என் மலர்
நீங்கள் தேடியது "சோதனைச் சாவடி"
- விடுதிகள், லாட்ஜ்களில் அதிரடி சோதனை.
- பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
கோவை:
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
மாநகரில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 1000 போலீசாரும், புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 1000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகரில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், கடைவீதிகள், மால்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படு த்தப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் வாகனங்களில் அடிக்கடி ரோந்து சென்றும் கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். பஸ் நிலையங்களில் நிற்கும் பஸ்களில் ஏறியும் சோதனை மேற்கொண்டனர்.
இதுதவிர கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வாளையார் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனை சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களுமே தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். வாகனங்களில் வருபவர்கள் எதற்காக கோவைக்கு வருகின்றனர். அவர்களின் முகவரி, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை எல்லாம் சோதித்து பார்த்து விட்டு மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், லாட்ஜ்கள், ஓட்டல்களிலும் போலீசார் அடிக்கடி சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அங்கு உள்ள வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றை பார்த்து ஆய்வு செய்தனர். மேலும் யாராவது சந்தேகத்திற்கிடமாக வந்து தங்கியிருந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இதேபோல் கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தண்டவா ளங்களில் சோதனை மேற்கொண்டனர்.
ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பயணிகளின் உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.
ஈரோடு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல்காம் மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகள் ஊடு ருவி சுற்றுலா பயணிகளின் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 27-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து உளவுத் துறை உஷார் படுத்தப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் பலத்த பாது காப்பு போடப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட் டத்தில் நேற்று இரவு முதல் போலீசார் உஷார் படுத்தப்பட்டு இரவு முதல் காலை வரை விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனையை தீவிர படுத்தினர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள சோதனைச் சாவடி, லட்சுமி நகர் சோதனை சாவடி, தாளவாடி அடுத்த காரை பள்ளம் சோதனை சாவடி என மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகர பகுதியில் உள்ள கோவில்கள், மசூ திகள், கிறிஸ்தவ தேவால யங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டிருந்தது. இதேபோல் ஈரோடு பஸ் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் வ.உ.சி காய்கறி மார்க்கெட் பகுதியிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், திண்டல் முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு ரெயில் நிலை யத்தில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதியில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்தனர். மோப்பநாய் பவானி வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு நடைமேடையாக சென்றது.
ரெயில் நிலையத்தில் தேவையின்றி சுற்றி திரிந்த நபர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ரெயில் நிலைய பார்சல் பகுதி, டிக்கெட் கவுண்டர் பகுதி ரெயில்வே பணிமனை பகுதி என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.
இதைப்போல் விடுதிகளையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சமூக வலைதளங்களையும் போலீசார் கண்காணிக்கின்றனர்.
இதேபோல் பஸ் நிலையம், சந்தை, பொதுமக்கள் கூடும் கடைவீதிகள் ஆகிய வற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை
ஜம்முகாஷ்மீர் மாநிலம் பஹல்காலம் எனும் இடத்தில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிர வாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் கண் மூடித்தனமாக சுட்டதில் 26 பயணிகள் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தீவிரவாத தாக்குதலை யடுத்து நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் உளவுத்துறையினர் உஷார்படுத்தப்பட்டு பல்வேறு அமைப்புகள், சந்தேகப்படும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் டி.ஜி.பி. உத்தரவுப்படி கோவில்கள், மசூதிகள், தேவலாயம், விமானம், ரெயில் நிலை யங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அதன்படி மதுரை மாநகரிலும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். 5 நுழைவு வாயில்களில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனும திக்கப்பட்டனர்.
இதேபோல் மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள் என பெரும்பாலான பகுதிகளில் 1,200 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
- போலீசார் பந்தல் அமைத்து கண்காணிப்பு
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
அதைத்தொடர்ந்து நேற்று வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டியப்பனூர் கூட்ரோட்டில் வாகன சோதனை சாவடியில் போலீசார் பந்தல் அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இத்தகைய சோதனைகளில் ஈடுபடுவதால் குற்றங்கள் தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
- கேரளா-நீலகிரி மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கூடலூர் வனப்பகுதி தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லை பகுதியில் வருவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டி:
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்ட வனப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அதிரடிப்படை வீரர்களும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நீண்டநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்டுகள் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதேபோல கடந்த வாரமும் அதிரடிப்படை வீரர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து சிலர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கேரள மாநில எல்லைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதால் அதனை ஒட்டிய நீலகிரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கேரளா-நீலகிரி மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓவேலி, நாடுகாணி, சோலாடி, நம்பியார்குன்னு, பாட்டவயல் ஆகிய சோதனைச் சாவாடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களை தீவிர சோதனை நடத்தி அனுமதிக்கின்றனர்.
கூடலூர் வனப்பகுதி தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லை பகுதியில் வருவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனைச்சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளை உஷார்படுத்தினார். பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இதையடுத்து, அவ்வப்போது மக்கள் கூடும் இடங்களிலும், தங்களுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்துவதுமாய் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஆல்பு ஜுவாரி என்ற கிராமத்தில் சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அல் ஷாபி எனும் பயங்கரவாதத்துக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்தவரகள் என்பது குறிப்பிடத்தக்கது. #Iraq #ISattack