search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223471"

    • இரட்டை சகோதரிகளும் தங்களது விபரீத காதலை ஒரே வாலிபருடன் வளர்த்து வந்தனர்.
    • காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த இரட்டைசகோதரிகள் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளனர். பிளஸ்-1 படிக்க இருந்தனர்.

    இவர்கள் இருவரும் உறவினரான அதே பகுதியில் வசித்து வரும் மகேஷ் (22) என்பவரை காதலித்தனர். அவரும் இரட்டை சகோதரிகளை காதலிப்பதாக கூறி இருவரிடமும் நெருங்கி பழகினார். மகேஷ் ஐ.டி.ஐ. படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இரட்டை சகோதரிகளும் தங்களது விபரீத காதலை ஒரே வாலிபருடன் வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகேசையும், இரட்டை சகோதரி மாணவிகளையும் பெற்றோர் கண்டித்து அறிவுரை கூறினர். எனினும் அவர்களது காதல் தொடர்ந்து நீடித்து வந்தது.

    இந்நிலையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த இரட்டைசகோதரிகள் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று மாலை அவர்கள் அப்பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆறு அருகே சென்று கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் இரட்டை சகோதரி மாணவிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு மாணவி மற்றும் மகேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நிலைமையும் மோசமாக உள்ளது. இச்சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனைவி இறந்த தினத்தில் சோகம்
    • கடந்த 2 நாட்களாக அவர் யாருடனும் சரிவர பேசாமல் இருந்து வந்தார்.

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் அருகே உள்ள தேவர் குளம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பி கண்ணன் (வயது 52). இவர் தற்போது ராணி தோட்டம் வடக்கு தெருவில் வசித்து வந்தார்.

    இவரது மனைவி ஜூலியட் கில்டா. இவர்க ளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஜூலியட் கில்டா இறந்து விட்டார். அதன் பிறகு தம்பிக்கண்ணன் மன வேதனையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் மனைவி யின் ஓராண்டு நினைவு தினம் இன்று வருவதை யடுத்து அவர் மனம் உடைந்த நிலையில் காணப் பட்டார். மனைவி இறந்த தை நினைத்து தினமும் புலம்பிக் கொண்டிருந்தார். தம்பிகண்ணனை உறவி னர்கள் சமாதானம் செய்தனர்.

    கடந்த 2 நாட்களாக அவர் யாருடனும் சரிவர பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தம்பி கண்ணன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தம்பி கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆசாரிப் பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவி இறந்த தினத்தில் கணவர் தறங கொலை செய்து கொண்ட சம்பவம் உறவி னர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார்.

    மதுரை

    திடீர்நகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் சாலமன் ராஜா (40). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்று மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். இதற்கு மனைவி மறுத்துவிட்டார். இதில் மனமுடைந்த சாலமன் ராஜா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஜெய்ஹிந்த்புரம் முதல் தெருவை சேர்ந்த முகமது இக்பால் மகன் முபிஸ் ரகுமான் (24). இவருக்கு சிறு வயது முதல் உடல் நலக் கோளாறு இருந்தது. மூச்சு திணறலும் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர் திடீரென்று ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே வாலிபர் முபிஸ்ரகுமான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
    • கடந்த 19-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை குன்னமலை சமத்துவபுரம் நிழற்கூடத்தில் அமர்ந்து செல்வராஜ் அங்கு தான் வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவர் வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மல்லிகா (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் செல்வராஜ் மருத்துவமனைக்கு சென்று தனது உடலை பரிசோதனை செய்தார். ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகவும், அதே போல் உடலில் ரத்த அழுத்த அளவும் அதிகமாக இருப்ப தாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் செல்வராஜ் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். வீட்டில் இருக்கும் போது நான் சீக்கிரமாக செத்து விடுவேன் என்று புலம்பிக்கொண்டிரு ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை குன்னமலை சமத்துவபுரம் நிழற்கூடத்தில் அமர்ந்து செல்வராஜ் அங்கு தான் வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார்.

    பின்னர் வீட்டிற்கு சென்று தனது மனைவி மல்லிகாவிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சை க்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டது. அங்கிருந்து ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற் கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செல்வராஜின் மனைவி மல்லிகா நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இச்சம்பவ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில் :

    பார்வதிபுரம் கணியாகுளம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 43) கொத்தனார்.

    இவரது மனைவி ஆஷா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மாரியப்பன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து மாரியப்பன் வெளியே சென்றார்.

    இந்தநிலையில் பார்வதிபுரம் இலந்தையடி ரெயில்வே கேட் பகுதியில் அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடப்பதாக மனைவி ஆஷாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு சென்று மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடசேரி போலீசில், ஆஷா புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பூட்டிய அறையில் பிணமாக கிடந்தார்
    • ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோட்டார் இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் தெருவை சேர்ந்த வர் நாகராஜன். இவரது மகன் கவுதமன் (வயது 24). இவர் சென்னை யில் உள்ள சட்ட கல்லூரியில் படித்து வந்தார். தற்பொழுது கல்லூரிக்கு செல்லாமல் ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தார்.

    இந்நிலையில் கவுதமன் கடந்த சில நாட்களாக சரிவர வீட்டில் யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் மனவிரக்தியில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு கவுதமன் தனது அறைக்கு சென்றார். மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையின் கதவு திறக்கப்பட வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜன் மகனை பலமுறை அழைத் துப் பார்த்தும் கதவு திறக்கப் படாததால் கதவை உடைத்து பார்த்தபோது கவுதமன் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த கவுதமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கவுதமன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பலியான கவுத மனின் உடல் பிரேத பரிசோ தனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவி னர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • ஜோசப் இரும்பு கம்பிகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்து வந்தார்.
    • தொழிலில் ஜோசப்புக்கு ரூ. 8 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்தவர் ஜோசப் (வயது 60). இவர் இரும்பு கம்பிகள் மற்றும் காப்பர் போன்றவற்றை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தும், சில்லரை வியாபாரமும் செய்து வந்தார்.

    இந்நிலையில் மில்லர்புரத்தை சேர்ந்த துரை என்பவருடன் சேர்ந்து இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது காப்பர் லோடு எடுத்து வியாபாரம் செய்தால் நல்ல லாபம் பெறலாம் என கூறியதாகவும், அதன் அடிப்படையில் வியாபாரம் செய்த போது தொழிலில் ஜோசப்புக்கு ரூ. 8 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தன்னுடைய தொழில் நஷ்டத்திற்கு துரை தான் காரணம் எனவும், இதனால் அதிக பேரிடம் வட்டிக்கு பணம் வாங்கி விட்டதாகவும் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் ஜோசப் எட்டையாபுரம் ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி பின்புறம் உள்ள இரும்பு குடோனில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். ஜோசப் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் இல்லாததால் சாவில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் கூறினர். இது குறித்து போலீசார், ஜோசப் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோப்பில் பிணமாக கிடந்ததால் பரபரப்பு
    • பல இடங்களில் வரன் பார்த்தும் திருமணம் அமையவில்லை

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அருண்குமார் (வயது 44).

    இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ராணிதோட்டம் டெப்போவில் மெக்கா னிக்காக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையா னார். இதனால் அருண்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதன்பிறகு கூலி வேலை செய்து வந்த அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் வரன் பார்த்தும் திருமணம் அமையவில்லை. இந்த நிலையில் அருண்குமார் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்று அருகில் உள்ள தென்னந்தோப்பில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    நேற்று பெய்த பலத்த மழையால் யாரும் வெளியே வராத நிலையில் குளிரில் நடுங்கி சம்பவ இடத்திலேயே அருண்குமார் பரிதாபமாக இறந்தார். இன்று காலை உறவினர்கள் அவரை தேடிய போது தான், தென்னந்தோப் பில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்மந்தமாக அவரது தாயார் ஒமனா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே யுள்ள வடக்கு ஆத்திபட்டி பெத்தம்மாள் நகரை சேர்ந்தவர் சாந்தி(வயது55). இவரது மகன் சீனிவாசன் கோவையில் கால் டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    குடும்ப தேவைக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திடம் சாந்தி ரூ.5 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. இதுவரை ரூ.1 லட்சம் செலுத்தியிருந்த சாந்தி அதன் பின் சரியாக தவணை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர். மேலும் சம்பவத்தன்று சாந்தி வீட்டில் நிதி நிறுவனம் நோட்டீஸ் கொடுத்துவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை யில் இருந்த சாந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சாந்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் தொல்லையால் விபரீத முடிவு
    • மனைவி கலா புகார் மனு கொடுக்க புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே குழிக்கோடு வண்ட விளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). கூலித் தொழிலாளி.

    இவருக்கு இரண்டு பெண், ஒரு ஆண் பிள்ளைகளும் உண்டு. இரண்டு பெண் பிள்ளைகளும் திருமணம் முடிந்து விட்டது. இந்த நிலையில் ராஜேந்திரன் இளைய மகள் பிரசவத்துக்கு மொத்த செலவுகளையும் ராஜேந்திரன் பார்த்தார். பிரசவத்தின் போது பிறந்த குழந்தை இறந்து விட்டது. இதன் செலவுகளை கடன் வாங்கி செய்தார். மேலும் அந்த கடனை அடைக்க முடியாமல் ராஜேந்திரன் மனைவி வீட்டு வேலைக்கு சென்றார்.

    மேலும் இந்த கடனை அடைக்க முடியாமல் தினசரி வீட்டிலிருந்து கடனை அடைக்க முடியவில்லை என பேசுவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ராஜேந்திரனின் குடும்ப கல்லறை தோட்டத்திற்கு சென்று ஆசிட் விஷ மருந்து அருந்தி கல்லறை தோட்டத்தில் கிடந்து சத்தம் போட்டு உள்ளார்.

    இதனை கண்ட குடும்பத்தினர் மற்றும் ராஜேந்திரன் சகோதரர் சேர்ந்து தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார். இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்தில் ராஜேந்திரன் மனைவி கலா புகார் மனு கொடுக்க புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் மகளுக்காக கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மதுரையில் விஷம் குடித்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்தனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது

    மதுரை

    சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர், மதுரை அரசு மருத்து வமனை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பி யிருந்தார். அதற்கு மருத்துவ மனை நிர்வாகம் பதில் அளித்தது. அதில் மதுரை மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு 2 ஆயிரத்து 380 பேரும், 2022-ம் ஆண்டு 2 ஆயிரத்து 550 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 930 பேர் விஷம் குடித்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் 2021-ம் ஆண்டு 180 பேரும், 2022-ம் ஆண்டு 207 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    அதாவது 2 ஆண்டுகளில் மட்டும் 387 பேர் விஷம் குடித்து இறந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் விஷம் குடித்தோருக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக பிரிவு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    அங்கு மருத்துவ குழுவினரின் துரித சிகிச்சை காரணமாக 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்தனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • சந்திரசேகரன் (வயது 33) விவசாயி. இவருக்கும் பிரியங்கா (வயது 23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • மன உளைச்சலில் இருந்த சந்திரசேகரன் ரெட்டிசாவடி அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் கிடந்தார்

    கடலூர்:

    புதுச்சேரி மாநிலம் நோணாங்குப்பத்தை ம சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 33) விவசாயி. இவருக்கும் பிரியங்கா (வயது 23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சந்திரசேகரனுக்கும் பிரியங்காவிற்கும் குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த சந்திரசேகரன் ரெட்டிசாவடி அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் சந்திரசேகரனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    அப்போது சந்திரசேகரனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே திருமணமான ஒரு வருடத்தில் கணவன் -மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபர ப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×