search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • 1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்.
    • 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார்.

    உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களை பார்த்ததுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918 ஆம் ஆண்டு பெரிய அளவில் பரவிய காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை பார்த்தவர் ஆவார்.

     

    மரியா பிரான்யாஸ் கடந்த 1907 ஆம் ஆண்டு, மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அதன்பின் அவரது குடும்பம் சொந்த நாடான ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தது.

    1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மரியா பிரான்யாஸ் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 20] காலமானார். மரியா அவர் விரும்பியபடியே தூக்கத்தில் அமைதியான முறையில் வலியில்லாமல் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    உலவகின் மிக வயதான பெண்மணியாக மரியா பிரன்யாஸ் உயிரிழந்ததை அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா [Tomiko Itooka] உலகின் மிக வயதான பெண்மையாக கின்னஸ் புத்தக அங்கீகாரத்தை பெற்றுள்ளார். 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இதூக்கா ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அசியா [Ashiya] நகரின் வசித்து வருகிறார்.   

     

    • நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்
    • ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.

    குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய மகாராஜா திரைப்படம் அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான மகாராஜா 100 கோடி வசூலைத் தாண்டியது.

    படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகாராஜா கவனம் ஈர்த்தது. நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸ்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.

    முன்னதாக கரீனா கபூர், கீர்த்தி சானோன்,தபு ஆகியோர் நடித்த Crew திரைப்படம் 17.9 மில்லியன் பார்வைகளுடனும், லாப்பாட்டா லேடீஸ் படம் 17.1 மில்லியன் பார்வைகளுடனும் முன்னிலையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.

    • 16 ஆண்டுகளுக்கு பிறகு பக்ரைன் வீராங்கனை இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
    • அமெரிக்க வீராங்கனை பிரிட்டானி பிரவுன் 22.20 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்கள்.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்ட பந்தயம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.10 மணிக்கு நடைபெற்றது. தகுதி சுற்று மற்றும் அரைஇறுதி மூலம் டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதில் அமெரிக்காவை சேர்ந்த கேப்ரியல் தாமஸ் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 21.83 வினாடியில் கடந்தார். 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்ற செயின்ட் லூசியா வீராங்கனை ஜூலியன் ஆல்பிரட் 22. 08 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீராங்கனை பிரிட்டானி பிரவுன் 22.20 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்கள்.

    பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் புதிய ஒலிம்பிக் சாதனை படைக்கப்பட்டது. பக்ரைனை சேர்ந்த வின்பிரட் யாவி பந்தய தூரத்தை 8 நிமிடம் 52.76 வினாடியில் கடந்து சாதனை படைத்து தங்கம் 2008-ம் ஆண்டு பெய்விங் ஒலிம்பிக் வென்றார்.

    இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ரஷியாவை சேர்ந்த ஹால்கினா 8 நிமிடம் 58.81 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு பக்ரைன் வீராங்கனை இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    பெருத்செமுடை (உகாண்டா) 8 நிமிடம் 53.34 வினாடியில் கடந்து வெள்ளியும், பெய்த் செரோட்டிச் 8 நிமிடம் 55.15 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கோள் ஹாக்கர் தங்கம் வென்றதோடு புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 3 நிமிடம் 27.65 வினாடியில் கடந்தார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நார்வேயை சேர்ந்த ஜேக்கப் இன்கேபிரிகிட்சன் 3 நிமிடம் 28.32 வினாடியில் கடந்தே சாதனையாக இருந்தது.

    இங்கிலாந்தின் ஜோஷ் கெர் 3 நிமிடம் 27.69 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீரர் பாரெட் நுகுஸ் 3 நிமிடம் 27.80 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

    ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் கிரீஸ் நாட்டை சேர்ந்த மில்டியாடிஸ் 8.48 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். ஜமைக்காவுக்கு வெள்ளியும் (வெய்ன் பின்னாக், 8.36 மீட்டர் தூரம்), இத்தாலிக்கு (புர்லானி, 8.34 மீட்டர் தூரம்) வெண்கலமும் கிடைத்தன.

    பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் கனடா வீராங்கனை கேம்ரின் ரோஜர்ஸ் 76.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். அமெரிக்காவை சேர்ந்த எச்சிகுன்வோக் 75.48 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளியும், சீன வீராங்கனை ஜி ஜாவ் 74.37 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலமும் கைப்பற்றினார்கள்.

    • மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை சட்டசபை கூட்டம் நடந்தது.
    • உறுப்பினர்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் 31-ந்தேதிக்குள் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

    மின்சாரம், நகராட்சி நிர்வாகம், உள்துறை மற்றும் பிற துறைகள் தொடர்பான கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.

    இதனால் காலையில் தொடங்கிய சட்டசபை கூட்டம் இரவிலும் நீடித்தது. தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதம் செய்ததால் மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை சட்டசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 19 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து 17 மணி நேரம் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது சாதனையாக அமைந்தது. இந்த கூட்டத்தில் 70 சதவீதத்திற்கு அதிகமான எம்.எல். ஏ.க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நடுவில் உறுப்பினர்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டிருந்தது.

    என்.டி.ராமராவ் ஒருங்கிணைந்த ஆந்திராவில் என்.டி. ராமராவ் முதல் மந்திரியாக இருந்தபோது ஒருமுறை அதிகாலை 2 மணி வரை சட்ட சபை கூட்டம் நடைபெற்றுள்ளது.

    இதேபோல் சந்திரசேகர ராவ் ஆட்சியில் 2 முறை நள்ளிரவு 1 மணி வரை தெலுங்கானா சட்டசபை கூட்டம் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட முக்கிய துறைகளின் விருதுகள்.
    • சுற்றுலா துறைக்கு கிடைத்த 3 விருதுகள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் தமிழக வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, சுத்தமான குடிநீர், தொழில் கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், சாலை வசதிகள் என அனைத்து வசதிகளையும் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறார்.

    இது தவிர, மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், மகளிர் இலவச பஸ் பயணம், காலை உணவுத் திட்டம் என மாநில அரசால் நடை முறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.

    இதன் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மத்திய அரசு சமீபத்தில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங் களை ஆய்வு செய்து ஒவ்வொரு மாநிலங்களும் திட்டங்கள் எந்த அளவுக்கு முன்னேற்றத்தில் உள்ளது என்பதை கண்டறிந்து புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் மாநிலங்களின் மதிப்பெண் அடிப்படையில் தமிழகம் 13 துறைகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னணியாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.

    அதில் நிதி ஆயோக் அறிக்கைபடி 11 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தமிழகத்தின் மதிப்பெண் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

    வறுமை ஒழிப்பில் தமிழகத்தின் செயல்பாடு தேசிய அளவில் 100-க்கு 72 என்பதை தாண்டி 92 சதவீதமாக அதிகரித் துள்ளது.

    இதேபோல் தரமான கல்வி வழங்குவதில் தேசிய சராசரி 61 புள்ளிகளை தாண்டி 76 புள்ளிகள் பெற்று முன்னிலையில் தமிழகம் உள்ளது. சுத்தமான குடிநீர், சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, தொழில் புத்தாக்கம், உள் கட்டமைப்பு, கால நிலை நடவடிக்கைகள் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி இலக்குகளில் தமிழகத்தின் மதிப் பெண்கள் தேசிய சரா சரியை விட அதிகமாக உள்ளதாக அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வறுமையை ஒழிக்கும் இலக்கில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயர் கல்வி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் முறையே 81.5 சதவீதம் மற்றும் 47 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியான 57.6 சதவீதம் மற்றும் 28.4 சதவீதத்தை விட அதிகமாகும்.

    இதேபோல் கிராமப்புறங் களில் வாழும் மக்களில் 81.87 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பாதுகாப் பான மற்றும் போதுமான அளவு குடிநீர் கிடைத்து வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

    செல்போன் பயன்பாட்டை எடுத்துக் கொண்டால் 92.8 சதவீதம் பேர் அதாவது குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு செல்போன் வைத்திருப்பதும் ஆதார் மூலம் இணைக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளிவிவர சதவீதம் 97.94 என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழ்நாடு பல துறைகளில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளதுடன் சிறந்த முறையில் திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளதால் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாகவும், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் சமூக மற்றும் கல்வி சார்ந்த துறையில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட முக்கிய துறைகளின் விருதுகள்.

    * தொழில் முன்னேற்றம் சம்மந்தமாக தமிழகத்தில் புத்தொழில் நிறு வனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுத்ததற்காக 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் 'லீடர்' விருது.

    * வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வழங்கப்பட்ட சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட விருது.

    * ஸ்டார்ட் அப் இந்தியா வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் சிறந்த புத்தொழில் சூழமை வினை கட்டமைக்கும் மாநிலங்களில் முதல் தரவரிசைப் பிரிவில் தமிழகம் இடம் பிடித்ததற்காக சான்றிதழ்.

    * உயிர்நீர் இயக்க திட்ட செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ் நாட்டுக்கு முதல் மாநிலத்துக்கான விருது மற்றும் தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கத்தின் கீழ் ராமேஸ்வரம் நகராட்சி போத்தனூர் பேரூராட்சிக்கு கிடைத்த விருதுகள்.

    * பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்திற்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட சிறந்த செயல்திறனுக்கான விருது.

    * நம் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோவை மாவட்டம் பிச்சானூர் ஊராட்சிக்கு மத்திய அரசு வழங்கிய விருது.

    சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அபுதாபியில் ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் 2023-ம் ஆண்டுக்கு சிறந்த மனிதருக்கான விருது

    தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு புதுப்பித்தல் ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக கிடைத்த முத லீட்டு ஊக்குவிப்பு விருது

    தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் 2021 திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றதற்கான விருது

    தேசிய அளவில் சிறப் பாக செயல் புரிந்த தமிழ கத்தை சேர்ந்த 12 ஊராட்சி களுக்கு மத்திய அரசு விருது

    பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த கோவை, தஞ்சை, கரூர் கலெக்டர்களுக்கு விருதுகள்

    சுற்றுலா துறைக்கு கிடைத்த 3 விருதுகள்

    சுகாதாரத்திற்கான மதிப்பீட் டில் தேசிய அளவில் 3-ம் இடம் பெற்றதற்கும், சுஜாலம் 1.0 எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத் தில் 5-ம் இடம் பெற்றதற் கும் கிடைத்த விருதுகள்

    மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மையத்தால் தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகத்துக்கு கிடைத்த விருதுகள்'.

    • வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கியது 'கல்கி 2898 ஏடி' திரைப்படம்
    • கல்கி 2898 ஏடி' படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.

     

    நான்கு நாட்களில் ரூ.400 கோடியை இந்த படம் எட்டிய நிலையில், படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் தற்போது 'கல்கி 2898 ஏடி' படத்தின் வசூல் ரூ.1000 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கிடையில் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எகிறத்தொடங்கியுள்ளது. 'கல்கி 2898 ஏடி' படத்தின்  பட்ஜெட் ரூ.600 கோடி என்பது  குறிப்பிடத்தக்கது. 

    • நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இன்றைய இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது.
    • இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது.

    நேற்று [ஜூலை 2] மும்பை பங்குச் சந்தை குறியீட்டு [BSE] சென்செக்ஸ் 79,856 என்று சாதனையை எட்டிய பின்னர் 31 புள்ளிகள் குறைந்து 79,441 என்ற புள்ளிகணக்கில் முடிவடைந்தது. மேலும் நேற்றைய தினம் தேசிய பங்குச் சந்தை குறியீடு எண் [NSE] நிஃப்டி குறியீடு 24,124 என்ற புள்ளிகணக்கில் நிலைபெற்று முடிவடைந்தது.

    இந்நிலையில் நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகணக்கிலும் நிஃப்டி 172 புள்ளிகள் அதிகரித்து 24,296 என்ற புள்ளிகணக்கிலும் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

     

    HDFC வங்கியால் இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.  

     

    • நேற்று வரை இத்திரைப்படம் ரூ.415 கோடி ரூபாய் வசூலித்திருநத்து
    • பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இவசூல் ரிப்போர்ட் வந்துள்ளது.

    அதன்படி கல்கி திரைப்படம் நேற்று வரை ரூ.415 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது வந்த தகவல் படி இதுவரை திரைப்படம் ரூ.555 ரூபாய் வசூலித்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    முதல் நான்கு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் விரைவில் 600 கோடியை தாண்டி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது.
    • மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.

    கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.

    சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இரண்டு நாட்களுக்கான வசூல் ரிப்போர்ட் வந்துள்ளது. அதன்படி கல்கி திரைப்படம் நேற்று வரை 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது வந்த தகவல் படி இதுவரை திரைப்படம் 415 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளனர்.

    முதல் இரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடியை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    • இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கிரிக்கெட் வீரர் கள் 2007-ம் ஆண்டிற்கு பிறகு தற்பொழுது 2-வது முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றிருப்பது பாராட்டுக்குரியது. இந்திய வீரர்களின் அசாத்திய திறமையாலும், கடின உழைப்பாலும் இந்தி யாவிற்கு வெற்றியும், பெருமையையும் தேடித்தந்தி ருக்கின்றார்கள். இந்திய கிரிக்கெட் வீரார்களின் இந்த சாதனைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    விளையாட்டுத் துறையில் இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்கள். வருங்காலங்களிலும் அவர்களின் வெற்றி தொடர வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டுத் துறைக்கு தேவையான அனைத்து ஆக்கபூர்வமான உதவிகளையும், ஊக்கத்தையும் அளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்று காலை 7.10 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.
    • ஏவுகணையானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    கர்நாடகா மாநிலம் சித்தர்துங்காவில் இருக்க கூடிய ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேன்ஜில் இன்று காலை 7.10 மணிக்கு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

    இதன் மூலம் செயற்கை கோளையோ, விண்கலங்களையோ சுமந்து செல்லகூடிய ராக்கெட் மீண்டும் பூமிக்கு வரும் ஏவுகணையை இஸ்ரோ பரிசோதனை செய்யகூடிய வகையில் இந்த திட்டம் என்பது மேற்கொள்ளப்பட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    'புஷ்பக்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையானது விமானப்படையுடைய ஃபிலிப் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற சோதனை வெற்றி பெற்ற நிலையில், இன்று 3வதாக நடைபெற்ற சோனையில் இந்த ஏவுகணையானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் மீண்டும் பயன்படுத்த கூடிய ஏவுகணையை தயாரித்து வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    • மாநிலம் முழுவதும் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள்.
    • வாடிக்கையாளர்களுக்குத் தரமான பால் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    உலகளவில் அதிக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழும் வேளையில், நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில், தமிழ்நாடு 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.

    ஆவின் நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தரமான பால் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகமானது சீரான நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளில் கையொப்பமிட்ட 7 அறிவிப்புகளில் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 3 ஆண்டுகளில் பால் வளத்துறையினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 9,189 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு சுமார் 3.85 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர்.

    இதன் மூலம் தற்போது நாளொன்றுக்குச் 35.67 லட்சம் லிட்டர் பால் சங்க அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4 லட்சம் லிட்டர் பால் உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் மூலம் விற்பனை செய்தது போக, 31.67 லட்சம் லிட்டர் பால் 27 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இப்போது பால்வளத் துறையில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு சரித்திர சாதனை படைத்துள்ளது.

    ஆவின் நிறுவனத்தில் மாநிலம் முழுவதும் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள்.

    ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்களை மின்ணணு வாயிலாக ரூ.590/-கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதற்காக ஆவின் நிறுவனத்திற்கு இந்திய அளவில் இரண்டாமிடத்திற்கான விருது வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×