸ்சில் இருந்து இறங்கியதும், அதற்குள் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

    மேலும், பஸ்சின் பாதையை பின்தொடர்ந்து, சுமார் 5 கி.மீ. வரை சென்றுவிட்டு, மறுபடியும் பஸ் நிலையத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, நன்கு விசாரித்த போலீசார் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும், ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இத்தகைய நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குன்னத்தூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தில் ஏறுவதற்காக பழைய பேருந்து நிலையத்தில் மகளிா் சிலா் காத்திருந்தனா். இதனிடையே பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியபோது மகளிா் சிலா் பேருந்தை நிறுத்தியுள்ளனா். ஆனால், ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.

    ஆகவே அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும், அலைக்கழிக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் பயணிகள் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து அரசுப் போக்குவரத்துகழக திருப்பூா் 2 கிளை மேலாளா் வடிவேலிடம் கேட்டபோது, அரசுப் பேருந்துகளில் மகளிரை அலைக்கழிக்கக்கூடாது என்று ஏற்கெனவே ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆகவே பாதிக்கப்பட்ட மகளிா் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    • ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்கவே கண்டக்டர்கள் தயங்குகிறார்கள்.
    • சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.

    சென்னை :

    சென்னையில் பஸ் பயணத்தின்போது, டிக்கெட் வாங்க வரும் பயணிகளிடம் 'சில்லரையா கொடுங்கப்பா..' என்று கூவி கூவி கண்டக்டர்கள் கேட்டு வாங்கிய காலம் போய், இன்றைக்கு சில்லரைகளை கொடுத்தாலே கண்டக்டர்கள் கடுப்பாகும் நிலையே நிலவுகிறது. குறிப்பாக ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்கவே கண்டக்டர்கள் தயங்குகிறார்கள். பலர் 'நோட்டே இல்லையா?' என்று கேட்கிறார்கள். சிலர் முணுமுணுத்தபடியும், திட்டிக்கொண்டும் வாங்குகிறார்கள். இன்னும் சிலர் 'இது செல்லாது' என்று கூறி அந்த நாணயங்களை திருப்பி கொடுத்து விடுகிறார்கள்.

    ஏற்கனவே கடைகளில் ஒதுக்கப்படும் இந்த ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் தற்போது பஸ்களிலும் புறக்கணிக்கப்படுவதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதனால் தொடக்கத்தில் இந்த நாணயங்கள் அறிமுகமான போது ஆசையுடன் வாங்கிய மக்கள், இப்போது அதை கையில் வைத்திருக்கவே தயங்குகிறார்கள்.

    கண்டக்டர்கள் தரும் கெடுபிடியால் கொதித்து போன மக்கள் போக்குவரத்து துறையிடம் தொடர்ந்து இதுகுறித்த புகார்களை அளித்து வருகிறார்கள்.

    பொதுமக்களின் புகாரை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கண்டக்டர்கள், மண்டல-கிளை-உதவி மற்றும் பொதுப்பிரிவு மேலாளர்களுக்கு, சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநகர பஸ்களில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கொடுக்கும்போது, அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கண்டக்டர்கள் உரிய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் மூலம் மீண்டும் அது அறிவுறுத்தப்படுகிறது.

    எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை பெற்றுக்கொள்ள கண்டக்டர்கள் மறுக்கக்கூடாது. இதனை மீறி ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட கண்டக்டரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து கிளை, உதவி கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து நேர காப்பாளர்கள் ஆகியோர் இதுகுறித்து கண்டக்டர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையெழுத்து பெற்று எதிர்காலத்தில் இத்தகைய புகார் எதுவும் வராமல் பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
    • அடிக்கடி பயணிகளை தள்ளச் சொல்லி டிரைவர்கள் பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்குகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணியில் 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் வசதிக்காக ஆவடியில் இருந்து ஆரணிக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சமீப காலமாக இப்பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    பேருந்துகள் குறித்த நேரத்தில் வருவதில்லை, இரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்பதால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

    குறிப்பாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில பேருந்துகளின் செல்ப் மோட்டார் வேலை செய்யாததாலும், பேட்டரிகள் சரியில்லாததாலும் டிரைவர்கள் பஸ்சை குறித்த நேரத்தில் ஸ்டார்ட் செய்ய இயலவில்லை என கூறப்படுகிறது. அடிக்கடி பயணிகளை தள்ளச் சொல்லி டிரைவர்கள் பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்குகின்றனர்.

    ஆரணி-ஆவடி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்ய மிகவும் சிரமமாக உள்ளது என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் இலவச பஸ் பயணம் என்று கூறிவிட்டு இப்படி தள்ளு மாடல் வண்டியை இயக்க வேண்டாம் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை தாக்குப்பிடித்த பயணிகள் இதன் பிறகு ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தனர்.
    • ஒட்டன்சத்திரம் வந்ததும் பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர்.

    ஒட்டன்சத்திரம்:

    கோவையில் இருந்து மதுரை நோக்கி அரசு சொகுசு பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 45 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் ஏ.சி. பெட்டிகள் பழுதடைந்து அதில் இருந்து தண்ணீர் வழிந்தபடியும், இருக்கைக்கு அடியில் கொசுக்கள் கடித்தபடியும் இருந்தது.

    சொகுசு பஸ் என்று கட்டணம் வசூலித்து பயணிகளை கொசுக்கடிக்க வைத்த நிலை குறித்து கண்டக்டரிடம் கேட்டபோது பல நாட்களாகவே இதேபோல்தான் உள்ளது. இதுகுறித்து டெப்போவில் கூறி உள்ளோம். விரைவில் சரி செய்வார்கள் என்றார். இருந்தபோதும் கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை தாக்குப்பிடித்த பயணிகள் இதன் பிறகு ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தனர்.

    ஒட்டன்சத்திரம் வந்ததும் பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். ஒருவர் தனது சொந்த செலவில் அங்குள்ள கடையில் கொசு மருந்து வாங்கி ஒவ்வொரு இருக்கைக்கும் கீழே அடித்து கொசுவை கட்டுப்படுத்தினார். அதன்பிறகு 10 நிமிடம் கழித்து சொசுகு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    பட்டப்பகலில் பயணித்த அரசு பஸ்சில் கொசுத்தொல்லை ஏற்பட்ட காரணம் பழுதடைந்த மின்சாதனப்பெட்டி மற்றும் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் வழிந்துகொண்டே இருந்ததால் கொசுக்கள் அதிக அளவு காணப்பட்டது. இதனை பல நாட்களாக போக்குவரத்துக்கழக நிர்வாகம் சரிசெய்யாததால் இனி வரும் காலங்களிலாவது விரைந்து சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஸ்களில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை.
    • பஸ்களில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

    இதை தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பஸ்களில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது.

    மாவட்ட விரைவு பஸ்களில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அய்யப்பன் அதிர்ச்சி அடைந்தார்.
    • அரசு பஸ்சை டிரைவர் கட்டி பிடித்து அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோலியனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது57). இவர் பண்ருட்டி அரசு பணிமனையில் உள்ள பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக பண்ருட்டியில் உள்ள பணிமனையில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வந்தது. ஆனால் டிரைவர் அய்யப்பனுக்கு பணிமனை அலுவலகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் அடிக்கடி ஆப்சென்ட் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பாதி சம்பளம் பெற முடியாமல் அய்யப்பன் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் 6 நாள் முழுவதும் வேலைக்கு வந்தும் வருகை பதிவேட்டில் 6 நாளும் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல அய்யப்பன் பணிக்கு வந்தார். அப்போது வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கிளை மேலாளரிடம் கேட்ட போது, எனக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளார். அலுவலகத்தில் இருப்பவர்களிடம் கேட்ட போது அவர்களும் எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளனர்.

    இதனால் மனவேதனை அடைந்த அய்யப்பன் திடீரென தான் ஓட்டும் பஸ்சை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ் டிரைவருக்கு வருகை பதிவேட்டில ஆப்சென்ட் போடப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து ஊழியர்களின் நலன் காக்க வேண்டும் என அய்யப்பன் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அரசு பஸ்சை டிரைவர் கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.
    • கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊருக்கு செல்ல பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். ரெயில்களில் இடங்கள் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களை நோக்கி மக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள்.

    16, 17 ஆகிய நாட்கள் மாட்டு பொங்கல், உழவர் தினம் விடுமுறை நாட்களாகும். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தொடர்ந்து பொங்கல் திங்கட்கிழமை வருவதால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறைக்கு வாய்ப்பு உள்ளது. அதனால் சொந்த ஊரில் பொங்கலை கொண்டாட மக்கள் முடிவு செய்து பயணத்தை திட்டமிடுகின்றனர்.

    இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் பயணம் செய்ய மக்கள் ஆர்வமாக உள்ளனர். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இந்த 2 நாட்களிலும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள். அதனால் அரசு பஸ்களில் இடங்கள் நிரம்பின. முதலில் 250 பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டன.

    அதனை தொடர்ந்து மேலும் 300 பஸ்களுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. இடங்கள் நிரம்ப நிரம்ப பிற போக்குவரத்து கழக பஸ்கள் முன்பதிவு செய்யப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை பயணம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொதுப் போக்குவரத்து பயன்பாடு அதிகரிக்கும் என்றும் கூறினார்.

    கிறிஸ்துமஸ் பண்டிகை 25-ந்தேதி (திங்கட்கிழமை) வருவதால் அதனோடு மேலும் 2 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அதனால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். 23-ந்தேதி பயணம் செய்ய 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இதில் 18 ஆயிரம் பேர் சென்னையில் இருந்த செல்ல பதிவு செய்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை முன்பதிவு பெரும்பாலான அரசு பஸ்களில் முடிந்து விட்டன.

    குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
    • நாளை முதல் இடைநிறுத்தமில்லா பாய்ண்ட் டூ பாய்ண்ட் பேருந்துகள் இயக்கம்.

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் 30.12.2023 முதல் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இப்பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளோடு, கூடுதலாக மாநகரப் போக்குவரத்துக் கழகமானது தடம் எண். எம்18-ல் 6 பேருந்துகளை இடைநிறுத்தமில்லா பேருந்துகளாக (பாய்ண்ட் டூ பாய்ண்ட்) 10 நிமிட இடைவெளியில் 25.01.2024 அன்று முதல் அதிகாலை 03 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து இயக்க உள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.
    • சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் நேற்று ஓடும் பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து கீழே விழுந்த பெண் பயணி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

    இந்த சம்பவத்தையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.

    * சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×