என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்ணா"

    • கூட்டுறவு நகர வங்கியில் போலி நகைகள் மூலம் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • நகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி கூட்டுறவு சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இந்நிலையில் கூட்டுறவு நகர வங்கி ஊழியர்கள் சிலர் போலி நகைக்கான பணத்தை செலுத்தி திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    போலி நகைகள் வைத்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்ற நினைக்கும் மேலாண்மை இயக்குநர் அகிலா மற்றும் அதிகரிகளை கண்டித்து வங்கியின் நிர்வாக இயக்குனராக உள்ள ராஜேந்திரன் என்பவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

    • உழவர் சந்தை முன்பு போராட்டம்
    • தனிநபருக்கு கடைகள் வாடகைக்கு விடுவதாக குற்றச்சாட்டு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்த வரும் விவசாயிகள், நகராட்சியின் செயல்பாட்டை கண்டித்து இன்று விற்பனையை கைவிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை சந்தைபேட்டை, திலகர் திடலில் தமிழக அரசின் உழவர் சந்தை உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில், கடந்த 2000 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உழவர் சந்தையில் 104 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளின் மூலமாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த விளை பொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெற்று வருகின்றனர். இதனைவேளாண் விற்பனை துணை இயக்குனரகம் நிர்வகித்து வருகிறது.இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் ஆனால் விதிமுறையை மீறி, புதுக்கோட்டை உழவர் சந்தையில் உள்ள கடைகள், தனிநபர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் உழவர் சந்தைக்கு வெளியில் இருபுறமும் வியாபாரிகள் கடைகள் அமைத்து விற்பனை செய்வதற்கு நகராட்சி அனுமதி அளித்துள்ளது. உழவர் சந்தைக்கு வெளியில் வியாபாரம் செய்பவர்களிடம் தரை வாடகையை ஒப்பந்ததாரர் வசூலித்து வருகிறார்.இதனால் உழவர் சந்தையில் கடை நடத்தி வரும் விவசாயிகள் தங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படுவதாக நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் வேளாண் துறையும், நகராட்சி நிர்வாகமும் இதனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும சிலர் உழவர் சந்தைக்கு வெளியில் தற்காலிக கடைகளை அமைக்க தொடங்கி உள்ளனர். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த உழவர் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகள் இன்று திடீர் என விற்பனையை கைவிட்டு தர்ணா போராட்டத்தில் குதித்தனர். அப்போது அவர்கள் வேளாண்துறையையும், நகராட்சியையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளின் இந்த திடீர் தர்ணா போராட்டத்தினால் உழவர் சந்தையில் விற்பனை முடங்கியது. இதனால் காய், கனி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்ற த்துடன் திரும்பினர்.

    தர்ணா போராட்டம் குறித்து ராஜாங்கம் என்ற விவசாயி கூறும்போது.... உழவர் சந்தையின் உள்ளே ஒரு பால்கடை இருக்கும் பட்சத்தில், தற்போது வெளியிலும் ஒரு பால்கடை அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பால், டீ குடிக்க வருபவர்கள் அதிகளவு இந்த பகுதியில் திரளுகின்றனர். மேலும் வெளியில் அதிகளவு கடைகள் போட்டு கொள்ள நகராட்சி அனுமதித்து வருவதால், பொதுமக்கள் உழவர் சந்தைக்கு உள்ளே வந்து செல்வதில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.விவசாயி பரமசிவம் கூறும்போது.... தனி நபர்களுக்கு கடைகளை வாடகைக்கு விடக்கூடாது. வெளியில் அதிகளவு கடைகளை அனுமதிக்க கூடாது, விவசாயிகளுக்கே முன்னுரிமை தர வேண்டும் என்று ஒவ்வொரு முறை புகார் அளிக்கப்படும் போது, சரி செய்து விடுகிறோம் என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் இன்று விற்பனையை கைவிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு ஒரு முடிவு தெரியாமல் நாங்கள் விடுவதாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.விவசாயிகளின் போராட்டத்தை ெதாடர்ந்து உழவர் சந்தைக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். போராட்ட த்தில் ஈடுபட்ட விவசாயி களிடம் நகராட்சி அதிகாரிகளும், போலீசா ரும் பேச்சு வார்த்தை நடத்தினர். விவசாயிகளின் இந்த திடீர் தர்ணா போரா ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பை நிலவியது.

    ஆவினங்குடி ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணமாக காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவினங்குடி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கலையரசி (வயது 34). இவர் ஆவினங்குடி ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணமாக ஊராட்சிகள் சட்ட விதியின்படி பஞ்சாயத்து தலைவர் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்துள்ளார்.  தொடர்ந்து ஆவினங்குடி பஞ்சாயத்து நிர்வாகம் பி.டி.ஓ. கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி செயலாளர் இளவரசி நேற்று மாலை துப்புரவு பணி யாளர்களுக்கு சம்பளம் போடுவதற்காக கேஸ் புக் மற்றும் தீர்மானம் நோட் தருமாறு பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டார் 

    அதற்கு பஞ்சாயத்து தலைவர் கலையரசி அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்குமாறு கூறியுள்ளார். இதில் ஊராட்சி செயலாளர் இளவரசி வீட்டில் எழுதி எடுத்துக்கொண்டு பி.டி.ஓ.விடம் கையெழுத்து வாங்கி கொள்கிறேன் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது  இதில் ஆத்திரமடைந்த பஞ்சாயத்து தலைவர் கலையரசி உடனடியாக ஊராட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு அலுவலக வெளிப்புறத்தில் அமர்ந்து ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்ய கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.   இது குறித்து தகவல் அறிந்த மங்களூர் பி.டி.ஓ. முருகன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பஞ்சாயத்து தலைவரிடம் கூறியதை அடுத்து பஞ்சாயத்து தலைவர் போராட்டத்தை கைவிட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • இன்று காலை சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது திடீரென போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • கடந்த 26-ந் தேதி தனது மகளை ஒரு வாலிபர் கடத்திச் சென்று தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் நிலை யத்தில புகார் அளித்தேன்.

    சேலம்:

    சேலம் களரம்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் இன்று காலை சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது திடீரென போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கூறும் போது:-

    கடந்த 26-ந் தேதி தனது மகளை ஒரு வாலிபர் கடத்திச் சென்று தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் நிலை யத்தில புகார் அளித்தேன். இதையடுத்து போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை விட்டு விட்டனர்.

    இதனிடையே தனது மகள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயன்றார். தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு காரணமான வாலிபர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார். 

    • விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அரசு மன்னர் கலைக்கல்லூரியும், அதன் அருகிலேயே ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வெளியூர் மற்றும் அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து காலை உணவை புறக்கணித்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் இருந்து சாப்பாட்டு தட்டுகளுடன் விடுதியை விட்டு வெளியே வந்தனர்.

    பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில், புதுக் கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லூரி ஆதி திராவிடர் அரசு மாணவர் நல விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றோம்.

    எங்களுக்கு அரசு வழங்கக்கூடிய எந்த ஒரு சலுகையும் இதுவரை வழங்கப்படவில்லை. கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. உணவு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கூறியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித் தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக 5 மாணவர்களை மட்டும் பேச்சுவார்த்தைக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். மாணவர்கள் சாப்பாட்டு தட்டுகளுடன் போராட்டத் தில் ஈடுபட்டது புதுக்கோட் டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • கருணை தொகை வழங்காததை கண்டித்து பெரம்பலூர் கோவில் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
    • இதில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயிலில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு கருணை தொகை தராததை கண்டித்து கோயில் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 3 ஆயிரம் கருணைத்தொகை வழங்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டு அனைத்து கோயில் இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

    இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசு கருணை தொகை ரூ. 3 ஆயிரம் பொங்கல் திருநாளைக்கு முன்பே வழங்கப்பட்டது.ஆனால் பெரம்பலூரில் உள்ள அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் பணிபுரியும் எழுத்தர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர், பட்டாச்சாரியார், உதவி பட்டாச்சாரியார், குருக்கள், பரிஜாகர், அன்னதான பணியாளர், காவலர், மண்டப காவலர், இரவு நேர காவலர் ஆகிய பணியில் உள்ள 14 பேருக்கு பொங்கல் பரிசு கருணை தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து பல முறை கருண தொகை வழங்க கேட்டும் கோயில் செயல் அலுவலர் வழங்கவில்லையாம்.

    இதனால் ஆத்திரமடைந்த கோயில் பணியாளர்கள் நேற்று பெரம்பலூர் அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவில் அலுவலகம் முன்பு எழுத்தர் ரவி தலைமையில் 3 பெண் அலுவலர்கள் உட்பட 14 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பொங்கல் பரிசு கருணை தொகையை உடனே வழங்கவேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.




    • விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். விவசாயி. இவர் கடந்த 15 சென்ட் இடத்தை கிரயம் பெற்றார். இவர் தனது இடத்திற்கு பட்டா வேண்டி விருத்தாச்சலம் தாசில்தார் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.
    • ஊழியர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் ,அவரை அலை கழித்ததாக கூறப்படுகிறது

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். விவசாயி. இவர் கடந்த 1968-ல் 15 சென்ட் இடத்தை கிரயம் பெற்றார். அந்த இடத்திற்கு பட்டா வேண்டி விருத்தாச்சலம் தாசில்தார் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.   விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை அலை கழித்ததாக கூறப்படுகிறது. தனது மனு மீது நடவடிக்கை எடுக்க துணை தாசில்தாரிடம் கோரியுள்ளளார். இதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதில் ரூ3 ஆயிரம் பணத்தை ராஜவேல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் தான் அளித்த மனு குறித்து ராஜவேல் கேட்டபோது, மேலும் ரூ.3 ஆயிரம் தொகையை கொடுத்தால்தான் பணி நிறைவடையும் என துணை தாசில்தார் கூறியுள்ளார்

    இ்ந்நிலையில் விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் ராஜவேல் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் எனது இடத்தை அளவீடு செய் ல அளவை மேற்கொள்ள அங்கு சென்ற சர்வேயரிடம், சர்வே எடுக்க வேண்டாம் என துணை தாசில்தார் தடுத்து விட்டதாகவும், நத்தம் பட்டா கோரிய மனுவை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்துள்ளதாகவும் சப் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மனுவில் மண்டல துணை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனக்கு நத்தம் பட்டா வழங்க கோரியும் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து ராஜவேல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த சப் கலெக்டரி்ன் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் ராஜவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்ட ராஜவேல் அங்கிருந்து சென்றார். இதனால் சார் ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • 8 மாதம் வாழ்ந்த பின் தவிக்கவிட்டதால் ஆத்திரம்
    • கூடுதல் வயதுடைய பெண்ணுடன் காதல் திருமணம்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி (வயது 22). இவருக்கும் தன்னை விட 2 வயது குறைந்த தொண்டைமானேந்தல் பகுதியை சேர்ந்த வல்லரசு (20). என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.அதனைத் தொடர்ந்து இவர்கள் கடந்த 7 மாதத்திற்கு முன்பு மணமேல்குடி கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் பெற்றோருக்கு பயந்து, இருவரும் மதுரையில் 4 மாத காலமும், கோத்தகிரியில் 3 மாதகாலமும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர்.இந்நிலையில் கோத்தகிரியில் இருந்த போது இருவருக்குமிடைேய குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வல்லரசு, வைதேகியை அங்கேயே விட்டு விட்டு தனது தாய் தந்தையோடு வந்து சேர்ந்துள்ளார்.பின்னர் கோத்தகிரியில் தனியாக இருந்த வைதேகி பாதுகாப்பு கருதி அவரும் தனது சொந்த ஊருக்கு திரும்பி தாய் தந்தையை சந்தித்தார். ஆனால் அவர்கள் வீட்டிற்குள் அவரை அனுமதிக்கவில்லை.காதல் கணவன் கைவிட்ட நிலையில் பிறந்த வீட்டிலும் அடைக்கலம் கிடைக்காத நிலையில் மீண்டும் வேறு வழியின்றி கணவர் வீட்டிற்கு சென்று விடலாம் என்று கருதி அங்கு சென்றார். ஆனால் அங்கு மாமனார், மாமியார், கணவர் உள்ளிட்டோர் வைதேகியை தாக்கி அங்கிருந்து துரத்தியுள்ளனர். இதனால் செய்வதறியாமல் திகைத்த வைதேகி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த வைதேகி இறந்து விடலாம் என கருதி விஷம் அருந்தினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு தனது கணவர் வல்லரசு வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே வல்லரசு மற்றும் மாமனார், மாமியார், உள்ளிட்டோர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகிவிட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவுடையார்கோவில் காவல்த்துறையினர் வைதேகியோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி காப்பகம் ஒன்றில் அவரை அனுமதித்தனர்.மேலும் விசாரணையை தொடங்கிய காவல்த்துறையினர் தலைமறைவர்களை தேடி வருகின்றனர். காதலித்து 8 மாதகாலம் இளம் பெண்னோடு இன்பமாக இருந்துவிட்டு உதறித் தள்ளிய இளைஞரால் அப்பகுதியில் பரபரபு ஏற்பட்டது.

    • இடங்கண சாலையை அடுத்த சாத்தம்பாளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது.
    • சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களாக ஜே.சி.பி. உதவியுடன் டிப்பர் லாரியில் பல லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

    காகாபாளையம்:

    சேலம் அருகே இடங்கண சாலையை அடுத்த சாத்தம்பா–ளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது. இது சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக ஜே.சி.பி. உதவியுடன் டிப்பர் லாரியில் பல லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

    இது குறித்து அந்த ஊர் பொதுமக்கள் இடங்கண சாலை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்ரும் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

    இதையடுத்து சாத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை சின்னம்பட்டி பிரதான சாலையில் உள்ள இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    அங்கு சாமியானா பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.

    • ஆஷிக் மகன் பக்கிம்அஸ்லாம் (வயது 25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறா
    • மகேஸ்வரி (22) என்பவரை பக்கிம் அஸ்லாம் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்பல த்தாடிமடத் தெருவைச் சேர்ந்தவர் ஆஷிக் மகன் பக்கிம்அஸ்லாம் (வயது 25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வேலைக்காக சென்ற கொத்தங்குடித் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகள் மகேஸ்வரி (22) என்பவரை பக்கிம் அஸ்லாம் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பமான மகேஸ்வரி, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது வீட்டில் வந்து கேட்குமாறு தெரிவித்துள்ளார், வீட்டில் சென்று கேட்ட போது பக்கிம் அஸ்லாம் தந்தை ஆஷிக் மறுப்பு தெரிவித்தார். இருந்தபோதிலும் மகேஸ்வரி 8 மாத கர்ப்பிணையாக இருந்த போது இஸ்லாமியராக மாற வேண்டும் என தெரிவித்தனர். மகேஸ்வரி இஸ்லாமியராக மதம் மாறி, அவருக்கு ஆயிஷா என்ற பெயரும் வைக்கப்பட்டு கடந்த 01.01.2023 அன்று சிதம்பரம் லப்பை தெருவில் உள்ள பள்ளிவாசலில் நிக்கா நடைபெற்றதாக கூறப்படுகிறது  இதையடுத்து ஜனவரி 16-ந்தேதி மகேஸ்வரி என்கிற ஆயிஷாவுக்கு ஆண் குழந்தை பெற்றெ டுத்தார். இதனையடுத்து ஆயிஷாவின் கணவர் பக்கிங் அஸ்லாம் தலைமறைவானார். தனது கணவரை அவரது தந்தை மறைத்து வைத்திருப்பதாகவும், கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகார் மீது மகளிர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால், திருமணம் நடைபெற்ற லப்பை தெரு பள்ளிவாசல் முன்பு நீதி கேட்டு ஆயிஷா 3 மாத கைக்குழந்தை, உறவினர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிஷா மற்றும் உறவினர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    • பாராளுமன்றத்தில் பல்வேறு மோசடிகள் குறித்து விசாரணை கமிஷன்
    • ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பை ரத்து செய்யும் வரை போராட்டம்

    நாகர்கோவில் :

    குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசை கண்டித்து மார்த்தாண்டத்தில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட் டத்திற்கு குழித்துறை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்டத் தலைவர் டாக்டர்.பினுலால்சிங் முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தில் மத்தியஅரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்றத்தில் பல்வேறு மோசடிகள் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என 16 - நாட்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினோம்.ஆனால் மோடி அரசுக்கு பயம் ஏற்பட்டுள்ளதால், விவாதத்திற்கே வரவில்லை, கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. இந்தியா ஜனநாயக நாடு என நாம் கூறிக் கொண்டிருக்கிறோம்.

    ஆனால் இங்கு சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக போராட்டம் நடத்த வேண்டும். ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்த வேண்டும்.2024 -ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தியை கொண்டு வர பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ் மற்றும் வட்டார தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு தலைவர்கள் உள்பட பலர் கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பெரியேரிபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சஞ்சய் (வயது 17), அவரது தம்பி ஜெயகாந்தன் (13) ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரிடம் மாணவர்கள் கூறுகையில், எனது தந்தை கோபால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவியாக எனது தாயும் அங்கு இருந்து வருகிறார்.

    இந்த நிலையில், எங்கள் வீட்டுக்கு செல்லும் வழித்தடத்தை அருகில் வசிக்கும் முருகன், கோவிந்தன் ஆகியோர் அடைத்து முட்களை போட்டுள்ளனர். இதனால் வீட்டுக்கு செல்ல முடியவில்லை.

    பால் விற்பனை செய்து தற்போது சாப்பிட்டு வருகிறோம். வீட்டுக்கு செல்ல முற்படும்போது அருகில் உள்ளவர்கள் எங்களை வரக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுகின்றனர்.

    வழித்தட பிரச்சனைக்காக 3 முறை கலெக்டர் அலுவலகத்திற்கு தாய் தந்தை ஆகியோர் வந்து மனு அளித்துள்ளனர். போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே வீட்டின் முன்பு முட்களை போட்டு வழித்தடத்தை மறைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போது வீட்டுக்கு செல்ல முடியாமல் இருப்பதால் எங்களுக்கு பாதுகாப்பு தந்து காப்பகத்தில் இருக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    ×