என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்காட்சி"

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது.
    • சிறுவர்களை கவரும் பொழுதுபோக்குகள், விளையாட்டு சாதனங்கள் இடம்பெறுகின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் தொழில் பொருட்காட்சி நடைபெறும். கொரோனா பாதிப்பால் 2 வருடமாக பொருட்காட்சி நடைபெறவில்லை.

    2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டர் நடத்தப்பட்டது. 2 மாத காலம் நடைபெறும் இந்த பொருட்காட்சியை காண சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வருவது வழக்கம்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. அதனால் பல்வேறு சிறப்புகளுடன் பொருட்காட்சியை சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

    புயல், மழையால் தீவுத்திடலில் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி சற்று தாமதம் ஆன நிலையில் தற்போது வேகமாக நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் அரங்குகள் 40, 100-க்கும் மேலான ஸ்டால்கள் இடம் பெறுகின்றன.

    சிறுவர்களை கவரும் பொழுதுபோக்குகள், விளையாட்டு சாதனங்கள் இடம்பெறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் குதூகலப்படுத்தும் வகையில் விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைகின்றன.

    பள்ளி குழந்தைகள் பயன்பெறக்கூடிய வகையில் அறிவியல் அரங்கம் நிறுவப்படுகிறது. இதுதவிர சுற்றுலா ரெயில், மாநில உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    தீவுத்திடலில் இருந்து 'டிரைவ் இன்' ஓட்டல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. காரில் இருந்தபடியே குடும்பமாக உணவு மற்றும் பொழுதுபோக்கும் வகையில் பிரமாண்டமான திரை அமைக்கப்படுகிறது. அதிக அளவில் கார்களை நிறுத்தி இந்த ஓட்டலில் உணவு சாப்பிடக்கூடிய மிகப்பெரிய கூடாரம் அமைக்கப்படுகிறது.

    இந்த டிரைவ் இன் ஓட்டல் நிரந்தரமாக அங்கு எப்போதும் செயல்படும் வகையில் சுற்றுலாத்துறை சீரமைத்து வருகின்றன. அரசு பொருட்காட்சிக்கான நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த முறை இருந்த நுழைவு கட்டணத்தை விட 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படும்.

    பொருட்காட்சி நுழைவு வாயில் பாரம்பரிய சிறப்புடன் அமைகிறது. வருகிற 23 மற்றும் 28-ந்தேதிக்கு இடையே பொருட்காட்சியை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    • ராமநாதபுரத்தில் ரோபோட்டிக் பொருட்காட்சியை காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டைன்மெண்ட் நடத்தும் மாபெரும் ரோபோட்டிக் பொருட்காட்சி நேற்று (25-ந்தேதி) முதல் 30 நாட்களுக்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன்னிலை வகித்தார். நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் செல்வராணி விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பொருட்காட்சியில் குழந்தைகளை மகிழ்விக்க பறவைகளின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாடி மகிழ வித, விதமான ராட்டினங்கள், ஜெயன்ட்வீல், கொலம்பஸ், டிஸ்கோ, ஹெலிகாப்டர், டிராகன் ராட்டினங்கள், ஜம்பிங் பலுான், யானை கார், பைக், படகு சவாரி, 3டி ஷோ, திகிலூட்டும் பேய் வீடு போன்ற பொழுது போக்கு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

    சாப்பிட்டு மகிழ வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள், குழந்தை களுக்கு தேவையான பொம்மை வகைகள், மகளிருக்கு தேவையான பேன்சி பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏராளமான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் செய்திருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் விதமாக நிகழ்ச்சிகள், விளையாட்டு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.
    • பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்காட்சிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. 125 சிறிய கடைகள், 60 தனியார் அரங்குகள் இதில் இடம் பெற்றுள்ளன. 70 ஆயிரம் சதுர அடியில் பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் விதமாக நிகழ்ச்சிகள், விளையாட்டு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.

    பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்காட்சிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 47 ஆயிரம் பேர் பொருட்காட்சியை கண்டு களித்தனர். இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. மாட்டு பொங்கல் தினமான நேற்று 72,547 பேர் வருகை புரிந்துள்ளனர். 58 518 பெரியவர்களும், 14,029 சிறியவர்களும் பொருட்காட்சியை பார்த்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகை நாளில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை காணும் பொங்கல் தினமான இன்று அதிகரிக்கும். இன்று குடும்பம் குடும்பமாக மக்கள் பொருட்காட்சிக்கு வருவார்கள். இதனால் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    • ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் பொன்னியின் செல்வன் பிரமாண்ட பொருட்காட்சியை எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.
    • 8-வது வார்டு கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கேற்றுகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம்-கேணிக்கரை ரோடு மகர்நோன்பு பொட்டல் அருகே உள்ள நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் பிரமாண்டமாக பொன்னியின் செல்வன் பொருட்காட்சி இன்று மாலை 5.30 மணியளவில் தொடங்க உள்ளது.இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.

    ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலை வகிக்கிறார்.நகர்மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் வரவேற்கிறார். 8-வது வார்டு கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கேற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டெயின்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதயகுமார் செய்து வருகிறார்.

    • மதுரையில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் திறந்து வைத்தார்.
    • பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மதுரை

    சித்திரை திருவிழாவை யொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமி நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொருட்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார்.

    வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன்,

    எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மணிவண்ணன்.

    டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி, ஐ.சி.டி.சி ஆற்றுநர்கள் ரவிக்கண்ணன், வீரபத்திரன், ஜெயபாலன், தொண்டு நிறுவனங்களான பிரதர் சிகா ரூபி, பக்கீர் வாவா, பேஸ் அறக்கட்டளை பாரதி கண்ணம்மா, தாய் விழுதுகள் அறக்கட்டளை மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசு பொருட்காட்சி திறப்பு விழாவில் 100-க்கும் மேற்பட்ட பயனா ளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    • ராமநாதபுரத்தில் பொருட்காட்சியை நகரசபை தலைவர் திறந்து வைத்தார்.
    • ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதய குமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் நடத்தும் மாபெரும் பொன்னியின் செல்வன் பொருட்காட்சி நேற்று முதல் தொடங்கி 35 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடை பெறும்.

    இதில் பொன்னியின் செல்வன் அரண்மனை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் கூடிய செல்பி பாயிண்ட் இடம்பெற்றுள்ளது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கொண்டாடி மகிழ வித விதமான ராட்டினங்கள், ஜெயன்ட் வீல் ராட்டினம், கொலம்பஸ் ராட்டினம், டிஸ்கோராட்டினம், ஹெலிகாப்டர் ராட்டினம், டிராகன் ராட்டினம்,ஜம்பிங் பலூன், யானை கார், பைக், படகு சவாரி, 3-டி ஷோ திகிலூட்டும் பேய் வீடு, போன்ற எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    சாப்பிட்டு மகிழ வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவை யான பொருட்கள், குழந்தை களுக்கு தேவையான பொம்மை வகைகள், பெண்களுக்கு தேவையான பேன்சி பொருட்கள் விற்பனையாகிறது.

    பொருட்காட்சியை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நகரசபை துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கு ஏற்றினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதய குமார் செய்திருந்தார்.

    • ராமநாதபுரத்தில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியை நகரசபை தலைவர் திறந்து வைக்கிறார்
    • அனைவரும் விரும்பி கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கல்வி பயின்ற ஸ்வார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் 7 வருட நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரம்மாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட் காட்சி இன்று தொடங்கு கிறது.

    நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்று மாலை 6 மணிக்கு பொருட்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.

    ஏராளமான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய இப்பொருட்காட்சியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் ஜூன் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    4 D ஷோ,பேய் வீடு,பன் சிட்டி, ஸ்டால்கள் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் ஒரே இடத்தில் அமைந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள

    இப்பொருட்காட்சிக்கான ஏற்பாடுகளை பொருட் காட்சி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் சுவார்ட்ஸ் மைதானத்தில் பொருட்காட்சி நடந்தது.
    • குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ராட்டினம், கடைகள், சிற்றுண்டி விடுதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கோடைகால விடுமுறையையொட்டி குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் லண்டன் பிரிட்ஜ் வடிவ நுழைவு வாயிலுடன் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ராட்டினம், கடைகள், சிற்றுண்டி விடுதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் திறந்து வைத்தார்.

    பொருட்காட்சி அமைப்பாளர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். கவுன்சிலர்கள் வீரசேகர், ராஜகோபால், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இந்த பொருட்காட்சி ஜூன் 4-ந்தேதி வரை 1மாதம் நடைபெற உள்ளது.

    பொருட்காட்சி மேலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.பொருட்காட்சி, ராட்டினம், Exhibition, Ratinam,

    • பொருட்காட்சியை இலவசமாக கண்டு களிக்கலாம் என பொருட்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    • பொருட்காட்சி வருகிற ஜூன் 4-ந்தேதி வரை நடக்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் முதல்முறையாக சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிரமாண்ட மான லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி மே 2-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

    கண்கவர் பொழுது போக்கு அம்சங்களுடன் நடக்கும் இந்த பொருட்காட்சி வருகிற ஜூன் 4-ந்தேதி வரை நடக்கிறது. கண்காட்சி மைதான முகப்பில் உள்ள லண்டன் பிரிட்ஜ் பொதுமக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது.அதில் பொதுமக்கள் ஏறி செல்பி எடுத்து மகிழ்கின்ற னர். துபாயில் உள்ள அரபா லோட்டஸ் ரிப்பன் பில்டிங் புகைப்படங்கள் ஏராளமாக உள்ளன. இயற்கை அங்காடி, குட்டியை சுமந்தபடி இருக்கும் கங்காரு, வரிக்குதி ரை,மான்கள், சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகள் அழகாக வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது.மேலும் இப்பொருட்காட்சியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.அதில் விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர்,பேன்சி பொருட்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    சிறுவர்களுக்கான நீச்சல் குளம்,பொருட்காட்சி திடலை சுற்றி வரும் அப்பளம்,வாழைத்தண்டு சூப்,ஜிகர்தண்டா போன்ற சுவையான தின்பண்டங்கள் கடைகளும் பொருட்காட்சி யில் இடம் பெற்றுள்ளன.

    இந்த பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.நுழைவு கட்டணமாக ரூபாய் 50 செலுத்தி டிக்கெட் பெற்று பொருட்காட்சியை கண்டு ரசிக்கலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பொருட் காட்சியை கண்டு களிக்க லாம் என பொருட் காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி இயங்கி வருகின்றது.
    • கனிஷ் இருந்த ராட்டினத்தில் சுற்றிய போது திடீரென்று தவறி கீழே விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி இயங்கி வருகின்றது. இங்கு கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கோடைவிடுமுறையை முன்னிட்டு பொருட்காட்சிக்கு வந்தனர். அப்போது கார்த்திக் மகன் கனிஷ் (வயது 7) என்பவர் பொருட்காட்சியில் இருந்த ராட்டினத்தில் சுற்றிய போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் கனிஷ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அஸ்வின் ராஜ் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் படத்தை ஏற்படுகிறது.

    • மதுரை சித்திரை பொருட்காட்சி 13-ந்தேதி முடிவடைகிறது. இதுவரை 1.80 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.
    • மாணவர்கள் இந்த சிறப்பு சலுகையை 13-ந்தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட் காட்சியை இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பொருட்காட்சி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி யன்று தொடங்கியது.

    இந்த பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.

    மேலும் மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப் பட்டுள்ளன. அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றின் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறை களின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குள் இடம் பெற்றுள்ளன.

    மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டன.

    அதேபோல இளை ஞர்கள் மற்றும் குழந்தை களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. மேலும், தினந்தோறும் இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த பொருட்காட்சி தினந்தோறும் மாலை 3.45 மணி முதல் இரசு 9.30 மணி வரை நடைபெறுகிறது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15 ரூபாயும், சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதுவரை அரசுப் பொருட் காட்சியை இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

    இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட 30 ஆயிரம் பார்வையாளர்கள் அதிகம் ஆகும். இந்தப் பொருட்காட்சி வருகிற வருகிற 13-ந்தேதியன்று நிறைவடைகிறது.

    பொருட்காட்சியை கண்டுகளிக்க வரும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை காண்பித் தால் அவர்களுக்கு ராட்டி னம் உட்பட விளையாட்டு நிகழ்வுகளில் சிறப்பு சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மாணவர்கள் இந்த சிறப்பு சலுகையை 13-ந்தேதி வரை பயன்படுத்திக் கொள்ள லாம்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரி வித்துள்ளது.

    • கடந்த மாதம் 13-ந் தேதி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொருட்காட்சி தொடங்கியது.
    • ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 125 அரசுக்கு வருவாய் வந்துள்ளது.

    கோவை,

    கோவை காந்திபுரம் அருகே உள்ள ஜெயில் மைதானத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொருட்காட்சி தொடங்கியது. இதனை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    இந்த பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்பட 27 அரசுத்துறை அரங்குகளும், 6 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்கு என மொத்தம் 33 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி பொழுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. அரசு பொருட்காட்சியை காண பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளிகள் அழைத்து வரும் மாணவர்களுக்கு ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பொருட்காட்சியை நேற்று வரை 26 நாட்களில் 1 லட்சத்து 93 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 125 அரசுக்கு வருவாய் வந்துள்ளது.

    தினந்தோறும் ஆயிரக்கணக்காக பொதுமக்கள் இந்த பொருட்காட்சியை கண்டு களித்து செல்கி றார்கள்.

    இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:-

    கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் எங்கும் செல்ல முடியவில்லை. அப்போது தான் காந்திபுரம் அருகே ஜெயில் மைதானத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கிய தகவல் வரவே குழந்தைகளுடன் அங்கு சென்றோம் .அங்கிருந்த ராட்டினங்கள் மற்றும் விளையாட்டுகளில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினர்.

    நாங்கள் அரசு பொருட்காட்சிக்கு சென்றது வாரவிடுமுறை என்பதால் அப்போது கோவை மாநகர போலீசார் சார்பில் வளர்ப்பு நாய்களில் சாகச கண்காட்சி நடைபெற்றது.

    இதில் நாய்களின் சாகசம், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது.

    இதுதவிர அங்கு இருந்த ஸ்டால்களில் மிக குறைவான விலையில் அதிக பொருட்களை வாங்கி வந்தோம். மீண்டும் பொருட்காட்சிக்கு அழைத்து செல்லுமாறு எங்கள் குழந்தைகள் கூறி வருகின்றனர்.

    அந்தளவுக்கு அங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×